Saturday, February 2, 2019
திமுக மக்களுக்கான இயக்கம்
ஊராட்சி கூட்டமென்று ஊர் ஊராய் போகிறார் ஸ்டாலின் .. எடப்பாடி ..
மக்களை சந்திப்பதில் என்ன தவறு மக்களின் ஆட்சியில் மக்களே தீர்மானிக்கும் சக்தியாய் இருப்பவர்கள் ..ஜனநாயகத்தின் அடிப்படையே,மக்களின் தனிஉரிமையும் அவர்கள் யாரை தேர்வு செய்யவேண்டுமென்று சுயமாய் தீர்மானிக்கும் அதிகாரம் பெறுவதுதான் .. மக்களின் விருப்பு வெறுப்பு அவர்களுக்கு என்ன தேவை எது உடனடி தேவை என்பதறிந்து செயல்படுதல் இது தான ஜனநாயக ஆட்சியின் கடமை .. ஆளும் அரசும் முதல்வரும் அவர் சகாக்களும் மக்களை சந்திக்க துணிவின்றி தவிர்க்கிற நிலையில் எதிர்க்கட்சி தலைவராய் .. மிகப்பெரிய ஜனநாயக இயக்கத்தின் தலைவராய் அவரும் அவரின் சகாக்களும் தொண்டர்களும் மக்களை சந்திப்பது ஏன் முதல்வருக்கு எரிச்சலை தரவேண்டும் ..
..
உள்ளாட்சி தேர்தலை நடத்த வக்கில்லாமல் நீதிமன்றம் உத்தரவிட்டும் காலம் கடத்தி ஜனநாயகத்தின் உயிர்ஊற்று உள்ளாட்சி அதிகாரத்தில் இருக்கிறதென்ற உண்மைகூட அறியாமல் எங்கே உள்ளாட்சி தேர்தலை வைத்தால் மிகப்பெரிய தோல்வியை மக்கள் தந்துவிடுவார்களென அஞ்சி தொடர்ந்து ஏதேதோ காரணங்களை சொல்லி வரும் அதிமுக அரசு .. முன்பு அப்படிதான் எம்ஜிஆர் உள்ளாட்சி தேர்தலையே நடத்தாமல் தவிர்க்க .. கடைசியில் வேறு வழியின்றி நடத்தியதில் 98 நகராட்சிகளில் 90 இடங்களில் திமுக பிடித்ததும் வரலாறு .. மக்களே தங்கள் தேவைகளை கண்டு தீர்வு செய்துகொள்ள எதுவெல்லாம் அவர்களின் அடிப்படையென்பதை அவர்களே முடிவு செய்து தங்கள் வட்டத்திற்குள் முழு அதிகாரத்தோடு செயல்படவே உள்ளாட்சி அமைப்புகள் .. சிற்றூர்களின் (கிராமம்) வளர்ச்சி நலன் சுகாதாரம் போன்ற அடிப்படைகள் கவனிப்பாற்று அவசர தேவைகளுக்கு கூட அதிகாரிகளை நம்பி பின் செல்லகூடிய நிலை .. அதிகாரவர்க்கத்தில் பிடியில் உள்ளாட்சிகள் இருப்பது ஜனநாயகத்தையே கேலிபொருளாக்குகிற செயல் ..இவையெல்லாம் திடீரென்று ஒரு நாளில் சசிகலா சிறைசெல்ல நேர்ந்ததால் முதல்வர் பதவி கிடைத்த எடப்பாடிக்கு தெரியாது .. அன்று எடப்பாடிக்கு பதில் சசிகலா யாரை கைகாட்டியிருந்தாலும் அவர்தான் இன்று முதல்வராய் இருந்திருப்பார் .. எந்தவிதத்திலும் அருகதையற்ற அரசாய் விளங்குகிற அதிமுகவும் அதன் அமைச்சர்களும் தங்களின் ஊழலை மறைக்க
அதிலிருந்து தப்பிக்க பாஜகவின் உத்தரவிற்கு கட்டுபட்டு அடிமைகளாய் இருக்கிறார்கள் .. அவர்களுக்கு மக்களை சந்திக்கிற செயல் அதிர்ச்சியை தொந்தரவை தந்திருக்கிறது ..
..
ஊராட்சி சபை அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு கேள்விகேட்கிறார்கள் திமுகவிற்கு வாக்களித்தவர்கள் மட்டுமல்ல வாக்களிக்காதோரும் எதிர்த்து வாக்களித்தோரும் கூட தங்களின் கேள்விகளை தங்கள் தரப்பு கோரிக்கைகளை நியாயங்களை எடுத்துவைக்கிறார்கள் தவறை சுட்டிகாட்டிகிறார்கள் எது எங்களின் தேவை எதிலெல்லாம் நாங்கள் பாதிக்கபட்டிருக்கிறோம் இந்த ஆட்சி செய்த துரோகங்கள் எதிர்க்கட்சியாய் திமுக செய்ய தவறியதென்ன என்பதையெல்லாம் மக்களே முன்வந்து கேட்கிறார்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்கள் .. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எதையெல்லாம் செய்யவேண்டும் எதுவெல்லாம் முதல் தேவை எதை தவிர்க்க வேண்டுமென்று மக்களிடமே கேட்டு தெரிந்து தெளிவுபெறுகிற நிகழ்வு ..மிக சிறந்த ஜனநாயகதன்மையோடு மக்களே மகேசன் என்ற உயர் தத்துவத்தின் உயிர்நாடியாய் ஊராட்சி சபை கூட்டங்கள் ..
எடப்பாடிக்கு என்றில்லை ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதோருக்கு அரசியலை தங்கள் நலன் பதவிக்கு என செயல்படுவோருக்கும் சாதிமத அரசியல் செய்யும் அயோக்கியர்களுக்கு எரிச்சல் தரத்தான் செய்யும் ..
..
திமுக மிகசிறந்த பாதையில் பயணிக்கிறது மக்களிடமே சென்று அவர்களின் தேவைகளை அவர்களிடமிருந்தே அறிந்து பணியாற்று வாய்ப்பை பெறும் ஜனநாயக நெறியோடு செயல்படுகிறது .. எல்லாகாலகட்டத்திலும் வெற்றி தோல்வியிலும் மக்களிடமே செல்கிற இயக்கம் .. பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் நல்லாட்சியை தந்த.. தரபோகிற இயக்கம் ..விடுதலை இந்தியாவில் உட்சபட்ச ஜனநாயகநெறிகளோடு வெளிப்படைதன்மையோடு இயங்குகிற கட்சி திமுக மட்டும் தான் ..
..
திமுக மக்கள் இயக்கம் மக்களுககான இயக்கம்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment