Wednesday, January 23, 2019

#PriyankaGandhi

Welcome #priyankaGandhi .. .. நீண்டநாள் எதிர்பார்ப்பு திருமதி.பிரியங்கா காங்கிரஸ் கட்சியின் அகிலஇந்திய பொதுசெயலாளராக நியமிக்கபட்டு உ.பி.மாநில பொறுப்பு வழங்கபட்டிருக்கிறது .. நீண்டநாள் மௌனம் ..நல்ல சந்தர்ப்பத்திற்காக காத்திருந்ததைப்போல சரியான காலகட்டத்தில் அரசியலுக்கு வருகிறார் உ.பி.போன்ற மாநிலங்களில் காங்கிரஸை தூக்கி நிறுத்த இளம் தலைவர்கள் கையில் தந்திருக்கிறார்கள் அகிலேஷ் மாயாவதியின் நகர்வு இந்த முடிவை எடுக்கவைத்திருக்கிறது சரியான தேர்வை தந்திருக்கிறது காங்கிரஸ் .. .. வாரிசு அரசியல் குடும்ப அரசியல் என பழைய பல்லவியை பாடுகின்றனர் பாசிச பாஜகவினர் .. ஆம் தவறில்லை அரசியல் பிழைகளிடம் ..மதவெறியர்களிடம் .. ஆங்கிலேயன் சூ வை நக்கிய மன்னிப்பு கடிதம் தந்தவர்களிடம் ஆங்கிலேயனிடம் கு.க.மானியம் பெற்று சுகபோக வாழ்வு வாழ்பவரிடம் பாசிச சிந்தாந்தத்தை தூக்கி சுமந்து பூர்வீக குடிகளை நசுக்குகிறவர்களிடம் நாடும் மக்களும் படும்பாட்டை கண்டு நேரு குடும்பத்தாரிடமே நாடு செல்வதில் தவறேதுமில்லை .. அவர்கள் நாட்டிற்காக உழைத்தவர்கள் குடும்ப அரசியலை தாண்டி எளிமையாக அரசியல் செய்கிற இந்த நாட்டை மக்களை நேசிக்கிற ..பிரிவினை தூண்டி குளிர்காயாமல் தேசம் பல இனங்களால் ஆனது பல்வேறு கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்டதென்ற தெளிவும் மாட்டிற்காக மனிதனை கொல்லாமல் மதவெறியை தூண்டி மக்களை கொன்று குவிக்காமல்.. தேசத்தை கார்ப்பரேட்டுகளிடம் அடகுவைக்காமல் ஜனநாயக நெறிமுறைகளை குழிதோண்டி புதைக்காமல் நேரிய வழியில் வெற்றி தோல்வி இரண்டையும் சமமாய் கருதும் காங்கிரஸ் நல்லதொரு தலைமையை எளிமையான உறுதியான நேர்மையான இளைஞர்கள் கையில் தந்திருக்கிறது ராகுல் மிக எளிமையான தூய தெளிவான பார்வை கொண்டவராக தெரிகிறார் .. அவருக்கு உறுதுணையாக பிரியங்கா காங்கிரஸில் பொது செயலாளராக ஆனதில் தவறில்லை சங்கிகள் கதறுகிறார்கள் ..கதறட்டும் .. ஒருமுறை மோடி வழக்கான தன் பேச்சில் கிண்டல் செய்த போது ..நான்" ராஜீவ்காந்தியின் மகள்" என்று வாயடைக்க செய்தவர் .. இந்திராவின் சாயலும் அவரது திறமையும் இவருக்கு இருப்பதாக அப்போதிலிருந்தே ஊடகங்கள் ஒரு பிம்பத்தை மக்களிடையே கொண்டு சேர்த்திருக்கிறது ராகுல் அரசியலுக்கு வந்தவுடன் இவர் ஒதுங்கியிருந்தார் .. மோடியின் அவல ஆட்சிக்கு முடிவுகட்டும் நேரம் நெருங்கியவுடன் உ.பி.யில் களமிறக்கபட்டிருக்கிறார் சரியான நேரத்தில் மிக சிறந்த முடிவிது எதிரிகள் கூடாரம் பெருங்கூச்சல் இடுவதிலிருந்தே அவர்கள் பதறுவது தெரிகிறது ..நாடு பாசிசவாதிகளின் மதவெறி கும்பலிடத்தில் போலி தேசியவாதிகளின் கையில் சிக்கி சீரழிகிற நேரத்தில் காங்கிரஸ் ஒன்றே இந்த தேசத்தின் பாதுகாப்பு என்பதை உணர வேண்டிய காலம் .. இனத்தால் மொழியால் மதத்தால் தேசத்தை துண்டிக்க நினைக்கிற நாலாந்தர அரசியல்வாதிகளிடமிருந்தும் நாட்டை காவி நிறமாக்க நினைக்கும் கபோதிகளிடமிருந்தும் இந்தநாடு இந்துத்துவா பிடியிலிருந்து மீட்கவும் சமதர்ம சமூகநீதி செயல்பாட்டிற்கு ..எல்லோருக்கும் கல்வி வேலைவாய்ப்பில் சமநீதி கிடைக்க வழிவகுக்க காங்கிரஸ் ஒன்றே தீர்வென்று மக்கள் முடிவெடுக்க துணிந்த நேரத்தில் .. ராகுலின் கரத்தை பலபடுத்த இந்திராவின் பேத்தியை காங்கிரஸ் களமிறக்குகிறது .. வரவேற்போம் .. .. நாடு நலம்பெற நல்லாட்சி மலர்ந்திட தீய மதவெறி சக்திகளிடமிருந்து .. பார்பனீய பாசிச சித்தாந்திகளிடமிருந்து நாட்டை காக்க இந்திராவின் பேத்தியை வரவேற்போம் .. Welcome #priyankaGandhi .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment