Friday, December 1, 2017

பொதுவாழ்வின் பொக்கிஷம் மணி

கோ.சி.மணி.. ஒரு பொதுவாழ்விற்கு வந்தவன்.. ஒரு நிர்வாகி ஒரு தொண்டன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு.. தி.மு.கழகத்தின் தஞ்சை மாவட்ட செயலர் அதுவும் இப்போதைய தஞ்சை நாகை திருவாரூர் மாவட்டங்களின் ஒருங்கிணைந்த தஞ்சை செயலர்.. அண்ணாவின் மீது அன்பு கொண்டவர் கோவம் அவரோடு உள்ள குணம் அது நேர்மையின் அடித்தளம் .. எந்த குற்றசாட்டிற்கும் ஆளாகாத ஒரு அமைச்சர் இவரிடத்தில் சென்றால் அது சரியென்றால் உடனே செய்து தந்துவிடுவார்.. தஞ்சை விவசாயிகளின் பிரச்சனையை ஆழமாக அறிந்தவர் .. எந்தவொரு விவசாய பிரச்சனையாக இருந்தாலும் மணி கூப்பிடு என்றுதான் அண்ணாவும் கலைஞரும் சொல்வார்கள் அத்தனை அத்துபடி.. அண்ணா மேக்கிரி மங்கலத்து பேக்கிரி என்பார்.. .. எல்லாநேரமும் அரசியல்வாதியாகவே இருந்தவர்.. திமுகழக ஆட்சுயின் போதுதான் அவரது துணைவியார் இறந்து போகிறார் .. தளபதி அவர்கள் அழுதகண்களோடு அம்மையாருக்கு அஞ்சலி செலுத்துகிறார்.. ஸ்டாலின் இங்கே வா என தனியாக அழைத்து கும்பகோணம் தேர் ஓடணும் அதற்கு பாதை சரிபண்ணறதெல்லாம் உன் டிப்பார்ட்மண்ட் தான் வருது உடனே சரிபண்ணி கொடு என்கிறார்..அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார்...கலக்கிய கண்களோடு இருந்த போதுகூட தொகுதியின் நலன் பற்றி பேசியவர் .. இதெல்லாம் அறிந்துக்கொள்ளவேண்டும் இன்றைக்கு பொதுவாழ்விற்கு வருவோர்.. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலை சுற்றி சாக்கடைதான் .. மழைக்காலம் வந்துவிட்டால் சாலை எது சாக்கடை எதென்றே தெரியாது .. கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று அமைச்சரான போதுதான் ..பாதாள சாக்கடையை கொண்டுவந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்காமல் செய்தவர் கோவில் படிகளை விட உயரமான சாலை அமைத்து அந்த இடத்தையை சுத்தமாக்கியவர்.. இன்றைக்கும் மணி பேசபடுகிறார் என்றால் அது அவர் தொகுதிக்கு செய்த சேவை அப்படி கலைஞர் அவர்களே .. பொட்டு வைக்க சொன்னேன் அவன் சிங்காரித்து வைரமெ வைடூரியம் போட்டு தகதகவென்று கும்பகோணத்தை ஆக்கிவிட்டான் என்பார் .. சட்டமன்ற உறுப்பினர் எப்படி இருக்கவேண்டுமென்பதற்கு அவர் தான் சிறந்த உதாரணம்.. .. ஒரு கட்சி தலைவனுக்கு எப்படி விசுவாசமாக இருக்கவேண்டுமென்பதற்கும் மணி அவர்கள் சிறந்த உதாரணம்.. வைகோ திமுகவிலிருந்து பிரிந்து சென்ற போது எங்கே பொதுக்குழுவை கூட்டலாமென்று வேண்டுமென்று பேராசிரியர் தவித்தபோது கலைஞர் சொன்னர் தஞ்சையிலே கூட்டுங்கள் மணி பார்த்துக்கொள்வான் என்றார் ஒன்பது மாவட்ட செயலர்கள் வைகோவோடு போய் திமுக தங்களுக்கென்ற பதட்டமான சூழலில் தஞ்சையில் வெற்றிகரமாக நடத்தி முடித்தார் அன்றிரவு பொதுகூட்டம் .. எப்படி நடக்கிறது பார்போமென சிலர் கொக்கரித்து கலைஞரின் காதுகளுக்கு வருகிறது மணியை அழைத்து என்னப்பா ..தஞ்சை பாதுகாப்புன்னு சொன்னிய கூட்டம் நடத்தமுடியா போய்விடுமோ என்ற போது இரு நான் வரேன் என்று கீழவாசலுக்கு போய் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு எவன்டா கூட்டத்துக்கு கலாட்டா பண்ணுவேன்னு சொன்னது என்ற கேட்ட போது ஒருத்தரும் வரவில்லை.. திரும்பி வந்து இப்ப போய் பேசு ஒருத்தனும் கலாட்டா பண்ணமாட்டான் என்று சொன்னார் .. இப்போதும் என் கண் முன் வந்து போகிறது கலைஞரின் மீது ஒரு துரும்பு விழுவதை கூட விரும்பாத பெருந்தொண்டன்.. அதனால் தான் கோ.சி.மணி இறந்தபோது எப்படி தஞ்சைக்கு செல்வேன் மணி இல்லாத தஞ்சையை எண்ணி என் #குலைநடுங்குகிறதே என்றார்.. .. நிறைய பேசிக்கொண்டே போகலாம்.. ஒரு தொண்டனாய் மக்கள் பணி செய்யும் சேவகனாய்.. நல்ல கட்சியின் சிறந்த நிர்வாகியாய்.. பட்டிதொட்டியெல்லாம் தெரிந்து வைத்திருந்த எல்லோரையும் பேர் சொல்லி அழைத்த அன்னியோன்யம் .. எல்லா நேரமும் தொகுதி மக்களுக்கு உதவிடும் தலைவனாய்.. வலம் வந்தார் நிச்சயமாக இன்றைக்கு பொதுவாழ்விற்கு வருபவர்களுக்கு தெரிந்துகொள்ள கூடிய சிறந்த பாடம் கோ.சி.மணி அவர்கள் பொதுவாழ்வு.. மணியை போல ஒரு தொண்டன் தளபதி கிடைத்தால் மலையை கூட நகர்த்தலாமென்பார் கலைஞர்.. வேறென்ன வேண்டும்.. .. முதலாம் ஆண்டு நினைவில்.. .. Aalanci Spm

No comments:

Post a Comment