Tuesday, January 1, 2019

திருவாரூர்

திருவாரூர் கலைஞரின் தொகுதி என்ற அடையாளத்தோடு நம் கண் முன்னே நினைவலைகள் வந்து போகிறது .. தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார்கள் தன் மண்ணின் மைந்தனை கொண்டாடினார்கள் .. கலைஞரின் மறைவையொட்டி இடைத்தேர்தல் .. 20 தொகுதிகள் காலியாக இருக்கும் போது இதற்கு மட்டும் தேர்தலை அறிவித்து இன்னமும் ஜனநாயகத்தை நேர்மையை கடைப்பிடிப்பதாக காட்டிக்கொள்ள நினைக்கிறது இந்திய ஒன்றியத்தின் தேர்தல் ஆணையம் ..தேர்தல் நியாயமாக நடக்குமென நம்புவோம் .. ஆர்.கே.நகரில் வெற்றிபெற்றுவிட்டோமென்ற இருமாப்போடு தினகரன் பேச தொடங்கியிருக்கிறார் .. இங்கே களம் வேறுமாதிரியானதென்று அவருக்கு புரியவில்லை ஆமை முயல் கதையாய் ஆர்.கே நகர் தேர்தல் திமுகவின் மீது களங்கத்தை சேர்த்தது .. இந்த முறை மிக கவனமாக செயல்படுவதை தளபதியின் சூசகமான பேச்சு உணர்த்துகிறது ..ஜனநாயக இயக்கத்தில் தேர்தல் நடைமுறைகென்று வழிகாட்டுதல்கள்/நடைமுறைகள் உண்டு விரும்பமனு நேர்காணல்.. தலைமை யாரை அறிவிக்கிறதோ அவரே வேடிபாளர் .. வெற்றி வேட்பாளர்.. சில சமிஞ்சைகள் தெரிய தொடங்கியருக்கிறது மிக சிறந்த களபணியாளரை நிறுத்தபடலாம் நல்ல தேர்வாகவும் இருக்கும் தொகுதி முழுக்க அறிந்த அவர்களால் விரும்படுகிற நபர் .. யாரை நிறுத்தினாலும் ஏற்பார்கள் என்றாலும் சிலர் அதிகமாக நேசிக்கபடுகிறவர்களாக இருப்பார் திருவாரூர் தொகுதியில் குறிப்பிடதக்க அளவில் இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள் .. தொகுதியின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லீம் சமூகம் விளங்குகிறது எப்போதும் திமுகவிற்கு வாக்களித்தவர்கள் இந்த முறையும் தொடருமென நினைக்கிறேன் .. அதிமுகவின் பாஜகவின் கரிசனமும் அமுமுகவின் பாஜகவின் பயமும் திருவாரூரில் எதிர்வினையாற்றும் .. திமுக வேட்பாளர் யாரென்பதில் ஊடகங்களும் சமுகவலைதளங்களும் அதிக ஆர்வம் காட்டுகின்றன .. பூண்டியார்.. என சிலரும் கலைஞரின் மகள் செல்வி என சிலரும் சிலர் உதயநிதி நிற்கலாமென ஆருடம் சொல்கிறார்கள் அத்தனை எதிர்பார்ப்பு .. எனக்கு அங்கே தலைவர் தளபதி.ஸ்டாலின் அவர்களே நிற்கலாமென்று கூட தோன்றியது காரணம் திமுக தலைமையின் தொகுதி .. அதில் தற்போதைய தலைவர் நிற்கலாம் .. ஆனாலும் தலைமை முடிவெடுக்கிற வேட்பாளர் வெற்றி பெற செய்யவேண்டும்.. தளபதி இல்லையென்கிறபட்சத்தில் பூண்டி கலைவாணன் மிக சிறந்த தேர்வாகலாம்.. .. திருவாரூருக்கென்று சில மரியாதையுண்டு மானமுள்ள மறவர்கூட்டம் ..கலை இலக்கியம் நாடகத்தில் அதிகம் நாட்டம் கொண்டவர்கள் விவசாயம்சார்ந்த தொழில்களும் ..தமிழ் கலாச்சார பண்பாட்டு செயலோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் .. அவர்களை விலைக்கு வாங்கலாமென்ற சிலரின் எண்ணம் ஈடேறாது .. அவர்களுக்கென்ற சில மரியாதை உண்டு அதை கெடுத்துக்கொள்ளமாட்டார்கள் .. நிலகிழார்களாக உழவை பிரதானமாக கொண்ட மானமுள்ள கூட்டம் .. சிலர் போடும் தப்புகணக்குகளை தவிடுபொடியாக்கி வெற்றிவாகை சூடும் திமுக என்பதில் ஐயமில்லை .. ஆனாலும் எச்சரிக்கையோடு செயல்படவேண்டும் அரசு இயந்திரமும் .. வாக்கு இயந்திரத்தையும் சரியாக கவனிக்கவேண்டும் தொகுதி முழுக்க கண்காணிப்பு அவசியம் .. இதோ தொடங்கிவிட்டது.. புதிய விடியலுக்கான துவக்கம்,.. .. கீழ்வானம் சிவக்கும் .. பனிமூட்டம் விலகும் .. உதயசூரியனின் மெல்லென சிரிப்பான் ஒளி பரவும்.... விடியும் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment