Wednesday, January 30, 2019

காந்தி தேசம்

தேசம் எங்கே போகிறது.. தேசதந்தையை கொன்றவர்கள் தங்கள் கொண்டாட்ட திமிரில் காந்தியை கொல்வது போன்று நடந்து மகிழ்கிறார்கள் .. ஆர்எஸ்எஸ் இந்த நாட்டிற்கு கேடு என்பதும் அதன் நேரடி ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்கு நிறைய நிகழ்வுகளை நாம் கண்டும் நேரடியாய் பாதிப்பிற்குள்ளான போதும் மௌனமாய் நகர்ந்ததன் விளைவு தேசதந்தை என விளித்து மகிழ்ந்த நாட்டில் "மகாத்மா கோட்சே" என புகழ்ந்து காந்தியை மீண்டுமொருமுறை கொல்கிறார்கள் .. .. 1948 ல் ஜனவரி 25 நாக்பூரில் நடைபெற்ற ராஷ்ட்ரீய சேவசங்க (ஆர்எஸ்எஸ்) மாநாட்டில் காந்தியை கொல்வதென முடிவெடுக்கபட்டு யார் கொல்வதென சீட்டெழுதி குலுக்கி போட்டு.. நாதுராம் கோட்சே பெயர் வருகிறது .. முன்கூட்டியே திட்டம் தீட்டி சாதூர்யமாக ஆர்எஸ்எஸிலிருந்து விலகியிருக்க பணித்து கோட்சேவின் கையில் "இஸ்மாயில்" என பச்சை குத்தி அனுப்படுகிறார் .. கோட்சே அடித்து கொல்லபடுவார் அல்லது தற்கொலை செய்துகொள்ளவேண்டும் அப்போது தோழர் காந்தியை கொன்றது இஸ்லாமியர் என மிகப்பெரிய கலவரத்தை நடத்தி அதன் மூலம் இந்துராஷ்டீரியம் அமைக்கலாமென்ற ஆர்எஸ்எஸின் திட்டம் பலிக்காமல் போனது .. காந்தி அவனை ஒன்றும் செய்யாதீர்களென சொல்லிவிட்டு மறைந்தார் .. அதையும் மீறி கலவரத்தை நடத்த திட்டமிட்ட போது பெரியார் வானொலியில் காந்தியை கொன்றது பாப்பான் என பகிரங்கமாகவே சொல்லி பதட்டத்தை தணித்தார் .. தமிழகத்தில் மதகலவரம் தடுக்கபட்டது காந்தியை கொல்ல என்ன அவசரம் வந்ததென்ற நம்மிடையே கேள்வி எழும் “நான் ஒரு சர்வாதிகாரியாக இருப்பேனானால் மதத்தையும் அரசையும் வேறு வேறாகப் பிரித்துவைப்பேன். என் மதத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். அதற்காக என் உயிரையும் கொடுப்பேன். ஆனால் அது என் சொந்த விவகாரம். ஆனால் அதில் அரசுக்கு எந்த வேலையும் இல்லை. மதச்சார்பின்றி உங்களின் நல்வாழ்வு, ஆரோக்கியம், தொடர்புகள், வெளியுறவுகள், பணம் முதலானவற்றை அரசு கவனித்துக்கொள்ள வேண்டுமே தவிர மதத்தை அல்ல. மதமென்பது அவரவர் தனிப்பட்ட அக்கறை.” என்று காந்தியார் உறுதிமொழி தந்த 58 வது நாள் கொல்லபடுகிறார் .. இனியும் காந்தியை வைத்திருந்தால் எதுவும் செய்யவிடமாட்டாரென முடிவெடுக்கபட்டு கொல்லபட்டார். அப்போது படேல் கூட ஆர்எஸ்எஸை தீவிரவாத இயக்கமென்ற கூறியது முக்கியத்துவம் வாய்ந்தது எனினும் அவர் மகாராஷ்டாவில் பார்பனர்கள் அதிகம் தாக்கபடுகிறார்களென கவலை கொண்டதும் விவாதமாகியது .. .. இந்த தேசம் காங்கிரஸ் ஆட்சியில் நிறைய கருத்துவேறுபாடுகள் குறைகள் ஊழல்கள் மாநில நலன்களின் புறக்கணிப்பு என நிறைய ஏற்றுக்கொள்ளமுடியாதவை இருந்தபோதும்.. ஜனநாயக மீறல்கள், எதிர்ப்புகள் இருந்தபோதும் மதவெறியாட்டமோ அதைவைத்து கலவரபடுத்தி மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் மோதவிட்டு குளிர்காயும் செயலோ இல்லை .. ஏன் மக்கள் தொடர்ந்து காங்கிரஸை விரும்பினார்கள் என்ற கேள்விக்கு பதில் இந்த நான்கரை ஆண்டில் பாசிச பாஜக நமக்கு உணர்த்திவிட்டது.. பாசிசத்தை ஆட்சியில் அமர்த்தினால் நாடு சுடுகாடாகுமென நம் முன்னோர்கள் தெளிவாக இருந்தார்கள் மதநம்பிக்கை நாட்டின் இறையாண்மையை கொன்றுவிட கூடாதென்ற தெளிவு அவர்களிடம் இருந்தது.. யாரை தேர்வு செய்யகூடாதென்றும் தெரிந்திருந்தது ..பொய்யை போட்டோஷாப்பை நம்பி குஜராத்தில் கோரதாண்டவமாடிய செயலை மறந்ததன் விளைவு மதவெறியை மதபற்றென நம்பியதன் முடிவு இன்று காந்தியை மற்றொரு முறை கொல்ல நேர்ந்தது .. சாமியார்கள் கையில் நாடு போனால் குழந்தைகள் கூட கொல்லபடுவார்களென புரிந்தது .. யாருக்கும் அடங்காத வெறிசெயலை எந்தவித பயமுமின்றி செய்ய காவிகளால் முடிகிறது .. கோட்சே இங்கே புனிதனாக மாற்ற முயற்சிக்கும் பணியை பாஜகவும் ஆர்எஸ்எஸும் செவ்வெனே செய்கிறது .. காந்தியின் நடவடிக்கைகள் மீது கருத்துவேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் ..வன்மவெறியோடு ஒரு கூட்டத்தை மூளைச்சலவை செய்து ஆர்எஸ்எஸ் உலவ விட்டிருக்கிறது பாருங்கள் இதிலிருந்தே அது எத்தகைய தீவிரவாத இயக்கமென அறிந்துக்கொள்ளமுடியும் .. .. காந்திகள் ஜாக்கிரதை கோட்சேகள் உலவுகிறார்கள்.. காந்தி தேசம் கோட்சே கைகளில் அல்லல்படுகிறது .. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment