Thursday, January 31, 2019
தளபதி நிமிர் நடை ..
தமிழகத்தில் ஊடகங்களும் நடுநிலையாளர்கள் என சொல்லிக்கொள்வோரும் வலுகட்டாயகமாக ஒன்றை திணிக்க நினைக்கிறார்கள் .. திமுக இந்த தேர்தலில் வெற்றிப்பெற்றுவிட கூடாதென்ற எண்ணம் அவர்களுக்கு .. அதிமுக அமுமுக பலமாக இருப்பதைப்போல ஒருவித மாய தோற்றத்தை உருவாக்குகிறார்கள் .. தினகரனுக்கு வாக்குசாவடி முகவருக்கே பலதொகுதிகளில் ஆள்கிடைக்காத சூழல் இருப்பதை அறிந்திருக்கவில்லை .. இதுவரை தினகரனால் அதிமுகவிலிருந்தோ திமுகவிலிருந்தோ ஏன் பிற கட்சிகளிலிருந்தோ ஒருவரை கூட கவர முடியவில்லை யாரேனும் வந்து கட்சியில் சேர்கிறார்களா என்றால் இல்லை மாறாக விட்டால் போதுமென ஓட தொடங்குகிறார்கள் என்பதே நிதர்சனம் அவரிடம் இருக்கும் பணம் சிலரை அவரோடு சேர்ந்து நிற்க சொல்கிறது பணம் செலவு செய்ய சொன்னால் ஓடுகிறார்கள் ..தலைக்கு₹500 என கூட்டம் கூட்டினாலும் இவர் மீது மக்கள் வைத்திருக்கும் பிம்பம் இவரை கேலிசெய்கிறதென்பதே உண்மை
சாதிய பாசம் சில தொகுதிகளில் இவருக்கு சிறியளவில் கைக்கொடுக்கும் அதில் கூட பன்னீர் வகையறாக்கள் பங்குபோட வருவார்கள் .. அதிமுகவை சொல்லவே வேண்டாம் எந்த இடத்திலும் தன் செல்வாக்கை இழந்ததோடு மக்களின் அதிருப்தியும், கோபமும், இந்த அரசின் கையாளாகாத செயலைகண்டு வேதனையும் வெறுப்பும் அடைந்திருக்கிறார்கள் .. பாஜகவின் சொல்லை கேட்டு ஆடும் பொம்மையாய் இந்த அரசு இருப்பதை மக்கள் தெளிவாக விளங்கிவைத்திருக்கிறார்கள் .. அதிமுகவிலோ அமுமுகவிலோ பிடித்த முகம் என்ற ஒரு கவரும் மனிதர் இல்லை பொதுவான எல்லோராலும் விரும்பபடுகிற நேசிக்கிறவர் இல்லை குறுகிய வட்டத்திற்குள் கோலோச்சுகிறவர்கள் இருக்கிறார்களே தவிர தமிழகம் முழுவதும் விரும்புகிற நேசிக்கிற பொதுவான முகம் இல்லை ..
அமுமுக, அதிமுக இணைந்தால் வெற்றிபெறலாம் என்பது வடிகட்டிய பொய்.. அதைவிட திமுகவிற்கு நிர்பந்தத்தை தர முயற்சிக்கும் சூது .. மக்களை திசை திருப்ப செய்கிற சூழ்ச்சி .. அது பலனிக்காதென்பதே உண்மை ..
..
திமுக ..
#தளபதி என்ற மக்கள் விரும்புகிற நேசிக்கிற முகம் .. எளிமையும் நேர்மையும் உறுதியும் கொண்ட தலைமை .. எதையும் ஜனநாயகத்தோடு அணுகுகிற உயர்பண்பு, மக்களின் நேசத்திற்குரியவர் என்ற பொதுவான உருவம், மிகப்பெரிய இயக்கத்தின் தலைவர் தொடர்ந்து ஏறத்குறைய ஐம்பதாண்டுகளாக மக்கள் பணி ..வெற்றி தோல்வி இரண்டுலும் மக்களோடு பயணிக்கிற மக்களிடமே செல்கிற துணிவும் .. மக்கள் பணியாற்றவேண்டுமென்பதில் உறுதியும்
கொண்ட தலைவராக விளங்குகிறார்
இவருக்கு இணையானவராகவோ சரியான தகுதியுடைவரோ எதிரணியில் யாருமில்லை என்றே சொல்லவேண்டும் .. தளபதி மீதான ஈர்ப்பும் அடிமைகளின் ஆட்சி மீதான கோபமும் திமுகவிற்கு மிகப்பெரிய வெற்றி தரபோகிறதென்பதே களநிலவரம் .. அதை மறைக்க திமுகவின் மிகப்பெரிய வெற்றி பாசிசத்திற்கு பெரும் சவாலாக இருக்குமென்பதால் இது போன்ற பொய் பிரச்சாரத்தை ஊடகத்தின் துணையோடு செய்கிறார்கள் .. வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் ..தொடர்ந்து வர இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் திமுகவிற்கு மிகப்பெரிய வெற்றியை தமிழக மக்கள் தருவார்கள் .. தமிழகத்தின் ஒரே நம்பிக்கையாக தளபதி உருவாகியிருக்கிறார்.. நேர்மையான திறமையான வெளிப்படையான ஆட்சியை திமுகவால் மட்டுமே தரமுடியும் கட்டுகோப்பாக கட்சியினர் செயல்பட்டு மிகப்பெரிய வெற்றியை தளபதியின் கையில் தரவேண்டும் ..
தளபதி அறியணை ஏறும் நாளே தமிழகம் தலைநிமிரும் நாள் ..
..
#தளபதியார்_தமிழகத்தின்_நம்பிக்கை …
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment