Wednesday, January 16, 2019

பாவம் கடவுளர்கள்

2018 ம் ஆண்டில் சுவிஷேச பெரு விழாவில் பேசும் போது 2019 ம் ஆண்டில் மோடியே பிரதமர் ஆவார் என்று இயேசு கிறிஸ்து தம்மிடம் கூறியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்..திரு.பால் தினகரன்.. இந்த ஆண்டு 2019 புத்தாண்டு அன்று இந்திய தேசத்தை இளம் தலைவர் ஆள்வாரென ஏசுநாதர் சொன்னதாக சொல்கிறார். இந்த இளம் தலைவருக்கு தென்னிந்திய மாநிலங்களில் இருந்து பெரும் ஆதரவு கிடைக்குமென்றும் தென் இந்திய பிரதிநிதிகள் பெரும் பொறுப்பை வகிப்பார்கள் என்கிறார்.. அதாவது 9 மாதத்தில் இயேசுநாதரே குழம்பிப்போய் இரண்டு விதமான கருத்துக்களை திரு. பால் தினகரன் இடம் கூறியிருக்கிறார் .. பாவம் ஏசு.. .. ஏமாற்றுகிறவர்கள் தங்கள் நாவால் தான் பலியாவார்கள் .. பால் தினகரனென்றில்லை கடவுள் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துகிறவர்கள் .. நானே கடவுள் என்பவன் .. நானே நேர்வழியை சொல்கிறவன் என்பவன் .. நான் சொல்வதே சத்தியமார்க்கம் நாங்கள் மட்டுமே நேர்வழியில் சத்தியத்தில் இருக்கிறோம் என்கிறவன் இவர்களெல்லாம் "மகா அயோக்கியர்கள்" .. தங்களின் நிறுவனங்கள் ..சொத்துகளை காத்துக்கொள்ள யாருக்கெல்லாம் மக்கள் ஆதரவிருக்கிறதோ அவர்கள் வெல்வார்களென சொல்லி அதற்கு .. அவர்கள் கடவுளரை காரணம்காட்டி தன்னை நம்புகிற நேசிக்கிற பின்பற்றுகிற மக்களை முட்டாளாக்கிறார்கள் .. யார் வெல்வாரென யேசுநாதருக்கு தெரிந்திருக்கிறது எனில் ஒன்பது மாதத்திற்கு முன்பே கணிக்கமுடியவில்லை அல்லது பிழையாக கணக்கிட்டுயிருக்கிறார் ஏசுநாதர் நம்ம #குமாரசாமியை போல.. எல்லாம் தெரிந்த கடவுள்.. ஒன்பதுமாதத்திற்கு பிறகு வரும் மாற்றம் தெரியவில்லை. .. பொங்கல் இஸ்லாமியருக்கில்லை என புதியதொரு ஜமாத் தலைவர் அல்ஃதாபி அருளியிருக்கிறார் அது பெரும்பாவமென்று வேறு பத்வா கொடுக்கிறார்.. இவர்களின் யோக்கியதை ஊர் சிரித்தது அதையெல்லாம் நாம் பேச தேவையில்லை இவர்கள் வகுத்த இஸ்லாமிய கலாச்சாரமென்பது அரேபிய கலாச்சாரம் .. இஸ்லாம் பொது மார்க்கமென சொல்லும் போது உலகாளவிய மக்களின் பண்பாட்டோடு அவர்களின் வாழ்வியலோடு தாக்கத்தை தரும் மாறுபடுமென்றால் அது காலத்தால் அடிபட்டுபோய்விடும் .. அந்தந்த மண் சார்ந்த விடயங்களில் பண்பாட்டு நிகழ்வுகளில் மதம் தலையிட முடியாது பொங்கல் வைப்பதோ நன்றிபாராட்டுவது வழிபாட்டில் வராதென இவர்களுக்கு யார் புரியவைப்பது .. இங்கே யாரும் சம்பூரண மார்க்கத்தை கொண்டுவருவேன் என சொல்லி திரிந்தால் கடைசியில் அந்த சமுதாயத்தாலேயே மானங்கெட்டு போகநேரிடும் .. வணக்கத்திற்கும் வழிபாட்டிற்கும் வேற்றுமையை உணரவேண்டும் .. எந்தவொரு மதமும் தனிமனிதனை கட்டாயபடுத்துமெனில் அது அவனை விட்டு சற்று விலகியே போகும் .. இங்கே கட்டாயமில்லை யாரையும் கட்டுபடுத்தவில்லை நன்மையை போதிக்கிறோம் ..என் வழி எனக்கு உன் வழி உனக்கென்றால் மட்டுமே நிலைக்கும் மக்களை கவரும் பரவும் .. சிந்திக்க சொன்ன "மார்க்கத்தில்" இப்படி சில சில்லரைகளால் சீரழிவு வருகிறது.. .. கடவுள் பெயரில் கல்லாகட்டுதல் "சிறந்த" தொழிலாகிவிட்டது .. மூளைச்சலவை செய்து எல்லாவற்றிக்கும் தலையாட்டுகிற கூட்டத்தை .. அவர் சொல்வதே வேதவாக்கு என நம்பவைத்திருப்பதில் தான் அவர்களின் வெற்றி அடங்கியிருக்கிறது .. ஏன் எதற்கு எப்படி அது சரியாகுமென கேட்காதவரை "தெய்வத்தின் குரலாய்" .."தெய்வத்தின் வாக்காய்".. "சத்திய மார்க்க போதகராய்" பிழைக்க தெரிந்தவர்கள் வந்துகொண்டே இருப்பார்கள் .. அவரவர் சமுதாயத்தை வழிகெடுத்துக்கொண்டே இருப்பர்.. .. ஞானம் பெரிது .. உன் அறிவு விசாலமானது உன் நீ நம்பு .. எதையும் ஆய்ந்து அறி Wisdom is great .. Your knowledge is spacious Trust your belief Explore anything.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment