Monday, January 7, 2019

தேர்தல் ஆணையம்

இடைத்தேர்தலும் ஆணையமும் .. இடைத்தேர்தல் ரத்து எதிர்பார்த்தது தான் காரணம் ஆளும்கட்சி யார் வேட்பாளரென்று அறிவிக்காமல் கிடைக்கவில்லையென்பது வேறுவிடயம் பாஜகவின் தமிழக தலைவர் நடக்காது என சொன்னபோதே தேர்தலை ரத்து செய்வார்களென அறிவோம்,.. பின் ஏன் அறிவிக்கவேண்டும் பத்தொன்பது தொகுதியை விடுத்து ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தலை அறிவித்தால் திமுக வழக்காடுமன்றத்திற்கு போகும் அதைவைத்து தேர்தல் நடத்தாமல் இருந்துவிடலாமென்ற எண்ணியது வீண் போனது .. திமுக தேர்தலை சந்திக்க தயாரானதும் அதிலும் பூண்டி.கலைவாணன் வேட்பாளராக அறிவிக்கபட்ட அடுத்த நொடியே தலைமைசெயலர் மாவட்ட ஆட்சியரிடம் தேர்தல் நடத்த உகந்த சூழல் நிலவுகிறதா என கருத்து கேட்கிறார் .. ஆளும் கட்சி வேட்பாளர் தேர்வை தள்ளிவைக்கிறது .. 10 தேதி அறிவித்துக்கொள்ள அவகாசம் இருப்பதாக சமாளிக்கிறது .. பாஜகவோடான கூட்டணி பேரம் படியாததும் ‍.. தொடர்ந்து பாஜக தேர்தலில் நிற்காமல் தவிர்ப்பதும் யதேச்சையாக நடந்ததாக கொள்வோம்.. .. ஏற்கனவே தலைமை செயலர் ஏப்ரல்வரை தேர்தலை நடத்த சாத்தியமில்லையென்ற பிறகு யார் நிர்பந்தத்தில் தேர்தலை அறிவித்தது சுயேட்சையாக செயல்படவேண்டிய அமைப்பில் மத்திய அரசின் ஆதிக்கம் செலுத்துவது அதன் நேர்மையையே கேள்விகுறியாக்கியிருக்கிறது .. இருபது தொகுதிகள் காலியாக இருக்கும்போது ஏன் அனைத்து தொகுதிக்கும் தேர்தல் வைக்க அஞ்சவேண்டும்.. .. //பேருந்தை கல்வீசி தாக்கிய வழக்கிலிஅமைச்சர் பாலகிருஷ்ணன் நீதிமன்றத்தால் தண்டிக்கபட்டார் .. அதிர்ச்சி எல்லாம் வரவில்லை முதல்வராக இருந்த போது ஜெயலலிதாவை சிறைக்கு சென்றபோது "தியாகதலைவி" என்று கொண்டாடிய சமூகம் இப்போது என்ன அலறவா போகிறது .. நாளை தியாக செம்மலே என விளித்து புகழ்பாடலாம்.. கொள்ளையடித்ததாய் நிரூபணமாகி சிறையில் இருக்கும் சசிகலாவை "தியாக தலைவி" சின்னம்மா என்றழைப்பதை ஜீரணித்து கொண்ட நாம் இதையும் செரிப்போம்.. அதேபோல் வாணியம்பாடி நிலோபர் ஜெயலலிதா தண்டனைப் பெற்றபோது கடைகளை சூறையாடியதையும்.. அதற்கு பலனாய் அமைச்சர் பதவி தந்து மகிழ்ந்ததையும் கூட மறந்துபோவோம்.. .. 21 சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பது ஜனநாயகத்தை கொலை செய்வதற்கு சமம் .. ஊராட்சிகள் இல்லை சட்டமன்ற பிரதிநிதிகள் இல்லை யார் ஆட்சி செய்கிறார்களென தெரியவில்லை ..ஆனால் இந்திய ஜனநாயகம் உலகின் தலைசிறந்த ஜனநாயகம் நம்புங்கள் .. வெட்கக்கேடு

No comments:

Post a Comment