Saturday, January 19, 2019

பாசிச பாஜக

வேலை வாய்ப்பின்மையும் பண வீக்கமும் மிகவும் கடுமையாக அதிகரித்து விட்டது. நாங்கள் கடுமையான துன்பத்தில் உள்ளோம். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வேதனை..? .. கடைசியில் உண்மையை ஒத்துக்கொள்ள தொடங்கியிருக்கிறார்கள்.. ஆனால் அக்கா தமிழிசை மல்லுகட்டுகிறது .. ₹89 லட்சம் கோடி கடன் இந்த ஐந்தாண்டில் மட்டும் 49% விழுக்காடு அதிகரித்து எப்போதுமில்லாதளவு தடுமாற்றத்தை தந்திருக்கிறது பணமதிப்பிழப்பு மிகப்பெரிய தாக்கத்தை தந்து இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதலை தொடர்ந்து செய்கிறது .. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து 47% விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.. சிறுதொழில்கள் முடங்கிப்போய் முதலாளியாய் திரிந்தவன் கூலித்தொழிலாளியாய் ஆக்கிய பெருமை திரு.மோடிஜியை தான் சேரும்.. நான் என்ன பொருளாதார மேதையா என எதிர்கேள்வி கேட்கும் மோதிஜி.. பொருளாதார மேதைகள் வல்லுநர்களை கலந்தாலோசிக்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என ஒரே இரவில் இந்திய பணத்தை மதிப்பிழக்க செய்து கள்ள வியாபாரிகள் தங்கள் முதலீட்டை நல்ல பணமாக்க செய்ததுதான் கடைசியில் நடந்தது .. அப்போதே நாடாளுமன்றத்திற்க்கு வந்து திரு.மன்மோகன்சிங் எச்சரித்தார் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்துமென்றார் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாதென்றார் .. மோடி கேட்கவில்லை .. .. சிறந்த பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளை எல்லாம் ஏற்க மறுத்து தான் தோன்றித்தனமாக செயல்பட்டதன் விளைவை மக்கள் உணர்கிறார்கள் இந்தியா முழுதும் இந்த ஆட்சிகிகெதிராக மக்கள் வெகுண்டெழுகிறார்கள் அதனால் தான் பொய்க்கு மேல் பொய் சொல்லி நாங்கள் நான்கரையாண்டை கழித்தவர் .. தளபதி கொல்கத்தாவில் முழங்கியது போல நூறு கூட்டம் என்றால் ஆயிரம் பொய் சொல்வார் ..கடைசியில் ஊழல் இல்லாத ஆட்சியாம் ..ரஃபேல் ஊழல் நாடுகடந்து சிரிப்பது தெரியாமல் .. 4ஜி ஒதுக்கீட்டை அரசின் பொது நிறுவனத்திற்கு தராமல் தனியாருக்கு தாரை வார்த்ததில் எவ்வளவு இழப்பு .. A to Z ஊழல் வலைத்தளங்களில் இன்றைக்கு இருக்கிறது .. .. தளபதி சொன்னதைப்போல நாடு மீண்டுமொரு விடுதலைக்கு தயாராக வேண்டும் இந்த பாஜக அரசு பார்பனர்களின் நலனை தவிர வேறெதையும் கவனத்தில் கொள்ளவில்லை .. உயர்பதவிகள் .. உயர்கல்வி என தொடங்கி எல்லா துறையிலும் நாட்டின் பூர்வீக குடிகளின் மண்ணின் மைந்தர்களின் கல்வி வேலைவாய்ப்பை பறித்ததுதான் மிச்சம் .. இனியும் பூசிமெழுக முடியாதென்பதால் மோடியை பலிகொடுத்தாவது சித்தாந்தத்தை காக்க.. ஆர்எஸ்எஸ் தலைவர் பகவத் "வேலை வாய்ப்பின்மையும் பண வீக்கமும் மிகவும் கடுமையாக அதிகரித்து விட்டது. நாங்கள் கடுமையான துன்பத்தில் உள்ளோம். என்று நீலிகண்ணீர் வடிக்கிறார் .. பாஜக ஆட்சியின் நாட்கள் எண்ணபடுகின்றன என்பதை நாட்டின் நடப்புகள் உணர்த்துகின்றன இனியும் பொய்களை நம்புவதில்லை..வாய்சொல்வீரரின் சொல் அலங்காரம் பித்தலாட்டம் நிறைந்தது இந்தியா கண்ட பிரதமரில் எங்கு படித்தார் என்ன படித்திருத்திரார் என்று தெரியாத அல்லது மறைக்கபட்ட வரலாற்றை இப்போதுதான் காண்கிறோம் .. ஒவ்வொரு அசைவும் பொய்யால் ஆனது .. இனியும் விட்டால் நாடு பின்னோக்கியே செல்லும். மதவெறிபிடித்த பாசிச கொடூரமனபான்மையோடு செயல்படுவோர் .. மாட்டின் நலன் மனித நலனைவிட பெரிதென்போர்.. பள்ளிகூடங்களை மாட்டு தொழுவமாக்கி மாணவர்களை தெருவில் நிறுத்துவோர்.. மாட்டிற்கு ஆக்ஸிஜனை தந்து பச்சிளங்குழநிதைகளை கொல்லும் மதவெறிபிடித்த மகாபாவிகள் ..கையில் நாடுபோனால் குரங்கின் கையில் பூமாலையைப்போல ஆகிவிடும் .. .. விரட்டுவோம் பாசிசபாஜகவை .. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment