Wednesday, January 2, 2019

திருவாரூர்... எங்க ஏரியா ..

திருவாரூரில் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை அவர்கள் தான் முடிவு செய்து வாக்களிப்பார்கள் ட்விட்டரில் அக்கா தமிழிசை அதற்கு பிறகு சத்தத்தையே காணோம் பாஜக தனித்து களம் காணலாமே அப்போதுதான் அவர்களுக்கு எந்தளவு ஆதரவு இருக்கிறதென்பதை அறியலாம். தாமரை மலர்ந்தே தீருமென சொல்லி திரியும் மீண்டும் ஒரு முயற்சி எடுத்து நோட்டாவை கடக்கலாமே நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை மிரட்டி 20 தொகுதியாவது வாங்கலாம் முயற்சி செய்யட்டும் .. மைக் கிடச்சா போதும் எதையாவது உளறுவதும் வீரவசனம் பேசுவதும் எதோ தமிழகத்தை பாஜகவை எல்லோரும்,கொண்டாடுகிறார்கள் என பேசிதிரிவதும் அப்பப்பா இம்சை தாங்கமுடியவில்லை .. .. இவரென்றில்லை நிறைய பேர் .. கட்சியென்று ஒன்று வைத்துக்கொண்டு 1000 வாக்குகள் கூட கடக்க முடியாதவர்கள் செய்கிற அலப்பறை தாங்கமுடியவில்லை நெஞ்சை விடைத்து கத்தினால் மக்கள் ஆதரவளிப்பார்களென கணக்கிடுவதும் ஏதோ தம்மால் தான் தமிழகமக்கள் உணர்வு பெற்றிருப்பதை போலவும் இங்கே கதையளந்து கொண்டிருக்கிறார்கள்.. தமிழக மக்களை காப்பாற்ற தங்களால் தான் முடியுமென்பதை போல நடு ஒடிந்தவர்கள் பேசிதிரிகிறார்கள் .. நாங்கள் தான் காங்கிரஸை தோற்கடித்தோம் திமுகவை தோற்கடித்தோமென சில அங்கரீக்கபடாத, முகவரி இல்லாதவர்கள் சொல்லி புலம்புகிறார்கள் .. பாஜக தனித்து நிற்க அஞ்சும் காரணம் நோட்டாவை தாண்டமுடியாது மிக மோசமான தோல்வியை பெற்றால் கூட்டணி கட்சிகள் பாஜகவை சுமக்க தயாராக இருக்காது இன்னும் நான்கு மாதங்களே நாடாளுமன்றத் தேர்தலுக்கு உள்ள நிலையில் பா ஜ க தமிழகத்தில் யாருக்கு வேண்டாததாக போய்விடுமென்ற அச்சம் பாஜகவை மௌனமாக்கியிருக்கிறது .. திருவாரூர் இடைத்தேர்தல் ஆளும் கட்சிக்கு மிகப்பெரிய சங்கடத்தை தந்திருக்கிறது அதனால் தான் தம்பிதுரை பொங்கலை காரணம்காட்டி நிறுத்த வேண்டுமென சொல்கிறார் .. திருவாரூரை பொறுத்தவரை திமுகவின் வெற்றி என்பது உறுதியான நிலைதான் களம் நமக்கு தெரியுமென்பதாலும் இடதுசாரிகள் கொஞ்சம் மெச்சபட்டவகையில் இருப்பதும் இஸ்லாமிய வாக்கும் முடிவை தீர்மானிக்கும் என்பதால் வாக்கு வித்தியாசம் எவ்வளவு என்பதில் தான் தெரியவேண்டும் .. தினகரன் இங்கே எந்த படியை இறக்கினாலும் செல்லாமல் போகும் .. மிக முக்கியமாக தளிக்கோட்டை ராசுதேவர் பாலு (டி.ஆர்.பாலு) பொறுப்பாளராக இருப்பார் அவரின் செல்வாக்கு எடைபோட இது உதவுமென்பதால் அதீதகவனம் செலுத்துவார்கள் .. யார் வேட்பாளர் என்பது ஒரளவு தெரிய தொடங்கியிருக்கிறது .. இதுவரை 30 மனுக்கள் பூண்டி.கலைவாணனை களமிறக்க வேண்டுமென வந்திருக்கிறது.. எல்லா ஊர்களிலும் கிளை கழகங்கள் முழுவீச்சில் வேலை செய்கிறார்களென தகவல் வருகிறது .. தளபதியின் தனிகவனம் திருவாரூர் மீது என்பது கூடுதல் பலம் .. .. ஆளும் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும்.. வாய்சவடால் தினகரனுக்கும் எச்சரிக்கை ஆழம்தெரியாமல் காலைவிடாதே.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment