Sunday, January 27, 2019
சுரமில்லா இசை
தமிழிசை கேட்க இனிக்கும் .. இங்கே அக்கா தமிழிசையின் கூச்சல் வெறுப்பை தந்தது .. காவி இரத்தம் ஓடுகிறது லட்சோபலட்ச தாமரையை கண்டு சூரியன் ஓடியொளிகிறது .. ஏதோ எதுகைமோனையில் பேசவேண்டுமென்பதற்காக உளறிகொட்டி காட்டுகத்தல் கத்தினார் .. தலைவா மோடி என்றெல்லாம் புகழ்ந்து .. பாவம் "மோடிஜி" என்று கேட்டுபழகியவர் நிச்சயமாய் எதையோ எதிர்பார்த்து மோடியை புகழ்வதை அறிந்துகொள்வார் .. தன் தந்தை இலக்கிய செல்வரிடமாவது ஏதாவது எழுதி வாங்கி போய் பேசியிருக்கலாம் .. பத்து நாடாளுமன்ற தொகுதிகளை சொல்லி வெற்றி பெறுவோமென்ற போது யாரும் கைதூக்க காணோம் .. ஊழல்வாதிகள் விடமாட்டேன் என மோடியும் தன் பங்கிற்கு சொல்லிவிட்டு போகிறார் .. ஊழலுக்காக தன் தலைவியையே ஜெயிலுக்கு அனுப்பியவர்களை வைத்துக்கொண்டு .. எதிலும் கமிஷனோடு செயல்படுகிற எடப்பாடி &பன்னீர் கோஷ்டியை வைத்துக்கொண்டு .. இவர்கள் கேட்கும் கையூட்டை கமிஷனை கொடுக்கமுடியாமல்தான் ஆந்திராவிற்கு தன் தொழிற்சாலையை மாற்றியதாக KIA நிறுவனம் வெளிப்படையாகவே சொல்லியதெல்லாம் மோடிக்கு தெரியாதா .. தெரிந்தால் அவரும் தன் பங்கிற்கு இவர்களிடம் கேட்டு பெற்றிருக்கலாம் ..
..
வளைத்து வளைத்து கருப்புகொடிகாட்டியும் நேற்றியிலிருந்து தொடர்ந்து தமிழகம் #GoBackModi என்று முதலிடத்திலேயே வைத்திருந்து.. எதிர்ப்பை பலமாக பதிவு செய்திருக்கிறது எங்குபோனாலும் நெஞ்சை விடைத்து பேசி தீர்க்கிறவர் எழே நிமிடத்தில் தன் உரையை சுருக்கிகொண்டு மலையாளகரையோரம் போனால் அங்கே #PoMoneModi என்று கலக்குகிறார்கள் தென்னகத்தில் பாசிச பாஜகவை விராடுவிரட்டுகிறார்கள் .. தமிழகத்தில் விடாது கருப்பு என்றால் அங்கே சிவப்பு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல்நாட்டுவிழா .. ஒரு நல்ல திட்டம் நாட்டுமக்களுக்கு பயனிப்பது வரகூடாதா ஏன் எதிரிக்கிறீர்களென கேட்போருக்கு இதுவரை மோடி நட்ட கல் அப்படியே இருக்கிறது ஜம்முவில் நான்காண்டுகளுக்கு முன்பு நட்டது அசையாமல்.. இன்னமும் நிதி கிடைக்காமல் இருக்கிறது தகவல்உரிமை சட்டத்தின் கீழ்பெறப்பட்ட தகவல் இதுவரை நிதி ஒதுக்கவில்லையென மோடியை பார்த்து சிரிக்கிறது .. இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் ஏற்கனவே மன்மோகன்சிங் ஆட்சிகாலத்தில் அன்புமணி சுகாதாரதுறை அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் .. பிறகு வந்த ஜெயலலிதா அரசு கண்டுகொள்ளவில்லையென்று சொல்கிறார் ..
..
இந்தியாவின் தலைசிறந்த ஊழல்கட்சியை .. கொள்ளையடிப்பதில் பேர்போனவர்களை ..அதிலும் கறாராக கமிஷனை வெளிப்படையாக வாங்குகிறவர்களை உலகம் முழுவதும் அறிந்த லட்ச ஆட்சியை நடத்துகிற அதிமுகவினரை அருகில் வைத்துக்கொண்டு மோடி ஊழல்வாதிகளை விடமாட்டேன் என்றது தான் மிகப்பெரிய காமெடி ..நோட்டாவை தாண்ட முடியாத உண்மையை உணராமல் அக்கா தமிழிசை 10 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்றது பாவம் ஏதோ முற்றிப்போய் உளறிக்கொண்டே இருக்கும் மனபிறழ் மனிதரைப்போல தாமரை மலர்ந்தே தீரும் என்பதை காணும் போது மனது கஷ்டமாக இருக்கிறது அதுவும் உரக்க ஒலியெழுப்பி கத்திக்கொண்டே இருப்பதை பார்க்க பாவமாகதான் இருக்கிறது ..
..
#சுரமில்லா_இசை…
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment