Monday, January 21, 2019
கடவுள் மறுப்பு ..எங்கள் கொள்கையா
கடவுள் மறுப்பு எங்கள் கொள்கையா..
திமுக மீது தொடர்ந்து சுமத்தப்படும் குற்றசாட்டு அது இந்துக்களுக்கு எதிரான கட்சி .. பிற மத வழிபாடுகளை கேள்வி கேட்காமல் இந்துமதத்தை மட்டுமே விமர்சனம் செய்கின்றன .. உன்மையில் திராவிட இயக்கங்கள் எந்த மதத்தையும் கேலி கிண்டல் செய்வதில்லை ஆனால் அந்த மதத்தை சொல்லி பிரிவினை செய்வதையோ அல்லது ஒரு சமூகத்தை தாழ்த்தி அவர்களை அடிமைபடுத்துவதையோதான் எதிர்க்கிறது அவர்களின் உரிமைகளை அபகரிப்பதைதான் ஏன் என கேள்வி எழுப்பி ..அவனை சிந்திக்கவைக்கிறது
..
திமுகவை தொடங்கும் போதே ராமரை கும்பிடவும் மாட்டேன் அதற்காக தேங்காய் உடைக்கவும் மாட்டேன் என்றார் அண்ணா .. ஏன் பெரியாரே இந்த சமூகத்தில் நடக்கிற ஏற்றதாழ்வுகளை சமன் செய்யவேண்டுமென்பதற்காக தான் கடவுள் மறுப்பை செய்யவேண்டியிருந்தது .. சாதி சம்பரதாயங்களை ஒழிக்க வேண்டுமென்றேன் அது வேதத்தில் இருக்கிறதென்றார் வேதத்தை மறுப்போம் என்றேன் அது கடவுள் அருளியதென்றார் அப்படியெனில் அந்த கடவுளையே எதிர்ப்போமென செய்கிறேன் என்றார் .. மற்ற மதங்களில் ஏற்றதாழ்வில்லையா சாதியம் இல்லையா என கேட்போருக்கு ராசா தந்த பதிலே போதும்.. கிருஸ்துவர்களில் ஏற்றதாழ்வு உண்டு தனியாக அமர்த்தியிருக்கிறார்கள் தலித் கிருஸ்துவர் நாடார் கிருஸ்து என பேதம் உண்டு ..முஸ்லீம்களில் கூட பிரிவினை உண்டு சின்னி சியா சாதிய அடுக்கு உண்டு ஆனால் அங்கே யாரும் இது கடவுள் சொன்னதென்றோ அருளியதென்றோ,சொல்லவில்லை அவர்களின் வேதத்தில் இல்லை ஆனால் இங்குதான் கடவுள் அருளிய வேதத்திலே இருக்கிறதென்று சொல்கிறார்கள் என்றார் ..
ஏதாவது இந்துத்துவா சக்திகளின் செயல்களை கண்டித்தால் உடனேயே அதுகுறித்து பேசாமல் திராவிட இயக்கங்கள் ஏன் இஸ்லாமிய கிருஸ்துவத்தை விமர்சிப்பதில்லை என்கிறார்கள் அந்த மதங்களின் தாக்கம் அத்துமீறல் இந்த சமூகத்தை பாதிக்குமெனில் அப்போது எதிர்ப்போம்
மதத்தை சொல்லி பிழைப்பு நடத்தும் எல்லா மத சாமியார்களையும் கண்டிப்போம் மத பிரச்சாரம் செய்ய முனைவோரை ..அதை வைத்து கலவரம் செய்ய நினைக்கும் பயங்கரவாதிகளை ..நாட்டிற்கும் சமூகத்திற்கும் கேடுவிளைவிக்க நினைப்போரை எதிர்ப்போம் .. மதத்தை வியாபாரமாக்கி அரசியலாக்கி லாபம் செய்ய நினைப்போரையும் மதங்களை சொல்லி மக்களை பிரித்தாள செய்கிற கேடுகெட்டோரை அடையாளம் காட்டுவோம்
..
இன்றைய தினம் கூட லயோலா கல்லூரி "ஓவியம்"
ஒருவித பரபரப்பை நிகழ்த்தியிருக்கிறது மத சின்னங்கள் குறியீடுகளை எப்படி பயன்படுத்தலாம் என்று சிலர் கோபம் கொள்கிறார்கள் இந்த ஓவியங்கள் சில ஆயிரம் பேர் பார்த்து கடந்து போயிருப்பார்கள் ஆனால் அதை எதிர்த்து லட்சகணக்கானோர் பார்க்க வைத்த பெருமை இந்துத்துவா கோஷ்டிகளை சாரும் ... உண்மையில் இந்த ஓவியங்கள் ஏற்கனவே வெளிவந்தது சமூக வலைதளங்களில் வலம்வந்தது தான் அப்போதெல்லாம் இந்த "பார்பனர்கள்" (எச்.ராசா நாராயணன், கௌதமி ) பொங்கவில்லை பிறகேன் இப்போது இந்து மதத்தை கொச்சைபடுத்திவிட்டதாக பொங்கவேண்டும் .. காரணம் ஒரேயொரு படம் .. நூலால் 10% வரைந்தது .. பார்பன இடஒதுக்கீட்டை குறிக்கிறதென்பதால் லயோலாவிற்கெதிராக மதம்மாற்றம் செய்கிற தீய சக்தியென ஒப்பாரி வைக்கிறார்கள் ..அது உண்மையெனில் .. "சோ" ராமசாமி ..அய்யராகவே தான் இருந்தார் அதுவும் ஆர்எஸ்எஸின் ராஜகுருவாக.. அவர்களை தொட்டால் உடனே இந்துமதத்தை துணைக்கழைத்து கதறுவார்கள் .. நந்தினி கூட்டுபலாத்காரம் செய்யபட்டபோது அவளது யோனில் சொருகபட்டிருந்த போதெல்லாம் தெரியவில்லை அதற்காகவெல்லாம் இன்றைய யாரும் பொங்கவில்லை அவள் இந்துவல்ல..? நாட்டில் நடக்கும் இந்த பாசிச ஆட்சியின் செயலை தன் தூரிகையால் கலைஞன் வரைந்திருக்கிறான் .. இதே கேலிசித்திரம் என்ற பெயரில் பிற மதத்தை கேலிசெய்யும் போது அவர்கள் கடந்து போவதைப்போல கண்டுக்கொள்ளாமல் விட்டிருந்தால் இன்று உலகமே இந்த ஓவியங்களை கண்டிருக்காது ..
..
நோக்கம் இங்கே ஒரு அசம்பாவிதம் நடைபெறவேண்டும் .. மத மோதல் சாதிகலவரம் ஏதேனும் நடந்து அதன் மூலம் கட்சியை வளர்க்கவேண்டுமென்ற ஆசையோடு வருபவர்களுக்கு அதற்கான இடம் இதுவல்ல.. தினம் தினம் கொடூரமான வார்த்தை பிரயோகம் எதிர்போரை இந்துவிரோதி தேசதுரோகி என சொல்லிதிரியும் போதும் இங்கே அமைதியாய் இருக்கிறது பாருங்கள் அதற்கு காரணம் .. அறிவுடை சமூகமாய் எதையும் சிந்திக்கிற நாகரீகமாக செயல்படுகிற பகுத்தறிவுள்ள பக்குவமுள்ளவர்களாக, கருத்து சுதந்திரத்தை விரும்புகிற ஏற்கிறவர்களாக மக்களை மாற்றியதில் பெரும்பங்கு திராவிடத்தையே சாரும் .. என்னதான் மதவெறியை சாதிவெறியை தூண்ட நினைத்தாலும் அவர்களின் அரைகுறை செயலை கண்டுகொள்ளாமல் அவர்களை காமெடியர்களாய் எண்ணி கடந்து போகிறதே தமிழ் சமூகம் அங்குதான் திராவிடத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது ..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment