Friday, December 8, 2017

ஊடக விபச்சாரம்

ஊர் சிரிக்கிறது. ஊடகங்கள் தர்மத்தின் நிழலைவிட்டு வெகுநாட்களாகிறது.. அரசியல் சார்ந்து அரசு சார்ந்து ஏன் கொள்கை சார்ந்து .. எழுதும் ஊடகங்கள் கூட சில முக்கிய காலகட்டங்களில் நேர்மையின் பக்கம் நின்றிருக்கின்றன.. இந்தியன் எக்ஸ்பிரஸ் .. தி.இந்து போன்ற ஏடுகள் வரலாற்றில் இந்த தேசத்தின் ஜனநாயக சீர்கேடு நடக்கும் போதெல்லாம் எப்போதெல்லாம் ஜனநாய நெறிகள் மீறபடும் போதும் அதன் குரல்வளை நெறிக்கபடும் போதும் வெகுண்டெழுந்து நியாயத்தின் பக்கம் நின்றிருக்கின்றன.. .. ஆனால் இப்போதெல்லாம் கார்ப்பரேட்களின் கையில் ஊடகங்கள்.. எதையும் வியாரநோக்கிநகர்த்துகிற நிலை.. எத்தனை கோடி தருவார்கள் என காத்துநிற்கிற அவலம்..இதெல்லாம் சமீபத்தில் தான் புரையோடியது.. ஆம்.. குஜராத் சம்பவங்கள் இந்தியாவின் கறுப்பு பக்கங்களில் இடம் பெற்றிருந்தும் .. மோடியை தூக்கிபிடித்து நிறுத்தியதில் ஊடகங்களில் பங்கு அளப்பெரியது.. இந்த தேசத்தில் அயோக்கியதனத்தை ஆதரிக்கிற நிலை அப்போதுதான் உருவானது.. நிறைய வேறுபாடுகள் இருந்த போதும் ஒன்றுமையில்லாததால் பிற கட்சிகள் ஒருங்கிணைகிக முடியாத காம்ரேட்களால்.. காவிகள் ஆட்சிக்கு வர அதை ஆதிக்க சக்திகள் இந்த ஊடகங்களை கொண்டே வெகுமக்களிடம் மோடியை புத்தரை போல சித்தரித்தது.. அந்த பிம்பம் வெகுசீக்கிரம் கரைந்துபோகுமென அறியாமல்.. .. இந்திய ஊடகங்கள் அரசியல்வாதிகளை விட ஆதாயத்திற்காக எந்த செய்தியையும் உயர்த்திபிடிக்குமென்கிற நிலை மிகவும்,ஆபத்தானது.. இன்றைக்கு வரும் செய்திகள் அத்தனை ரசகரமானதில்லை.. ஊடகவியலாளர்கள் விலைபேசும் நிலை ஆரோக்கியமான ஜர்னலிஸத்திற்கு வழிவகுக்காது.. தமிழக ஊடகங்களை பொறுத்தவரை இரண்டு மனபான்மையோடு செயல்படுகின்றன.. அதிமுகவிற்கு சாதகமான சூழலை உருவாகிகுவதில் அவர்கள் காட்டும் அக்கறையின் பின்னில் பணம் மட்டுமே இருந்ததென்பது நீண்டநாட்களாக சொல்லபட்டு வரும் குற்றசாட்டு அது சரியென்பது போல சில செய்திகள் ஊடகத்துறையை அசிங்கமாக்கியிருக்கிறது.. சில நல்ல நேர்மையைான ஊடகவியலாளர்கள் குணாவை போல இருக்கிறார்கள் மறுப்பதற்கில்லை கொள்கை சார்ந்து இருக்கிற போதும் நியாயத்தின் பக்கம் நிற்கிற சில நேர்ம்யானவர்கள் உண்டு .. பெயரெடுத்து சொல்ல தேவையில்லை ஆனால் ..பாண்டே ஹரியை போல ஒருதலை சார்பும் அதேவேளை பணம் சம்பாத்திக்க மட்டுமே ஊடகதுறையை பயன்படுத்துவதும்.. முன்ணணி நிறுவனமாக்க தங்கள் ரேட்டிங்கை உயர்த்த எந்த தரங்கெட்ட செயலையும் நியாயபடுத்துவதும்.. ஏற்கமுடியாதது.. அவர்களின் நேர்மையை தான் ஜெயலலிதா வழக்கிலேயே பார்த்தோம்.. .. ஒரு குற்றவாளியின் அல்லது குற்றசாட்டபட்டவரின் டைரியில் அரசியல்வாதிகள் பெயர் அதை அதே நியாயத்தோடு தமிழக ஊடகங்கள் வெளிகொணர மறுத்து வேறுவிடயங்களுக்கு திசை திருப்புவது ஒருவகை Media prostitution ஊடக விபச்சாரம். .. Aalanci Spm

No comments:

Post a Comment