Monday, January 14, 2019
அண்ணா தமிழ்நாடு தந்தார்
மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என மாற்றிவிட்டேன் .. இனி யாராண்டால் என்ன இந்த அண்ணாதுரை ஆள்வதாகதான் அர்த்தம்
பேரறிஞர் அண்ணா..
14 ஜனவரி 1969 மிக முக்கிய வாய்ந்த நாள் தமிழ்நாடென பெயரிட்டு தமிழ் மண்ணின் மணம் மாறாமல் செய்தார் ..
வழக்கம்போல் ராஜா கோபாலாச்சாரி நாடென்று பெயர் வைக்கிறாரா பிரிவினைக்கு வழிவகுக்குமென டெல்லியில் அழுத்தம் தந்தார் .. அப்போது அண்ணா சொன்னார் .. மன்னிக்கவும் இந்தியா என்பது ஒரு நாடல்ல பல்வேறு இன கலாச்சார மக்களின் ஒருங்கிணைந்த தேசம் என்றார் ..
இந்த மண் எங்களுடையது .. ஆம் ஒருமுறை அம்பேத்கர் ..
இந்த மண்ணை யாரும் உரிமை கொண்டாட முடியாது அப்படி கொண்டாடுவதாக இருந்தால் இந்த மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் தான் உரிமை கொண்டாடமுடியும்
என்றார் ..
..
வரலாற்று சிறப்புமிக்க பெயர் மாற்றம் தமிழர்களின் தனி சிறப்பை உணர்த்தியது தமிழ் நாடென்று பெருமை சேர்த்தார்.. அண்ணா சுயமரியாதை திருமணத்தை சட்டபூர்வமாக்கியதும் .. தமிழ்நாடு பெயர் மாற்றமும் வரலாற்றில் பெருமைதக்க ஒன்றாகவே அமைந்தது .. சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கியதில் வரலாறு பின்னணி உண்டு.. திராவிட கழகத்திலிருந்து பிரிந்து முன்னேற்ற கழகம் காண பிரதான காரணிகளில் ஒன்று சுயமரியாதை திருமணம் .. உச்சநீதிமன்றம் சுயமரியாதை திருமணத்தை ஏற்காததோடு அது தகாத உறவென்று தீர்ப்பு சொன்னது .. சட்டபடியாக அங்கீகரிக்க மறுத்தது .. அப்போதுதான் சட்டமியற்றுகிற இடத்தில் நாமிருக்கவேண்டும் அதற்கு தேர்தல் அரசியல் அவசியம் ..என்றார் அண்ணா
மூன்று முக்கிய சட்டதிருத்தம் சுயமரியாதை திருமண சட்டம் தாய் தமிழ்நாடு பெயர் மாற்றம் .. இருமொழிக் கொள்கை இந்தியை தவிர்த்து தமிழ் ஆங்கிலம் .. அப்போது பேசிய அண்ணா .. சிலருக்கு எரிச்சல் வருகிறது கோபம் கூட வரும் இந்த ஆட்சியை தூக்கியெறி வேண்டுமென நினைக்கலாம் அது உங்களால் முடியும் .. வேறு யாராவது ஆட்சிக்கும் வரலாம் வந்து நான் கொண்டு வந்ததை மாற்றவேண்டுமென நினைத்தால் மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சம் வரும் அந்த அச்சம் இருக்கிறவரை இந்த அண்ணாதுரை ஆள்வதாக தான் பொருள் .. என்றார் ஆம் இப்போதும் கூட அண்ணா தான் ஆண்டுக்கொண்டிருக்கிறார்.. திமுக அல்லது அண்ணாவின் பெயர் தாங்கிய கட்சிதான் ஆளும் .. அண்ணாவை மறந்த தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது
..
திராவிடம் என்ன செய்தது ..?
தமிழ்நாடென்று பெயர் சூட்டியது சுயமரியாதையோடு வாழும் வாழ்க்கையை தந்தது அறிவைக் கொண்டு எதையும் சாதிக்கலாம் என்றது .. தாய்மொழியை பிறமொழி ஆதிக்கத்திலிருந்து காத்தது .. இருமொழி கொள்கையை அண்ணா சட்டமாக்காவிடில் .. குஜராத்தியரைப் போல மராட்டியரைப் போல தங்கள் மொழியின் வளத்தை இழந்து இந்தி ஆதிக்கத்தின் கீழ் வளமிழந்த மொழியின் பிள்ளையாய் ஆகியிருப்போம்..
தாய்க்கு தலைமகன் பெயர் சூட்டிய நாள் .. இன்று அந்த தலைமகனை தவமகனை போற்றுவோம்
தமிழ் நாடு பெயர் மாற்றி பொன்விழா ஆண்டு இந்த நன்நாளில் அண்ணாவின் புகழ்பாடுவோம் ..
வாழ்க! அண்ணா..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment