Sunday, January 20, 2019
பாண்டேக்கள் பதறுகிறார்கள்
பொய் சொல்வதைவிட மௌனமாய் இருப்பது மேல் என்றார் புத்தர் ..
..
காமராஜர் கக்கன் போல மோடி எளிமையானவர் ரங்கராஜ் பாண்டே..
தந்தியிலிருந்து வெளியேறியவுடன் கல்லூரி மாணவர்களிடத்தில் உரையாற்ற தொடங்கியிருக்கிறார் தன்னை நடுநிலையானவன் என சொல்லி வந்தவர் வெளிப்படையாக மோடியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார் அது அவரது விருப்பம்.. ஆனால் பொய்களை இளைஞர்கள் மத்தியில் விதைக்கிறார் ..
..
காமராஜர் எளிமையாக இருந்தார் என்கிறார் மறுப்பதற்கில்லை ஆனால் அவரைச் சுற்றி இருந்தவர்கள் எல்லோருமே நிலக்கிழார்கள் (மிராசுகள்) பெரும்பணக்காரர்கள் ஜமீன்கள் அப்போதைய காங்கிரஸில் பெருந்தனக்காரர்களின் ஆதிக்கம்தான் இருந்தது அவர்கள் சொல் மட்டும் அரங்கேறும் அவர்கள் நலனுக்காக மட்டுமே செயல்பட்டது அப்போதைய அரசு .. ஏழைக்காக உழைத்திருந்தால் காங்கிரஸ் தமிழகத்தில் உயிரோட்டத்தோடு இருந்திருக்கும்.. ஆனால் திராவிட அரசு வந்த பிறகுதான் நில உச்சவரம்பே கொண்டுவரபட்டது.. சாமானியன் மீதான அக்கறை திமுக ஆட்சிக்கு பிறகே கிடைத்தது .. திரு.கக்கன் எளிமையானவர் யாரும் மறுக்கவில்லை அவரது சகோதரர் விஸ்வநாதன் ஆர்எஸ்எஸ் ஊழியர் என்பது தெரியுமா.. கக்கன் ஆணையிட்டுதான் மாணவர்கள் சுட்டுகொல்லபட்டார்கள் ..பழசை கிளறினால் முகம் கருத்து போகும்,..
அதுசரி ..
அவர்களோடு மோதியை ஏன் ஒப்பிடுகிறீர்.. ஏழைமகன் பொய்யிலேயே பிறந்தவர் அவரது பிறந்தநாள் தவறு .. அவரது கல்வி பற்றி தவறான தகவல் திரு.ராகுல் கூட ஒருமுறை பிரதமரோடு படித்தவர்களை தேடிக்கொண்டிருக்கிறேன் இதுவரை யாருமே கிடைக்கவில்லையென கிண்டல் செய்தார் .. ஏழைத்தாயின் மகன் ₹10 லட்சத்திற்கு கோட் அணிகிறார் காமராஜர் கடைசிவரை கதரே அணிந்தார் .. மோடியின் சிகை மற்றும் அலங்கார செலவு சிலகோடிகள் தான் .. just ₹1.5 லட்சம் mont blanc பேனா தான் உபயோகபடுத்துவார் ..இவர் எளியவராம் ..
..
பாஜக ஆட்சியை நிலைநிறுத்த பார்பனர்கள் பாடாதபாடுபடுகிறார்கள் .. வேலையை ராஜினாமா செய்துவிட்டு கல்லூரிகல்லூரியாக செல்கிறார் ..பாண்டே
குருமூர்த்தி பதறுகிறார் கதறுகிறார் அதிமுக எங்கே கை கழுவிவிடுமோ என்று..
அதிமுகவும் பாஜகவும் அடித்துக்கொள்ளாதீர்களென கொள்ளைபுறமாக அமைச்சரான நிர்மலா கெஞ்சுகிறார் இருக்கிற கொஞ்சநஞ்ச வாக்கையும் தமிழிசை வாய் கெடுத்துவிடுமென அஞ்சுகிறார்கள்
பழைய கூட்டாளிகளெல்லாம் கெஞ்சாத குறையாக அழைத்தும் யாரும் செவிசாய்க்க மறுக்கிறார்கள் .. அந்த பாவத்தை நாங்க ஏன் சுமக்கனும் என்று வெளிப்படையாகவே காறி உமிழ்ந்துவிட்டார் தம்பிதுரை .. அடிமைகள் கூட சிலிர்த்தெழுகிறார்கள் பாஜகவோடு கூட்டுவைத்தால் இங்கே இருப்பும் போய்விடுமென தமிழக கட்சிகள் அஞ்சுகின்றன ..ஆம் அது உண்மை தான் நோட்டாவை தாண்ட முடியாதவர்களை ஏன் சுமக்கவேண்டும் என்பதில் நியாயமிருக்கிறது ..
..
வெற்றி தோல்வியை நாம் பார்த்திருப்போம் இனி எந்த தொகுதிகளிலும் தோற்ககூடாது எல்லா தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும்.. கனிமொழி
கொஞ்சம் முயற்சித்தால் போதும் நாற்பதும் நமதே
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment