Monday, January 14, 2019

சித்திரை தமிழ்ப்புத்தாண்டா

சித்திரை புத்தாண்டான வரலாற்று .. .. காம வேதனை வாட்டி வதைக்க நாரதர் கிருஷ்ணனிடம் நீர் கொஞ்சி குலவும் அறுபதாயிரம் மங்கையரில் யாரையாவது தாரும் என வேண்டுகிறார்.. உடனே கிருஷ்ணரும் எந்த மங்கையர் மனதில் நானில்லையோ அவளை எடுத்துக்கொள் என்கிறார். ஆண்டவனின்..? அருள்வாக்குப்பெற்ற நாரதரும் வீடுவீடாக அலைந்தும் எல்லா பெண்களும் கிருட்ணனின் மயக்கத்திலேயே இருப்பது கண்டு .. மீண்டும் கிருஷ்ண பரம்மாத்மாவிடமே வந்து 'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். என்னை இவ்வாறு சோதிக்கலாமா? காம வேட்கை எனை வாட்டுகிறது. என்னைப் பெண்ணாக மாற்றி நீரே என்னை அனுபவித்து என் வேட்கையைப் போக்க வேண்டும்"' என வேண்டினாராம்.. பரிதாபப் பட்ட பகவானும்..? அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார். அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது. இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத்தில்..? நாட்டமுள்ள தமிழர்கள் ஆறஅமர அலசிப் பார்க்க வேண்டும். பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக மூன்றாவது ஆண்டின் பெயரான ""சுக்கில"" ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள். இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வரலாற்றக் கொண்டுவந்து தமிழனின் தலையில் கட்டிவைத்தது ஆரிய சூழ்ச்சியல்லாமல் வேறென்ன.. இதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பறைசாற்றுவதில் உண்மையும் நேர்மையும் இருப்பதாகத் தோன்றவில்லை. வரலாற்றில் மாபெரும் சருக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகிறது... மறைமலை அடிகள் தலைமையில் தமிழறிஞர்கள் கூடி .. தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாட வேண்டும் அதுவே பழந்தமிழர்கள் கொண்டாடியதென சொல்லி .. திருவள்ளுவராண்டை கணக்கீடாக கொள்வதென தீர்மானித்தனர் .. அதன் படி திருவள்ளுவராண்டு 2050 தை முதல் பிறக்கிறது.. .. அதனால் தான் எங்கள் பெருங்கவிஞன் பாவேந்தர் நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரையல்ல உனக்கு புத்தாண்டு அண்டி பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே அறிவிக்கொவ்வா அறுபதாண்டுகள்.. தரணி ஆண்ட தமிழனுக்கு தைமுதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்றார்.. .. #தைமுதல்நாள்_தமிழ்ப்புத்தாண்டு .. அனைவருக்கும் #தமிழ்ப்புத்தாண்டுவாழ்த்துகள்.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment