Sunday, December 17, 2017

விடியுமா..

ஆறாயிரம்.. ஒரு தரம் இரண்டு தரம்.. தரம் பார்த்து வாக்களிக்கவேண்டியவர்கள். . தருவது பார்த்து வாக்களித்தால் என்னவாகும்.. இந்திய தேர்தல் ஆணையம் எத்தனை பார்வையாளர்களை நியமித்தால் எங்களுக்கென்ன நாங்கள் நினைத்ததை நடத்திகாட்டுவோம்.. பணம் கொடுக்க வந்தது அறிந்து பிடிக்கலாமென்று சூழ்ந்தவர்களை காவலர்கள் சுற்றி நின்று.. அதிமுகவினரை பத்திரமாய் ஓடவிட்டு .. தப்பிக்க வழிசெய்யும் காவல்துறை.. பாராட்டி பதக்கம் தரலாம்.. இதுவரை கண்டிராத தொகை.. ஒரு ஓட்டிற்கு இந்தியாவிலேயே அதிகம் விலைபேசபடுகிறது.. ஒரு தொகுதிக்காக ₹120 கோடி செலவு செய்வதென்பது என்னானாலும் பரவாயில்லை தினகரனை பின்னுக்கு தள்ளிவேண்டுமென ஆளும்கட்சியினர் முதல்வர் 25 அமைச்சர்கள் நேரடியாக களப்பணி ஆற்றுகிறார்கள்.. .. ஆர்.கே.நகரை சேர்ந்த நண்பர்.. அவர் தன்மகன் ஆஸ்திரேலியா அனுப்பி மருத்துவம் படிக்கவைக்கிறார்..அவரது வசதி எப்படியென்று ஊகித்துகொள்ளுங்கள் அவர் வீட்டில் எழு வாக்குகள்.. ₹42,000 வந்திருக்கிறது பையன் இருந்திருந்தா இன்னும் ஆறாயிரம் கூட கிடைத்திருக்கும் இதுதான் இன்றைய மக்களின் மனநிலை.. ஆரம்பங்களில் வெற்றிலையில் சத்தியம் வாங்கிகொண்டு இரண்டு ரூபாய் வாங்க தொடங்கியது இன்று ₹6000 தில் நிற்கிறது.. இது இனியும் கூடலாம்.. எங்கிருந்து ஆரம்பித்தது .. 1952 ல் வெற்றிபெற்று வந்த திமுக உறுப்பினர்கள் 15 பேரை வரும் தோற்கடித்து காட்டுகிறேன் என சவால் விட்டு .. அண்ணா உட்பட 14 பேரை தோற்கடித்தார் காமராஜர்.. காஞ்சியில் ₹5 தந்து திருப்பதி வெங்கடாஜலபதி மீது சத்தியம் வாங்கினார்கள் .. அண்ணா தோற்றார்.. கலைஞரை தோற்கடிக்க .. பரிசுத்த நாடார்.. நெய்சோறு போட்டு கூடவே ₹5 தந்தார்.. பாவம் பரிசுத்த நாடார் 2000 வாக்குகளில் தோற்றார்.. பணம் தந்தும் வாக்களிக்க மறுத்த தஞ்சை.. இன்னமும் திமிரோடு தான் நிற்கிறது.. காங்கிரஸ்காரர்கள் ..நிலகிழார்கள் (மிராசுதார்கள்-பண்ணையார்கள்) தங்களிடம் வேலைபார்க்கும் கூலிகளுக்கு இரண்டு ரூபாயும் சுடுசோறும் தந்து வாக்களிக்க வைத்ததெல்லாம் பழந்கதை.. அன்று தொடங்கியது இன்று உலகமே பிரம்பிக்கும் பணமழையில் ஒரு இடைத்தேர்தல் தொகுதி.. .. இந்த நிலையில் கடந்த கால தவறுகளை கலைந்து வாக்கிற்கு பணம் கொடுப்பதில்லை என்ற திமுகவின் முடிவை வரவேற்கவேண்டும்.. சிலர் திருமங்கலம் பார்முலா தான் என்கிறார்கள்.. அதற்கு முன்பே காமராஜரின் காஞ்சி பார்முலா இருக்கிறது..இருப்பினும் திமுகவின் கடந்தகால தவறுகளை நியாயபடுத்த வரவில்லை.. அதையெல்லாம் கடந்து இந்த சூழலிலும் நேர்மையாக தேர்தலை சந்திக்க வேண்டுமென்ற முடிவை வரவேற்போம்.. .. இறுதியாக 6k +10 k .. யென பொழிகிறதாம்.. ₹.k.நகராக மாறியிருக்கிறது.. இனி மக்கள் கைகளில்.. 1962.ல்பணம் பெற்றுகொண்டு அண்ணாவை தோற்கடித்த காஞ்சியைபோலவா.. பணம் தந்தாலும் அதை உதாசீனபடுத்தி கலைஞரை வெற்றிபெற செய்த #தஞ்சையை போலவா.. அதேபோல் விருதுநகரில் 1967 ல்.. ₹10 தந்தும் காமராஜரை தோற்கடித்தார்களே அதைபோலவா.. யார் நீங்கள் .. நீங்கள் யாரைப்போல என்று வாக்கெண்ணும் போது தெரிந்துவிடும். .. விடிவதும் விடியாததும் உங்கள் கைகளில்.. வாழ்த்துகள்.. .. Aalanci Spm

No comments:

Post a Comment