Sunday, January 6, 2019

பொய்யர்கள்

ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள்... அல்லது பதவி விலகுங்கள்.. நிர்மலா சீதாராமனுக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல் HAL நிறுவனத்திற்கு மத்திய அரசு 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஆர்டர் கொடுத்தாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் கூறுகிறார். ஒரு ரூபாய் அளவிற்கு கூட ஆர்டர் கொடுக்காமல் நிர்மலா சீதாராமன் பொய் கூறுகிறார். இப்படி பொய் கூறிய நிர்மலா சீதாராமன் உடனே பதவி விலக வேண்டும்.. என்கிறார் ராகுல் .. // HAL has clarified that not even a single rupee contract was awarded till now. Defence Minister Nrmala seethraman should apologize giving wrong information in parliament. // ஒரு ரூபாய் ஒப்பந்தம் கூட இதுவரை வழங்கப்படவில்லை என்று HAL தெளிவுபடுத்தியுள்ளது. பாராளுமன்றத்தில் தவறான தகவலை வழங்கியிருக்கிறார் .. இருந்தா கொடுக்கமாட்டாங்களா.. இரண்டுமணி நேரம் பேசியபோதே ஆவணங்களில் மேசையில் வைத்திருப்பாரே.. ஏழை மகன் ..நடுத்தர குடும்ப மகளென்றெல்லாம் வசனம் பேசியிருப்பாரா என்ன.. நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் என்றால் நாடாளுமன்ற நேரத்தை நான்கு மணி நேரம் வீணடித்தாலும் அவர்களால் சொல்லமுடியாது .. தன் மீது தவறில்லையென்பதை உணர்ந்து விசாரணையை துரித படுத்துங்கள் என சொன்னவர் அத்வானி விரைந்து வழக்கை முடியுங்களென அதுவரை போட்டியிட போவதில்லை என்று நீதிமன்றத்தில் சொன்னார்.. அந்த துணிவு இப்போது ஏன் மோடிக்கு இல்லை .. நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு ஏன் உத்தரவிட மறுக்கிறீர்.. தவறிழைத்ததால் மாட்டிக்கொள்வோமோ என்ற பயம் காரணமா.. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட தெரியகூடாதென்பது எந்தவகை ஜனநாயகம் .. நாட்டை நேசிக்கிறவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லையா மக்களால் தேர்வு செய்யபட்ட மக்களின் பிரதிநிதிக்கு அதிகாரம் இல்லையா .. ஏன் நாடாளுமன்றத்தை கண்டு அஞ்சவேண்டும் .. நிர்மலா சீதாராமன் நீண்ட நேரம் பேசினார் ஆனால் ஏதோ நிர்பந்தம் அவரது பேச்சில் இருந்தது மோடியை திருடன் என்றழைக்கலாமா என்கிறார் .. வேறெப்படி அழைப்பதென அவர் சொல்லவேண்டும் .. கேள்விக்கான பதிலை கடைசிவரை தராத அவரது சமாளிப்பை பாராட்டியே தீரவேண்டும் .. ஊடகங்கள் இதை விவாதமாக்கவே அஞ்சுகிறது 2ஜி யை தினம் தினம் விவாதமாக்கி பூதாகாரமாய் ஆக்கியவர்கள் .. இப்போது வாய்மூடி பல்லிடுக்கில் மெல்ல பேசுகிறார்கள் ஜெயலலிதா வழக்கை சொத்துவழக்கு என்று சப்பை கட்டியவர்கள் தண்டிக்கபட்ட குற்றவாளி என்றான பிறகும் மென்மையான போக்கை கொண்டிருந்தார்கள்.. ஊடக அறமற்று வியாபார நோக்கை எல்லாம் கடந்து பாசிச மனபான்மையோடு கதைத்தவர்கள் .. தண்டிக்கப்பட்ட குற்றவாளி இறந்தபிறகு அவரை இன்னும் புகழ்ந்தும் பாராட்டியும் மக்கள் பணத்தை செலவழித்து அரசு விழாக்கள் கொண்டாடுவதும் அரசு செலவில் மணிமண்டபம் கட்டுவதும் நடக்கிற நாட்டில் இதையெல்லாம் தட்டிகேட்காத நீதி நடப்பிலாக்கிற தேசத்தில் .. ஊழல் பெரிதான விடயமாக தெரியவில்லை போலும் ..பொய்யை மட்டுமே மூலாதாரணமாய் கொண்ட ஆட்சியில் 56 இஞ்ச் மார்ப்பை விரித்து வீரவசனம் பேசினால் எல்லாம் சரியாக இருக்குமென நம்புகிற நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகம் கேலிகூத்தாகதான் இருக்கும் .. .. இவர்கள் கடைசிவரை உண்மை பேசபோவதில்லை ஆட்சி மாற்றம் வந்து நேர்மையான விசாரணை செய்தால் மட்டுமே உண்மை வெளிவரும் .. இந்த பாசிச பொய்யர்களின் ஆட்சிக்கு முடிவுகட்டுவோம் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment