Saturday, January 5, 2019

அஞ்சாமை திராவிடர் உடைமை

திமுக அஞ்சுகிறதா என தொலைகாட்சிகள் விவாதம் செய்கின்றன .. திமுக ஜனநாயக முறைபடி களம்காண தயாராகி.. யாரை நிறுத்தினால் தேர்தலில் வெல்லமுடியுமென கணக்கிட்டு சாதூர்யமாக நகர்வை செய்திருக்கிறது .. சிலர் ..சில ஊடகங்கள் ஆரம்பம் முதலே தளபதி நிற்கபோகிறார் என்றும்,இல்லை குடும்ப உறுப்பினரை நிறுத்தபோகிறது திமுக.. கடைசியில் உதயநிதிவரை இறங்கி வந்து கதறிபார்த்தும் திமுக மாவட்ட செயலாளர் நிறுத்தபட்டிருக்கிறார் .. தலைவர் ஸ்டாலினே அழைத்து விரும்பமனு தாக்கல் செய்யுங்களென கேட்டுகொண்டதை தொடர்ந்து பூண்டி.கலைவாணன் விரும்பமனு தாக்கல் செய்தபோதே ஊடகங்களின் ஆருடமும் சிலரின் நப்பாசையும் பொய்த்துபோனது இதோ குடும்ப உறுப்பினரை நிறுத்துவிட்டதென ஓலமிடலாமென்றிருந்தர்கள் கடைசியில் வாயடைத்து நிற்பது கண்டு.. திமுக அஞ்சுகிறதா என கேள்வியை கேட்கிறது .. .. ஒருமுறை கலைஞர் உயர்மட்ட குழுவில் பேசும்போது இடைத்தேர்தலில் ஆளும்கட்சியின் தாண்டவம் எல்லை மீறும் .. நிற்கவேண்டுமா என கேள்வி எழுப்பி திமுக ஜனநாயக கடமையை ஆற்றுமென்றார் .. இப்போதுள்ள சூழலில் வெற்றி வசப்படுமென்ற நிலையில் திமுக ஏன் அஞ்சவேண்டும் .. திருடிகொண்டு ஓடுகிறவன் திருடன் திருடன் என சத்தம் போட்டானாம் அதைப்போல தினகரன் தோல்வி பயத்தில் திமுக அஞ்சுகிறதென்கிறார் .. ஆர்.கே.நகரைப்போல ஜனநாயகமாக ..? தேர்தல் நடக்குமா என்கிறார் என்ன கேலிகூத்து.. உண்மையில் பதறுவதும் அஞ்சுவதும் உளறுவதும் எதிரிகள் தான் .. வேட்பாளர் அறிவித்தவுடனேயே மக்களை சந்திக்க தொடங்கி.. தேர்தல்பணியை செய்கிறது திமுக ..அதிமுகவோ இதுவரை அறிவிக்க காணோம் அமுமுகவோ காமராஜ் வேண்டாமென சொல்லியும் நிறுத்தியதில் வேலையை தொடங்கவே காணோம் .. தமிழிசை தேர்தல் நடப்பது சந்தேகம் என சொல்கிறார் .. ஏன் திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்கல் மற்ற தொகுதிக்கு சேர்த்து ஏன் வைக்கவில்லை எப்போது வைப்பதாக உத்தேசம் .. ஜனநாயக நாட்டில் வழக்கை காரணம் காட்டி தேர்தலை நிறுத்திவைப்பது சிறந்த ஜனநாயகமல்ல என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் ராசா உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார் .. அதே வேளை திமுக ஆதரித்து அறிக்கை தந்தாயிற்று .. ஜனநாயகமே நேர்மையாக தேர்தலை நடத்துவதில் இருக்கிறதென்ற உண்மையை உணர்ந்து யாருக்கும் அஞ்சாமல் அடிபணியாமல் தேர்தல் ஆணையம் நேர்மையோடு செயல்படவேண்டும்.. தேர்தலை கண்டு அஞ்சுவது திமுக வரலாற்றிலேயே இல்லை என்பதை இன்றைய "அவசர" அரசியல்வாதிகள் அறிந்துகொள்ளவேண்டும் பரபரப்பாக வலைதளங்களிலும் மீடியாக்களிலும் பிரபலமடைய வேண்டுமென்பதற்கு தரங்கெட்ட விவாதத்தை நடத்துவதில் எதையும் சாதிக்க போவதில்லை .. களம் என வந்துவிட்டபிறகு எதற்கும் அஞ்சுவதோ .. நடுங்குவதோ எமது இயக்க வரலாற்றில் இல்லை .. வெற்றி ஒன்றே குறிக்கோளாய் செயல்படுவோம் .. #அஞ்சாமை_திராவிடர்உடைமை .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment