Wednesday, December 13, 2017
கனிமொழி..
இரு தினங்களாக திமுக பொருளாளர் பதவிக்கு ஊடகங்கள் கவிஞர் கனிமொழியை பரிந்துரைக்கின்றன.. தினமலர் தான் முதலில் செய்தி வெளியிட்டது பேராசிரியர் தளபதியை அழைத்து கனிமொழிக்கு பதவி தர சொன்னதாகவும் தளபதி மறுத்ததாகவும் செய்தி வெளியிட்டு திமுகவை களங்கபடுத்தும் ..,அல்லது சிதைக்க துடிக்கும் தங்களின் தீராத ஆசையை வெளிகாட்டியது.. சில நண்பர்கள் (திமுகவினர்) எதிர்த்தும் ஆதரித்தும் கருத்திட்டிருந்தனர்.. பாசிச வர்க்கம் சரியான நேரத்தில் சரியான அம்பை எய்திருக்கிறது..ஆனால் பாருங்கள் முனை மழுங்கிய அம்பென்பது அவாள்களுக்கு தெரியாமல் போனது..
..
இப்போதைய தேவை திமுக அதிகாரத்தில் வரவேண்டுமென்பதே தவிர கட்சி பதவிகளில் யாரை நியமிப்பது அல்லது தேர்ந்தெடுப்பது என்பதல்ல. ஆரம்பம் முதலே சொல்லி வருவதுதான் காலம் சரியான தலைவனை அடையாளம் காட்டுமென்ற கலைஞரின் கூற்று உண்மையாகும் வேளை இது.. ஆம்.. எதற்காக வைகோ திமுகவிலிருந்து வெளியேறினாரோ அவரே திமுகவின் எதிர்காலம் தளபதிதான் என்றும் விரைவில் தமிழக முதல்வர் தளபதி.ஸ்டாலின் என விளிக்கிற காலம் விரைவில் வருமென்று கூறுகிறார்.. தமிழகத்தில் ஸ்டாலினை விட்டால் வேறுவழியில்லையென காங்கிரஸ் தலைவர் திருநாவுகரசர் சொல்கிறார்.. இது தொடக்கம் ..ஏறக்குறைய எல்லாகட்சிகளுமே ஸ்டாலின் தவிர்க்கமுடியாத சக்தியென அறிந்து பேச தொடங்கியிருக்க வேளையில் வழக்கம்போல் பார்பன ஏடு பகை மூட்ட பார்க்கிறது..
..
சரி பொருளாளர் பதவிக்கு தகுதியானவரா என கேட்டால் மறுப்பேதும் சொல்லாமல் ஆம் என தலையாட்டுவேன் ஆனால் அவருக்கு தரவேண்டுமா என்றால் நிச்சயமாக தவிர்க்கவேண்டுமென்பேன்.. என்ன காரணம்.. திமுகவில் தளபதி.ஸ்டாலின் வளர்ச்சியும் தொண்டும் சேவையும் நீண்ட நெடிய வரலாறு கொண்டது.. படிபடியாக உயர்ந்து செயல்தலைவராக வந்திருக்கிறார்.. அவரை எதிராளிகள் கூட ஏற்கிறார்கள்.. காரணம் திமுகவின் அடிப்படை தொண்டனின் உணர்வுகளை தாங்கி நிற்கிறார் ஒரே இரவில் சட்டென்று மந்திரியாகிவிடவில்லை.. திரு.மு.க.அழகரியை எப்படி திமுக ஏற்கவில்லையோ அதே அளவுகோலைதான் கனிமொழி விடயத்திலும் காணவேண்டியிருக்கிறது.. என்ன வேறுபாடு கனிமொழி திறமையானவர் ..அவ்வளவுதான்..
இன்னமும் காலமிருக்கிறது...
..
அதோ மட்டுமல்லாது கனிமொழியை முன்னெடுக்க வேண்டிய அவசரமோ அவசியமோ தற்போதில்லை..
இதன் பின்னில் சில சாதீய வேலைகள் நடப்பது எல்லோரும் அறிந்தது தான் சாதீய மறுப்பாளரான கனிமொழியை சாதீய கூட்டுக்குள் அடைக்க விரும்பியதில் அவரது தாயாரின் பங்கு அளப்பரியது.. அப்போதே சென்னை முழுவதும் சுவரொட்டிகளை சாட்சியம் சொல்லியது..இன்றைக்கு கூட சில சாதிவெறிபிடித்தவர்கள் அவரை உயர்த்திபிடிக்க நினைக்கிறார்கள்.. அது அத்தனை சுககரமானதில்லை என்பதை கனிமொழியே அறிவார்..
..
மிக முக்கியமாக தருணமிது காத்திருக்கிறார்கள் எதிரிகள் இவ்வேளையில் சில சாதியர்களின் துணைக்கொண்டு நம்முள் பிரிவினையை தருவது அவர்களுக்கு பலம் சேர்க்கும் தற்காலிகமானதெனினும் வலுவிலக்க செய்வது அவர்களுக்கு பலனை தரும்.. நீண்டநாள் நிலைக்காது காரணம் திமுக தோல்விகளெல்லாம் அவசரத்திலும் அறியாமையிலும் அன்றைய பொழுதில் தோன்றும் எண்ணத்திலும் வந்ததே தவிர அதன் பிறகு உணரும் போது தவறாகிப்போனதை அறிவோம்.. திமுகவின் தோல்விகள் யாருக்கெல்லாம் பயன்படுகிறதென்பதை காலம் உணர்த்தியிருக்கிறது..
கனிமொழியே அறிவார் திரு.ஸ்டாலின் தலைமை மட்டுமே இந்த இயக்கத்திற்கு வலுசேர்க்குமென்பதை.. வீணாக ஆசைகள் வளர்த்துகொள்வது அவருக்கே வினையாகிப்போகும்.. அழகிரியைப்போல..
இடம் தெரியாமல் போவார்..
..
#காத்திருப்பது_நலம்..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment