Friday, January 18, 2019
பார்பன இடஒதுக்கீடு
இன்னும் ஒரிரு மாதங்களில் தேர்தல் அதைப்பற்றியெல்லாம் கவலைபடவில்லை .. வாக்குவங்கி என்னாகும் .. பார்பனலாபி என்னவெல்லாம் இடையூறு செய்யும் ஊடகங்கள் எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்து வீழ்த்த நினைக்குமென்றெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பிற்படுத்தபட்டவர்களின் இடஒதுக்கீட்டை 50 ஆக்கு என கேட்கிறது பாருங்கள் அங்குதான் திமுக தன்நிலைபாட்டு உறுதியை காட்டுகிறது ..
..
உயர்ஜாதியினரில் பொருளாதார அளவுகோலில் 10% இடஒதுக்கீட்டை எதிரித்து திமுக வழக்கு..
உயர்ஜாதி ஏழைகளுக்கு .. மாதம் ₹66,000 (அறுபத்தாறாராயிம்) ரூபாய் வாங்கிற பரம ஏழைக்கு 10% விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கி முதல்நாள் (காபினெட்) மத்திய அமைச்சரவை ஒப்புதல் மறுநாள் நாடாளுமன்ற மக்களவை அதற்கடுத்த நாள் மாநிலங்களவை என விரைவாக நிறைவேற்றி .. உடனடியாக குடியரசுதலைவர் ஒப்புதலை பெற்று .. நடைமுறை படுத்த வேண்டுமென அதிலும் தனியார் நிறுவனங்களும் கல்வி வேலைவாய்ப்பில் பின்பற்ற வேண்டுமென அரசாணை பிறப்பிக்க முடிகிறதெனில் எத்தனை வேகமாய் பார்பனலாபி வேலை செய்கிறது ..
எந்தவொரு மசோதாவும் நாடாளுமன்ற விவாதித்திற்கு வரும்போது நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு விடுவதும் அதன் கருத்தை கேட்பதும் .. அரசியல்சாசன சட்டத்தை திருத்துகிற போது மாநிலங்களின் கருத்தை கேட்பதும் நடைமுறையில் உள்ள மரபுகள் ஜனநாயக நாட்டில் மாநிலங்களின் உரிமைகள் மீதான தாக்குதலாய் இதை கருதவேண்டும் ஏறக்குறைய எல்லாகட்சிகளும் வரும் தேர்தலை கருத்தில் கொண்டு மௌனம் சாதிக்கும்போதும்... வாக்குரசியலைவிட கொள்கை முக்கியம் நாட்டு மக்களின் நலன் மற்றும் உரிமைகளை பறிக்கும் செயலை ஆர்எஸ்எஸ் பின்புலத்தோடு இயங்கும் அரசு செய்ய துணிந்திருக்கிறது இது சமூகநீதிக்கு எதிரானதென்பதுமெ சட்டபடியாக ஏற்கதக்கதல்ல என்பதால் நீதிமன்றத்தை நாடுகிறது ..
..
யார் ஏழைகள் வருடம் ₹8 லட்சம் பெறுபவர் ஏழையாம் ஆனால் அரசு தனிநபர் வருமானமாக ₹29 பெறுகிறவனை வறுமைகோட்டிற்குகீழ் என வரையறை செய்திருக்கிறது .. வருமானவரியை கூட ₹ 2.5 லட்சத்திற்கு (இரண்டரை லட்சம்) மேல் சம்பாதிப்பவர்கள் சேர்க்கபட்டிருக்கிறார்கள் வருடம் ₹2.5 லட்சம் பெறுகிறவர்கள் பணம் உள்ளவர்கள் அதற்குமேல் வரி செலுத்தவேண்டுமென்கிறது .. ஆனால் உயர்ஜாதியினர் எட்டு லட்சம் சம்பாதிக்கிறவர் ஏழை அவருக்கு இடஒதுக்கீடு வழங்கு என்பதை எப்படி ஏற்கமுடியும் அரசியல்சாசனப்படி உயர்ஜாதிக்கு ஒரு இலக்கு மற்றவர்களுக்கு ஒரு இலக்கா வரையறயா..
..
பொருளாதார அளவுகோல் சட்டவிரோதமானதென்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிற நிலையில் ஏற்றதாழ்வுகளோடு உடைய பணமதிப்பு (எட்டுலட்சம்) எப்படி அளவாகமுடியும் இன்றைக்கு ஏழையாக இருப்பவன் .. இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல .. அது தொடர்ந்து நசுக்கப்பட்ட ஒடுக்கபட்ட மறுக்கப்பட்டவர்களின் உரிமையை அவர்களையும் இந்த சமூகத்தில் உயர்த்திவிட வேண்டுமென்ற நோக்கில் காலகாலமாய் உயர் வகுப்பினரால் அடிமைபடுத்தபட்ட சமூகத்தின் அவர்களுக்கான இடங்களை பகிரிந்து அவர்களையும் கல்வி வேலைவாய்ப்பு தரவேண்டுமென்பதற்காக உருவாக்கபட்டது .. முன்பெல்லாம் உயர்படிப்பு என்பதே ஏன் கல்லூரி கல்வி கூட மறுக்கபட்ட நிலையை மாற்றியது இந்த இடஒதுக்கீடு ஆனால் அப்போதுகூட மிகவும் ஏழைகளாக இருந்த பார்பனர்கள் உயர்கல்வியையோ உயர்பதவிகளையோ அடைய எந்தவித இடைஞ்சலும் அவர்களுக்கில்லை .. இப்போது கூட பிற்படுத்தவர்களுக்கான 27% விழுக்காடு உயர்கல்வி நிறுவனங்களில் மத்திய அரசால் நிரப்பபடாமலேயே இருக்கிறது .. ஆனால் இடஒதுக்கீடே இல்லாமல் பொதுபிரிவில் மற்ற இடஒதுக்கீடு வரம்பிற்குள் வராத ஜாதியினரை விட பார்பனர்களே அதிகம் பலன் பெறுகிறார்கள்
இப்போது கொண்டுவந்திருக்கிற 10% விழுக்காட்டில் கூட மற்ற பிரிவினரைவிட பார்பனர்களே அத்துமீறி இடம்பெறுவார்கள் .. பிற்படுத்தவர்களின் இடஒதுக்கீட்டை தனியார் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற தேவையில்லை ஆனால் உயர்ஜாதி பார்பனர் இடஒதுக்கீட்டை நடைமுறைபடுத்த வேண்டுமாம்.. இதிலிருந்தே இவர்களின் திட்டம் புரியும் எல்லாம் பார்பனமயமாக்க வேண்டும் ..
ஐந்தாண்டு பாஜக மோடி ஆட்சியில் பார்பனர்கள் ஏறக்குறைய எல்லா உயர்பதவிகளையும் ஆக்கரமித்திருக்கிறார்கள்.. இன்னும் போதாதாம் ..
..
திமுக சரியான முடிவை எடுத்து .. எதற்காக திமுகழகம் தொடங்கபட்டதோ அதன் நோக்கம் சிதையாமல் தேர்தல் வாக்கரசியல் எல்லாம் கணக்கில் கொள்ளாமல் உயர்ஜாதியினருக்கான பொருளாதார அளவுகோலை எதிர்ப்பது தன்நிலைபாட்டை மாற்றிக்கொள்ளாது என்பதை உணர்த்துகிறது.. தந்தை பெரியார்
தலைவர் கலைஞர் இருந்திருந்தால் தளபதியின் செயல் கண்டு ஆனந்தம் அடைந்து உச்சிமுகர்ந்திருப்பார்கள் ..
வாழ்த்துகள் தளபதி.. திராவிடனாய் தமிழனாய்
இந்த பேரியக்கத்தில் பயணிப்பதில் பெருமிதம் கொள்கிறேன் ..
..
#வெல்வோம்_சமூகநீதிகாப்போம்
#Social_justice
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment