Tuesday, January 22, 2019
தன்நிலையறிதல் வேண்டும்
இனி எக்காலத்திலும் திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை .. அன்புமணியை முதல்வராக ஏற்கிறவர்களோடு மட்டுமே தேர்தல் கூட்டு .. இதெல்லாம் கேட்ட மாதிரி இருக்கா.. மருத்துவர் ராமதாஸ் அன்புமணி சொன்னவை தான் .. இவர்கள் தங்களின் வளர்ச்சிக்காக தங்கள் சமுதாயத்தை பலி கொடுப்பவர்கள் .. நானோ என் குடும்பத்தாரோ நாடாளுமன்றத்திற்கோ சட்டமன்றத்திற்கோ நிற்கமாட்டோம் என்று சொல்லிதான் வன்னிய சமூக மக்களிடத்திலே உறுதி தந்தார் காலபோக்கில் வளர வளர பதவி மீதான இயல்பான ஆசை மகனை அமைச்சராக்க கலைஞரின் தயவும் அதற்காக மாநிலங்களவை சீட்டும் கேட்டு பெற்றார்.. ஜெயலலிதாவோடு கூட்டணி வைப்பது .. என பேசகூடாததை பேசினார்
அதே ஜெயலலிதாவோடு மீண்டும் சேர்ந்தார் .. திரும்பவும் திமுக அதிமுக என மாறி மாறி முதுகிலேறி சவாரி செய்தவர் தானே குதிரையை ஓட்டலாமென்ற ஆசையில் ஏறி .. குதிரையின் வேகத்திற்கு தாக்குபிடிக்க முடியாமல் தூக்கியெறிபட்டார் .. இருப்பதும் போய் கூட இருந்த ஜெ.குருவும் இல்லையென்றவுடன் ஜெ.குருவோடு இருந்தவர்கள் .. ஏதேதோ காரணம் சொல்லி தனித்து நின்று அதிலும் எதிர்த்து நிற்கிறபோது பலத்த அடி எழவேமுடியாதவாறு விழும் என கருதி திராவிட கட்சிகளின் கருணை பார்வைக்கு காத்திருக்கிறார் ..
..
கட்சியை தன் சொந்த நலனுக்கு பயன்படுத்தி .. சமுதாய இளைஞர்களை சாதியெனும் குறுகிய வட்டத்திற்குள்ளேயே நிறுத்தி அதிலிருந்த மீளவிடாமல் மூளைச்சலவை செய்து பிற சமூகமக்களின் மீதான வன்மத்தை வளர்த்து விஷ விதைகளை மட்டுமே நட்டதால் இன்று தனித்துவிடபட்டு நிற்கிறார் .. யாருமே சீண்டகாணோம் ..சமூகநீதிகாவலரென்று சொல்லிக்கொண்டே காதல் திருமணத்தை சாதிமறுப்பு திருமணத்தை எதிர்த்து கொடூரமான செயல்பாடுகளை ஊக்குவித்து தன்னுடைய பாதை இதுதான் என தெளிவாக சொல்லி வந்ததன் விளைவு சொந்த சமூகமே இன்று புறந்தள்ள பார்க்கிறது .. விதைத்தே விளையும் ..
..
நாடாளுமன்ற தேர்தலில் யாரோடு கூட்டு என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை சிங்கத்தின் தலைமையில் ஆட்டுமந்தையாக செல்வதையே விரும்புவதாக சூசகமாக சேதி சொல்கிறார் யார் தலைமையேற்பாரென்று தெரியாத கூட்டணி வேண்டாமென முடிவெடுத்திருக்கிறார் .. தன் மருமகளுக்கு ஒரு எம்.பி சீட் கேட்பது அவரது தாளாரமனபான்மையை காட்டுகிறது .. அதிமுக அணியில் கூட இவர் கேட்பது கிடைக்காது எத்தனை என்பதை இனி இவர் தீர்மானிக்க முடியாது அந்த சூழல் இப்போதில்லை முன்புபோல் முரண்டுபிடிக்கமுடியாது கொடுப்பதை வாங்கிகொள்ள நேரிடும் .. இதேபோல் நிறைய உதிரி கட்சிகள் தங்கள் நிலையை அறியாமலேயே தங்கள் விருப்பபடி விரல்விட்டு எண்ணுகிறார்கள் ..ஆனால் கிடைக்காதென்று தெரிந்து அதற்கான வாய்ப்பில்லை என்று அறிந்தும்
ஏதோ தங்களுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதைப்போல பேசுகிறார்கள் ... தமிழகத்தில் மூன்றாம் நிலை வரை வந்த கட்சி தங்கள் செயல்பாட்டால் பேராசையால் பிரதான கட்சிகளின் கடைகண்பார்வைக்காக காத்திருக்க நிலை .. ஏறக்குறைய கெஞ்சுகிற நிலைக்கு வந்திருக்கிறார்கள் ..இப்படிதான் வைகோ ஒருசில இடங்களை தர மறுத்ததற்காக வேண்டாமென்று சென்றவர் கடைசியில் ஒற்றை இலக்கம் தான் தருவேன் என்று ஜெயலலிதாவால் அவமானபடுத்தபட்டார்.. அதீத ஆசையால் தேமுதிக எதிர்க்கட்சியாக வந்தது கடைசியில் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறது .. தேர்தலில் வெற்றி தோல்வியல்ல நான் சொல்வது கட்சியின் நிலை துடைத்தெறியபட்டாலும் வீழாமல் நிற்கவேண்டும் அதற்கு அடித்தளம் மிக சரியாக கட்டமைக்கபட்டிருக்கவேண்டும் ..
..
மாற்றம் முன்னேற்றம் என்ற சொன்னவர் திராவிடத்திற்கு மாற்று என பேசி திரிந்தவர் திராவிட கட்சிகளின் பார்வைக்காக காத்திருக்கிறார்..
#தன்நிலைஅறிதல்வேண்டும்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment