Friday, December 29, 2017

தியாக தலைவி..?

தியாக தலைவி.. இந்த சொல்லை கேட்கிறபோது எரிச்சல் வருகிறதே எனக்குமட்டும்தானா.. தியாகமெனும் சொல் அவ்வளவு இழிவானதா.. முடைநாற்றமடையடித்த இந்த சமூதாயத்தை சீர்செய்த பெருமகன்கள் ..யாருமே தன்னை தியாகியாக காட்டிக்கொள்ளவில்லையே.. பொட்டுகட்டும் பெண்களுக்காக அவர்களையும் இந்த சமூகம் சமமாக மதித்திட வேண்டுமென .. சத்தியமூர்த்தியிடம் போராடி.. பேராசானின் அறிவுரையோடு எங்கள் வீட்டுப்பெண்கள் தெய்வதொண்டாற்றி விட்டும் இனி உங்கள் ஆத்துபெண்கள் தெய்வத்தொண்டாற்றுகளென சட்டமன்றத்திலேயே முழங்கிய முத்துலெட்சுமி ரெட்டி கூட தம்மை தியாகத்தலைவியென கூறிக்கொள்ளவில்லை.. .. இங்கே தியாகம் படாதபாடுபடுகிறது வெட்கமே இல்லாமல் கிரிமினல் 1 ஜெயலலிதாவோடு சேர்ந்து கொள்ளையடித்ததை உச்சநீதிமன்றமே உறுதிசெய்தவரை.. தியாக தலைவியாக சொல்வதை ஊடகங்கள் ஏன் கேள்விகேட்க மறுக்கின்றன.. செய்யாத தவறை 2ஜியில் ஊதி பெரிதாக்கிய செய்தியாளர்களும் ஊடகங்களும்.. புடம்போட்ட தங்கமாய் தன் மீதான குற்றசாட்டே தவறென நிரூபித்து வந்திருக்கும் ராசாவை உயர்த்திபிடிக்கவேண்டாமா ..குறைந்தபட்சம் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டாமா.. ராசாவை மட்டுமே குறிவைத்து தாக்கிய ஊடகங்கள் இன்று ஜெயா சசி விடயத்தில் கள்ளமௌனம் காப்பதேன்.. ஒழுக்கமில்லா அரசியலை.., சக தொண்டனை டொங்கு கொசு என்றெல்லாம் கொச்சைப்படுத்தும் தினகரனை முன்னிறுத்த ஏன் இத்தனை படாதபாடு படுகிறீர்கள் ஒவ்வொரு முறையும் தியாக தலைவி என்கிறாரே.. எந்த தியாகத்தை செய்துவிட்டு சென்றார் கொள்ளையடித்த வழக்கில் சிறையில் இருக்கிறார் இதற்கு பெயர் தியாகமா என ஏன் கேட்கவில்லை.. .. திருமதி சசிகலாவை அதிமுக பொதுசெயலராகவோ அவர்களின் தலைவியாகவோ கொண்டாடட்டும் ஆனால் தியாகம் ரேஞ்சுக்கு உயர்த்திபிடிப்பது அருவருப்பாக இருக்கிறது .. தண்டனைபெற்று சிறையில் கழிக்கும் ஒருவர்.. கண்டனை காலம் கழிந்தும் ஆறு ஆண்டுகள் தேர்தலில் நிற்கமுடியாதவரை ..அதிகாரத்தை பயன்படுத்தி கொள்ளையடித்தவரை கொண்டாவதை காணும் போது மற்றவர்கள் என்ன நினைப்பார் என்று கூட தெரியாமல் செய்கிறார்கள்.. அவர்களை சொல்லி குற்றமில்லை அரசே குற்றவாளியென நீதிமன்றத்தால் தணிடிக்கபட்ட கிரிமினல் 1 ஜெயலலிதாவின் படத்தை அரசு விழாக்களில் வைத்திருப்பது .. அம்மாவின் ஆசியோடு நடைபெறும் ஆட்சியென சொல்வது ஒட்டுமொத்த தமிழகத்தை தலைகுனிய வைக்கிற செயலென ஏன் யாருமே பேச மறுக்கிறீர்கள் .. தண்டிக்கபட்ட குற்றவாளியின் புகைப்படம் அரசே முகப்பில் வைத்திருக்கும் போது .. திருடர்கள் ஜாக்கிரதையென போலிஸ் நிலையங்களில் வைத்திருப்பார்களே அதுதான் நினைவுக்கு வருகிறது. இவர்தான் அதிகாரத்தை பயன்படுத்தி தவறான வழியில் சொத்து சேர்த்தவர். இனி வருகிறவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்பதற்காக வைத்திருக்கிறார்களோ என்னவோ.. கொள்ளையடித்தவர்கள் புகழபடும் நாட்டில் சிறையில் இருப்பவர் தியாக தலைவி தான்.. .. Aalanci Spm

No comments:

Post a Comment