Tuesday, January 8, 2019
இடஒதுக்கீடு..தமிழிசை
பாலகிருஷ்ணா மக்களுக்காக போராடினார்
அவருக்கு தண்டனை கிடைத்திருப்பது வேதனை அளிக்கிறது .. தமிழிசை சௌந்தரராஜன்
..
காவல் ஆய்வாளர் உட்பட 5 போலீஸ்காரர்களை இரும்புக்கம்பியால் தாக்கி, போலீஸ் ஜீப், பைக், மூன்று ட்ரக்குகளுக்கு தீவைத்து, பேருந்துகள் மீது கல்லெறிந்த வழக்கு அதில் தான் நிரூபிக்கபட்டு தண்டனை பெற்றிருக்கிறார்..
கட்டப்பஞ்சாயத்து சொத்து அபகரிப்பு வழக்குகள் இன்னமும் இருக்கிறது பெங்களூரில் மஸாஜ் பார்லர் நடத்தி போலீஸ் ரெய்டுகளை சந்தித்து சந்திசிரித்தது வேறு..
இப்படியாக மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியதில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனை கிடைத்ததில் தமிழிசைக்கு வருத்தம் ஏற்பட்டிருக்கிறது .. கலவரம் செய்வதும் வன்முறை வெறியாட்டம் செய்வதும் பாஜகவிற்கு மக்கள் பணி போலும்.. வெடிகுண்டு வீசினால் பாஜக ஆர்எஸ்எஸ் தொண்டர் .. அதையே யாராவது செய்தால் தீவிரவாதி.. அதானே தமிழிசை மேடம்..?
..
பஸ் மீது கல்லெறிந்தது காவல் ஆய்வாளர் தாக்கபட்ட போது அவர் பாஜகவில் இருந்தார்.. ஆர்எஸ்எஸ் இவரையும் மாஃபா பாண்டியராஜனையும் அதிமுகவிற்குள்ளும் ஊடுறுவியது .. ஜெயலலிதாவின் பாசிச பாசம் மௌனமாய் அங்கீகரித்து அதன் பலனை இப்போது அறுவடை செய்கிறது . தேமுதிமுவிலிருந்து வந்த எவருக்கும் வாய்ப்பளிக்காமல் மாஃபா விற்கு வந்தவுடன் எம்எல்ஏ அமைச்சரென ஆக்கியதின் பின்னில் ஆர்எஸ்எஸ் இருந்தது அதைபோல பாஜகவிலிருந்து வந்தவுடனேயே அமைச்சராக்கினார் ஜெயலலிதா .. காலமெல்லாம் கட்சியில் இருந்தவனுக்கு கொடுக்கவில்லை என்ற குற்றசாட்டை திமுக மீது மட்டும் சுமத்தும் ஊடகங்கள் நடுநிலைகள் வாய்மூடிதான் இருந்தனர்..
..
ஜெயலலிதா மட்டுமல்ல அதிமுகவின் அமைச்சர்கள் மீது குற்றம் நிரூபிக்கபட்டும் .. அதிமுகவின் அமைச்சர்கள் ஏன் முதல்வரே சிறை சென்ற பிறகும் ஊழலுக்கெதிரானவர்களை போல சித்தரிப்பதும்,.. இதுவரை எந்த வழக்கிலும் தண்டிக்கபடாத திமுகவை.. தொடர்ந்து ஊழல்கட்சி என்பதை போல பேசிதிரியும் கயமையை என்னவென்று அழைப்பது .. திமுக மீது இத்தனை வன்மம் வர காரணமென்ன .. அது திராவிட சித்தாந்தத்தை தூக்கிபிடிப்பதாலா இல்லை .. பாசிச ஆர்எஸ்எஸ் பார்பனீய சித்தாந்தத்தை தமிழகத்தில் வேரறுத்ததோடு மட்டுமல்லாமல் ..
தாழ கிடந்த மக்களின் உயர்வுக்காக போராடுவதும் மநுநீதிக்கெதிராக போர்குணத்தோடு பாய்வதும் .. மதவெறியர்களை நுழைய விடாமல் விரட்டுவதும் சம நீதி வேண்டும் என சொல்வதும் .. ஒடுக்கபட்ட பிற்படுத்தபட்ட மக்களின் வாழ்வின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து உழைப்பதும் ..பாசிச சக்திகளுக்கு பொறுக்கவில்லை எப்படியேனும் திமுகவை அழித்தால் அல்லது வரவிடாமல் தடுத்தால் இவர்கள் விரும்பம் போல் உயர்ஜாதியினரை எல்லா இடங்களிலும் நிரப்பிவிடலாம் என்ற ஒற்றை நோக்கை தவிர .. தேசநலன் மக்கள் நலன் தேசபக்தி என்பதெல்லாம் வெற்று கோசங்கள் தான் ..
..
60% விழுக்காடு உள்ள பிற்படுத்தபட்டவருக்கு 27% வழங்கியபோது தீக்குளித்து தடுக்க முயன்றவர்கள்..
3% விழுக்காடு பார்பனர்களுக்கு 10% விழுக்காடு ஒதுக்கீடாம்..
அதை காங்கிரஸ் உள்ளிட்ட வடமாநில கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன .. ஏற்கனவே பார்பனர்கள் உயர்பதவிகளை எத்தனை விழுக்காடு அபகரித்திருக்கிறார்களென்ற விபரங்கள் ..
இவர்கள் .. ஏற்கனவே உயர்பதவிகளில் .. பார்பனர்கள்
62% IAS 70% IPS.. 40% உயர்நீதிமன்ற நீதிபதி
56%உச்சநீதிமன்ற நீதிபதி 50% கவர்னர்கள்
70% துணைவேந்தர்கள் 54% தலைமைசெயலர்
48% மக்களவை 36% மாநிலங்களவை ..
அதுமட்டுமல்ல பிற உயர்பதவிகளிலும் பார்பனர்களின் ஆதிக்கமே நிறைந்திருக்கிறது 90% ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள் .. அமைச்சர்களின் உதவியாளர்களாக 86% விழுக்காடு அவர்கள் இந்திய அரசை உண்மையில் இயக்குகிறவர்கள் அவாள்கள்தாம்..
..
இடஒதுக்கீட்டில் பொருளாதார ஒதுக்கீடு சட்டபடி செல்லாதென்று உச்சநீதிமன்ற தீர்ப்பு இருக்கிறது பொருளாதாரம் அளவுகோலாக ஏற்கமுடியாதென தெரிந்தும் கொண்டுவர முற்படுவது இப்போதைய இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்யவேண்டுமென்பதற்காகதானே தவிர வேறொன்றுமில்லை .. இதெல்லாம் தமிழிசை போன்ற மிகவும் பிற்படுத்தபட்ட ஒருகாலத்தில் பார்த்தாலே தீட்டென ஒதுக்கிவைத்த சமூகத்தை சார்ந்த பொன்னருக்கு தெரியாதா ஏன் எதிர்க்கவில்லை.. இவர்கள் பாசிசத்தின் கையாட்கள் அவ்வளவுதான் போராடவும் பேசி உளறவும் கலவரம் செய்ய மட்டுமே பயன்படுத்தபடுவார்கள் ..
அதனால் தான் இவர்களுக்கு தவறுகள் கூட நியாயமாக படுகிறது ..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment