Wednesday, January 9, 2019
மக்களுக்கான தலைவர்
ஊராட்சி சபை..
சரியான ஜனநாயகம் ஊராட்சிகளில் இருக்கிறது மக்கள் உணர்வுகளை புரிந்து தேவைகளை அறிந்து அதை நடைமுறைபடுத்த அவர்களுக்குள்ளேயே தேர்வு செய்து அவர்களே தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள அரசின் கவனத்திற்கு கொண்டுவந்து திட்டங்களை செயல்படுத்த அரசியல் கட்சிகளை அவர்சார்ந்த கொள்கை திட்டங்களை கடந்து அவர்களின் தேவையை சார்பற்ற நிலையில் செயல்படும் அமைப்பு .. ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயலை எம்ஜிஆர் காலத்திலேயே செய்தார் உள்ளாட்சி தேர்தலையே வெகுகாலம் நடத்தாமல் தவிர்த்தார் .. பிறகு வேறுவழியின்றி உள்ளாட்சி தேர்தலை நடத்த 98 நகராட்சிகளை திமுக பிடித்தது மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தாமல் நகராட்சி மற்றும் ஊராட்சிக்கு நடத்தினார் .. அப்போது கலைஞர் எழுதிய கடிதம் உண்மையான ஜனநாயகம் வென்றதென்றார் .. ஊராட்சிகள் ஜனநாயகத்தின் இதயம் ..
..
திமுக மக்களிடத்தில் அவர்கள் குறைகள், தேவைகள் அவர்கள் துன்பங்கள் பெற்ற நன்மைகள், அனைத்தையும் அவர்களோடு அளவளாவி அவர்கள் கருத்தையொட்டி செயல்படுவதென்ற திட்டத்தை கையிலெடுத்து
மக்களிடம் செல்வோம் மக்களிடம் சொல்வோம் மக்கள் மனதை வெல்வோம் ..என ஊர்தோறும் கலந்துரையாடலை செய்ய தொடங்கியிருக்கிறது வரவேற்று பாராட்ட வேண்டியது நமது கடமை .. திமுக ஜனங்களின்,இயக்கம் சாமானியனின் நிலை உயர அவர்களின் வாழ்வு மேம்பட உழைக்க வாய்ப்பை தாருங்கள் என்பதற்காக தொடங்கபட்டது .. சமூகநீதியெனும் அடித்தளத்தில் செயல்பட்டாலும்,ஜனநாயகத்தை கடைபிடித்து செயல்படுத்த வேண்டுமென்பதில் துளியும் சர்வாதிகார போக்கு இல்லாமல் பரந்த மனபான்மையோடு செயல்பட்டவர் கலைஞர் .. கலைஞரின் அரசியல் பயணத்தில் மக்களோடான நிகழ்வுகளை ஆய்ந்தால் அதில் அதீத ஜனநாயக போக்கும் கருத்து சுதந்திரமும்
மாற்று கருத்தை உள்வாங்குகிற நேர்மையும் அனைவரையும் அரவணைக்க வேண்டுமென்ற தெளிவும் தான் கொண்ட கொள்கை பிறழாமல் அதே நேரம் மாற்று சிந்தனையையும் மதித்து அவர்களுக்குரிய அங்கீகாரத்தை தருவதே சிறந்த ஜனநாயகமென கடைபிடித்தவர் ..
இன்றைக்கு சிறிய கட்சிகளில் கூட ஏன் அமைப்புகள் சங்கங்கள் என எதிலுமே தான்தோன்றித்தனமும் தன்னால்தான் ஆனதென்ற அகந்தையும் தனக்கு எல்லாம் தெரியுமென்கிற ஆணவமும் .. தனக்கு கீழ்தான் எல்லாம் தன் சொல்படிதான் இங்கே எதுவும் நடக்கும் தான் வைத்தது தான் சட்டம் .. என்ற இறுமாப்போடு செயல்படுகிறார்கள் .. மக்களின், தொண்டனின் இரண்டாம்நிலை தலைவர்களின் கருத்தை கூட கேட்காமல் சுயம் தம்பட்டம் அடித்தால் அது வீழ்ச்சியில்தான் முடியும் .. மக்களோடு இணைந்து செயல்படுதலே சிறந்த அரசியல் பண்பு ..
நல்லதொரு தலைவரைதான் இனங்கண்டு திராவிட இயக்கம் தந்திருக்கிறது .. தளபதி மிக சிறந்த ஜனநாயகவாதியாக திகழ்கிறார் ..
..
திமுக மக்களுக்கான இயக்கம் .. மக்களிடமே கருத்தை கேட்கும் மக்களுக்காகவே இயங்கும்
அரசியலில் நேர்மையும் துவளாமல் களப்பணியாற்றும் செயலும் ..ஓயாத உழைப்பும் வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக எண்ணி தொண்டாற்றும் தலைவராய் தளபதி திகழ்கிறார்..
மக்களுக்கான தலைவராய்
காலம் செதுக்கிய
மகத்தான தலைவராய் தளபதி திகழ்கிறார்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment