Saturday, January 26, 2019
திரும்பி போ
திமுக ..
தனியொருவரின் நலனுக்காக உயர்வுக்காக ஒரு சமூக மேம்பாட்டிற்காக தொடங்கபட்டதல்ல இந்த பொது சமூகத்தின் மீது நடத்தபடும் தாக்குதலை விளிம்பிநிலை மக்களை தொடர்ந்து கரையேற இயலாமல் தாழ்த்திவைக்கும் அவலநிலையை பிற்படுத்தபட்ட ஒடுக்கபட்ட மக்களின் கல்வி வேலைவாய்ப்பு உரிமைகளை ஒரு சிலரே சுரண்டும் கயமைக்கெதிராக பாசிச சிந்தாந்தத்திற்கெதிராக தொடங்கபட்டது .. அதிலிருந்து சற்றும் விலகாமல் பேராசான் பெரியார் பேரறிஞர் அண்ணா பேரருளாளன் கலைஞர் வகுத்த தந்த பாதையில் திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையை வழிநடத்தும் பேராற்றல் மிக்க பெருமிகு தளபதி அவர்களின் படை மிக விரைந்து செயல்படவேண்டிய தருணம் இது ..
..
இந்த மண்ணை ஆதிக்கசக்திகள் தங்கள் சுயநலத்திற்காக பெருபான்மை இல்லாத அரசை காத்து தங்கள் இன மக்களின் வாழ்வு சிறக்க அறமிழந்து செயல்படுகிறது ஜனநாயகத்தின் அத்தனை வாயில்களும் மூடபட்டு ஒருவித சர்வாதிகார தொனியில் மத்திய அரசு செயல்படுகிறது தமிழகம் கண்ட மிக மோசமான ஆட்சியாக யார் ஆள்கிறார்களென தெரியாமல் பொம்மலாட்ட கயிற்றை கையில் வைத்துகொண்டு
பாசிச பாஜக செயல்படுகிறது தலையாட்டிகளாய்.. சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையாய்
இன்றைய அதிமுக அரசு செயல்படுகிறது ..
தமிழக நலன்களை புறக்கணிப்பதோடு தமிழர்களின் வாழ்வாதாரங்களை நசுக்கிற பாசிச அரசாக மத்திய அரசு செயல்படுகிறது .. தமிழக மாணவர்களின் உயர்கல்வியில் மருத்துவத்தில் மண்ணை அள்ளிபோட்டு ..பிற மாநில மாணவர்களுக்கு தமிழகத்தில் கல்வி பயில வழிவகை செய்து நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் மருத்துவம் பயில முடியாமல் தற்கொலை செய்துக்கொள்கிற நிலைக்கு காரணம் இந்த பாசிச அரசுதானே தமிழர்களின் வாழ்வாதாரமாக விளங்குகிற காவிரியை வறண்டதாக்கி.. மீத்தேன் எடுக்க கைபாவை மாநில அரசை கேட்கிற இடத்தில் எல்லாம் கையெழுத்திடுகிற நிலையில் செய்கிறது காவிரி போனால் தமிழனின் தமிழகத்தின் வளம் வறண்டுபோகும்,.. தமிழகத்தின் கனிமவளங்களை சுரண்ட கார்பரேட்களுக்கு வழிவகை செய்து..
சிறுதொழிலில் கொடிகட்டி பறந்த திருப்பூர் போன்ற நகரங்களில் இன்று முதலாளியாய் வலம் வந்தவர்கள் கூலிதொழிலாளியாய் ஆக்கியதும்.. மொத்தத்தில் தமிழகத்தை கல்வி தொழில் வேலைவாய்ப்பு என அனைத்தையும் அழிக்க மறைமுக போர் தொடுக்கும் இந்த பாசிச பாஜக அரசின் மோடியை திரும்பி போ என தன்னெழுச்சியாய் மக்கள் பொங்கியெழுகிறார்கள் ..
..
இந்த பாசிசத்தை வேரறுக்க ..அதற்கு துணைபோகும் போலி திராவிடகட்சிகளை ஆட்சியிலிருந்து விரட்டிட இன்றைக்கு இருக்கும் ஒரே தீர்வு .. திமுக தான் தளபதிதான் என்பதை உணர்ந்து.. தீய மாபியா கும்பல்களின் பணத்தாசைக்கு இரையாகாமல் தமிழகம் ஒளிர .. தன்மானத்தோடு நம் வருங்கால சந்ததியினர் வாழவகைசெய்ய ஒருங்கிணைந்த இந்தியாவை பிடித்தாட்டும் மதவெறி கும்பல் தமிழகத்தில் எக்காலத்திலும் நுழையாவண்ணம் சிந்தித்துணர்ந்து தளபதி தலைமையில் நல்லாட்சி மலரும் காலம் தமிழகத்தின் விடியல் என்பதை உரக்க சொல்வோம் ..
..
பாசிசத்தை தமிழகத்தில் நுழைய அனுமதியோம் என்பதை உணர்த்த மோடியே திரும்பிபோ என முழங்குவோம் ..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment