Thursday, January 3, 2019
கலைஞர்...
எத்தனை முறை நினைத்தாலும் நெஞ்சம் இனிக்கிறதே.. தலைவனின் பெயரைச் உச்சரித்தால் புதியதாய் சேதி ஒன்று நிழலாடுகிறதே..
இப்படியொரு தலைவனை இனி எப்போது காண்போம்
..
வாழ்ந்த காலம் முழுதும் போராளியாய் ..
இந்த மண்ணில் இருந்த கசடு அகற்ற பெரும்பணியை தன்னுள் சுமந்து ஏற்றத்திலும் இறக்கத்திலும் சுமையை இறக்காமல் ..வாய்ப்பை தந்தபோதெல்லாம் இந்த மண்ணின் பெருமையை நிலைநாட்டி.. கலை காலாச்சார பண்பாட்டை சிதைக்காமல்
கொண்ட கொள்கையில் கிஞ்சித்தும் விலகாமல் தன் ஆசானின் அடிச்சுவட்டை ஒட்டி பகுத்தாய்ந்து ...தொலைநோக்கோடு திட்டங்களை மக்கள் பயன்பெற .. உழைத்த பெருமகனின் நினைவை போற்றுகிறார்கள் ..
ஆம்..
எதிரியென்று சொன்னவர்கள் .. விரோதியாய் கங்கணம் கட்டியவர்கள் ...வீழ்த்திவிடுகிறேன் பாரென்றவர்கள் .. கூட இருந்த குழிபறித்தவர்கள் .. பகையென முரசு கொட்டி நேர்நின்றவர்கள் .. புகழ்வதை கேட்கும் போது உண்மையில் மனம் மகிழ்ச்சி அடைகிறது ..
..
அப்படி என்ன செய்துவிட்டார் என சொல்லி திரிகிறவன் கலைஞர் தந்த அரியாசனத்தில் அமர்ந்து தான் கேட்கிறான்.. கேட்பாரற்று கிடந்தவனின் கைகளை பற்றி உயரத்தில் எத்திவைக்க எத்தனை விதமான சட்டதிருந்தங்கள் .. பிற்படுத்தபட்டோர் இடஒதுக்கீடு .. அதிலும் மிக கரிசனையோடு சிறுபான்மையினருக்கும் உள்ஒதுக்கீடு .. எழவே முடியாமல் அடித்துமர்த்திய அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீட்டால் முதல் மருத்துவர் அந்த சமுதாயம் கண்டதே.. முதல் பட்டதாரிக்கு இனி இல்லை கட்டணமென்று உயர்த்திவிட்டாரே.. பெண்களை படிக்கவைக்க வேண்டுமென்பதற்தாக எட்டாவது படித்திருந்தால் திருமண உதவி ..விவசாயம் நலிந்து உழவன் வாடிவிட கூடாதென்பதற்காக அத்தனை கட்டுபாட்டையும் தடையையும் விமர்சனங்களை தாண்டி இலவச மின்சாரம் .. நுழைவு தேர்வை ரத்து செய்து சாமானியர் வீட்டிலும் மருத்துவரை கண்டாரே.. சாதிமதத்தை அதன் பௌதீக கட்டமைப்பை உடைத்து அனைவரும் ஒரே நிழலில் வசிக்கும் சமத்துவபுரம் கண்டாரே.. ஊனமுற்றோரை கிண்டல் செய்யும் சமூகசூழலை மாற்றி மாற்றுதிறனாளி என அழைத்து.. இருபாலினமும் அல்லாதவரை திருநங்கை என விளித்து சமூக நிலையை உயர்த்தினாரே..
உயிர்கொல்லும் கொடியநோய்கள் .. வசதிபடைத்தவர்கள் மட்டுமே சிகிச்சை பெற முடியும் .. சாமானிய ஏழைகளால் உயர்தர சிகிச்சையை பெற முடியாமல் தவித்த போது பேரருளாளனாய் கலைஞர் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்து ..எண்ணற்றவர்களின் குடும்பத்தில் ஒளியேற்றினாரே.. அவர்கள் வாழ்வில் புதிய ஜீவனை தந்தாரே அந்த பெருமகனை காலமெல்லாம் நினைவுகூறதானே முடியும்..
..
இன்னும் நிறைய பட்டியலிட்டால் ஆயிரம் பக்கம் கொண்ட புத்தகமாய் வரும் .. பன்முக ஆளுமைகொண்ட பெருந்தலைவர் .. ஒவ்வொரு ஆளுமையும் பேராளுமையாய் திகழ்ந்த ஒப்பற்ற தன்னிகரற்ற தலைமை..
தமிழகம் கண்ட பெருவுடையான்.. தமிழர்கள் நெடுநாள் தவத்தில் வந்த பேரோளி .. தமிழர்களின் பேரருளாளன் கலைஞர்
அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்
வாழ்க! கலைஞர்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment