Thursday, January 10, 2019
Creamy layer
CREAMY LAYER..
ஏன் எதிரிக்கவேண்டும்..
உயர்வகுப்பினரில் ஏழைகள் பயனடைவதை ஏன் தடுக்கவேண்டும் என்ற கேள்வி எழும்.. இதுவரை இடஒதுக்கீட்டிற்குள் வராதவர்கள் தானே அவர்களுக்குரிய பங்கை ஏன் தர கூடாதென்ற கேள்விகள் மனதில் எழும்..
யார் ஏழை என்பதில் அவர்களுக்கான அளவீடு எது என்பதில் தொடங்கி நிறைய தெளிவுபெற வேண்டியது அவசியம் ..
பொருளாதார அளவுகோல் என்பது அடிக்கடி மாற கூடியது இன்றைய எனது வருமானம் அடுத்தாண்டோ அதற்கடுத்த ஆண்டோ மாறலாம் வருமானம் நிலையில்லாதது அதை அளவுகோலாய் கொள்வதே பெரும் பிழை..
உதாரணமாக மத்திய அரசு அறிவித்த அளவீட்டில் சொத்துள்ள ஒருவர் தன் சொத்தை தன் இருமகன்களில் ஒருவருக்கு எழுதிவைத்துவிட்டால் அவர் வறுமைகோட்டிற்கு கீழே வந்துவிடுவார் அவரது இரண்டாவது மகனுக்கு இடஒதுக்கீட்டின் பலன் கிடைக்கும் ..
சாதிய கணக்கெடுப்பை அறிவித்து அந்தந்த பிரிவினருக்குரிய ஒதுக்கீட்டை தர மறுப்பதேன் .
நேரு காலத்திலேயே ஏழைகளுக்கு இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டுமென நாடாளுமன்றத்தில் குரல் எழுந்தபோது .. அம்பேத்கர் எல்லா சமூகத்திலும் 80% விழுக்காடு ஏழைகள் இருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் தர இயலாது அதோடு இடஒதுக்கீட்டின் நோக்கத்தை அது சிதைத்துவிடும் என்றார்..
..
பிற்படுத்தபட்டவர் இடஒதுக்கீட்டில் ஒவ்வொரு முறையும் நிரப்பபடாத இடங்களை யார் அனுபவிக்கிறார்கள் .. உயர்பதவிகளில் ஏன் இதுவரை இந்த இடஒதுக்கீடு கொண்டுவரபடவில்லை .. பட்டியலின ஒதுக்கீட்டில் நிரப்படாத இடங்களை உயர்ஜாதி ஏழைகளுக்கு தந்தால் மாயவதி ஏற்பாரா.. இந்த மசோதா நிறைவேறியிருக்குமா..
எல்லா கட்சிகளுமே திராவிட கட்சிகளை தவிர்த்து ஆதரிப்பதின் பின்னணி என்ன..?
ஏழைகளுக்கு உதவவேண்டுமென்ற எண்ணம் வரவேற்கதக்கது ஆனால் அது பொருளாதார அடிப்படையில் என்பதுதான் கேள்விக்குறியாகிறது..
..
சட்ட திருத்த மசோதா ஆரம்பநிலையிலேயே தள்ளுபடி செய்யவேண்டும்,மாநிலங்களின் கருத்தை கேட்க தேவையில்லை என்கிறார் சட்சமறிந்த அருண்ஜெட்லி.. என்னவொரு சர்வாதிகாரபோக்கு .. நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பி கருத்து கேட்கவேண்டுமென்ற மரபு அப்பட்டமாக மீறபடுகிறது.. 7ந்தேதி அமைச்சரவை ஒப்புதல் ..8ந்தேதி நாடாளுமன்ற மக்களவை ஒப்புதல் .. 9ந்தேதி மாநிலங்களவை ஒப்புதல் இவ்வளவு விரைவாக இதரவரை எந்த மசோதாவது நிறைவேற்றபட்டிருக்கிறதா.. யாரேனும் எங்களுக்கு இடஒதுக்கீடுவேண்டுமென கொடிபிடித்தார்களா ..
யாரெல்லாம் உயர்ஜாதியினரென 1985 ல் அரசுவெளியிட்ட அறிக்கையில் 78 பிரிவினர் வருகிறார்கள் .. இதில் முஸ்லிம்களும் உண்டு (அன்சார், தெக்காணி, துதிகுலா, லெப்பை,ராவுத்தர், மரைக்காயர், மாப்ளா, ஷேக்,சையத் அல்லாத) பிற முஸ்லீம்கள் என்கிறது வேறேதாவது மிஞ்சிகிறார்களா என தெரியவில்லை.. மொத்தத்தில் பார்பனர் நலனுக்காக மட்டுமே செயல்படுவது தெரிகிறது..உச்சநீதிமன்றம் பொருளாதார அளவுகோல் சட்டவிரோதமென ஏற்கனவே தீர்ப்பு வழங்கியிருக்கிறது ஒன்பது பேர் அமர்வில் எட்டுபேர் செல்லாதென தீர்ப்பு வழங்கியும் அவசர கோலத்தில் நடப்பிலாக்குவது தேர்தலை
கணக்கில் கொண்டே தவிர வேறில்லை அனைத்துக்கட்சிகளும் (ஒரு சில கட்சிகள் தவிர)
ஆதரிப்பதும் பின்துணைப்பதும் தேர்தலுக்காகவே..
பிற்படுத்தபட்டவரும் தாழ்த்தபட்டவர்களும் அதிகாரத்திற்கு வராமல் உயர்பதவிகளுக்கி வராமல்.. பார்பனர்கள் உயர்பதவிகளை அலங்கரிக்கவரை ..சமநீதி என்பது எட்டாகனியாகவே இருக்கும்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment