Sunday, December 31, 2017

ஆன்மீக அரசியல்

சாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல்.. எனக்கு புரியவில்லை.. எது ஆன்மீகம் மதத்தின் பெயரால் மக்களை சிந்திக்க விடாமல் ஒருவித போதையை தருவது ..அவ்வளவுதான்.. சாதியம் பேசுகிறவனை மதம் பேசுகிறவனை கூட ஒரு பகுதிவரை நம்ப முடியும்.. காரணம் அவன் தன் நிலைபாடு சரியோ தவறோ என்று கூட தெரியாமல் என் அப்பன் பாட்டனிருந்தான் நானுமிருக்கிறேன் என்ற ஒற்றை நிலைபாட்டில்..சிலரின் அலங்கார பேச்சில் தான் மட்டுமே உயர்ந்தவன் என்கிற ஒற்றை தவறை தவிர வேறொன்றும் அவனிடத்தில் குறையில்லை ..ஆனால் சாதி மதமற்ற ஆன்மீகம் என சொல்பவரை நம்பவே முடியாது காரணம் தெளிவற்று குழப்புகிற செயல் அது.. நான் இப்படிதான் என சொல்வதில் உள்ள நேர்மை இதில் இல்லை.. .. மெய்ஞானம் பேசுவோர் .. ஆன்மீகமென திரிவோர் தனிமனித ஒழுக்கம்.. வாழ்வியல் நேர்மை.. சொல் சுத்தம் எந்நிலைக்கும் ஆசைபடாத உயர்நிலை .. இவையெல்லாம் வேண்டும்.. முதலில் எதையாவது நல்லதை செய்து மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறாரா.. மக்களின் அன்றாட பிரச்சனைகள் ஏதாவது தெரியுமா எதற்காகவாவது தானே முன்னின்று ..பேசியோ போராடியோ பெற்றுதந்திருக்கிறாரா.. குறைந்தபட்சம் பெற்றுதர முயற்சித்திருக்கிறாரா குளத்தில் இருப்பவர்கள் அறிக்கைகள் விடட்டும் நாம் அமைதியாக இருப்போம் குளத்தில் இறங்கிய பின் பேசலாமென்கிறார்.. முதலில் குளத்தைப்பற்றிய அறிவு போதாமை தெரிகிறது குளத்தில் ஆழம் தெரியவில்லை. முதலில் கரையில் நின்று குளிக்கவேண்டும் பிறகு தெப்பம்கட்டி ஆழபகுதிக்கு செல்ல பழகவேண்டும். குளத்தில் முதலில் நீச்சல் பழக... காற்றடைத்த பலூனை கொண்டு பழகிவிட்டு பிறகு குட்டிகரணம் அடிக்கலாம் .. நேரடியாக குட்டிகரணம் போட்டால் ஒருவேளை ஆழத்தில் ..சிக்கிகொள்ள நேரிடும்.. தண்ணீர் குறைந்து சகதியாக இருந்தால் .. கேட்கவே வேண்டாம்.. குளமல்ல அரசியல் இது ஆழ்கடல்.. முத்தெடுக்க ஆசைபடுவது தெரிகிறது ஆனால் மூச்சடக்க பழகவேண்டும்.. மூர்ச்சையாகி கிடப்பவனிடம் முத்துகுளிக்க ஆசை வந்திருக்கிறது.. .. நேரடியாக சட்டமன்ற தேர்தலில் தான் போட்டி என்கிறார்.. உட்சபட்ச ஜனநாயகம் என அழைக்கப்படுகிற உள்ளாட்சி குறித்து வாய்திறக்க மறுக்கிறார் .. நாடாளுமன்ற தேர்தல் வேண்டாம் ஆனால் சட்டமன்றம் வேண்டும்.. கதிர்கிராமம் நெடுவாசல்.. எங்கள் பெருமை பேசும் கீழடி .. காய்ந்துகிடக்கிற தஞ்சை .. மக்களை பிழிகிற GST இதற்கெல்லாம் குரல் கொடுக்கமாட்டாராம் தன் கல்யாண மண்டபம் இடிக்கபட்டதற்காக வந்கவருக்கும் வாடகை பிரச்சனையில் கூட வாய் திறக்காதவருக்கும் வித்தியாசம் தெரியவில்லை.. .. நேர்மையைப் பற்றி ரஜினி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது இதுவரை தனக்கு எவ்வளவு சம்பளம் அதற்கு முறையாக வரி செலுத்துகிறேன் என்று கூட சொல்ல முடியாத (சினிமாவில் கறுப்புபண புழக்கம் சொல்லவேண்டியதில்லை) ஒருவரிடம் தமிழகமக்கள் நேர்மையை எதிர்பார்க்கிறார்களாம்.. .. கடைசியாக வருவதாக சொன்னதற்கு விமர்சனமா என கேட்போருக்கு நேர்மையாக வருவதாக சொல்லியிருந்தால் வருக என சொல்லி முடித்திருக்கலாம்.. கால அவகாசம் கேட்டு பின்வாங்குவதில் உள்ள சூட்சமம் .. பாஜகவின் ஊதுகுழலாய் வலம் வர தயாரெடுப்பதை பறைசாற்றுகிறது..இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும் .. மதத்தை முன்னெடுக்கிற தைரியம் நடிகர் எம்ஜிஆருக்கோ ஜெயலலிதாவிற்கோ இருந்ததில்லை மதமாற்ற தடைசட்டத்தை கொண்டுவந்த ஜெயா .. வந்த வேகத்திலேயே பின்மாறியது அறிந்ததுதான்.. மதம் வேறு ஆன்மீகம் வேறென்பதை ஏற்கமுடியாது குறிப்பாக கீதையை முன்னெடுக்கும் ரஜினியை மக்கள் ஏற்கமறுப்பர்.. காரணம் இது தமிழ்நாடு .. எந்த வடிவில் வந்தாலும் பெரியாரை முன்னெடுக்காத எதுவும் யாரும் வெற்றிபெற முடியாது.. மாத்தணும் மாத்தணும் எல்லாத்தையும் மாத்தணும் என்பதில் 'எ' வை முழுங்குகிறார்.. #ஏமாத்தணும்.. அவ்வளவுதான் ரஜினியின் முகம்.. .. கடைசியாக.. கேரள மக்கள் தங்களுக்கான தலைவனை களத்தில் தேடுகிறார்கள்.. திரையில் அல்ல என்றார் மம்மூட்டி .. தமிழகத்தில் .. ? கேவலமான நிலை.. #புறக்கணிப்போம்.. .. Aalanci Spm

Saturday, December 30, 2017

உழைப்பவர் வாருங்கள்

பிழைக்க அழைக்கவில்லை உழைக்க அழைக்கிறேன் தளபதி.ஸ்டாலின்.. எனக்கு #பேரறிஞர்_அண்ணாவின்.. வீணர்களை அழைக்கவில்லை வீரர்களை அழைக்கிறேன் என்றதுதான் நியாபகம் வந்தது.. ஆம்.. உழைக்க அழைக்கிறேன்.. மிக முக்கியமான கட்டத்தில் சொல்லபட்ட வார்த்தை/ வாசகம் நிறைய பேர் கட்சிக்காக உழைப்பதாக சொல்லி தங்களை வளப்படுத்திக்கொண்டு ..தங்கள் பகுதியில் தங்கள் அதிகாரத்தை மீறிய எதுவும் நடைபெறாதவாறு செயல்படுகிறார்கள்.. நிச்சயமாக பேரடுத்து சொன்னால் தனி புத்தகமாகவே போடலாம்.. புதிதாய் வருகிறவர்களுக்கு நிறைய இடைஞ்சலை தருகிறார்கள்.. நல்ல நிலையில் தங்கள் வட்டாரத்தை வைத்திருப்பவர்களுக்கு தலைமைக்கு அருகில் இருப்பவர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி அங்கே நுழைய முயற்சிக்கிறார்கள் .. உதாரணத்திற்கு தஞ்சையை சொல்லலாம்.. .. மறைந்த கோ.சி.மணி ஒருங்கிணைந்த மாவட்டத்தை மிக சிறப்பாக வைத்திருந்தார்.. எல்லா கிளைகழகங்களும் அவரின் தொடர்பில் இருந்தது .. எல்லாவற்றிக்கும் தன் உத்தரவிற்காக காத்திருக்க தேவையில்லை ஒன்றிய ..கிளைகழகங்கள் சிலவற்றை தாங்களே முடிவெடுத்து செய்யலாமென்று அதேவேளை அது கட்சிக்கு சிறுதும் சங்கடத்தை தந்துவிட கூடாதென்பதில் உறுதியாக இருக்கவேண்டுமென்பார்.. அதுதான் சிறந்த நிர்வாகம் ஜனநாயகம்.. என்னை மீறி சென்றுவிடுவாயா பார்ப்போமென்பதல்ல..அதிகார குவியலை திறந்து சமன்படுத்தவேண்டும் அப்போதுதான் இயக்க செயல்பாட்டில் அனைவருக்குமான உரிமை வரும்.. இன்றைய தஞ்சையை பார்க்கிற போது உண்மையிலேயே மனது வலிக்கிறது.. மணி அண்ணனுக்கு பிறகு மிக அழகாக எடுத்து சென்ற பழநிமாணிக்கம்.. எங்கு சறுக்கியதென்று தெரியாமல் ஆணவபோக்கை கொண்டிருந்ததால் தஞ்சை திமுக மெல்ல கை நழுவியது உச்சகட்ட பூசல்கள்... பாலு வரவிற்கு பிறகு..பலன் வெற்றி பெறுமென்ற தொகுதிகள் கைவிட்டது... இது ஒரு உதாரணம் தான்.. நிறைய மாவட்டங்களில் இதே போக்கு இருக்கிறது.. வீணர்களாய் போனவர்களை விடுத்து செயல் வீரர்களை இனங்கண்டு செயல்படவிடவேண்டும் அதிகளவில் இளைஞர்களை அதிகாரமையத்திற்குள் கொண்டுவரவேண்டும்..உழைக்கிறவனை உயர்த்திபிடிக்கவேண்டும் .. உழைக்கிறவனுக்கு பொறுப்புகள் வழங்கவேண்டும் அந்த எண்ணத்தில் தான் தளபதி உழைக்கிறவர்கள் வாருங்கள் என்கிறார்.. வரவேற்போம்.. .. நிறைய மாற்றங்களுக்கான முன்னெடுப்பாக .. முன்னெச்சரிக்கையாக இதை பார்க்கிறேன்.. கசங்காத வேட்டியோடு கழகத்தை கரைசேர்க்கலாமென எண்ணுவோர்க்கும் .. அலட்சியபோக்கை கொண்டிருப்போர்க்கும்.. வெற்றி மட்டுமே வேண்டும் வேலைக்கு வேற ஆளை பார் என்போர்க்கும்.. இனி இங்கே இடமில்லை என்பதன் சூட்சமமே தளபதியின் வரிகள்.. மெல்ல சிதைவதை யாரோ எங்கிருந்தோ குழிபறிப்பதை .. வசப்படுமென்றிருந்தவைகள் கைவிட்டுபோக காரணிகளை களையெடுக்க இனியும் மன்னிப்போ வாய்ப்போ வழங்கி நிற்க தயாரில்லை என்பதின் சுருக்கம் உழைப்பவர் வாருங்கள்..என்பதே.. .. #கதிர்மணிமட்டும் வேண்டும் களப்பணி எவனோ பார்க்கட்டும் எனக் கவலையற்று இருப்போர்க்கு... கழகம் ஒன்றும் சத்திரம் சாவடியல்ல இஃதோர் சரித்திர புத்தகம்.. என்றகலைஞரின் வரிகளை நினைவுப்படுத்துகிறேன்.. .. Aalanci Spm

Friday, December 29, 2017

தியாக தலைவி..?

தியாக தலைவி.. இந்த சொல்லை கேட்கிறபோது எரிச்சல் வருகிறதே எனக்குமட்டும்தானா.. தியாகமெனும் சொல் அவ்வளவு இழிவானதா.. முடைநாற்றமடையடித்த இந்த சமூதாயத்தை சீர்செய்த பெருமகன்கள் ..யாருமே தன்னை தியாகியாக காட்டிக்கொள்ளவில்லையே.. பொட்டுகட்டும் பெண்களுக்காக அவர்களையும் இந்த சமூகம் சமமாக மதித்திட வேண்டுமென .. சத்தியமூர்த்தியிடம் போராடி.. பேராசானின் அறிவுரையோடு எங்கள் வீட்டுப்பெண்கள் தெய்வதொண்டாற்றி விட்டும் இனி உங்கள் ஆத்துபெண்கள் தெய்வத்தொண்டாற்றுகளென சட்டமன்றத்திலேயே முழங்கிய முத்துலெட்சுமி ரெட்டி கூட தம்மை தியாகத்தலைவியென கூறிக்கொள்ளவில்லை.. .. இங்கே தியாகம் படாதபாடுபடுகிறது வெட்கமே இல்லாமல் கிரிமினல் 1 ஜெயலலிதாவோடு சேர்ந்து கொள்ளையடித்ததை உச்சநீதிமன்றமே உறுதிசெய்தவரை.. தியாக தலைவியாக சொல்வதை ஊடகங்கள் ஏன் கேள்விகேட்க மறுக்கின்றன.. செய்யாத தவறை 2ஜியில் ஊதி பெரிதாக்கிய செய்தியாளர்களும் ஊடகங்களும்.. புடம்போட்ட தங்கமாய் தன் மீதான குற்றசாட்டே தவறென நிரூபித்து வந்திருக்கும் ராசாவை உயர்த்திபிடிக்கவேண்டாமா ..குறைந்தபட்சம் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டாமா.. ராசாவை மட்டுமே குறிவைத்து தாக்கிய ஊடகங்கள் இன்று ஜெயா சசி விடயத்தில் கள்ளமௌனம் காப்பதேன்.. ஒழுக்கமில்லா அரசியலை.., சக தொண்டனை டொங்கு கொசு என்றெல்லாம் கொச்சைப்படுத்தும் தினகரனை முன்னிறுத்த ஏன் இத்தனை படாதபாடு படுகிறீர்கள் ஒவ்வொரு முறையும் தியாக தலைவி என்கிறாரே.. எந்த தியாகத்தை செய்துவிட்டு சென்றார் கொள்ளையடித்த வழக்கில் சிறையில் இருக்கிறார் இதற்கு பெயர் தியாகமா என ஏன் கேட்கவில்லை.. .. திருமதி சசிகலாவை அதிமுக பொதுசெயலராகவோ அவர்களின் தலைவியாகவோ கொண்டாடட்டும் ஆனால் தியாகம் ரேஞ்சுக்கு உயர்த்திபிடிப்பது அருவருப்பாக இருக்கிறது .. தண்டனைபெற்று சிறையில் கழிக்கும் ஒருவர்.. கண்டனை காலம் கழிந்தும் ஆறு ஆண்டுகள் தேர்தலில் நிற்கமுடியாதவரை ..அதிகாரத்தை பயன்படுத்தி கொள்ளையடித்தவரை கொண்டாவதை காணும் போது மற்றவர்கள் என்ன நினைப்பார் என்று கூட தெரியாமல் செய்கிறார்கள்.. அவர்களை சொல்லி குற்றமில்லை அரசே குற்றவாளியென நீதிமன்றத்தால் தணிடிக்கபட்ட கிரிமினல் 1 ஜெயலலிதாவின் படத்தை அரசு விழாக்களில் வைத்திருப்பது .. அம்மாவின் ஆசியோடு நடைபெறும் ஆட்சியென சொல்வது ஒட்டுமொத்த தமிழகத்தை தலைகுனிய வைக்கிற செயலென ஏன் யாருமே பேச மறுக்கிறீர்கள் .. தண்டிக்கபட்ட குற்றவாளியின் புகைப்படம் அரசே முகப்பில் வைத்திருக்கும் போது .. திருடர்கள் ஜாக்கிரதையென போலிஸ் நிலையங்களில் வைத்திருப்பார்களே அதுதான் நினைவுக்கு வருகிறது. இவர்தான் அதிகாரத்தை பயன்படுத்தி தவறான வழியில் சொத்து சேர்த்தவர். இனி வருகிறவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்பதற்காக வைத்திருக்கிறார்களோ என்னவோ.. கொள்ளையடித்தவர்கள் புகழபடும் நாட்டில் சிறையில் இருப்பவர் தியாக தலைவி தான்.. .. Aalanci Spm

Thursday, December 28, 2017

யாராகினும்.ய

தீயில்மேலும் தீயை அள்ளி வீசி அணைக்க முயலாதே.. மௌலானா ரூமி(ரஹ்) .. எல்லா மருமகன்களும் மாறன் ஆக முடியாது.. என்கிறார் தோழி Shanmugaa Pandian ஆம்.. ஆக முடியாதுதான்.. ஆனால் எல்லாரும் தளபதியாக முடியாது என்பதை மறந்து போகிறார்.. கலைஞரின் மூத்த மகன் மு க.முத்து அதிமுகவிற்காக பிரசிசாரம் செய்தவர்.. ஏன் ஜெயலலிதாவிற்காகவும் பிரச்சாரம் செய்தார்.. இங்கே உறவுகள் தீர்மானிப்பதில்லை திமுகவின் வளர்ச்சிக்கு யார் வேண்டுமென்பதை மாறாக உழைப்பும் .. மக்களின் ஆதரவும் தீர்மானிக்கிறது.. .. அழகிரி கருப்பு சட்டையும் துண்டும் பலனிக்காதென்கிறார்.. அவர் நேரடியாக பாஜகவில் சேர்ந்துகொண்டு எம்மை எதிர்க்கலாம்.. பெரியாரை தொடராத எந்த நிலைபாடும் இங்கே வெற்றிபெறமுடியாது.. பதவிக்காக கொள்கையை விட்டுகொடுக்க வேண்டுமென்பது பணத்திற்காக எதையோ செய்வதைபோல.. இதெல்லாம் அழகிரிக்கு தெரிய வாய்ப்பில்லை.. திமுக ஆட்சியின் போது வெற்றியை பெற்று தருவதில் வியப்பொன்றுமில்லை.. ஆனால் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் செய்து பிரமாண்டமான எதிர்க்கட்சியாக தனியொருவராக நிறுத்தியிருக்கிறார்.. தளபதி.ஸ்டாலின்.. கலைஞரின் ஆலோசனைப்படி நடந்து மிகப்பெரிய சவாலாக நிற்பதை பொறுக்கமுடியாத ஊடகங்கள் ..திமுகவை தொடர்ந்து தாக்கும் பாசிச சக்திகள் அழகிரியை மீண்டும் கொம்பு சீவி பார்க்கிறது.. இதோ சிலர் கனிமொழியை முன்னெடுக்க வேண்டுமென மொழிகிறார்கள் பாவம் இதற்கு முன்பே தர்மாம்பாள்..நாடார் சமூக இயக்கங்களை நாடி சென்னா முழுவதும் சுவரொட்டி அடித்து கடைசியில் ..சொல்லமுடியாமல் ஒதுங்கிய கதை தெரியாதென்று நினைக்கிறேன்.. கனிமொழியே மகளிர் அணி தலைவி பதவியை விட்டுகொடுப்பதாக இல்லையென்று சொன்னபிறகும்.சில அரைவேக்காடுகள் விளசுகின்றன.. .. மாறனை துணைக்கழைத்து கதைப்போருக்கு மாறனை கலைஞர் தன் மனசாட்சியென்று சொன்னது கழகத்தில் நேரடியாக சில விடயங்களை சொல்ல முடியாதபோது .. அதனால் சிலர் பிணங்குவார்களென்று அறிந்து மாறனை வைத்து காய் நகர்த்துவார்.. ஆனால் இங்கே நேரடியாக தளபதி மருமகன் கழக நிகழ்வுகளிலோ .. மாறனை போல தேர்தல் அரசியலிலோ.. உட்கட்சி நிகழ்வுகளிலோ கலந்துகொள்வதில்லை தளபதிக்கு உதவிக்காக அருகில் வைத்திருக்கலாம் .. நேரடியாக தலையீடு வரும் போது எதிர்ப்போம்.. அதுவரை பொத்திக்கொண்டிருங்கள்.. .. இங்கே ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும்.. மாறனின் சில முடிவுகள் இயக்கத்தில் வரலாற்றுப்பிழையாகி இருக்கிறது.. பாஜகவோடு கூட்டு சேராமல் அப்போது தமாகா வை சேர்த்திருந்தால் ஜெயலலிதா மீண்டும் வந்திருக்கமுடியாது.. அது திராவிட அரசியலில் திமுக மீதான விமர்சனபார்வையை .. தொடர்ந்து ஆதரவு தந்த திராவிட சிந்தனையாளர்களை .. தொடர்ந்து வந்த வாக்குகளை இல்லாதாக்கியது அதனால் மாறனின் செயல்பாடும் விமர்சனத்திற்குள்ளாகியதுதான்.. .. ஒரு தோல்வி நாகரீகமான விமர்சனத்தை தாண்டி தனிமனித வன்மத்தை .. கட்சிக்குள் பிரிவினை அரசியலை.. உண்டாக்கியிருக்கிறது.. விரைந்து நடவடிக்கை எடுத்து கட்டம்கட்ட வேண்டும் இது போன்ற விசம பிரச்சாத்திற்கு பின்னில் உள்ள சாதிய பின்புலங்களை..கோஷ்டி மனப்பான்மையை தலைமைக்கெதிராக போக்கை முன்னெடுப்போரை விலக்கிவைத்து .. கூட இருந்தே குழிப்பறிப்போரை இனங்கண்டு கலையவேண்டும்.. .. தளபதி மட்டுமே சரியான தேர்வு .. அவரை ஏற்காதவர்கள் யாராகினும்.. அண்ணனாகினும் தங்கையாகினும்.. கால் தூசிக்கு சமமென கருதி விட்டொழிப்போம்.. ஒன்றிணைவோம் தளபதியோடு.. .. Aalanci Spm

Wednesday, December 27, 2017

அழகிரியின் அலும்பு..

காயத்தை குருதியால் கழுவாதே என்றார் #மௌலானா_ரூமி (ரஹ்மத்).. அதைதான் செய்கிறார் அழகிரி.. ஆனால் பாருங்கள் கோபம் வரவில்லை பரிதாபம் வருகிறது இனி எந்த தேர்தலிலும் திமுக ஜெயிக்காது .. அழகிரியின் இயலாமை கோபமாய் வருகிறதே தவிர வேறொன்றும் இல்லை... .. ஒரு இடைத்தேர்தல் அது இத்தனை கொடூரமாய் சிந்தித்து.. சொல்லியிருப்பதிலிருந்தே யாரும் அவரை கண்டுக்கொள்வதில்லை என்று ஆதங்கம் தெரிகிறது..மாபெரும் இயக்கத்தில் வெற்றிகள் தோல்விகள் வரலாற்றுப்பிழைகள்.. நிறைய கருத்தொற்றுமைகள் / வேற்றுமைகள் வர கூடும்.. அது அந்தந்த சூழலில் பாதிப்பை தரும் ஆனால் அதுவே நிரந்தரமில்லை.. தோல்விகளில் இருந்து படிப்பினைகள் பெறுவோமென நம்பிக்கை தரும் வார்த்தைகளை தந்திருக்கிறார்.. செயல் தலைவர்.. .. திமுகவின் தோல்வி சிலருக்கு அதிக மகிழ்ச்சியை தந்திருக்கிறது ஊடகங்கள் அதற்கு எண்ணெய் ஊற்றி எரிய விடுகிறது ..இதில் சிலர் குளிர்காய்கின்றனர்..சிலர் இப்போது அழகிரி தேவை என பேசுகிறார்கள் .. அழகிரி திறமையானவரைப்போல காட்ட முயற்சிக்கும் சூழ்ச்சியின் பின்னால் திமுகவை .. திராவிட இயக்கத்தை கடுமையாக எதிர்ப்போரின் கைகள் தெரிகிறது. கலைஞர் பெருமகன் செய்த அரசியல் பிழைகளில் ஒன்று அழகிரிக்கு பதவி தந்தது.. மத்திய அமைச்சராக இருந்த போது அவரின் திறமையை..? நாம் கண்டதுதான்.. நாடாளுமன்றத்தில் பேசமாலே போன ஒரு அமைச்சர்... அதுவும் திமுகவிலிருந்து என்பது பலரை புருவம் உயர்த்தசெய்தது... மாறன்.. பாலு ராசா போன்றவர்களை தந்த திமுகதான் அழகிரியையும் தந்ததா என மூத்த அரசியல்வாதி சொன்னதை நானே கேட்டிருக்கிறேன்.. பரபரப்பாக பேசி எதிர்மறை கருத்துக்களை மட்டுமே நம்பி அரசியல் செய்கிறவர் அவ்வளவுதான்.. .. கட்சி அதிகாரம் இளையவருக்கு போனதில் கொண்ட கொடும்பகை தன்னிலை மறந்து பேசவைக்கிறது.. இது அப்பனின் சொத்தல்ல அப்பன் தலைமையிலான இயக்கம்.. இங்கே உழைக்கிறவன்.. மக்கள் விரும்புகிறவன் தான் தலைமையேற்க முடியுமே தவிர.. தலைவர் கலைஞர் மொழியில் சொல்லவேண்டுமெனில் சங்கரமடமல்ல.. இது .. வாய்ப்புகள் வழங்கபட்டது அதில் திறமையை காட்ட தவறியதும் .. ஒரு அமைச்சகத்தை கூட நிர்வகிக்க திறமையின்றி இணை அமைச்சரை வைத்து ஒப்பேற்றியதும் அறிந்துதான்.. மாபெரும் இயக்கத்தை பிளவுபடுத்த நினைத்ததால் தலைவரே முகத்தில் முழிக்காதே என விரட்டியதும் .. ஆறாண்டு கழகத்திலிருந்து நீக்கி வைத்ததும் நடந்தது.. தவறுக்கு வருத்துவதை விடுத்து மீண்டும் மீண்டும் தவறுகளை செய்துவந்தால் .. அருகிலிருக்கிற விரல்விட்டு எண்ணுபவரும் வெளியேறிவிடுவர்.. .. பேட்டி முழுவதுமே தனிமனித வன்மம் மேலிடுகிறது.. ஆரம்பம் முதலே தளபதியோடு ஏற்பட்ட பிணக்கம் ..பெத்த அப்பனிடமே மூன்று மாதத்தில் செத்துவிடுவான் என சொல்லவைத்தபோது மனதின் ஆழத்தின் கொடூர வன்மம் குடிகொண்டிருந்ததை காணமுடிந்தது.. விமர்சனம் என்பது வேறு.. உழைப்பவர்களை இனங்கண்டு பதவிகள் தரவேண்டுமென்பதை ஏற்றாலும்.. மீதமுள்ளவை காழ்ப்புணர்ச்சியில் வந்தவை.. .. ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும்.. தளபதியாரோடு திமுகவினர் கொண்டுள்ள பிணைப்பு ..இங்கேயும் மௌலானா ரூமி அவர்களையே துணைக்கழைத்து சொல்கிறேன்.. நீரோடு ஈரத்தை எப்படி பிரிக்கமுடியாதோ அப்படி தான் திமுகவினர் தளபதியோடு கொண்டுள்ள உறவு... .. கடைசியாக.. திமுகவில் இருப்பவர்கள்.. கொள்கையில் இணைந்தவர்கள் தோல்விகளையும் வெற்றிகளையும் இயக்கத்தின் வளரிச்சிக்காக மாற்றியவர்கள்.. கனிமொழியோ அழகிரியோ ஏன் ஸ்டாலினோ .. எதிர்மறை கருத்துக்களை சொன்னால் .. திராவிட சித்தாந்தத்திலிருந்து விலகிபோனால் இருக்குமிடம் தெரியாமல் போவீர்கள்.. தினகரனிடம் பரிதாபகரமாக தோற்றதாக சொல்லும் அழகிரி .. ஆண்டிபட்டியில் தோற்றதை எப்படி அழைப்பார்.. காயங்களை விழுப்புண்ணாகவே பார்க்கும் திராவிட குணம் எங்கே போனது.. அழகிரியின் பேச்சு செயலும் புறந்தள்ள வேண்டியவை.. .. #காயத்தை_குருதியால்_கழுவாதே.. .. Aalanci Spm

Tuesday, December 26, 2017

குருமூர்த்தியும் ஆண்மையற்றவர்களும்

பன்னீரும் எடப்பாடியும் ஆண்மையற்றவர்கள்.. .. தினகரன் குழுமம் ஒரு மாஃபியா சக்தி . இவர்கள் அனைவரும் தமிழ் நாட்டில் இருந்து உடனடியாக அகற்றப் பட வேண்டும் ஆடிட்டர் குருமூர்த்தி ஆர் எஸ் எஸ் கொள்கை சித்தாந்தவாதி.. அதே போல் தமிழிசையை மிக கேவலமாக சித்தருத்து பதிவிட்டிருக்கிறார்.. எஸ்.வி.சேகர்.. மிக தெளிவாக இருக்கிறார்கள்.. கருவேப்பிலையாக மட்டுமே தமிழர்களை பயன்படுத்துவது எப்போது இவர்களால் பலனில்லையென தெரிகிறதோ அப்போதே கழட்டிவிடுவதோடு கடுமையான விமர்சனம் வைப்பது.. .. முதலில் காமெடி நடிகனின் குமறல் பாஜகவின் தோல்வியை தமிழிசையின் செயல்பாடுகளோடு ஒப்பிட்டு வேறு யாராவது இருந்திருந்தால் பிரமாதமாக செயல்பட்டிருப்பதைப்போல காட்ட முயற்சிக்கிறார்.. அதைவிட மிக கேவலமாக கேலி செய்கிறார்..விமர்சனபார்வை என்பது வேறு ஆனால் இவரின் எழுத்துக்கள் தமிழிசையை கேலியாக்க முயற்சிக்கிறது...அவரின் குலத்தை இழுத்து கேவலபடுத்துவது கண்டிக்கதக்கது.. இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும் சாணரர்கள் தேர்தலில் 54 வாக்குகள் பெற்ற எச்.ராசாவை கேலி செய்து விமர்சிக்கவில்லை காரணம் நூல்.. ஆனால் இங்கே தமிழிசையை அவரின் சிறிய தந்தைப்போல இல்லாவிட்டாலும் பெட்டிக்கடையாவது வைத்து பிழைக்கலாமென சொல்கிற போதே அதிலுள்ள வன்மம் நமக்கு புரியும்.. .. குருமூர்த்தி தன்னை பிதாமகன் என நினைத்துக்கொண்டு செயல்படுகிறார்.. பாஜகவில் ஆர்எஸ்எஸ்ஸில்.. பார்பனர்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கலாம் ஆனால் தமிழர்களிடையே எதிர்மறை கருத்தை தான் பெறவேண்டியிருக்கும்.. ஆண்மையற்றவர்களென சொன்னதற்கு அமைச்சர் ஒருவரே நாங்கள் காங்கேயம் காளைகள் என பதில் தருகிறார்.. காங்கேயம் காளைகள் எதற்கு பயன்படுமென அறிந்தவர்கள் சொல்லுங்கள்.. இதைவிட திராவிடம் பேசும் பதிவர்கள் .. உங்க ஆத்துல இருக்கிறவங்க சொன்னாங்களா.. என்று கேட்டது வியப்பளிக்கவில்லை மாறாக அதே அம்பை கொண்டு திருப்பி எய்துவதாகவே தோன்றியது.. எதிர்ப்புகள் பலமாக வருவதும் அவர் வீட்டுப்பெண்களை வம்பிக்கிழுத்து பதிவுகள் வருவதும் அவரை விளக்கம் கொடுக்க வைத்திருக்கிறது.. impotent என்று சொன்னதை ஆண் பெண் என சம்பந்தபடுத்தி புரிந்துக்கொண்டதாக சொல்கிறார் இதை சாதாரணமாக பயன்படுத்தலாம் என சப்பை கட்டுகிறார்.. குருமூர்த்தி ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தலாம் என்கிறார் அங்கே தனிமனிதர் விமர்சனம் செய்யமுடியாது ..அடிபலமாக விழுகிறது..பாவம் இது தமிழகம் என்பதை மறந்து போனார் .. இதை திசைமாற்ற தினகரன் குழுமம் ஒரு மாஃபியா சக்தி தமிழகத்திலிருந்தே அகற்றபடவேண்டுமென்கிறார்.. மிகவும் கடுமையான விமர்சனம் குருமூர்த்தியிடம் இருந்து வந்துள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கை தீவிரமாக இருக்கும் ஏன பத்திரிகையாளர் சமூகம் அவதானிக்கிறது.. என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் Sa Sufiyan இதை இரண்டு விதமாக எடுத்துக்கொள்ளவேண்டும் எந்த நிலையிலும் தினகரன் அதிமுகவின் தலைமையை ஏற்பதை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை .. மற்றொன்று என்ன திட்டினாலும் ஓபிஎஸ் இபிஎஸ் நமக்கு எக்காலத்திலும் அடிமையாய் இருப்பார்கள் அவர்களை வைத்தே மீதமுள்ள ஆட்சியின் ஆயுட்காலத்தை கழிக்கவேண்டும் தீர்மானித்திருப்பது தெரிகிறது.. அப்போதுதான் மீதமுள்ள உயர்பதவிகளுக்கு எல்லாம் அவர்களையே நியமிக்கமுடியும் .. .. எது எப்படியோ.. தமிழசையை மாற்ற முடிவெடுத்து ஆழம் பார்க்கிறார்களென்பதும் இரு அடிமைகளை மாற்றுவதை குருமூர்த்தி வகையறா விரும்பவில்லையென்பது .. தெரிகிறது.. பார்ப்போம் . .. Aalanci Spm

Monday, December 25, 2017

திரு.ஸ்டாலின்..

அன்பின் தளபதி.. வணக்கம்.. இந்த நேரத்தில் இந்த கடிதம் எழுதவேண்டி வந்ததில் வருத்தமுண்டு.. கார்டு இல்லா கழகத்தவர் என்ற அடையாளத்தோடு தொடர்ந்து திமுகவை பின்துணைக்கும் நிறைய பேர்கள் உண்டு அதில் ஒருவனின் மடல்.. .. அதிகம் எதிர்பார்க்கபட்ட தலைமை .. தாங்கள் செயல்தலைவராகி நடந்த முதல் தேர்தல் இதில் கவனம் செலுத்தியதில் ஏற்பட்ட பிழையை ஒருமுறை ஆய்வது வரும் காலங்களில் தவறில் இருந்து மீண்டுவர உதவும்.. .. திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறை இனம் கண்டு தங்களை முன்னிலைபடுத்தியதில் பெரும் மகிழ்ச்சி கொண்டவன்.. ஆனால் தலைமைக்குரிய சிறந்தபண்புகளில் ஒன்றான ஒருங்கிணைந்து வழிநடத்தல் எங்கோ பிசறியிருக்கிறது..தலைவர் கலைஞர் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்னால் அதிருப்தியாளர்களை அழைத்து பேசி பிறகுதான் களம்காண்பார் அந்த விடயம் இந்த தேர்தலில் காணமுடியவில்லை.. .. நண்பர் ஒருவர் இப்படி எழுதுகிறார்.. தினகரன் 100 பேருக்கு ஒருவரை நியமித்து காலையிலும் மாலையிலும் அங்குள்ளவர்களுக்கு வணக்கம் சொல்லி .. அந்த பகுதி மக்களோடு இரண்டற கலந்தார்கள் .. திமுகவினரோ வெற்றிபெற்றுவிடுவோமென்ற மமதையில் களப்பணியை சரிவர செல்லவில்லை .. அதோடு 2ஜி வெற்றி களிப்பில்.. தேர்தல் வாக்குபதிவை கவனிக்க தவறியதும் களத்தில் 11 மணி முதல் 3 மணி வரையான நேரம் மிக முக்கியமென்பதை மறந்ததும் .. கடமைக்கு கடமையாற்றியதும் மிகப்பெரிய தோல்விக்கு காரணம் என்கிறார்.. சட்டென்று கடந்து போகமுடியவில்லை.. சிங்கப்பூரிலிருந்து வாக்களிக்க வந்தவர் .. வாக்குசாவடியில் திமுகவினரே இல்லை ‍இதை இப்போதுதான் முதன்முறையாக பார்க்கிறேன் என்கிறார்.. 2ஜி வெற்றியை கொண்டாட போனவர்கள் திரும்பி பூத்திற்குள் வரவே இல்லையா.. ஓட்டபந்தயத்தில் நடுவே கொண்டாட்டம் எதற்கு.. வெற்றி மட்டுதானே நமது இலக்கு.. .. பணம் விளையாடியதென்றோ ராஜதந்திரமென்றோ நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளாமல் விரைந்து தவறியதின் காரணத்தை அறிதல் வேண்டும்.. கட்டிவச்ச காசு போனதல்ல பிரச்சனை.. எங்கு தவறென்பதை அறிந்திராவிடில் .. தோல்விகளை நம்மை துரத்தும்.. .. கசங்காத வேட்டியோடு வந்து போகிறவர்கள் அல்ல கழகம் அடிமட்ட தொண்டன் அவன் எண்ணத்தை உள்வாங்கவேண்டும் .. ஒரு சிறிய பொறி போதும் சுட்டெறித்து சாம்பலாக்கிவிடும் என்பதை உணர்தல் மிக அவசியம்..பொறுப்புள்ள முதன்மை செயலர் துரை முருகனின் பொறுப்பற்ற பேச்சு ..வேதனையின் உச்சம் ..திமுக வாக்குகளை பணம் தின்றுவிட்டதென்ற சொல் காயபடுத்தியது தெரியாமல் சிரிக்கிறார்.. பணம் ஒரு எல்லைவரை பாய்ந்திருக்கும் ..மறுக்கவில்லை ஆனால் இங்கே காட்டாற்று வெள்ளமாய் நம்மை புரட்டி போட்டிருக்கிறது... பணம் மட்டுமே காரணமென நம்மை நாமே சமாதானம் செய்துகொள்வதில் பலனில்லை.. நிறைய மாற்றங்கள் தேவை அதைவிட அதீத ஜனநாயகமுறை உட்கட்சி தேர்தலில் தேவையில்லையென நினைக்கிறேன் வேண்டியவர்களை நிறுத்தி வெற்றிபெற செய்யும் மா.செ. தந்திரங்களை தடுத்தி நிறுத்தி கொஞ்ச காலம் தலைமையின் நேரடியாக நியமனமாக செய்யலாம்.. தொடர்ந்து மா.செ.க்கள் அதிகாரம் செலுத்தும் நிலை மாறவேண்டும்..அடியோடு மாற்றமென்பது அவசியமெனபடுகிறது.. முன்பெல்லாம் அதிகளவில் கூட்டங்கள் .. அது இலக்கிய நிகழ்வாக இருந்தாலும் அதிலும் அரசியல் கலந்தாய்வு நடந்தது தெருமுனை கூட்டங்கள் திண்ணை பிரச்சாரங்கள்.. எளிய மனிதரின் சாயங்கால பொழுதில் இயக்கத்தின் செய்திகளை கொண்டு சேர்த்தது.. இதெல்லாம் மறந்துபோனார்கள்.. .. R.K. நகர் தோல்விக்கான காரணத்தை ஆய்ந்து களைகள் கலையபடும் என்ற அறிக்கை.. சென்ற பொதுதேர்தல் தோல்விக்கு பிறகு சொன்ன அதே வாசகம் இதுவரை செய்யாததின் காரணம் .. விட்டுபிடிக்காலாமென நினைத்திருந்தால் மாற்றுங்கள் மாற்றங்கள் புதிய வழியை .. காட்டும் .. இறுதியாக தலைமைத்துவம் குறித்து அப்பனிடம் கற்றதை வெளிகாட்டுங்கள்.. கலைஞர் குறித்து.. 1962 ல் தஞ்சை தேர்தலில் .. எதிர்த்து வாக்குகேட்க வந்த பேராசான் பெரியார்.. கலைஞரைப்பற்றி புகழ்ந்து பேசிய வரிகளை நியாபக படுத்துகிறேன்.. "கருணைநிதியிடம் ஒரு பொறுப்பை தந்துவிட்டால் அதை முடிக்கிறவரை அதில் வெற்றி பெறுகிறவரை ஊன்உறக்கமின்றி செயலாற்றுவான்'' என்றார்.. நிறைய எழுதவேண்டியிருக்கிறது ஆனாலும் நம்பிக்கை ..களைகளை களைந்து பயிரை காப்பீர்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.. .. என் இனிய நண்பர் தங்கம் தென்னரசு .. Thangam Thenarasu எழுதிய கவிதையில்.. "முரசுகள் முழங்கட்டும்! முகாரிகள் ஒதுங்கட்டும்!! எம் இனத்தின் விடிவெள்ளி நீ! எம் இயக்கத்தின் விதை நெல் நீ!! "களிறுதன் கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத்தது அது: பொய்யா காதே; வருந்த வேண்டா; வாழ்க அவன் தாளே!".. என எழுதியிருக்கிறார்.. .. மறுப்பேதுமில்லை.. எம் இயக்கத்தின் விதை நெல் தான் ..நீ.. ஆனால் .. வயல் செம்மைபடுத்தபடவில்லையெனில்..மண் வளமில்லையெனில்.. விதை வீரியமாக இருந்தும்.. விதைத்தும் பலனில்லாமல் போகும்.. உழைப்பு வீணாகும்.. முதலில் வயலை சரிசெய்வோம்.. .. காலம் நமக்காக காத்திருக்காது.. காலத்தை நமதாக்குவோம்.. தொட்டுவிடும் தூரம்தான் வெற்றி.. வீணர்களை துரோகிகளை.. அடையாளம் கண்டு நிஜமாகவே களைந்தால்.. தொட்டுவிடலாம்.. .. நன்றி.. ஆலஞ்சி.. Aalanci Spm

Sunday, December 24, 2017

என்ன செய்துவிட்டேன்

என்ன..செய்துவிட்டேன்.. ஆண்டொன்று போனது.. அவ்வளவுதான் .. .. கொஞ்சம் ஆணவம், கொஞ்சம் அகங்காரம் .. கொஞ்சம் அன்பு.. சொன்ன சேதிகள்..கொஞ்சம் சொல்லாததோ..நிறைய எஞ்சும் .. பகுத்தறிவு.. தமிழர் நாகரீகம்.. தமிழர் அரசியல் தமிழன் பண்பாடு.. திமிர்.. வீரம் விளையாட்டு கோபம் எல்லாம் பந்தியில் வைத்தேன் .. கொஞ்சம் திராவிடம் பேசினேன்.. எதற்கும் அஞ்சா திமிரோடு.. கோவம் கொண்டேன்.. தமிழ்குல பகைவர் மீது கருணைக்கொண்டேன்.. வாடி நின்ற வறியவர்மீது.. எல்லாம் நேர் நின்றே செய்தேன்.. புறம் நின்று தாக்குதல் தமிழன் மரபில்லை என்பதால்.. .. கொஞ்சம் காதல். கொஞ்சம் காமம்.. கொஞ்சம் கலவி..சொன்னேன்.. பெண்கள் தம்மை கேலி பேசும் நிலைக்கண்டால் பெரியாரின் தடியெடுத்தேன் எல்லாம்.. சுயமரியாதை நிழலில் நின்றே செய்தேன்.. .. நான்.. சிறகுள்ள பறவை எல்லா மரக்கிளையிலும் அமர்வேன் ஆன்றோர் சபை.. அறிவிக்கொவ்வா ஆன்மீகம் பேசுவோர் சபை சான்றோர் சபையென.. அடிக்கடி அமர்வேன்.. அறிவின் சுடரில் அமுதம் சுவைப்பேன்.. நான் ரசித்தவை அறிவேற்றதை.. அவைக்கு வைப்பேன்.. அவ்வளவு தான்.. .. என்ன.. செய்துவிட்டேன்.. .. Aalanci Spm

இடைத்தேர்தல் எடை தேர்தலாகட்டும்

திமுகவின் வாக்குகள் எங்கே என்ற கேள்விக்கு பணம் சாப்பிட்டுவிட்டதென்ற துரைமுருகனின் கருத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.. திமுகவின் தோல்வி சரித்திரம் குறித்துகொண்டிருக்கிறது கட்டிவச்சை கூட ூெற முடியாத தோல்வி ஜீரணிக்க கஷ்டமாக இருப்பினும் இதில் பின்னில் உள்ள சகுனித்தனங்கள் விவாதிக்கபடவேண்டியவை.. ஒரு இடைத்தேர்தல் வெற்றிபெறுவோம் என்ற ஆணவத்தில் செயல்களில் விட்ட கோட்டை நம்மை பார்த்து சிரிக்கிறது.. ஜெயலலிதா இருந்த பெற்ற வாக்குகளைவிட மிக குறைவாக அதில் பகுதிகூட இல்லாமல் போனதின் பின்னில் உள்ள அரசியலை புரிந்துகொள்ள காலம் எடுக்கும்.. .. எங்கே தவறியதென்பதை அலசி ஆய்ந்திடவேண்டும்.. 1 2 4 என்ற கணக்கிலேயே பிசிறாமல் முன்னிலை வகிப்பதையும் நோக்கினால் அதன் பின்னுள்ள தகவல் தெரியும் .. பணம் பிரதானம் என்பதை மறுக்கமுடியாதென்றாலும் வாங்கியவர்கள் சரியாக பிரித்து வாக்குகளை தநிதிருக்கிறார்களா.. ஆரம்பம் முதலே இந்த ஆட்சியை அகற்ற தகுந்த நபர் யாரென்பதை தொகுதி மக்கள் உணர்ந்து வாக்களித்திருக்கிறார்களா .. திமுகவிற்கு எச்சரிக்கையை வழங்கி இனி இப்படிதான் தமிழகம் அதற்கு தகுந்தாற்ப்போல் மாற்றிக்கொள்ளுங்கள் என புரிய வைத்திருக்கிறார்களா.. எது எப்படியோ திமுகவின் தோல்வியில் நிச்சயமாக திமுகவினரின் பங்கு இருப்பதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது .. திமுகவின் தோல்வியில் தெற்சீமைகாரர்களின் வாக்கு சற்குணத்தின் மருமகளுக்கு வந்ததென்பதையும் இந்தமுறை மாறியதும் ஒரு காரணம்.. ஆரம்பம் முதலே தினகரன் இந்த தேர்தல் ஆட்சிமாற்றத்திற்கான தேர்தல் என்றே பிரச்சாரம் செய்தார் அது ஒரளவு பலனை தந்திருக்கும் சில விலைபோகாதவர்களின் எண்ணத்தின் பிரதிபலிப்பாக இருக்கும் நண்பர் ஒருவர் இப்படி பதிவிட்டார் சிங்கப்பூரிலிருந்து நான் வாக்களிக்க வந்தேன் எப்போதும் வாக்குசாவடியில் திமுககாரர்கள் இருப்பார்கள் இந்தமுறை மிஸ்ஸிங் என்றார் இதற்கான விடையை தலைமைகழகம் தான் சொல்லவேண்டும்.. நிச்சயமாக திமுகவிற்கு வாக்களிப்பவர்களின் வாக்குகள் தினகரனுக்கு சென்றிருக்கிறதென்பதை மறுக்கமுடியாது.. இது செயல்தலைவர் 19டிசம்பர் அன்று மூன்றுமாதம்தான் இந்த ஆட்சியென்றார் அதை வழிமொழிந்ததைப்போல தினகரனும் என்னை வெற்றிபெற செய்தால் மூன்றுமாதத்தில் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் என்றார் இருவரின் கருத்தும் ஒரே நேர்கோட்டில் பயணித்திருப்பதில் சில சூட்சமும் இருப்பதைதான் பாண்டே போன்றவர்கள் ராஜதந்திரம் என்கிறார்கள்.. எது எப்படியோ.. இந்த தோல்வியை உள்வாங்கி உண்மை நிலவரத்தை அறிந்து செயல்படாதவரை திமுகவிற்கு தோல்விதான் மிஞ்சும்.. .. தினகரனின் வெற்றி ஆட்சியை அகற்றும் என்ற குருட்டுநம்பிக்கை. மாற வாய்ப்புகளே அதிகம்.. நடக்கலாம் அல்லது மத்தியில் ஆள்வோர் அணைத்துக்கொண்டு செயல்படலாம் ..இதெல்லாம் ராஜதந்திரமென்பது நமது இயலாமையை காட்டுகிறது.. பணம் பேசியது தேர்தல் ஆணையத்தின் தோல்வி என்றெல்லாம் சமாதானம் செய்யாமல் உள்ளபடியே களநிலமையை ஆய்ந்து .. சரியான தேர்வும் சரியான அணுகுமுறையும் வரும் காலங்களில் செய்யாவிடில் தோல்விகள் தொடர்கதையாகலாம் .. இதுதான் இந்த இடைத்தேர்தல் தரும் எசிசரிக்கை.. .. நிறைய கற்றுக்கொள்ள இந்த இடைத்தேர்தல் பயன்படட்டடும்.. தோல்வியின் பாடமே வெற்றியின் படி.. .. தினகரனுக்கு வாழ்த்துகள்.. .. Aalanci Spm

Saturday, December 23, 2017

ஆனந்தமைந்தோமென..ஆடுவோமே..

மனம் ஆனந்த கூத்தாடுகிறது.. ஆம்.. திராவிட இனத்தின் கூர்வாளாய் எம் இன பகைவர்களுடமிருந்து காத்துநின்ற திமுகழகத்தை வீழ்த்தவேண்டுமென்ற ஒன்றை குறிக்கோளாடு சாதூர்யமாய் திட்டம் தீட்டி எம்மை சிக்கவைத்தனர்.. கேள்விபடாத தொகை எண்ணில் எழுவதற்கு கூட சிவருக்கு தெரியாது.. மாய எண் சுதாரிப்பதற்குள் எம்மை சுற்றி வீழ்த்தியிருந்தார்கள்.. சொல்வதை கேட்க யாருமே செவிமடுக்க தயாரில்லை .. ஊடகம் காத்திருந்ததைப்போல தொடர்ந்து கூப்பாடு போட்டு பலூனை ஊதி ஊதி பெரிதாக்கியது.. கைது சிறை வழக்கு .. இதோடு முடிந்ததென்றார்கள்.. அவசரமாய் முடிவெடுக்கும் மக்களும் எம்மை அதிகாரத்திலிருந்து இறக்கினார்கள்.. எல்லா திசையிலும் அம்புகள்.. ஆனால் அப்போதும் சொன்னோம்.. அநீதி வீழும் அறம் வெல்லும்.. .. ஆண்டிமுத்து ராசா பஞ்சமன் நம்மை அதிகாரம் செலுத்துவதா பஞ்சமன் முன் கைகட்டி நிற்பதா என்ற ஒற்றை காரணத்திற்காக வழக்கை உலகமே கேள்விபடாத வகையில் பேசி திரிந்தனர்.. உச்சநீதிமன்றமும் ராசா வழங்கிய உரிமங்களை ரத்து செய்து தன் மேற்பார்வையில் ஏலம் விட்டது.. ராசா விற்றதை விட 1365 கோடிக்கு குறைவாக ஏலம் போனது..(ராசா 10772கோடி உ.நீதிமன்றம் 9407) அதாவது 1365 குறைவாக ஏலம் போனது அப்போதே ராசாவின் முடிவு சரியென்றானது .. மிக தெளிவாக ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்த்தார் ராசா.. பெரியாரின் பேரன் கலைஞரின் பிள்ளை .. சூழ்ச்சியாளர்கள் பின்னிய வலையை அவர்களை கொண்டே அவிழ்க்கவைத்தார்.. ஆரம்பம் முதலே குற்றம் செய்யவில்லை என்பதோடு நிறுத்தாமல் நான் செய்ததுதான் சரியென்று வாதிட்டார்..இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிற்காதென்றார் அதுதான் நடந்தது நீதியரசர் ஷைனி வதந்திகளை நம்பி வழக்கு பதிவுசெய்திருப்பதாக சொல்லி விடுதலை செய்தார்.. .. தலைவனை பார்க்க தொண்டர்கள் காத்திருப்பர்.. இங்கே தொண்டனை வரவேற்க செயல்தலைவர் காத்திருந்தார்.. எழாண்டு பழியை திமுகவை வேட்டையாடிய வீணர்களின் பழியை துடைத்து .. வானரபடைகளை வீழ்த்திய இந்திரஜித்தாய்.. வருகிறான் எம் தொண்டன் அவனை நானே வரவேற்பதுதான் முறையென்று வானூர்த்தி நிலையத்தில் காத்திருந்து பொன்னாடை போர்த்தி அகமகிழ்ந்தார்.. கட்டிபிடித்து நன்றியை .. இந்த இயக்கத்தின் மீது வந்த பழியை துடைத்தேன் என கண்களில் மகிழ்ச்சியோடு ஈரம் கசிய நிற்கிறார் ராசா.. அன்புதங்கையோ ஆரத்தழுவி கண்ணீர் மல்கி வெற்றியை தளபதியிடம் தருகிறார்.. இந்நிலையில் ஊடகங்கள் கலகம் செய்ய எண்ணி.. கழகத்தில் ஏதேனும் பதவியை எதிர்பார்க்கிறீர்களா என கேட்க.. இப்போது தந்திருக்கும் பதவியே மேலானது.. எக்காரணம் கொண்டும் மகளிர் அணி பதவி தரபோவதில்லை என்றார் கனிமொழி.. .. கேஸ் முடிச்சிடுப்பா ஜெயிட்டோம் என்ற போது அப்படியா என வாய்திறந்து கனிமொழியிடம் கேட்டார் கலைஞர் பெருமகன்.. பேராசிரியர் எங்கேயென இங்கேதான் இருங்காங்கப்பா என்ற போது பேரீசிரியரை கண்டு சிரித்த அந்த நொடி ..அப்பப்பா .. பேராசிரியர் மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்ட தருணம் .. வார்த்தைகளில் சொல்லிட முடியுமா என்ன.. காண்பவர் கண்களில் நீர் கசிகிறதே .. ஏன் இத்தனை ஆர்ப்பாட்டமென்கிறார்கள் ஏன் இப்படி கொண்டாட வேண்டும்.. எங்களின் வலி அப்படி .. பிரமாண்ட பொய்யை எங்களை சுற்றி எழுப்பி அசைய முடியாமல் வைத்திருந்ததால் .. எழும்பி வந்து ஆடுகிறோம்.. கொண்டாடுகிறோம் குற்றவாளியென்ற முத்திரையோடு வந்தவரை வரவேற்றவர்களை கண்டு பழக்கப்பட்ட கண்களுக்கு ஆனந்த களிப்பாட்டம் எரிச்சலை தந்திருக்கலாம்.. .. ஆனந்தமடைந்தோமென ஆடுவோமே.. .. Aalanci Spm

Friday, December 22, 2017

பெரியார்

#டிசம்பர்24.. .. பெரியார்.. யாரிந்த ஈரோட்டு கிழவன். கூன் விழுந்த என் அப்பனை தூக்கி நிறுத்தியவன்.. கக்கத்தில் வைத்திருந்த துண்டை தோளில் போட்டு அழகுபார்த்தவன்.. கடவுள் மறுப்பல்ல என் கொள்கை ஏற்றதாழ்வை சரிசெய்தலே என்றான் கடவுள் பெயரில் பிரித்துவைத்ததால் அந்த கடவுளையே எதிர்க்கிறேன் என்றவன்.. .. எல்லோரும் வந்தார்.. மதவாதிகள்.. மார்க்கம் பேசியவர்.. இலக்கணம் வடித்தவர் இன்ப இலக்கியம் சொன்னவர் அறிவை.. ஆய்ந்து திறம்பட சொன்னவர்.. திறமையாளர்கள்.. ஆன்மீக பேசியவர்.. அரசியல், நிர்வாகம் மடமை மூடம்.. முதிர்ந்த சொல்.. விவேகம் ,வீரம். சமூகசிந்தனை சமுதாய நலன் வாழ்வியல் சொன்னவர்.. என வந்தார்கள் ..சான்றோர்கள் பலர்.. எல்லோரும் .. தான் சொல்வதை மட்டுமே சரியென்றார்கள்.. ஆனால்.. இந்த பெருங்கிழவன் மட்டுமே.. யார் சொன்னாலும் எதைப்பற்றியென்றாலும் எப்படி சொன்னாலும்.. ஏன் நானே சொன்னாலும்.. உன் அறிவேற்காததை ஏற்காதே என்றான்.. அதனால் இன்னமும் நிலைத்து நிற்கிறான்.. .. எல்லாவற்றிக்கும் தீர்வை சமூகநீதியின் அளவுகோலில் பார்த்த பேரறிவாளன் ஆண்குழந்தையை படிக்கவைக்காவிட்டாலும் பெண்குழந்தையை படிக்கவையுங்கள் வெளியூர் சென்று கூலி வேலை செய்தாவது படிக்கவைக்க சொன்ன தொலைக்காளன் எல்லாவற்றிலும் முற்போக்கு எழுத்தில் பேச்சில் எப்போதும் இருந்ததில்லை எப்போதும் பிற்போக்கு.. .. தமிழ் மண்ணையும் தமிழனையும் எப்போதும் காத்துநிற்கும்.. ஆயுதம்.. ஆம்.. பெரியார்.. பகைவர் குலைநடுங்கும் எங்கள் #பேராயுதம்.. .. #பெரியார்நினைவில்44 கலைஞரின் வரிகளோடு முடிக்கிறேன் பம்பரமும் சுற்றிய பின் ஓய்ந்துவிடும் படுகிழமாய் ஆனப்பின்பும் பம்பரம் போல் சுற்றுகிறார்.. #எம்பெரியார்.. .. Aalanci Spm

தீர்ப்புக்கு பிறகு..

தீர்ப்பு எத்தனை பேரை பதறவைத்திருக்கிறது.. இதோடு முடிந்ததென்றவர்களுக்கு தெரியாது அநீதி வீழும் அறம்வெல்லும் என்று கலைஞர் கையெழுத்திட்டது.. உண்மையை மறைப்பது மண்ணுக்குள் விதையை புதைப்பதை போன்றது.. கிழித்து முளைத்து வெளிவருமென்று.. .. யாரெல்லாம் பதறுகிறார்கள் என பார்த்தால் புரியும் வக்கற்றவன் ..திமுகவின் வீழ்ச்சி சுகம் காணலாமென காத்திருந்தவன்.. இனத்தை அழிக்க வேரறுக்கமுடியாமல் மதிலாய் நிற்க திமுகவை ஒன்றுமில்லாமல் செய்ய துடிப்பவன்.. சமூகநீதிக்கெதிராவன்.. ஒடுக்கபட்டவரை மீண்டும் எழ விடாமல் அவர்மீது அமர்ந்திருப்பவன்.. மதம் சாதிவெறிப்பிடித்து அலைபவன்..இவர்களுக்கெல்லாம் திமுகவின் தோல்வி பயன்படும் அதனால் கதறுகிறார்கள்.. விஞ்ஞானபூர்வமாக குற்றம் நிகழ்த்திருக்கிறார்களென்கிறார்கள் விஞ்ஞானம் என்றாலே ஆய்ந்தறிந்து செயல்படுவதென்பது இதில் எப்படி தவறிழைக்கமுடியும்..என்கிற சிந்தனை அறியாமையில் உளலும் சாதியர்களை மூளைச்சலவை செய்பவர்களுக்கு தெரியாது.. சரியாக விசாரிக்கபடவில்லையாம்.. எழுவருடம் காத்திருந்தும் எந்த ஆதாரத்தையும் தரமுடியவில்லையென கூறிய நீதிபதி கற்பனையான வதந்திகளின் அடிப்படையில் அதிகாரிகள் அவசரகதியில் தயாரித்த குற்றபத்திரிக்கை என சாடியிருப்பதை மறந்து போகிறார்கள்.. .. பாஜக தீர்ப்பை இப்படிதான் விமர்சிப்பார்கள் அவர்களுக்கு மிகப்பெரிய பலனை தந்தது இந்த வழக்கு இன்றைக்கு பாஜக ஆட்சிக்கு வருவதற்கு பேருதவி புரிந்தது 2ஜி வழக்குதான்.. இந்த தீர்ப்பு குஜராத் தேர்தலுக்கு முன்பு வந்திருந்தால் நிலைமை வேறுமாதிரியாகியிருக்கும்.. இங்கே காம்ரேட்டுகளை குறிப்பிட்டாகவேண்டும்.. வழக்கு விசாரணையை தவறானதுபோல சித்தரிக்கமுயல்கிறார்கள் உச்சநீதிமன்றம் தவறாக வழங்கபட்ட உரிமங்களை ரத்து செய்ததிலிருந்தே ஊழல் நடந்திருப்பதாகதானே பொருள் என்கிறார்கள். முதலில் ஏன் உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது என்பதை விளங்கிகொள்ளவில்லை.. உரிமங்களை பெற்றவர்கள் ..அலைவரிசை செயல்பாட்டை தொடங்காதது சிலர் பிற நிறுவனங்களுக்கு விற்றதும் ..சிலர் தங்களுக்கு முறையான ஆவணங்கள் வழங்க கால அவகாசம் வழங்கப்படவில்லை என்ற கோரிக்கையையும் கணக்கில் கொண்டு உரிமங்களை ரத்து செய்ததே தவிர அதில் ஊழல்நடந்ததென கூறி ரத்து செய்யவில்லை.. அதை விசாரிக்கதான் தனி விசாரணை நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டது.. உரிமங்கள் பெற்றவர்களை கண்காணிப்பும் செயல்பாட்டை உறுதி செய்வது தொலைதொடர்பு அமைச்சகத்தின் பணி அல்ல அது ஒழுங்குமுறை ஆண்யத்தின் பணி (TRAI) இதில் ராசா தலையிட முடியாது .. இதுகுறித்து அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பிரத்கேய பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார் இன்றைய பிரதமர் போல ஓடி ஒளியவில்லை.. அப்போது அவர் சொன்ன பதில்.. தனியார் நிறுவனங்கள் ஏன் வாங்கி பிறர்க்கு வீற்கிறீர்களென கேட்க முடியாது.. வியாபார நோக்கோடு மட்டுமே செயல்படும் சேவை நிறுவனங்கள் அவை.. எந்த அரசும் அவர்களை கட்டுபடுத்த முடியாது.. அரசு நிறுவனங்களாக இருந்தால் மட்டுமே கட்டுபாட்டுக்குள் வைக்கமுடியும் இந்த விதி தனியார் நிறுவனங்களுக்கு பொருந்ததாதென தெளிவாக பதில் சொன்னார். உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்திருக்கிறதா என்பதையும் விசாரித்த நிதிமன்றம் ..தவறுநடந்ததாக எங்கும் குறிப்பிடவிலலை ஏற்கனவே ராசா ABCDF.. வரிசையில் வழங்கபட்டதோடு என்து பணி முடிந்து விட்டது அவரிகள் பணத்தில் செலுத்துவதில் காலதாமதம் செய்திருந்தால் அந்த வரிசை மாறுமே தவிர.. அதற்காக B D C A .. என்று வருமே தவிர.. Z Y X W என்ற வரிசை வராதென தெளிவாக வாதத்தை எடுத்துவைத்திருக்கிறார் இதற்கு பிறகும் உரிமம் வழங்கியதை உச்தநீதிமன்றம் ரத்து செய்ததை வைத்து முறைகேடு நடத்ததாக மல்லும் கட்டும் காம்ரேட்கள்.. அதையும் சேர்த்துதான் விசாரணை நீதிமன்றம் விசாரித்தை மறந்து பேசிகிறார்கள்.. .. ஆரம்பத்தில் ஆக்ரோசமாக எதிர்த்துவிட்டோமே இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு வாழ்த்துவதென்று அவர்கள் நிலமையை புரிந்துக்கொள்ளமுடிகிறது.. காம்ரேட்டுகள் இப்போது காம்ரேட்களாக இல்லை கார்ப்பரேட்டுகளாக மாறி வெகுகாலமாகிவிட்டது.. .. கடைசியாக.. ஜெயலலிதா உயர்நீதிமன்றம் விடுவித்த சிலமணி நேரத்திற்குள்ளாகவே அதில் உள்ள தவறு சுட்டிக்காட்டபட்டதே.. 24 மணி நேரம் கடந்தும் இந்த வழக்கின் தீர்ப்பில் ஏதேனும் குறையை சொல்லமுடிந்ததா.. இதிலிருந்தே பாஜகவும் பார்பனர்களும் .. அவர்களின் அடிவருடிகளும் வயிறெரிவது தெரிகிறது.. .. #தண்ணீரை_குடியுங்கள்_தோழர்களே.. .. Aalanci Spm

Thursday, December 21, 2017

அறம் வென்றது

#மகிழ்ச்சி.. 2ஜி வழக்கு திமுக இதோ காலி என்று நேற்றுவரை அதே சுரத்தோடு பாடி கொண்டிருந்தவர்களுக்கு தெரியாமல் போனது.. ஜெயலலிதாவைப்போல ஓடியொளிந்துக்கொள்ளவில்லை நீதிபதியை மாற்ற சொல்லி மனு போடவில்லை வழக்கறிஞர் இவர் கூடாதென கோரிக்கை வைக்கவில்லை ..கோழையைப்போல வாய்தா வாங்கி இழுத்தடிக்கவில்லை .. மாறாக வழக்கை நேர்மையாக சட்டத்தின் துணைக்கொண்டு.. விரைந்து முடிக்க வேண்டுமென்று விரும்பினோம்.. எந்த நிலையிலும் யாரிடமோ உதவுங்களென யாசிக்கவில்லை .. காரணம் நம்பிக்கை தவறேதும் செய்யவில்லை என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை.. .. இங்கே மற்றொன்றை குறிப்பிட வேண்டும்.. ஜெயலலிதா தண்டிக்கபட்டு ஜாமீனில் இருந்தபோது மத்திய நிதியமைச்சர் சந்திக்கிறார்.. சட்டத்துறை அமைச்சர் சந்திக்கிறார்.. குமாரசாமியை நியமிக்கிறார்கள்.. இதெல்லாம் வரம்பு மீறிய செயலென்றோ.. குற்றவாளியை கிரிமினலை அவர் இல்லம் சென்று சந்திப்பது பதவிக்கு அழகல்ல என்றோ எந்த ஊடகமும் ..நடுநிலை நக்கிகளும் சொல்லவில்லை.. ஆனால் கனிமொழி கைதுசெய்யபட்டு திகாரில் இருந்த போது கலைஞர் சென்று பார்த்துவிட்டு வருகிறார் .. நீங்கள் ஏன் சோனியாவை சந்திக்கவில்லை என்ற போது அவருக்கு தர்மசங்கடத்தை உருவாக்க விரும்பவில்லை வழக்கை சட்டபூர்வமாக சந்திப்போமென்றார்.. இப்போது சொல்லுங்கள் எது நேர்மை. .. 2ஜி வழக்கு பதியவேண்டுமென்று நாடாளுமன்றத்தை முடக்கி ராசாவை பதவி விலகும்வரை..ரகளையில் ஈடுபட்டு .. திமுக என்றாலே ஊழல்தான் என்ற பொய்பிம்பத்தை கட்டமைத்து அதன் பலனால்தான் இன்றைக்கு பாஜக ஆட்சியில் இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது.. இப்போது என்ன சொல்லபோகிறார்கள்.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டாமா.. .. இந்த வழக்கை ஒருகட்சிக்கெதிரான வழக்காகவோ ஊழலுக்கெதிரானதாகவோ காணமுடியும் இதில் பின்னில் உள்ள சூட்சமம் வலியது.. பஞ்சமன் உயர்பதவியிலா என்ற எரிச்சல் மட்டுமே காரணம்.. ஒருமுறை ராசாவே சொன்னார்.. அப்போதெல்லாம் பார்பனர்கள் தான் தபால் கொடுப்பார்கள்.. இடைசாதிக்காரன் தெருவில் அங்குவந்த கடிதங்கள் மொத்தமாக கட்டி போட்டுவிடுவார்.. சேரிகளுக்கு போகவே மாட்டார்கள் தூக்கியெறிந்துவிடுவார்கள்.... அந்த கடைசாதிகாரனை அந்த துறைக்கே அமைச்சராக்கி அழகுபார்த்தவர் கலைஞர் என்றார்.. ஆம் அதுதான் காரணம்.. ஆசிர்வாதம் ஆச்சாரி போன்றவர்கள் .. ராசாவின் கீழ் நாம் வேலைசெய்வதா என்ற கோவம் தான் வழக்கானதே தவிர..எந்த முகாந்திரமும் இல்லை .. .. எதிர்த்து குரல் கொடுத்தவர்களின் குரல் நடுங்குகிறது.. திமுககாரர்கள் புத்திசாலிகள் விஞ்ஞானபூர்வமா ஜெயிப்பாய்ங்க என தங்கள் இயலாமையை வெளிபடுத்துகிறார்கள். எழுவருடம் காத்திருந்தேன் ஒரு ஆதாரமாவது தருவார்களா என்று என்கிற நீதியரசர் ஷைனியின் பதில் ஒன்றே போதும் இவர்களுக்கு.. .. ஜெயிச்சு வரும்ணும்யா இல்லையென்றால் தலித்கள் யாரையும் உன் உயரத்திற்கு வர விடமாட்டானுங்கய்யா என்று ராசாவிடம் கலைஞர் சொன்ன வாசகம் .. எந்தளவிற்கு பார்பன சதி இதில் இருக்கிறதென்பதை உணர முடிகிறது.. #கலைஞர் மொழியில் சொல்வேணிடுமெனில் #அறம்_வென்றது.. .. Aalanci Spm

Wednesday, December 20, 2017

கவரும் அரசியல் அல்ல..கவர்ச்சி அரசியல்

வீடியோ.. ஏன் பதறுகிறார்களென்று தெரியவில்லை.. விதிமீறலென்று ஆணையம்.. பணம் பட்டுவாடா நடந்ததாக சொல்லி தேர்தலை நிறுத்திய ஆணையம் அதைவிட அதிகமாய் பணம் தந்தபிறகும் மௌனமாய்தான் இருந்தது.. ஒரு தொகுதி அதில் கூட தேர்தலை நடத்தமுடியாமல் போனால் நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் கையாலாகாத கமிஷனென பெயர்வாங்க வேண்டிவருமென்று கள்ளமௌனம் காத்தது.. இப்போது ஜெயலலிதா வீடியோ வெளியிட்ட பிறகு நடத்தை விதி மீறல்.. இது மாநிலம் தழுவிய தேர்தல் அல்ல ஐந்து கிலோ மீட்டருக்குள் நடக்கும் தேர்தலுக்கான விதியென்பது தேர்தல் நடக்காக இடங்களில் பொருந்தாது .. அதற்காக சமூகவலைத்தளங்களில் கூட வெளியிட கூடாதென்பது வரம்பிற்குட்பட்டதா என்பது ஆய்வுக்குரியது.. .. பாஜகவின் எச்.ராசா வீடியோ வெளியிட்டதற்காக பதறுகிறார்.. குஜராத் தேர்தல் நேரத்தில் ஹிர்திக் பட்டேல் வீடியோவை வெளியிட்டது எந்த அறத்தில் வரும் .. அப்போது ஏன் ஆணையம் தலையிடவில்லை.. தேர்தலில் அனுதாபத்தை முதலாக்குவது தமிழகத்திற்கு புதிதல்லவே.. எம்ஜிஆர் நோவும்.. ராஜீவ் சாவும் தேர்தலையே புரட்டி போடவில்லையா.. மருத்துவசிகிச்சை படத்தை போட்டு வாக்குகேட்டதெல்லாம் எம்ஜிஆர் பார்மூலா தானே.. ராஜீவின் சிதறிய உடல்களை போஸ்டர் போட்டு வாக்குகேட்டது விதிமுறைக்குட்பட்டதா.. எம்ஜிஆரின் நோவில் கிடந்தபோதும் இதே முறை கையாளபட்டதே அப்போதெல்லாம் விதிமுறைக்குட்பட்டது.. எப்போதுமே சாதனைகளை சொல்லி அதிமுக வாக்கு கேட்டிருக்கிறது இருந்தால் தானே சொல்வதற்கு.. இதெல்லாம் தமிழகம் ஏற்கனவே கண்டதுதான்.. என்ன இப்போது உயிரோடில்லாதவரை ..கொண்டுவந்து கதைக்கிறார்கள் பிண வடிவில் பெட்டி செய்து தெருதெருவாக இழுத்து வந்ததற்கும் இதற்கும் பெரிய வேறுபாடில்லை.. இவர்களுக்கு வெற்றி அதற்காக எந்த தரங்கெட்ட செயலும் செய்வார்கள் .. இவர்களுக்கெல்லாம் கொள்கை கோட்பாடு நாகரீக அரசியல் இவையெல்லாம் என்னவென்றே தெரியாது.. ஒருவரின் உடல்நிலையை வைத்து அரசியல் செய்யும் அயோக்கியத்தனத்தை போல கேடுகெட்ட அரசியல் வேறில்லை.. .. கலைஞர் புகைப்படம் வெளியிடுங்களென கேட்டபோது பெண் பிரைவசி என்றெல்லாம் பேசிய மாலன் போன்றவர்களும் அரசியல் அறியாமையில் உளறிய அடிமைகளும் இப்போது வீடியோவே தேவைபடுகிறதே .. வெளியிடபடுகிறதே எதையும்,ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தியிருந்தால் சந்தேகங்கள் மர்மங்கள் விலகியிருக்குமே .. இதையெல்லாம் செய்ய அறம்சார்ந்த நேர்மை தேவை.. அதெல்லாம் கவர்ச்சியை மூலதனமாக்கிய மகோரா (எம்ஜிஆர்) ரசிகர்களுக்கு தெரியாது.. எங்குமே காணமுடியாது இதுபோன்ற கழிவு அரசியலை.. கொள்கை சார்ந்து ஏன் தான் விரும்புகிற கோட்பாட்டில் நின்று தான் செய்வது சரியென்கிற அரசியலைதான் நாடு பார்த்திருக்கும்.. இத்தனை இழிவுகளுக்கு மகோராவெனும் மடையன்தான் காரணம்.. விவரகேட்டை மக்கள் நம்பி ஆட்சியை தந்ததின் பலன்.. தொடர்ந்து இன்னும் தமிழகத்திற்கு அவமானத்தை தருகிறது.. .. #கேடுக்கெட்டவர்கள். .. Aalanci Spm

Tuesday, December 19, 2017

பெரியார் உகுவாக்கியவர் தான் காமராஜர்

காமராஜரை தோற்கடிக்க முடிந்தது மோடியை தோற்கடிக்க முடியவில்லை என்ற எச்.ராசாசர்மாவின் கருத்தையொட்டி சிலர் காமராஜரை தோற்கடித்தது பாவம் என்றளவிற்கு பேசிகிறார்கள்.. காமராஜர் தோற்கடிக்கபடவேண்டியவர்தான் ஆம்.. காமராஜருக்கென்று தனிமுகம் இருப்பதாக சிலர் வரிந்துகட்டிக்கொண்டு வருகிறார்கள் உண்மையில் காமராஜரை இந்த நிலைக்கு உருவாக்கியதே பெரியார்தான்.. .. சத்தியமூர்த்தி ராஜாஜியும் கோலோச்சிய காங்கிரஸில் பெரியார் காமராஜரை கொண்டுவந்தார்.. குலக்கல்விக்கு எதிராக பெரியார் மண்ணெண்ணை கேனோடு தயாராக இருங்கள்.. நான் சொல்லும் போது அக்ரஹாரத்தை கொழுத்துங்கள் என்ற போது ஆடிப்போனார் ராஜகோபாலாச்சாரி.. உடனே குலக்கல்வி திட்டத்தை கைவிட்டார்.. அப்போதுதான் பெரியார் யோசித்தார் பார்பனன் கையில் அதிகாரம் இருப்பதால் தான் துள்ளுகிறார்கள் அதை பிடிங்கவேண்டுமென்பதற்காகவே குடியாத்தம் இடைத்தேர்தலில் காமராஜரை நிற்க சொன்னார்.. காமராஜரோ .. முதலியார்களும் முஸ்லிம்களும் நிறைந்த தொகுதி மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்னை நிற்க சொல்கிறீர்களே என்ற போது நான் பார்த்துக்கொள்கிறேன் நில் என்று சொல்லிவிட்டு பச்சை தமிழனை நிறுத்தியிருக்கிறேன் அவரை ஆதரியுங்கள் என்றார் அண்ணாவும் குணாளா குலக்கொழுந்தே சென்றுவா குடியாத்தம் வென்றுவா கோட்டைக்கு என்றார் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் காமராஜரை ஆதரித்து வெற்றிபெற செய்தார் .. காமராஜர் ஆட்சி பொறுப்பிற்கு வந்ததும் நேராக பெரியாரை நான் சந்தித்து என்ன வேண்டுமென்றார்.. ராஜாஜி 6000 பள்ளிகளை மூடிவிட்டார் அதை திறக்க வழிசெய்யுங்கள் ‍‍‍‍அதேபோல் தாழ்த்தப்பட்டவரை அறநிலைத்துறை அமைச்சராக்குங்களென்றார்.. கல்விக்கண் திறந்தவர் காமராஜர் என்கிறீர்களே..அவரின் அறிவு கண்ணை திறந்தவரே பெரியார்தான்.. பதவி வந்தவுடன் மமதையும் தலைக்கேறியது.. 1952 ல் 15 பேர் திமுகவினர் அண்ணா கலைஞர் நாவலர் உட்பட வென்று சட்டமன்றத்திற்கு சென்றார்கள் அனைவரையும் வரும் தேர்தலில் தோற்கடிப்பதாக சொல்லி.. இந்தியாவிலேயே முதன்முதலாக வாக்கிற்கு பணம் என்ற பார்மூலாவை அறிமுகபடுத்தியவர் காமராஜர் தான் அதுவரை பண்ணையார்கள் தங்கள் கூலித்தொழிலாளிகளை சுடுசோறு போட்டு குடும்பத்திற்கு இரண்டு ரூபாய் கொடுத்து வாக்களிக்க சொன்னது நடந்ததுண்டு ஒட்டுமொத்தமாக வெங்கடாஜலபதி படத்தில் சத்தியமே வாங்கிக்கொண்டு ₹5 விநியோகம் நடந்தது அண்ணாவை தோற்கடிக்க பணம் கொடுத்து அப்போதுதான் ..தஞ்சையில் கலைஞரை தோற்கடிக்க நெய்சோறு போட்டு ₹5 வழங்கியதும் அப்போதுதான்.. ஆனால் கலைஞரை தோற்கடிக்க முடியாமல் போனது வேறுகதை.. .. 1962 ல் பெரியாரிடம் 15 வேட்பாளர் பட்டியலை தருகிறார்.. அதெல்லாம் சரி கருணாநிதியை எதிர்த்து யாரை நிறுத்துறே.. என சொல்லி பரிசுத்த நாடாரை நிறுத்த சொல்கிறார் நானே பிரச்சாரத்திற்கு வருகிறேன் என்று வந்தவர். கருணாநிதியை புகழ்ந்து 10 நிமுடம் பேசுகிறார் கருணாநிதி எனது நேரடி சீடன் அவனிடம் ஒரு பொறுப்பை தந்தால் அதை செய்துமுடிக்கிறவரை உறங்கமாட்டான் என பேசிவிட்டு திமுகவை விமர்சித்து ஒன்றரை மணிநேரம் பேசினார் அந்த பேச்சை கேட்டுக்கொண்டிருந்த கலைஞர் அருகிலுள்ள வெற்றிவேல் பிரஸில் .. பெரியார் தன் சீடன் கருணாநிக்கு புகழாரமென பெரியார் பேசியதை துண்டு சீட்டில் அச்சடித்து பெரியார் பேச்சை முடிப்பதற்குள்ளாகவே அந்த கூட்டத்தில் விநியோகம் செய்தார்.. ஒரு திமுக தொண்டர் மேடையேறி பெரியார் மடியில் போட்டுவிட்டு போய்விட்டார்.. பெரியார் அந்த துண்டு பிரசுரத்தை படித்து பார்த்து சிரித்துக்கொண்டே பேச்சை முடித்து அறைக்கு வந்தவர் ..மீண்டும் அந்த துண்டை பிரித்து படித்து விட்டு சிரித்துக்கொண்டே சொன்னார் கருணாநிதியை தோற்கடிக்கமுடியாது.. எவ்வளவு தீர்க்கமான பார்வை. .. காமராஜர் பஸ் முதலாளிகளையும் மிராசுகளையும் வேட்பாளராக்கினார் .. சாமானியர்கள் சட்டமன்றத்திற்கு நுழைய திமுகதான் வழிசெய்தது.. தேர்தலில் பணம் என்ற சொல் காமராஜரின் பெருந்தொண்டில் ஒன்று .. அதே பார்மூலாவை 1967 ல் விருதுநகரில் தான் நின்றபோது வாக்கிற்கு ₹10 வழங்கியும் காமராஜரால் வெல்லமுடியவில்லை.. அதே காமராஜரை அண்டங்காக்கையை டெல்லியை விட்டே துரத்துகிறேன் என்றவர் ராஜாஜி .. அதன்பிறகுதான் அவரை கொல்ல முயற்சித்தார்கள்... அப்போதும் பெரியார்தான் துணைநின்றார்.. .. காமராஜர் சுயம்பல்ல.. சுயமாக சிந்தித்து நல்லதிட்டங்களை செயல்படுத்தியவரல்ல அவரை பின்னிருந்து இயக்கியது எங்கள் பேராசான் பெரியார் ..ஆம்.. அவரை பெரியார் உருவாக்கினார்.. இயக்கினார் அவ்வளவுதான் .. Aalanci Spm

Monday, December 18, 2017

குஜராத் தமிழகம்

குஜராத் சொல்லும் சேதி என்ன.. எந்தவொரு தோல்வியையும் உள்வாங்கி அதை ஏற்றால் மட்டுமே அடுத்து தோல்வியை தவிர்த்து வெற்றியாக்க முடியும்.. ஆரம்பம் முதலே காங்கிரஸ் .. முன்னிலை என்றதும் அரை மணி நேரத்தில் 30 மேற்பட்ட இடங்கள் மாறி பாஜக முன்னிலை என்பதில் சிறிய சூட்சமம் அடங்கியிருக்கிறது.. ஏன் மாறாதா என்றால் மாறலாம்.. ஆனால் மக்களின் நம்பிக்கை பொய்யாக்கும் இயந்திரத்தை கொண்டு எதுவும் செய்யலாம்.., ஆமதாபாத், சூரத், ராஜ் கோட் பகுதியில் 12 முதல் 15 தொகுதிகளில் 200, 400 , 800 வாக்கு வித்தியாசத்தில் பா. ஜ க வெற்றிபெற்றிருப்பதும் ..கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது... காங்கிரஸ் இதிலிருந்து நிறைய கற்கவேண்டியிருக்கிறது.. சிறிய அலட்சியம் கூட தவறான முடிவை தந்துவிடும்.. பிரதமரின் மாநிலம் என்றவுடன் அங்கு நடக்கிற இலைமறை வேலைகளை அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமல் விட்டதும்.. மத்தியில் ஆட்சியிலிருப்பதால் எதையும் செய்துவிட முடியுமென்ற பயம் அதிகாரிகளைபோலவே மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது..உள் குஜராத்தில் பாஜகவை போல வேலைசெய்ய காங்கிரஸில் ஆட்கள் இல்லை.. கோவி.லெனின் சொன்னதைப்போல காங்கிரஸுக்கு இளவரசர் கிடைத்தார் தளபதிகள் இல்லை.. காங்கிரஸ் இனி நாடாளுமன்ற தேர்தலை நோக்கிய பயணத்தை தொடரவேண்டும்..,அரசியலில் மந்தமான போக்கும் கடுமையான நேர்மையும் வெற்றியை இழக்க செய்யும் ..சிலநேரங்கள் சூது அரசியலுக்கு தேவை.. சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வதைப்போல எதிரியின் அஸ்திரத்தையும் அம்பாக்கும் வித்தை வேண்டும்.. மௌனமாய் காய் நகர்தல்.. எங்கெல்லாம் எதிரிகள் பிரிந்துகிடக்கிறார்கள் என அறிதல் நலம்.. பொது எதிரியை வீழித்த தற்காலிய ஏற்பாடுகள் மிக அவசியம்..சோர்ந்து கிடந்த காங்கிரஸை எழுப்பி விரட்டி ஓடவைத்திருக்கிறார்.. நீண்டநாள் உறக்கத்திலிருந்ததால்.. சோர்வு இருக்கும் ..அதையெல்லாம் கலைந்து குதிரையை வேகமாக ஓடவைத்திருப்பதிலே வெற்றிகண்டிருக்கிறார்.. 56 இன்ச் அழுத போதே ராகுலிடம் தோற்றிருந்தார்.. முதல் கட்ட வாக்குபதிவு நடந்த இடங்களில் காங்கிரஸ் அதிகம் இடம் வெற்றிபெற்றது இரண்டாம்கட்ட தேர்தலில் பாஜக .. இதிலிருந்தும் நாம் பாடம் கற்க வேண்டியிருக்கிறது..ஒரேகட்ட தேர்தல் ஆளும் வர்க்கத்தின் திருவிளையாடல்களை தடுக்க உதவும்.. எல்லாவற்றையும் மீறி நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்திற்கு தொடக்கம் குறித்திருக்கிறது.. நிச்சயமாக இது ராகுலுக்கு புதிய தொடக்கத்தை தரும்.. .. தமிழகத்தை போல குஜராத்தும் சிறிய வேறுபாட்டில் வெற்றியை இழந்திருக்கிறது.. மக்களின் எழுச்சியை வாக்குகளாக மாற்றும் வித்தையில் எங்கு தவறென்பதை கவனம் கொள்ளவேண்டும் இது குறிப்பாக திமுகவிற்கு சிறந்த பாடம் கடந்த தேர்தலில் கூட இருந்தே குழிபறித்த செயல்களை அங்காங்கே காணமுடிந்தது.. மாவட்டங்கள் சிற்றரசர்களை போல தங்களை நினைத்துக்கொள்வதை முதலில் விடுங்கள்.. இன்னமும் மமதையோடு இருப்பீர்களேயானால் .. வெற்றி எட்டாக்கனியாகிவிடும்.. எத்தனை இடையூறுகள்..வாக்குபதிவு இயந்திரம் அதிகளவு பணபழக்கம்.. ஆளும் அரசின் தலையீடு இவையெல்லாம் மீறி வெற்றி பெற கடும் உழைப்பு வேண்டும்.. விழுக்காடு கூடுதல் என்பதை இலக்காக நிர்ணயம் செய்து பணியாற்றவேண்டும்.. நெல்லை மாவட்ட செயலர் இருசக்கர வாகனத்துல் சணல் வாங்கி கொண்டுவருகிறார்.. மதுரை மாவட்டமே தெருவோரம் உண்டு களப்பணி ஆற்றுகிறது.. ஆம் மமதையைவிடுத்து கடைக்கோடி தொண்டனில் ஒருவன் நான் .. எனக்கு மாவட்ட பொறுப்பு வழங்கபட்டிருக்கிறதென்ற நினைப்போடு பண்யாற்றவேண்டும் .. ஒவ்வொரு மாவட்ட செயலரும் இப்போதிலிருந்தே மொத்த தொகுதிகளில் பகுதிக்கு மேல் வெற்றி என்ற இலக்கோடு செயல்படவேண்டும்.. வெற்றி வெகுஅருகில் என்பதை நினவில் கொள்க.. வென்றாலும் அது நம்மால்தான் .. தோற்றாலும் அது நம்மால் தான்.. #பிறர்தரவாரா. .. திமுக நம்பிக்கையை மட்டும் விதைத்துகொண்டே இருக்கவேண்டும்.. நிச்சயம் வெற்றி வந்தே தீரும்.. .. Aalanci Spm

Sunday, December 17, 2017

விடியுமா..

ஆறாயிரம்.. ஒரு தரம் இரண்டு தரம்.. தரம் பார்த்து வாக்களிக்கவேண்டியவர்கள். . தருவது பார்த்து வாக்களித்தால் என்னவாகும்.. இந்திய தேர்தல் ஆணையம் எத்தனை பார்வையாளர்களை நியமித்தால் எங்களுக்கென்ன நாங்கள் நினைத்ததை நடத்திகாட்டுவோம்.. பணம் கொடுக்க வந்தது அறிந்து பிடிக்கலாமென்று சூழ்ந்தவர்களை காவலர்கள் சுற்றி நின்று.. அதிமுகவினரை பத்திரமாய் ஓடவிட்டு .. தப்பிக்க வழிசெய்யும் காவல்துறை.. பாராட்டி பதக்கம் தரலாம்.. இதுவரை கண்டிராத தொகை.. ஒரு ஓட்டிற்கு இந்தியாவிலேயே அதிகம் விலைபேசபடுகிறது.. ஒரு தொகுதிக்காக ₹120 கோடி செலவு செய்வதென்பது என்னானாலும் பரவாயில்லை தினகரனை பின்னுக்கு தள்ளிவேண்டுமென ஆளும்கட்சியினர் முதல்வர் 25 அமைச்சர்கள் நேரடியாக களப்பணி ஆற்றுகிறார்கள்.. .. ஆர்.கே.நகரை சேர்ந்த நண்பர்.. அவர் தன்மகன் ஆஸ்திரேலியா அனுப்பி மருத்துவம் படிக்கவைக்கிறார்..அவரது வசதி எப்படியென்று ஊகித்துகொள்ளுங்கள் அவர் வீட்டில் எழு வாக்குகள்.. ₹42,000 வந்திருக்கிறது பையன் இருந்திருந்தா இன்னும் ஆறாயிரம் கூட கிடைத்திருக்கும் இதுதான் இன்றைய மக்களின் மனநிலை.. ஆரம்பங்களில் வெற்றிலையில் சத்தியம் வாங்கிகொண்டு இரண்டு ரூபாய் வாங்க தொடங்கியது இன்று ₹6000 தில் நிற்கிறது.. இது இனியும் கூடலாம்.. எங்கிருந்து ஆரம்பித்தது .. 1952 ல் வெற்றிபெற்று வந்த திமுக உறுப்பினர்கள் 15 பேரை வரும் தோற்கடித்து காட்டுகிறேன் என சவால் விட்டு .. அண்ணா உட்பட 14 பேரை தோற்கடித்தார் காமராஜர்.. காஞ்சியில் ₹5 தந்து திருப்பதி வெங்கடாஜலபதி மீது சத்தியம் வாங்கினார்கள் .. அண்ணா தோற்றார்.. கலைஞரை தோற்கடிக்க .. பரிசுத்த நாடார்.. நெய்சோறு போட்டு கூடவே ₹5 தந்தார்.. பாவம் பரிசுத்த நாடார் 2000 வாக்குகளில் தோற்றார்.. பணம் தந்தும் வாக்களிக்க மறுத்த தஞ்சை.. இன்னமும் திமிரோடு தான் நிற்கிறது.. காங்கிரஸ்காரர்கள் ..நிலகிழார்கள் (மிராசுதார்கள்-பண்ணையார்கள்) தங்களிடம் வேலைபார்க்கும் கூலிகளுக்கு இரண்டு ரூபாயும் சுடுசோறும் தந்து வாக்களிக்க வைத்ததெல்லாம் பழந்கதை.. அன்று தொடங்கியது இன்று உலகமே பிரம்பிக்கும் பணமழையில் ஒரு இடைத்தேர்தல் தொகுதி.. .. இந்த நிலையில் கடந்த கால தவறுகளை கலைந்து வாக்கிற்கு பணம் கொடுப்பதில்லை என்ற திமுகவின் முடிவை வரவேற்கவேண்டும்.. சிலர் திருமங்கலம் பார்முலா தான் என்கிறார்கள்.. அதற்கு முன்பே காமராஜரின் காஞ்சி பார்முலா இருக்கிறது..இருப்பினும் திமுகவின் கடந்தகால தவறுகளை நியாயபடுத்த வரவில்லை.. அதையெல்லாம் கடந்து இந்த சூழலிலும் நேர்மையாக தேர்தலை சந்திக்க வேண்டுமென்ற முடிவை வரவேற்போம்.. .. இறுதியாக 6k +10 k .. யென பொழிகிறதாம்.. ₹.k.நகராக மாறியிருக்கிறது.. இனி மக்கள் கைகளில்.. 1962.ல்பணம் பெற்றுகொண்டு அண்ணாவை தோற்கடித்த காஞ்சியைபோலவா.. பணம் தந்தாலும் அதை உதாசீனபடுத்தி கலைஞரை வெற்றிபெற செய்த #தஞ்சையை போலவா.. அதேபோல் விருதுநகரில் 1967 ல்.. ₹10 தந்தும் காமராஜரை தோற்கடித்தார்களே அதைபோலவா.. யார் நீங்கள் .. நீங்கள் யாரைப்போல என்று வாக்கெண்ணும் போது தெரிந்துவிடும். .. விடிவதும் விடியாததும் உங்கள் கைகளில்.. வாழ்த்துகள்.. .. Aalanci Spm

Saturday, December 16, 2017

₹. K. Nagar..

பகிரங்கமாக பணம் பட்டுவாடா.. தேர்தலை நிறுத்த அதிமுகவிற்கு வேறு வழி தெரியவில்லை எடப்பாடிக்கும் பன்னீருக்கும் தோல்விபயம் வந்துவிட்டது.. இரண்டாவது இடம் தினகரனுக்கென்பதையும் அதைவிட கட்சியின் அடிமட்ட தொண்டன் தினகரனை விரும்புவதை தேர்தல் பணியில் காண முடிந்ததை.. கட்சி நழுவி தினகரனிடம் சென்றுவிட்டால்... என்ன செய்வதென்பதற்காக பகிரங்கமாகவே பண விநுயோகத்தை அதிமுகவின் எம்பி பாலகங்கா வீட்டிலேயே தந்து.. அதை வெளியே வந்து தேர்தலை நிறுத்தினால் தான்.. ஆட்சியை தொடரமுடியுமென்பதால் .. எடப்பாடி அணி பணத்தை வாரி இறைக்கிறது.. .. தெரிந்தே தேர்தலை நிறுத்தும் செயல் இது .. இதுவரை தேர்தலுக்கு பணம் கொடுக்கும் போதெல்லாம் இடைதரகர்கள் அல்லது கடைமட்ட ஊழியர்களை வைத்து செய்தவர்கள் நேரடியாகவே விநியோகம் செய்கிறார்கள்.. நல்ல வளர்ச்சி.. என்ன அவ்வளவு பயம்..தினகரன் மீது.. வழக்கு சோதனை என தொடர்ந்து இடையூறு செய்தும் எல்லாவற்றையும் வழக்கையும் எதிர்க்கொள்ளலாம் என்கிற மனஉறுதியும்.. ஏறக்குறைய 30 ஆண்டுகள் ..வழக்கு,..,விசாரணை கைது சோதனை என்று நிறைய பார்த்து பழகியதால் .. எதுவாயினும் பார்த்துக்கொள்ளலாமென்ற தைரியமும் எதற்கும் இந்த திருநாட்டில் விலைநிர்ணயமுண்டு என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையும் தினகரனை செயல்பட வைத்திருக்கிறது.. ஆளும் கட்சி செய்யபோகும் தில்லுமுல்லுகள் முதலில் தினகரனுக்கு தகவலாக வந்துவிடுவதும் ..அதை தொடர்ந்து ஆளும்கட்சி நடத்துகிற பணபட்டுவாடா முதலில் செய்தியாக்கி ஜெயா டிவி வெளியிடுவதும் ஆளும்கட்சியை பதட்டமடைய செய்திருக்கிறது.. அதிமுகவின் மாவட்ட செயலர் தினகரன் அணியாகி போனதால் அங்கே வேலை செய்ய ஆளும்கட்சி ஆளில்லாமல் தவிக்கிறது.. .. வெளிப்படையாகவே நாங்கள் பணம் கொடுத்துதான் வாக்கை வாங்குவோம் என்கிற தைரியம் ஆளும்கட்சியாக இருப்பதால் காவல்துறை கண்டுக்கொள்ளாமல் இருப்பதும்.. ₹.k.நகரில் பணம் மழையாய் பொழிகிறது.. வாக்காளன் இருபுறமும் பணம் கொட்டுகிறது.. அங்கே குக்கரில் பணம் ..இங்கே அடையாள அட்டையை காட்டினாலே பணம்.. ஆசை மனிதனை விடாது வலியவந்து தருவதை வேண்டாமென்று வைக்க அவனால் முடியாது.. தேர்தல் நியாயமாக நடத்த அதுவும் ஒரு இடைத்தேர்தலை நடத்த முடியவில்லை.. எங்கே போகிறது.. இந்த நாடு.. இதையெல்லாம் தாண்டி வாக்கு இயந்திரம்..அதில் என்னென்ன தில்லுமுல்லோ.. வாக்களாளன் யாருக்கு வாக்களித்தேன் என நம்பிக்கையை அவனுக்கு ஏற்படுத்தவேண்டாமா .. தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவது ஜனநாயக விரோதம்.. இனியும் இந்த தேர்தலை நடத்துவேன் என்றால் முதலில் அதிமுக வேட்பாளரை ..வெளிப்படையாகவே பணம் தந்த பாலகங்கா எம்பியை கைது செய்திருக்கவேண்டாமா வரிசையில் நின்று பணம் பெற்றவர்கள் மீது வழக்கு தொடர்ந்திருக்கவேண்டாமா...? எல்லாவற்றிக்கும் மேலிட உத்தரவிற்காக காத்திருக்கும் ஆணயம் வேறுவேலை செய்யலாம்.. .. கடந்தகாலங்களில் நிறைய விமர்சனங்கள் இருந்தாலும் இந்த இடைத்தேர்தலை நேர்மையாக சந்திருக்கிறது திமுக .. அதற்காக அவர்களை பாராட்டலாம்.. போலி வாக்காளர்களை கண்டறிந்து அதை நீக்க வலியுறுத்தி தேர்தல் கமிஷன் அசையாதபோது உயர்நீதிமன்றம் போய் வெற்றிபெற்று நீக்கி.. நீதிமன்றம் பாராட்டியது ..இந்த தேர்தலை வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்டு தங்களின் நேர்மையே மக்களுக்கும் நாட்டுக்கும் உணர்த்திருக்கிறார்கள்.. .. பார்ப்போம் தேர்தல் நடக்குமா.. .. Aalanci Spm

Friday, December 15, 2017

திமுக

₹.k.nagar.. ஒரு இடைத்தேர்தல் இவ்வளவு முக்கியத்துவம் பெறுவதென்பது இப்போதுதான் .. ஆட்சியாளர்களை எடைபோடும் தேர்தல் என்பது போய் .. வெற்றிபெற்றே ஆகவேண்டுமென்பதற்காக விலைபேசும் நிலை வந்தது வெட்கபடவேண்டிய செயல்.. வாக்கிற்கு பணம் தருவதென்பது அப்போதெல்லாம் பண்ணையார்கள் சில ரூபாய்களை தந்து வெற்றியை தக்கவைத்த காலமுண்டு.. காமராஜர் ஆட்சியில் அண்ணாவை தோற்கடிக்க பணம் விநியோகம் செய்ததெல்லாம் பெரிய தாக்கத்தை தரவில்லை அப்போது எளியவர்களை மட்டுமே குறிவைத்து பண விநியோகம் நடக்கும் .. அதிலும் சில #கொள்கைமறவர்களை விலைபேசமுடியாது .. ஆனால் இப்போது எல்லாநிலை மக்களையும் விலைபேசும் நிலை.. அதைவிட மக்களே எதிர்பார்க்கும் அவலம்.. இது எதை நோக்கி போகிறதென்பதும் ஆபத்தான பாதையை உருவாக்கும் என்பதை எப்போது மக்கள் உணரபோகிறார்கள் ? .. .. யார் வெற்றி பெற வேண்டும்.. தினகரன் வெற்றி பெற வேண்டுமென மக்கள் விரும்புவதாகவும் ..தினகரன் வெற்றிபெற்றால் ஆட்சி கலையும் திமுக வெற்றிப்பெற்றால் ஆட்சி கலையாது ..இப்போதையை தேவை ஆட்சியை அகற்ற வேண்டும் ஆதலால் தினகரனை ஆதரிக்க வேண்டுமென செய்திகள் உலவுகிறது.. ஆரம்பம் முதலே சிலர் தினகரனை தூக்கிபிடிப்பதற்கான காரணம்.. துரோகத்தால் வளைந்து நிற்கும் பன்னீர் பழநிசாமியை.. பதவி ஏற்கிறவரை கள்ளமௌனம் காத்து பதவி வந்தவுடன் மோடியின் கையை பிடித்து தலை கவிழ்ந்து நின்ற கேவல பிறவியை இருக்குமிடம் தெரியாமல் செய்யவேண்டுமென்ற கருத்திலோ.. பதவி இருக்கிறவரை புகழ்ப்பாடி விட்டு பதவியிலிருந்து தூக்கியெறிந்துவுடன் தரம்யுத்தம் செய்ய அயோக்கியரை விரட்டவேண்டுமென்பதற்காக தான் ..ஆனால் தினகரனை தூக்கி நிறுத்தினால்/ஆதரித்தால் அவரும் மோடியின் கால்களில் விழுந்து கிடக்கும் அரியகாட்சிகளை மக்கள் பார்க்க நேரிடும்.. அதோடு இன்னும் அங்கிருக்கிற 21 ஸிலிப்பர்கள் என்ன செய்கிறார்கள்.. அவர்கள் கடைசிவரை நித்திரை கலைய மாட்டார்கள் ..அதனால் தினகரனை துணைக்கவேண்டுமென்பது வீண்.. .. ஏன் அதிமுகவை எதிர்க்கவேண்டுமென்பதற்கு இவர்கள் ஆளும் லட்சணமும்.. இவர்களை மீறி யாராரோ அரசில் .. அதன் ஆட்சி அதிகாரத்தில் தலையிடுகிறார்கள்.. கவர்னர் நேரடி ஆய்வு என அதிகாரத்தை கையிலெடுத்து அதிமுகவின் ஆள்பவர்கள் கையாளாகாதவர்கள் என வெளிப்படையாகவே அறிவித்து செயல்படுவதை தடுப்பதும்.. மிக அவசியம் அதற்கு பிரதான எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் தங்கள் எதிர்ப்பை மிக கடுமையாக காட்டவேண்டும்.. அது .. அடுத்தகட்ட நகர்விற்கு வழிவகுக்கும்.. இந்த ஆட்சியை கலைத்து ..பொதுதேர்தலை நடத்த திமுகவின் வெற்றி பாதை வகுத்து தரும்.. இன்றைய காலகட்டத்தில் திமுகவை தவிர்த்து பிற அரசியல்கட்சிகளின் செயல்பாடு அவ்வளவு திருப்திகரமாகவோ அல்லது மக்களின் ஆதரவு பெற்றதாகவோ இல்லை .. .. திமுக தவிர்க்க முடியாத சக்தி.. இன்றைய தேவையும் கூட அதனை வாக்கை திமுகவிற்கே வழங்கி வெற்றிப்பெற செய்து அவசியம்.. பொறுத்திருப்போம்.. .. Aalanci Spm

நீ..யார்..

யார் நீ என்றார்.. நான்தானென்றேன்.. நீயென்றால்.. எதில் நீ...யென்றார்.. .. எதிலும் நீ இல்லை பின் எதற்கு.. நான் தான் என்கிறார்.. அப்பனின் இச்சையால் அகிலம் கண்டாய் அகிலம் கண்டதால்.. நீ.. நீயென்கிறாய்.. வந்து விழந்த பிண்டம் அவ்வளவுதான்.. நீ.. .. நீ.. நீயாக ஏதேனும் செய் அடுத்தவரின் வலியை உணர் அதிகம் பேசாதே செவிமடு.. அனாதைகள் மீது அக்கறை கொள் அளவோடு புசி அன்பு செலுத்து வறியவர் மீது இரக்கம் காட்டு எல்லாம் எனதென்பதை விடு உனக்கானதை தவிர எல்லாம் உனக்கானதல்ல பிறருக்கு சேர்த்தே உன்னிடம் தரப்பட்டிருக்கிறது .. .. தாய் மொழியை நேசி இன உணர்வு கொள் எதிரியை எதிர்கொள்ளும் வல்லமை கொள்.. அநீதி கண்டு அடங்க மறு.. சொல்லி அடி.. மறந்தும் பலீனமானவனோடு மோதாதே.. பலமற்றவனோடு அடங்கிப்போ.. மமதையை அழி.. .. சுற்றியிருப்பவரோடு சேர்ந்து சிரி.. எறும்புக்கும் உணவிடு.. வந்து வாழ்ந்ததற்கான எச்சத்தை வை.. எல்லாமிருந்தும் இல்லாததுபோல் இரு.. .. எல்லாம் படி அறிவோடு சேர் ஆணவம் தவிர்.. அப்புறம் வா.. நீ..யாரென.. நான் சொல்கிறேன்... நானென்ன.. ஊர் சொல்லும்.. நீ..தான் நீயென்று.. அதுவரை.. நீ.. நீயில்லை .. Aalanci

Thursday, December 14, 2017

முகவரி..

.. #முகவரி..சொல் என்றாய்.. .. எது முகவரி என்றேன்.. வாழுமிடமென்றார்.. நான் #வழிப்போக்கன்.. .. வந்தது தெரியும்.. வந்ததற்கான காரணமறியேன்.. வந்ததால்.. முகவரி...சரியென்றால்.. தெருவோரம் குப்பையில் கிடக்கும் மானிடனின்.. முகவரி என்ன.. யாருமறியா வேளையில்.. முளைத்த செடி .. மண்ணில் வெளிவந்தது யார் பாவம் .. படர ..முடியாமல்.. பரிதவித்து .. பிச்சை பாத்திரம்.. கையிலேந்தும்.. நிலையில் .. எங்கே.. யாரிடம் கேட்பது.. முகவரி... எது முகவரி.. எங்கு பிறந்தேன்.. எப்போது... எந்நிலையில்.. எல்லாம் சரி.. இதுதான்.. முகவரியெனில்.. ஏதுமில்லா .. மானிடனை... என்னவென்றழைப்பது.. முகவரியில்லாதவன்.. என்றா...அல்லது முகமே இல்லாதவரென்றா.. முகவரி.. இங்கே.. யாருக்குமில்லை.. வந்தாய்.. வந்ததால் முகவரியில்லை.. உன் வழிப்பயணத்தில்.. உன்... வாழ்வின் பயணத்தில் .. சிலநிமிடம்.. சில மணித்துளிகள்.. சில நாட்கள்.. கடந்து போக. முகவரியெதற்கு.. நிரந்தமானவனுக்கே.. முகவரி வேண்டும்.. நீ .. நிரந்தரமில்லாதவன்.. நிலையில்லாதவன்.. உன் வாழ்வு.. நீர்குமிழியை..போன்றது .. உனக்கெதற்கு முகவரி.. முகவரி... தெரியவேண்டுமெனில்.. உன் முகம் தெரியவேண்டும்.. முகம் தெரியவேண்டுமெனில்.. முதலில்..நீ... மானுடம் பழகு.. மனிதனை..நேசி பக்கத்தில் நிற்பவனை.. பரிவோடு..பார்.. பசியறி.. பாசம் பழகு.. இல்லாதவனுக்கு ஈகு .. முடிந்தவரை நாவடக்கு.. நல்லதை நினை.. உன்னை.. ஊரறியும்.. ஊரறிந்தால்.. நாடரறியும்.. நாடரறிந்தால்.. மக்கள் அறிவர்.. .. மக்களறிந்தால்.. உன் முகவரி.. உலகறியும்.. அந்த முகவரி.. நிலைத்திருக்கும். .. #முகவரி_தேடு .. நான் முகமே இல்லாதவன் எனக்கெதற்கு முகவரி.. .. Aalanci Spm

Wednesday, December 13, 2017

கனிமொழி..

இரு தினங்களாக திமுக பொருளாளர் பதவிக்கு ஊடகங்கள் கவிஞர் கனிமொழியை பரிந்துரைக்கின்றன.. தினமலர் தான் முதலில் செய்தி வெளியிட்டது பேராசிரியர் தளபதியை அழைத்து கனிமொழிக்கு பதவி தர சொன்னதாகவும் தளபதி மறுத்ததாகவும் செய்தி வெளியிட்டு திமுகவை களங்கபடுத்தும் ..,அல்லது சிதைக்க துடிக்கும் தங்களின் தீராத ஆசையை வெளிகாட்டியது.. சில நண்பர்கள் (திமுகவினர்) எதிர்த்தும் ஆதரித்தும் கருத்திட்டிருந்தனர்.. பாசிச வர்க்கம் சரியான நேரத்தில் சரியான அம்பை எய்திருக்கிறது..ஆனால் பாருங்கள் முனை மழுங்கிய அம்பென்பது அவாள்களுக்கு தெரியாமல் போனது.. .. இப்போதைய தேவை திமுக அதிகாரத்தில் வரவேண்டுமென்பதே தவிர கட்சி பதவிகளில் யாரை நியமிப்பது அல்லது தேர்ந்தெடுப்பது என்பதல்ல. ஆரம்பம் முதலே சொல்லி வருவதுதான் காலம் சரியான தலைவனை அடையாளம் காட்டுமென்ற கலைஞரின் கூற்று உண்மையாகும் வேளை இது.. ஆம்.. எதற்காக வைகோ திமுகவிலிருந்து வெளியேறினாரோ அவரே திமுகவின் எதிர்காலம் தளபதிதான் என்றும் விரைவில் தமிழக முதல்வர் தளபதி.ஸ்டாலின் என விளிக்கிற காலம் விரைவில் வருமென்று கூறுகிறார்.. தமிழகத்தில் ஸ்டாலினை விட்டால் வேறுவழியில்லையென காங்கிரஸ் தலைவர் திருநாவுகரசர் சொல்கிறார்.. இது தொடக்கம் ..ஏறக்குறைய எல்லாகட்சிகளுமே ஸ்டாலின் தவிர்க்கமுடியாத சக்தியென அறிந்து பேச தொடங்கியிருக்க வேளையில் வழக்கம்போல் பார்பன ஏடு பகை மூட்ட பார்க்கிறது.. .. சரி பொருளாளர் பதவிக்கு தகுதியானவரா என கேட்டால் மறுப்பேதும் சொல்லாமல் ஆம் என தலையாட்டுவேன் ஆனால் அவருக்கு தரவேண்டுமா என்றால் நிச்சயமாக தவிர்க்கவேண்டுமென்பேன்.. என்ன காரணம்.. திமுகவில் தளபதி.ஸ்டாலின் வளர்ச்சியும் தொண்டும் சேவையும் நீண்ட நெடிய வரலாறு கொண்டது.. படிபடியாக உயர்ந்து செயல்தலைவராக வந்திருக்கிறார்.. அவரை எதிராளிகள் கூட ஏற்கிறார்கள்.. காரணம் திமுகவின் அடிப்படை தொண்டனின் உணர்வுகளை தாங்கி நிற்கிறார் ஒரே இரவில் சட்டென்று மந்திரியாகிவிடவில்லை.. திரு.மு.க.அழகரியை எப்படி திமுக ஏற்கவில்லையோ அதே அளவுகோலைதான் கனிமொழி விடயத்திலும் காணவேண்டியிருக்கிறது.. என்ன வேறுபாடு கனிமொழி திறமையானவர் ..அவ்வளவுதான்.. இன்னமும் காலமிருக்கிறது... .. அதோ மட்டுமல்லாது கனிமொழியை முன்னெடுக்க வேண்டிய அவசரமோ அவசியமோ தற்போதில்லை.. இதன் பின்னில் சில சாதீய வேலைகள் நடப்பது எல்லோரும் அறிந்தது தான் சாதீய மறுப்பாளரான கனிமொழியை சாதீய கூட்டுக்குள் அடைக்க விரும்பியதில் அவரது தாயாரின் பங்கு அளப்பரியது.. அப்போதே சென்னை முழுவதும் சுவரொட்டிகளை சாட்சியம் சொல்லியது..இன்றைக்கு கூட சில சாதிவெறிபிடித்தவர்கள் அவரை உயர்த்திபிடிக்க நினைக்கிறார்கள்.. அது அத்தனை சுககரமானதில்லை என்பதை கனிமொழியே அறிவார்.. .. மிக முக்கியமாக தருணமிது காத்திருக்கிறார்கள் எதிரிகள் இவ்வேளையில் சில சாதியர்களின் துணைக்கொண்டு நம்முள் பிரிவினையை தருவது அவர்களுக்கு பலம் சேர்க்கும் தற்காலிகமானதெனினும் வலுவிலக்க செய்வது அவர்களுக்கு பலனை தரும்.. நீண்டநாள் நிலைக்காது காரணம் திமுக தோல்விகளெல்லாம் அவசரத்திலும் அறியாமையிலும் அன்றைய பொழுதில் தோன்றும் எண்ணத்திலும் வந்ததே தவிர அதன் பிறகு உணரும் போது தவறாகிப்போனதை அறிவோம்.. திமுகவின் தோல்விகள் யாருக்கெல்லாம் பயன்படுகிறதென்பதை காலம் உணர்த்தியிருக்கிறது.. கனிமொழியே அறிவார் திரு.ஸ்டாலின் தலைமை மட்டுமே இந்த இயக்கத்திற்கு வலுசேர்க்குமென்பதை.. வீணாக ஆசைகள் வளர்த்துகொள்வது அவருக்கே வினையாகிப்போகும்.. அழகிரியைப்போல.. இடம் தெரியாமல் போவார்.. .. #காத்திருப்பது_நலம்.. .. Aalanci Spm

Tuesday, December 12, 2017

சாதி மத வெறியர்கள்...

சாதி.. இதன் கட்டமைப்பிற்குள் இருக்கும் குரோத அரசியலை நாம் அதிகம் யோசிப்பதில்லை.. இதன் பின்னில் நின்றாடும் பார்பனத்தின் துவேசத்தை நாம் அதிகம் கவனிப்பதில்லை.. சாதிய நிலைபாடே வேரறுக்கப்படவேண்டும் என்பதில் பெரியார் காட்டிய முனைப்பை அவரின் வழிதோன்றல்கள் சரியாக முன்னெடுக்காததும்... வாக்கு அரசியலுக்காக அதில் தூபம் போட்டதும் சாதிவெறியர்கள் சங்கங்களை கலைத்துவிட்டு நேரடி அரசியலில் ஈடுபட்டவர்களை ஆதரித்து வளர்த்துவிட்டதும்..இன்றைய அவலங்களுக்கு காரணம்.. இதில் திமுக உட்பட திராவிட கட்சிகளின் பங்கை நான் மறைக்கவோ மறுக்கவோ முயலவில்லை... .. எங்கு தடுக்கிவிழுந்தது என்பதை நாம் கவனிக்க தவறியபோது .. ஆரியம் சரியாக காய் நகர்த்தி மக்கள் மனதில் ஆண்டபரம்பரை என்கிற விஷ எண்ணத்தை விதைத்தது.. அது அந்தந்த வட்டாரங்களில் தங்கள் சமூகமக்களை மூளைச்சலவைக்கு உட்படுத்தி ஒருவித போதையோடே இருக்க செய்தார்கள்.. தர்மபுரி இளவரசனாகட்டும் உடுமலைப்பேட்டை சங்கராகட்டும் ..வெளியில் வராத கௌரவம் பேசும் கொலைகள் நடந்துக்கொண்டிருக்கின்றன.. இந்த தீர்ப்பு .. சாதி பேசி திரியும் மருத்துவர் வகையறாக்களுக்கும்..அவரோடு சேர்ந்து சமுதாயமென்ற பெயரில் அராஜகம் செய்வோருக்கும் ஒருபடிப்பினை.. தந்தையென்றும் பாராது ஒரு கொலைக்கெதிராக .. அது பட்டபகலில் நடுரோட்டில் மரத்தை வெட்டி சாய்ப்பதைப்போல வெட்டி வீழ்த்தியவர்களுக்கு எதிராக உறுதியோடு போராடி இருக்கிறார்.. தன் தாயென்றும் பாராது அவரின் விடுதலை எதிர்ப்பேன் என்கிற மகளின் வேதனையை நம்மால் உணரமுடிகிறது.. .. தண்டனை கிடைத்த எட்டுபேரும் உணர்ச்சிவயப்பட்டு செய்துவிட்டோம் எங்களுக்கு குறைந்தபட்ச தண்டனையை தரவேண்டுமென்றது ..இவர்களின் சாதிவெறி என்பதெல்லாம் யாரோ சிலரின் தூண்டுதலால்.. சிலரின் பதவி அரிப்பிற்காக தூண்டிவிட்டு குளிர்காய்கிறார்கள் என்பது தெரிகிறது.. மீசையை முறுக்கி ..எப்படியும் தப்பித்துவிடலாமென்று நினைத்து சாதி சங்கமும் உறவின்முறையும் வருவார்களென நம்புகிறவர்களுக்கு இது ஒரு பாடம்.. சாதிவெறி மனித குலத்திற்கு எதிரானது என்பதை புரிய வேண்டும் .. இந்த சூழலில் கூட மரணதண்டனைக்கு எதிராகதான் பேசவேண்டும்.. வாழ்நாள் வரை சிறையிலேயே இருக்கசெய்யலாம்.. மனித உயிரை எடுக்க நாம் யார்.. மரணதண்டனை நாகரீக சமூகத்தில் தேவையில்லாதது.. தண்டனை கடுமையாக வேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை.. ஆனாலும் தூக்கிற்கெதிராக இப்போதும் பேசுவோம்.. .. தூக்கிற்கெதிராக இருந்தாலும் இந்த காட்டுமிராண்டிகள் தண்டிக்கபட்டதில் மகிழ்ச்சி.. .. இதே போல் பாரூக்கை கழுத்தறுத்து கொன்ற மதவெறிகளுக்கு தண்டனை கிடைக்கவேண்டும்.. அப்போதுதான் மதத்தை சாதியை முன்னிறுத்துவோருக்கு அச்சம் வரும்.. மதத்தையும் சாதியையும் உங்கள் வீட்டிலேயே வைத்துக்கொள்ளுங்கள்..அதுதான் நல்லது.. .. #சாதிமதவெறியை_விரட்டுவோம் .. Aalanci Spm

Monday, December 11, 2017

எம்.எஸ்...

மதுரை சண்முகவடிவு சுப்புலெட்சுமி.. இப்படி சொன்னால் சிலருக்கு புரியாது எம்.எஸ்.சுப்புலெட்சுமி என்றால் எல்லோருக்கும் தெரியும்.. ஒடுக்கபட்ட சமூகத்திலிருந்து வந்து தன் இனிமையான குரலால் யாருமே தொடமுடியாத உச்சத்தை தொட்டவர்.. ஆனால் அவரின் இளமைகாலம் அவ்வளவு சுககரமாக இல்லை.. தேவதாசி குலத்தில் பிறந்தவர்.. அக்குலத்தில் பிறந்தவர்கள் கோவிலுக்கி நேர்ந்துவிட்டவர்களாக.. கோவில் அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களுக்கு வலதுகரத்திற்கு சொந்தமானவர்களாக இருப்பார்கள்.. அதனால் அவர்கள் தங்களின் தந்தையின் பெயரை இன்ஷியலாக போட மாட்டார்கள்.. அந்த ஒடுக்கபட்ட பிரிவினருக்காக தான் முத்துலெட்சுமி ரெட்டியார் போராடினார்.. திரு.சத்யமூர்த்தியிடமே எங்கள் வீட்டு பெண்கள் தெய்வதொண்டு செய்தது போதும் இனி உங்கள் வீட்டுப்பெண்கள் தெய்வத்தொண்டை செய்ய வேண்டியதுதானே .. பெரியாரின் சொல்லை கேட்டு சட்டமன்றத்திலேயே முழங்கிய தேவதாசி ஒழிப்பை கொண்டுவந்தார்.. .. சரி விடயத்திற்கு வருவோம்.. இசைமேதை தன் குரலால் மக்களை மகிழ்வித்த எம்.எஸ் அவர்கள் தன் இளமைகாலங்களில் தன் தாய் சண்முகவடிவின் நிழலில் வளர்ந்தாலும்.. அவரை கண்காணிக்க சதாசிவ அய்யரை நியமித்தார் அவரது தந்தையென அறியபட்ட சுப்ரமணியன்.. சதாசிவத்தின் அதிகாரம் அளவிற்கு மீறிய போது சதாசிவத்தை வேண்டாமென சொல்லிவிட்டார்.. சதாசிவமோ அவரை திருமணம் செய்வதாக சொல்லி சுப்புலெட்சுமியை மணந்தார்.. அந்த காலகட்டத்தில் இசையில் பிராமண பெண்களே ஆதிக்கம் செலுத்தினார்கள்.. திருவனந்தபுரம் எம்.எல். வசந்தகுமாரி.. காஞ்சி பட்டம்மாளும் எம்.எஸ் ஸூம் மும்மூர்த்திகளென சொல்லபட்டாலும் எவருமே சுப்புலெட்சுமி அளவிற்கு குரல்வளமோ இசைஞானமோ இல்லை.. பெயரும் புகழும் வந்த போது சதாவின் ஆதிக்கம் அதிகமாகி தமிழில் பாடகூடாதென்றெல்லாம் உத்தரவிட்டதும் அதை அப்படியே ஏற்று தமிழில் பாடமாட்டேன் என்றதெல்லாம் வரலாறானது.. .. காற்றினிலே வரும் கீதம் என பாடி புகழ்பெற்றவர்..தமிழில் பாட மறுத்தார்.. ஆனந்தவிகடனிலிருந்து கல்கி வெளியேற்றபட்டபோது .. ஒரு காசு கூட தரமுடியாதென வாசன் சொல்லிவிட்டார்.. அப்போதுதான் கல்கியோடு சேர்ந்து சதாசிவம் பத்திரிக்கை ஆரம்பிக்கலாமென முடிவெடுத்தார்கள் அதற்கு பணம் தேவைபட்டது .. விருப்பமே இல்லாதவரை வற்புறுத்தி சாவித்திரி படத்தில் நாரதராக நடிக்க மறுத்தவரை.. நடிக்கவைத்தார் சதாசிவம் அதில் வந்த பணத்தை கொண்டுதான் கல்கி தொடங்கபட்டது. தன் வாழ்நாள் முழுவதும் ஒரு அடக்குமுறைக்குள்ளே வாழ்ந்த மறைந்தவர்.. அவரே விரும்பி போட்டுக்கொண்ட விலங்கு என பேராசிரியர் சிவபாலன் சொல்வார்.. அந்த இசைமாமேதையின் நினைவுநாள் இன்று 11 டிசம்பர்2004ல் மறைந்தார்.. .. குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என பாடியவர் குறைகளையும் கடந்து இசைவானில் ஜொலித்தார்.. இசை உலகம் என்றும் நினைவு கொள்ளும்.. .. Aalanci Spm

மோடி நாடகம்

குஜராத்... தேர்தல் வெற்றியையும் தோல்வியையும் நிதானமாக எதிர்கொள்ளவேண்டும் அழுகையும், பிதற்றலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டும் பக்கத்து நாட்டின் ஊடுறுவல் என்பதெலெலாம் இந்த நாட்டின் பிரதமருக்கு இது அழகல்ல... சிறுப்பிள்ளைத்தனம்.. .. குஜராத் மாடலென பிற மாநில தேர்தலில் கம்பு சுத்தியவர்கள் குஜராத் ஏன் அதை பேசவில்லை.. செய்திருக்கிற சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கவேண்டியதுதானே... பாலாறும் தேனாறும்,ஓடுவதாக மற்ற மாநில தேர்தல்களில் பேசி திரியும் நடுநிலைகள் இவ்வளவு பதறுகிறாரே ஏன் என்று எழுதவோ பேசவோ மறுப்பதேன்.. குஜராத்தில் கல்வி எத்தனை விழுக்காடு மக்கள் பெற்றிருக்கிறார்கள்..எத்தனை கிராமங்கள் இன்னமும் மின்வசதி பெறவில்லை.. வணிக நகரங்களும் தலைநகரும் மட்டுமே ஒட்டுமொத்த மாநிலத்தை பிரதிபலிக்குமா.. 21 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த பாஜக .. எதை சொல்லி வாக்கு கேட்கவேண்டும் தாங்கள் குஜராத்தை முன்மாதிரியாக கொண்டு சென்றிருக்கிறோம் .. எனவே எங்களுக்கு வாக்களியுங்கள் என கேட்பதை விடுத்து.. என்னை கொல்ல சதி.. பாகிஸ்தானோடு சேர்ந்து சதிதிட்டம் தீட்டினார் மணிசங்கர் அய்யரென சொல்வது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல்.ய ஒட்டுமொத்த புலனாய்வு அமைப்பும் தன் கட்டுபாட்டில் வைத்திருப்பவர்.. ஏன் காங்கிரஸ் மீதோ அல்லது மணி அய்யர் மீதோ வழக்கு தொடரவில்லை.. குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் ஊடுறுவல் என்ற குற்றசாட்டிற்கு உங்கள் தேர்தல் சண்டையில் எங்களை வம்பிழுக்காதீரென அந்த நாடு சொல்கிறது எத்தனை கேவலம்.. எல்லாம் கைவிட்டு போகும் சூழல் வந்தவுடன் அகமது படேலை முதல்வராக்க காங்கிரஸ் முயற்சிக்கிறதென மதசாயம் பூசி... கடைசியில் மஜ்ஸித்தா மந்திரா.. கோவில் வேண்டுமா பள்ளிவாசல் வேண்டுமா என பிரதமரே அதுவும் பொதுவெளியில் சொல்வது வெட்கி தலைகுனிய வேண்டும்.. நான் ஏழை தாழ்த்தபட்டவன் அதனால் எதிர்க்கிறார்கள் என்கிற மோடி ஆளும் போதுதான் தாழ்த்தபட்டவர்கள் அம்மணமாக அடித்து துன்பறுத்துவது நிகழ்கிறது.. .. இந்தியா கண்ட பிரதமர்களில் இவ்வளவு மோசமான .. எதையும் தாங்க வலுவில்லாத தோல்வி வந்தால் அதை எதிர்கொள்ள பயந்து அழுது நிற்கிற பிரதமரை நாடு கண்டதில்லை.. மாநிலத்திற்கு நல்லது செய்திருந்தால் மக்கள் வாக்களிக்க போகிறார்கள் அதைவிடுத்து தோல்வி பயத்தில் ப்ளுதூத் வைத்து மாற்ற முயற்சிக்கும் செயல் ஒன்றே இவர்களின் தோல்வி பயத்தை காட்டியிருக்கிறது.. .. ஒரு பிரதமர் ஒரு மாநில தேர்தலுக்காக எல்லாவற்றையும் மறந்து தெரு தெருவாக அலைவது .. மிகப்பெரிய தோல்வி.. வெற்றி பெற்றே தீரவேண்டுமென்பதற்காக எந்தநிலைக்கும் போவேனென நினைக்கிறார்.. அது பிரதமர் பதவிக்கு அழகல்ல.. மூன்றாம் தர அரசியல்வாி்களை போல கண்கசக்கி .. சிம்பதியை உண்டாக்கி மக்களை சலவை செய்யாமென்ற உக்தி படுகேவலம்.. .. பிஜேபி-யினரே மோடியின் பொய்களை ரசிக்கவில்லை என்பதற்கு சத்ருகன் சின்ஹா எம்.பி..கருத்தே போதும்.. மதிப்பிற்குரிய ஐயா! தேர்தலில் எப்படியாவது வெற்றியை பெற்றுவிட வேண்டும், தேர்தல் அரசியலில் வெற்றிதான் இறுதியானது, அதற்காக ஆதாரமற்ற மற்றும் நம்பமுடியாத கதைகளை சொல்லவேண்டுமா.. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் மற்றும் குஜராத் வளர்ச்சி மாடலை வைத்து பிரசாரம் மேற்கொள்ளலாமே. .. மதவாத அரசியலை நிறுத்திவிட்டு ஆரோக்கியமான அரசியலுக்கு செல்லலாம். என்கிறார்.. எவ்வளவு நிதர்சனம்.. .. #மோடி_அரசியல்_பெரும்தலைகுனிவு.. .. Aalanci Spm

Sunday, December 10, 2017

சமணர்கள்..ஆரியர்கள்

ஐம்பெரும் காப்பியங்கள்.. சிலப்பதிகாரம்.. மணிமேகலை சீவகசிந்தாமணி.. வளையாபதி குண்டலகேசி .. சிலப்பதிகாரமும் சீவக சிந்தாமணி வளையாபதி சமணர்கள் காப்பியம்/வாழ்வியல் .. மணிமேகலை குண்டலகேசி பௌத்தவ காப்பியம்.. .. சிலப்பதிகாரம் இரண்டாம் நூற்றாண்டில் எழுதபட்டது.. சங்கம் மருவிய காலத்தில் எழுதபட்டது குண்டலகேசி ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதபட்டதாக சொல்லபடுகிறது.. தமிழ் மண்ணில் சமணமும் பௌத்தமும் மட்டுமே நிலைபெற்றிருந்ததை இந்த ஐம்பெரும் காப்பியங்கள் நமக்கு உணர்த்தும்.. திருத்தக்க தேவர் என்ற சமணப் புலவர் இயற்றியுள்ள 'சீவக சிந்தாமணி', தமிழ் இலக்கியத்திலுள்ள மகா காவியங்களுள் ஐம்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. .. சிலப்பதிகாரம் மணிமேகலை பெரியபுராணம் மட்டுமே தமிழ் களத்தை மைய்யமாக கொண்டு எழுதபட்டது மற்றவைகள் பிற ஆதிக்கத்தை நமக்கு உணர்த்துவதாக அமைந்தது மணிமேகலையும் குண்டலகேசியும்.. பௌத்தனத்தை தழுவியதால் அது பௌத்தத்தை பேசியதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.. .. சமணர்களையும் பௌத்தவர்களையும் கொன்று கழுவேற்றிதான் பிராமண மதம் இங்கே காலூன்றியது .. பௌத்த விகாரங்களை அழித்தும் சமணர்களின் கோவில்களை இடித்தும் தான் இங்கே கோவில் வந்ததென்பதை அறிவுசார்ந்த ஆய்வுகளோடுதான் திருமா பேசியிருக்கிறார்.. அதனால்தான் பார்பனர்கள் பதறுகிறார்கள்.. தீக்குளிப்பேன் என்றெல்லாம் பேசுகிறார்கள்.. இங்கே யாரும் இந்து மத கோவில்களை இடிக்க சொல்லவில்லை மாறாக திருமா.. கோவிலை இடித்து மசூதி வந்ததாக சொல்லி ராமர் கோவில் கட்டவேண்டுமென்கிறீர்களே அதைப்போல் சமணர்கள் வழிபாட்டுதலம் குகைகள் கோவில்களாக உருமாறியிருக்கிறதே .. உச்சிபிள்ளையார் கோவில் ஸ்ரீரங்கம் காஞ்சி திருப்பதியென.. அதையெல்லாம் என்ன செய்வதென்று கேட்டார்.. ஆம்.. ஏழாம் நூற்றாண்டில் சமணர்கள் ஒட்டுமொத்தமாக 8000 மேற்பட்டவர்கள் கழுவேற்றினார்கள் சமணர்களையும் பௌத்தவர்களை வீழ்த்தி இங்கே ஆரியர்கள் காலூன்றினார்கள் அரசர்களின் கையிலாக்கி ஆரியர்கள் தங்களின் மதத்தை இங்கே வேகமாக பரப்பினார்கள் இதுதானே வரலாறு .. மன்னர்கள் சமணத்தை துறந்து சைவ மதத்தை பின்பற்றி போதுதான் இங்கே சைவ வைணவ கோவில்கள் வந்தது இன்றைக்கு சில கோவில்களில் சமணபடுக்கைகளை காணலாம்.. தமிழனுக்கு ஏன் இந்திய துணைகண்டத்திலேயே ஆரிய மதம் வந்துதானே தவிர அதன் பூர்வீகம் இந்த பூமியல்ல .. திருமாவின் தலைக்கு 1 கோடி விலைபேசுகிறார்கள்.. பாவம் களம் தெரியாமல் இங்கே வேறுவிதமாக எதிர்வினை வரும்.. இருக்குமிடம் தெரியாமல் போவீர்கள்.. திருமாவின் பேச்சின் ஒளிந்துகிடக்கிற உண்மைகள் தமிழர்களுக்கு தெரிய நல் வாய்ப்பாக அமைந்திருக்கிறது.. எதிராளிகளில் பதற்றமும் உளறலும்.. .. தமிழனுக்கு மதம் என்பதே ஆரியர் வரவிற்கு பிறகும் பின்.. தொடர்ந்து வந்த மொகலாய ஆங்கிலேயர் வரவிற்கு பிறகே தவிர.. அதற்கு முன்பில்லை சமண சமயத்தையும் தொடர்ந்து பௌத்தமுமே அவனை முதலில் ஆட்கொண்டது .. இப்போது கூட காஞ்சியிலும்.. மாமல்லபுரத்திலும் நிறைய சமண வரலாற்று சுவடுகளை காணலாம். சமணத்தை அழித்து சைவமும் வைணவமும் வளர்ந்தது.. சமணசமயத்தை வளர்த்த அரசர்கள் பின் மாறி ஆரியமதத்திற்கு வந்ததாகவும் அதன்பிறகு கோவில்கள் அதிகளவில் வைணவத்தை பறைசாற்றியதாக வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள்.. இல்லை அது புனைவென்றும் ஒட்டுமொத்தமாக சைவ மதத்தை மாற மன்னர் பணித்ததை மறுத்ததால் கழுவேற்றம் நடந்ததாக சொல்லபடுகிறது.. இதிலிருந்தே சமணமே இங்கே நிலைத்திருந்தது என்பதும் ஆரிய மதமான வைணவமும் சைவமும் வந்தேறிய மதங்களென்றும் உறுதியாகிறது.. .. அதைதான் திருமா மிக தெளிவாக சொன்னதும் பார்பனர்கள் பதறுகிறார்கள். இது அறிவுசார் பூமி இங்கே அவர்களின் எண்ணங்கள் ஈடேறாது.. வரலாற்றை பேச ஆரம்பித்தால் விரட்டியடிக்கும் நிலை வரும்.. எச்.ராசா தீக்குளிப்பை இந்த நாடு இவ்வளவு ஆவலாக எதிர்பார்பதிலிருந்தே இந்த கெட்டஎண்ணம் கொண்டவர்கள் சாதி மோதலை உருவாக்க பார்ப்பது தெரிகிறது.. அவர்கள் எண்ணம் ஈடேறாது.. .. #சமணம்_நெறிமுறைவாழ்வியல்… .. Aalanci Spm

Saturday, December 9, 2017

தரம்தாழ்ந்த அரசியல்

என்னை கொல்ல காங்கிரஸ் கூலி படையை அமர்த்தினார்கள் @ மோடி .. இது சிறுப்பிள்ளைத்தனமாக தெரியவில்லையா.. நாட்டின் பிரதமர் பொதுவெளியில் மக்கள் முன்பு இப்படி ஆதாரமில்லாமல் அவதூறை ஓட்டரசியலுக்காக சொல்வது நியாமானதில்லை பதவி இருக்கிறது அதுவும் இந்தியாவில் அதிகாரமிக்க ஒருபதவி ..எந்த தகவலையும் அதன் உண்மைதன்மையையும் அறிந்து கொள்ளமுடியும் எவரையும் விசாரிக்க உத்தரவிட முடியும் அப்படி இருக்கையில் ஏன் இதுவரை என்னை கொல்ல சதிசெய்தார்களென வழக்கு பதவி செய்யவில்லை.. இதுவரை எத்தனையோ,தேர்தல்கள் வந்த போது கூட வாய் திறக்காமல் குஜராத்தில் நிலமை மோசமாவது கண்டு .. போகுமிடமெல்லாம் விரட்டாத குறையாக மக்களின் எதிர்வினை கண்டு இழந்த இமேஜை மீட்டெடுக்க எந்த நிலைக்கு தாழ்ந்து தரங்கெட்ட அரசியலை செய்வேன் என்பது மோடி என்ற நபருக்கு அழகு... ஆனால் நாட்டின் பிரதமராக இருந்துகொண்டு சொல்வது அசிங்கமான ஒன்று.. .. மணி சங்கர் அய்யர் நீசர் என சொல்லியதின் விளைவாக ..நீச் என்றால் தாழ்ந்த அல்லது இழிவு என பொருள்படும் ..தன்னை தாழ்ந்தவன் என சொல்லிக்கொள்கிறார் .. இந்த வார்த்தை பிரயோகமே வரகூடாதென்று தான் பெரியார் ஆதிதிராவிடர் என அழைக்க சொன்னார்.. இங்கே எவரும் தாழ்ந்தவனில்லை என பேசியிருந்தால் அவரை பாராட்டலாம்.. ஒரு மாநில வெற்றிக்காக பாகிஸ்தானில் கூலிப்படை கொண்டு என்னை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக மணிசங்கர் மீது குற்றம் சாட்டுவது மிகப்பெரிய பதவியில் இருந்துக்கொண்டு கேவலமாக நடந்து கொள்வதைபோல பிரதமர் பதவிக்கே இழுக்கை தருகிறார்.. .. மோடி எப்போதும் வாய்ச்சொல் வீரராகவே அறியபடுகிறார்.. பொதுவெளியில் ஏற்றஇறக்கத்தோடு பேச தெரிந்தவர் இதுவரை நாடாளுமன்றத்தில் நேரடி விவாதத்தில் பங்கேற்றதே இல்லை.. அதை விடுங்கள் அறிவுடையோரின் கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் சொன்னால் காலம் கடந்தும் தீராத களங்கத்தை .. லாயகற்ற பிரதமர் என்று வரலாற்றில் பதிவாகிப்போகும். பதவியேற்று மூன்றாண்டுகள் கழிந்தும் இன்னும் கூட பத்திரிக்கையாளர்களை சந்திக்க அஞ்சுகிற பிரதமரை நாடு கண்டதில்லை.. ஏனெனில் பொய்யை மட்டுமே மூலதனமாக கொண்டு அரசியல் செய்கிறவர்கள் ஊடகங்களை சந்திப்பது புலிவால் பிடித்தகதையைப்போல ஆகிவிடுமென்பதால் தவிர்க்கிறார்.. இதுவரை இந்தியா கண்ட பிரதமரில் ஊடகத்தை சந்திக்காதவரென்ற பெருமை இவருக்குமட்டுமே உண்டு .. இப்போது கூட கோவில் வேண்டுமா மசூதி வேண்டுமா என கேட்டு பிரதமராக இருக்கும் தகுதியை இழந்துநிற்கிறார்.. பாஜகவின் மோடியாக இதை சொல்லியிருந்தால் நமக்கு கவலையில்லை அதை பிரதமர் சொல்வது நாலாந்தர அரசியல்வாதியைப்போல தெரிகிறது குஜராத் கலக்கம் பாவம் பேதலித்துவிட்டது.. எதையாவது பேசி.. பரபரப்பாக வைத்திருந்தால் மக்கள் நம்புவார்களென்பதை .. எப்போதெல்லாம் வாக்கு தேவைபடுகிறதோ அப்போதெல்லாம் பாகிஸ்தானை இழுத்து .. தீவிரவாதம் பயங்கரவாதமென சொல்லி.. அதுவும் கதைக்காகதுபோனால்.. மதவெறியை தூண்டி..கடைசியில் சாதிவெறியை கையிலெடுக்கும் கடைந்தெடுத்த அயோக்கியத்தன அரசியல். எப்போதும் கை கொடுக்காதென்பதால் வாக்கு பதிவு இயந்திரத்தை நம்புகிறார்கள்.. இதையெல்லாம் மீறி ஜனநாயகம் வெல்லவேண்டும்.. .. #எச்சரிக்கை.. .. Aalanci Spm

Friday, December 8, 2017

ஊடக விபச்சாரம்

ஊர் சிரிக்கிறது. ஊடகங்கள் தர்மத்தின் நிழலைவிட்டு வெகுநாட்களாகிறது.. அரசியல் சார்ந்து அரசு சார்ந்து ஏன் கொள்கை சார்ந்து .. எழுதும் ஊடகங்கள் கூட சில முக்கிய காலகட்டங்களில் நேர்மையின் பக்கம் நின்றிருக்கின்றன.. இந்தியன் எக்ஸ்பிரஸ் .. தி.இந்து போன்ற ஏடுகள் வரலாற்றில் இந்த தேசத்தின் ஜனநாயக சீர்கேடு நடக்கும் போதெல்லாம் எப்போதெல்லாம் ஜனநாய நெறிகள் மீறபடும் போதும் அதன் குரல்வளை நெறிக்கபடும் போதும் வெகுண்டெழுந்து நியாயத்தின் பக்கம் நின்றிருக்கின்றன.. .. ஆனால் இப்போதெல்லாம் கார்ப்பரேட்களின் கையில் ஊடகங்கள்.. எதையும் வியாரநோக்கிநகர்த்துகிற நிலை.. எத்தனை கோடி தருவார்கள் என காத்துநிற்கிற அவலம்..இதெல்லாம் சமீபத்தில் தான் புரையோடியது.. ஆம்.. குஜராத் சம்பவங்கள் இந்தியாவின் கறுப்பு பக்கங்களில் இடம் பெற்றிருந்தும் .. மோடியை தூக்கிபிடித்து நிறுத்தியதில் ஊடகங்களில் பங்கு அளப்பெரியது.. இந்த தேசத்தில் அயோக்கியதனத்தை ஆதரிக்கிற நிலை அப்போதுதான் உருவானது.. நிறைய வேறுபாடுகள் இருந்த போதும் ஒன்றுமையில்லாததால் பிற கட்சிகள் ஒருங்கிணைகிக முடியாத காம்ரேட்களால்.. காவிகள் ஆட்சிக்கு வர அதை ஆதிக்க சக்திகள் இந்த ஊடகங்களை கொண்டே வெகுமக்களிடம் மோடியை புத்தரை போல சித்தரித்தது.. அந்த பிம்பம் வெகுசீக்கிரம் கரைந்துபோகுமென அறியாமல்.. .. இந்திய ஊடகங்கள் அரசியல்வாதிகளை விட ஆதாயத்திற்காக எந்த செய்தியையும் உயர்த்திபிடிக்குமென்கிற நிலை மிகவும்,ஆபத்தானது.. இன்றைக்கு வரும் செய்திகள் அத்தனை ரசகரமானதில்லை.. ஊடகவியலாளர்கள் விலைபேசும் நிலை ஆரோக்கியமான ஜர்னலிஸத்திற்கு வழிவகுக்காது.. தமிழக ஊடகங்களை பொறுத்தவரை இரண்டு மனபான்மையோடு செயல்படுகின்றன.. அதிமுகவிற்கு சாதகமான சூழலை உருவாகிகுவதில் அவர்கள் காட்டும் அக்கறையின் பின்னில் பணம் மட்டுமே இருந்ததென்பது நீண்டநாட்களாக சொல்லபட்டு வரும் குற்றசாட்டு அது சரியென்பது போல சில செய்திகள் ஊடகத்துறையை அசிங்கமாக்கியிருக்கிறது.. சில நல்ல நேர்மையைான ஊடகவியலாளர்கள் குணாவை போல இருக்கிறார்கள் மறுப்பதற்கில்லை கொள்கை சார்ந்து இருக்கிற போதும் நியாயத்தின் பக்கம் நிற்கிற சில நேர்ம்யானவர்கள் உண்டு .. பெயரெடுத்து சொல்ல தேவையில்லை ஆனால் ..பாண்டே ஹரியை போல ஒருதலை சார்பும் அதேவேளை பணம் சம்பாத்திக்க மட்டுமே ஊடகதுறையை பயன்படுத்துவதும்.. முன்ணணி நிறுவனமாக்க தங்கள் ரேட்டிங்கை உயர்த்த எந்த தரங்கெட்ட செயலையும் நியாயபடுத்துவதும்.. ஏற்கமுடியாதது.. அவர்களின் நேர்மையை தான் ஜெயலலிதா வழக்கிலேயே பார்த்தோம்.. .. ஒரு குற்றவாளியின் அல்லது குற்றசாட்டபட்டவரின் டைரியில் அரசியல்வாதிகள் பெயர் அதை அதே நியாயத்தோடு தமிழக ஊடகங்கள் வெளிகொணர மறுத்து வேறுவிடயங்களுக்கு திசை திருப்புவது ஒருவகை Media prostitution ஊடக விபச்சாரம். .. Aalanci Spm

Thursday, December 7, 2017

திமுக ஜனநாயக பேரியக்கம்..

திமுக ஜனநாயக இயக்கம் DMK Democratic Movement .. தலைமை.. ஒரு கட்சியின் தலைமை.. வருங்கால தலைவரை உருவாக்காமல் போவதென்பது நிறைய குழாயடி சண்டையை/தரகு வேலைகளுக்கு கொண்டுபோகும். சர்வாதிகாரபோக்குடைய தலைமை கீழ் நடத்தப்படும் கட்சிகள் வரலாற்றில் கரைந்தே போயிருக்கிறது. பின் வருபவர்களின் நிலை பரிதாபமாக நேரிடும்.. .. காலங்கள் கடந்தும் நிறைய வெற்றி தோல்விகளை சந்தித்தும் திமுக சிறந்து செயல்படுவதற்கு/திகழ்வதற்கு காரணம் உட்கட்சி ஜனநாயகம்.. யாரை எப்படி அவர்களின் சேவைகள் கட்சிப்பணிகள் தொண்டு உழைப்பு எல்லாம் கணக்கில் கொண்டு தேர்வாகி வருகிறார்கள். படிப்படியாக மெருகேற்றபடுகிறார்கள்.. தலைமைக்கு சரியானவரை இனம் காட்டுகிறார்கள் இவையெல்லாம் ஜனநாயத்திலேயே சாத்தியம்.. நிறைய கருத்து வேற்றுமை இருந்தபோதும் இறுதியில் தலைமை தேர்வு செய்தல் / கட்டுபடுதல் என்பதும் இயக்கம் தொடர்ந்து ஜனநாயக கடமையாற்ற முடியும். திமுக தொடர்ந்து கட்சி ஜனநாயகத்தில் நிறைய கருத்தொற்றுமை/வேற்றுமை இருப்பினும். கட்டுபடுதலில் ஒன்றுபடுகிறார்கள்.. சட்டென்று ஒற்றை இரவில்/ நாளில் அதிகாரத்திற்கு வருவதென்பது இங்கே நடக்காது.. அது ஸ்டாலினாக இருந்தாலும்.. தீட்டபடுவார்கள் போராயுதம் போல... இந்தியாவின் மிகச்சிறந்த ஜனநாயக இயக்கங்களில் திமுகவும் ஒன்று.. ஆனால். இதற்கு நேர்மாறான கட்சி அதிமுக .. கட்சியென்பதைவிட கம்பெனி அல்லது அமைப்பு என சொல்லலாம்... திரு.ம.கோ.ரா. அதிமுகவை நிறுவிய போது தன்னிடமுள்ள கவரும் கவர்ச்சியைமட்டுமே மூலதனமாக கொண்டார்.. எழுபதுகளின் இறுதிகளில் சினிமா மோகம் தமிழகத்தை ஆட்கொண்டிருந்த காலம்.. நிழலை பின்தொடர்ந்து தமிழன் அறிவிழந்து /சுயசிந்தனையின்றி நிஜமறியாதிருந்த காலகட்டமது.. திரு.ம கோ ரா அதை தனக்கு சாதகமாக்கி கொண்டார் .. தொடர்ந்து இந்திராவின் சாவும் மகோரா வின் நோவும் இரண்டுமுறை கைகொடுத்தது .. சட்டென்று உணர்ச்திவயபடும் தமிழனின் சுபாவம்..அவருக்கு கைகொடுத்தது.. அதன்பின் செல்வி.ஜெயலலிதாவை ராஜீவின் சாவும் பிறகு பணமும் கைகொடுத்து தூக்கி நிறுத்தியது ..இவருமே.. கட்சியில் சரியான நபரை இனம்கண்டு தேர்வு செய்து பயிற்சியும் தந்து வழிநடத்தாமல் போய்விட்டார்கள் .. அதனால் தான் அதிமுகவை சில பாசிச சக்திகள் தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டுவர துடிக்கின்றன.. தெரிந்து தெரியாமலோ மக்கள் செய்த ஒரு நல்லகாரியம் எதிர்க்கட்சியை பலமாக அமைத்திருக்கிறார்கள் அதாவது ராசசபலம் இல்லாத ஆளும்கட்சி.. எவ்வளவு பிரிந்து சிலகாலம் கவர்ச்சி/பணம் அடிமைத்தனம் பின்னால் சென்றாலும் திராவிட இனத்தின் வேர் பலமாக நெஞ்சில் பதிந்திருக்கிறது .. அதை சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன. சிலர் அதிமுக என்ற நிறுவனத்தை சொந்தம் கொண்டாட முயல்வதும் யார் தலைமையின் கீழ் என்பதிலே பொறாமை வருவதையும் காண முடிகிறது.. சர்வாதிகார தலைமையின் கீழ் வாய்பொத்தி அடிமைகளாய் இருந்தவர்கள்..இப்போது சுதந்தர காற்றை உணரும் போது தன்மானம் வெளிவருகிறது நம்மை கட்டுபடுத்த இவர் யார் ஏன் நமக்கு தகுதியில்லையா என எண்ணம் வருகிறது இது வரும் .. ஆனால் நிலைத்து நின்று ஜெயிக்க இயலாது.. காரணம் சரியான பயிறிசியின்மை..ஜனநாயக ரீதியாக பேராடி உயரவரவில்லை.. இவர்கள் ..ஒருகாலகட்டத்திற்கு பிறகு மறைந்து யாரும் அறியாது யாருக்கும் வேண்டாது போய்விடுவார்கள்.. இப்போது நடப்பது அதிமுகவில் நடப்பது இதுதான்.. #யார்பெரியவன்.. .. இப்போது புரிகிறதா. .. வெறும் நியமனத்தால் பொறுப்புகளுக்கு ஆட்களை நிரப்புவதால் ஏற்படும் பின்னடைவு .. உட்கட்சி தேர்தலால் ஜனநாயகம் கட்சியின் வேர்வரை பலம் பொருந்தியதாக தொடர்ந்து வெற்றி/தோல்விகளின் இயங்கமுடிவதின் இரகசியம்.. .. #திமுக_இனத்திற்கான_ஜனநாயகஇயக்கம். #Democratic_Movement_for_Dravidian… .. Aalanci Spm

ஆளுநர்.. தலையீடும் தளபதி தாக்கீதும்

ஆளுநர் ஆய்வுக்கு செல்லும் மாவட்டங்கள் அனைத்திலும் திமுக சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டிய நிலை உருவாகும்.. என எச்சரிக்கை தளபதி.ஸ்டாலின் .. ஆளுநரின் வேலை என்னவோ அதைமட்டுமே செய்யவேண்டும் அரசியல் சாசனம் அவரின் தலைமையில் மாநில அரசு இயங்குமென சொன்னாலும்... நிர்வாக ரீதியாக செயல்பட அவருக்கு அனுமதி அளிக்கவில்லை மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் மட்டுமே நிர்வாக ரீதியான செயல்பாடுகளில் தலையிட, வழிகாட்ட ,ஏன் உத்திரவிட முடியும் அதுதான் ஜனநாயகத்தின் சிறப்பு.. இந்திய அரசியல் அதிபர் ஆட்சி முறையில் இல்லை மாறாக மக்கள் பிரதித்துவ செயல்பாட்டில் இருக்கிறது ஒற்றை நபரை தேர்வு செய்து அவரின் நியமனங்களில் ஆட்சி நடத்த முடியாது உள்ளாட்சி தொடங்கி நாடாளுமன்றம் வரை .. மக்கள் பிரதிநிதிகள் கூட்டாக ஆட்சி செய்யும் முறை மட்டுமே உண்டு.. இங்கே மத்திய அரசின் தகவல் தருபவராக.. சட்டமன்ற நிகழ்வுகளை. கண்காணித்து அவர்களின் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குதல் மட்டுமே அவரின் பணி .. நேரடியாக ஆட்சி செலுத்து அதிகாரம் அவருக்கில்லை. அதனால் தான் பேரறிஞர் அண்ணா ஆட்டுக்கு தாடி தேவையில்லையென்றார்.. .. பிரதமரின் செயல்பாட்டில் மத்திய அரசின் செயல்பாடுகளில் எப்படி ஜனாதிபதி தலையிட முடியாதோ அதைப்போல இங்கும் தலையிடுவது ஜனநாயகத்தின் மீதுவிழும் அடி.. இந்த அடிமைகள் திறமையற்றவர்களாக பதவிக்காக எதையும் தின்பவர்களாக.. எதனால் அடித்தாலும் கூட பரவாயில்லை நாங்கள் மந்திரியாக இருந்தால் போதுமென நினைக்கிற செயல்படுகிற கேடுகெட்டவர்களால் நிர்வாகத்தை கவனிக்ககூட முடியவில்லை அதைவிட தெரியவில்லை.. இதனால் ஆளுநர் ஆய்வு செய்கிறாரென சிலர் சப்பைகட்டுகிறார்கள்.. நிர்வாக சீர்கேடென்றால் ஆட்சியை அப்புறபடுத்திவிட்டு தேர்தலை நடத்த பணிக்கவேண்டுமே தவிர அதிகாரத்தை கையிலெடுக்க கூடாது.. அமைச்சர் செல்லூர் ராஜூ சொல்வதைப்போல தாய் இல்லாத பிள்ளைகளை தலையில் தட்டுவதை போல ஆகிவிட்டது.. மானம் ரோசமற்று சுரணையில்லாதவர்களாக வலம் வரும் இவர்களால் தமிழகத்தின் மானம் சந்தி சிரிக்கிறது .. .. இதோ ..குமரிக்கு சென்ற ஆளுநரை விரட்டியடிக்கிறார்கள் மக்கள்.. குமரி மக்கள் தமிழக முதல்வரால் எதுவும் ஆகாதென அறிந்து கேரள முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.. இதெல்லாம் எவ்வளவு அசிங்கம்.. துணை முதல்வர் பதவிக்காக இந்த அரசை கவிழ்க்காமல் .. இந்த இழிநிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் தர்மயுத்த பன்னீர்.. ஜெயலலிதா இறந்த போதோ தேர்தலை நோக்கி தமிழகத்தை நகர்த்தி இருந்தால் இன்று குமரியில் மக்கள் பரிதவிப்பது குறைந்திருக்கும்.. ஆட்சியாளர்களையோ ஆளுநரையோ ஏன் மமதையோடு பேசிய மத்திய அமைச்சர் நிர்மலாவையோ குமரி மக்கள் நிராகரிக்கிறார்கள் இதுதான் ஒட்டுமொத்த தமிழகத்தின் நிலை .. செயல்படாத அரசை ஆளுநர் ஆய்வு செய்து செயல்படுவதாக சொல்வது ..ஜனநாயக வரம்புமீறல்.. அதனால் தான் திமுகவின் பிரதான முழக்கமான கவர்னர் தேவையில்லை என்பது.. தொடர்ந்து ஆய்வென்ற பெயரில் ஆளுநர் செயல்படுவாரே ஆனால் அறவழிப்போராட்டம் நடத்தபடுமென மக்கள் மனதில் முதல்வராய் வீற்றிருக்கும் தமிழகத்தின் ஒரே நம்பிக்கை தளபதி சொல்லியிருக்கிறார்.. .. இதுதான் தமிழக மக்களின் எண்ணம்.. .. Aalanci Spm

Wednesday, December 6, 2017

தேர்தல் முறையில் மாற்றம்

விஷால் மனு ஏற்பும் பின் நிராகரிப்பும்.. .. முதலில் இந்திய தேர்தல் முறையில் நிறைய மாற்றங்களுக்கு உட்படுத்தவேண்டும் தனியாக எந்த கட்சியையோ அமைப்பையோ சாராதவர் நிற்க வேண்டுமெனில் 10 பேர் பின்துணைக்கவேண்டுமென்பது கூட ஒருவகை அத்துமீறல்.. சம்பந்தபட்ட தொகுதியை சேர்ந்த வாக்காளர் இருவர் போதுமென அங்கரீக்கபட்ட கட்சிகளுக்கு மட்டுமென்பதை எல்லோருக்கும் என பொதுவானதாக ஆக்கவேண்டும்.. யார் வேண்டுமானாலும் போட்டியிட உரிமை உண்டென்கிற போது.. அதில் எல்லோருக்கும் சமமான நீதியை வழங்கவேண்டும்.. அதிகளவில் தனி வேட்பாளர்கள் வருவார்கள் என காரணம் காட்டி அவர்களுக்குமட்டும் விதிகளில் கடுமையென்பது சிறந்த ஜனநாயகமில்லை.. கட்சிகளுக்கு மாற்று வேட்பாளர் படிவம் என்ற சிறப்பு மட்டும் போதும் .. அதை வேண்டுமானால் தனி வேட்பாளருக்கு தேவையில்லையென வைக்கலாம்.. தேர்தல் நடத்தும் ஆணையம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும்.. தேர்தல் நடத்தும் அதிகாரி யார் வேட்பு மனுவையும் ஏற்கும் நிராகரிக்கும் தகுதியென்பது சரியான முறையாக இல்லை.. படிவத்தில் இருக்கும் தவறுகளை .. திருத்திக்கொள்ள அவகாசம் வழங்கலாம்.. ஏனெனில் கட்சிகள் மற்றும் ஒரு சிலரை தவிர அந்த படிவத்தை பூர்த்தி செய்ய நிறைய பேருக்கு தெரியாது சாதாரணமாக தாலுக்கா அலுவலங்களில் எழுதி கொடுப்பதற்கென்றே வெளியே சிலர் இருப்பர்.. அதே போல தேர்தல் அலுவலகத்திலும் சிலரை நியமிக்கலாம்.. .. சரி .. விஷாலின் மனு நிராகரிக்கபட்டதாக முதலில் அறிவித்துவிட்டு பின்பு ஏற்றுக்கொண்டதாக சொன்னதேன்.. மீண்டும் சம்பந்தபட்டவரை (கையெழுத்திட்டவர்) அழைத்து விசாரிக்க யார் பணித்தார்கள்.. மீண்டும் தள்ளுபடி செய்ய யாரோ மிரட்டியதாக வரும் செய்தி எந்தளவிற்கு உண்மை.. ஒரு Returning Officers தேர்தல் அதிகாரிகளின் நடத்தை விதிமுறைகள் ஏன் இங்கே மீறப்பட்டது இதே போல் நிறைய தனி வேட்பாளர்கள் மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டிருப்பதில் உண்மை நிலையென்ன .. பிரபலமானவர் என்பதால் விஷால் தெரிந்தாரே தவிர.. முகம் தெரியாத அந்த மனுசெய்த தனி நபர்கள் சரியான அளவுகோலோடு நிராகரிக்கபட்டார்களா.... இதற்கெல்லாம் யார் பதில் தருவது.. இந்திய அரசியலமைப்பு வழங்கியிருக்கிற உரிமைகளை சில தவறுகள் தடுக்குமெனில். வரையறுக்கபட்ட விதிகள் தவறானதென்றே பொருள்.. இன்னமும் எளிமைபடுத்தபட்டிருக்கவேண்டும் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாமென உரிமை பேசிவிட்டு விதிகளை கடுமையாக்குவது சரியான அணுகுமுறையல்ல.. .. எத்தனை பேர் போட்டியிட்டாலும் வாக்குபதிவு இயந்திரம் தான் என லக்கானி சொல்கிறார்.. இது தேர்தல் நடத்தும் விதிமுறைகளுக்கு எதிரானது..ஏனெனில் 64 பேருக்கு மேல் போனால் வாக்கு சீட்டுமுறையென தேர்தல் ஆணையம் நீதிமன்றத்திலேயே சொல்லியிருக்கிறது..லக்கானியின் பேச்சு 64 பேருக்குமேல் போகாமல் பார்த்துக்கொள்ள தேர்தல் அதிகாரிக்கு வழங்கபட்ட சமிஞ்சை யாக கருதவேண்டியிருக்கிறது... .. விஷாலின் மனு ஏற்போ நிராகரிப்போ அல்ல பிரச்சனை ..எப்படி தேர்தல் ஆணைய அதிகாரி நடந்துக்கொண்டார்.. ஏனிந்த தடுமாற்றம்..யாருக்கு வழங்கி நிற்கிறது தேர்தல் ஆணையம்.. தொடர்ந்து வாக்குபதிவு இயந்திரம் மீதான சந்தேகமற்ற சந்தேகம் நிறைய இடங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவிற்கு வாக்கு விழுந்ததோ அது எப்படி நிகழ்ந்தது வாக்கு பதிவு இயந்திரத்தின் நம்பகதன்மை ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக்கியிருக்கிறதே ஏன்.. இதையெல்லாம் கவனித்திலேயே கொள்ளாமல் தேர்தல் நடத்துவதைவிட யார் ஆளுகிறார்களோ அவர்கள் விருப்பதற்கு ஏற்றாற்ப்போல் தேர்தலை நடத்திவிடலாம்.. .. தேர்தல் மிக சிறந்த ஜனநாயகமுறை தயவு செய்து அதை கேலிகூத்தாக்கிவிடாதீர்.. .. Aalanci Spm

Tuesday, December 5, 2017

அரசியல்பிழை ஜெ..

நினைவில்.. மறைந்த ஒருவர் எதற்காக நினைவுகூறபடுகிறார் என்பதில்தான் அவரது புகழ் அடங்கியிருக்கிறது.. எல்லோரும் ஏதோவொரு வகையில் நினைவுகூறபடவேண்டும்.. அது எதை குறிக்கிறது என்பதை வைத்துதான் வரலாறு அவரைப்பற்றி பதிவு செய்யும்.. ஒருவரின் அரசியல் வாழ்வை (பொதுவாழ்வு) தான் இந்த சமூகம் அவர் மீது கொண்டிருந்த அன்பை .. அல்லது வெறுப்பை சுட்டிகாட்டி அவர் ஆற்றிய பணிகள் நல்லவை கெடுதிகள் எதுவானாலும் வரலாற்றில் இடம் பெறும்.. இதில் பெண் ஆண் என்ற பாகுபாடில்லை.. .. நல்லவைகளை மட்டுமே பேசவேண்டுமெனில் வரலாற்றில் இட்லரும்,கோட்சேவும் ,இடிஅமீனும்.. இடம்பெற்றிருக்கமாட்டார்கள்.. நம் வீட்டில் இழவு விழுந்து விட்டதென்பதற்காக பக்கத்துவீடு எரிகிறபோது .. ஓடிசென்று அதை அணைக்கவேண்டுமே தவிர.. இல்லாமல் பிணத்தை கட்டிபிடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தால்.. சுடுகாட்டிற்கு எடுத்து செல்லாமல் வீடே சுடுகாடாகிவிடும்.. அந்த நிலைதான் இப்போது.. செய்யவேண்டியதை செய்யமறுத்தால் வரலாறு இப்படிதான் நம்மை எரித்துவிடும்.. .. ஜெ.ஜெயலலிதா.. ஒரு பெண் ஆளுமை .. இங்கே ஆளுமைக்கு ஆணவத்திற்கும் வேறுபாடு உணராமல் சிலர் கதைக்கிறார்கள்.. பொதுவாழ்வில் வருபவர்கள் தவறிழைப்பது .. அவரின் தவறான முடிவாலோ அல்லது தவறான வழிகாட்டுதலாலோ.. அல்லது தனக்கெல்லாம் தெரியுமென்ற மமதையாலோ ஏற்படலாம் ஆனால் அதை உணர்ந்து புதிய பாதையை வகுத்திருக்கவேண்டும்.. இந்திய பெண் ஆளுமையென இன்றைக்கும் பேசபடுகிற திருமதி இந்திரா பிரியதர்ஷினி... மிசா கால தவறை உணர்ந்தார்.. ஆம் அவசரகாலத்தில் அவர் ஆடிய திமிராட்டத்தை மக்கள் அவருக்கு தோல்வியை தந்து பரிசளித்தார்கள் .. மீண்டும் பகிரங்கமாக தவறை உணர்ந்து மக்களிடம் மன்னிப்பை கேட்டு..தேர்தலை சந்தித்தார் தவறுக்கு வருத்தியதை மக்களும் ஏற்றார்கள்.. ஆனால் ஜெயலலிதா டான்சி வழக்கில் தண்டிக்கபட்டபோது உச்சநீதிமன்றம் சொத்தை திருப்பி தருவதாக அதாவது முறைகேடாக வாங்கியதை ..தருவதாக சொல்லியதை ஏற்று விடுதலை செய்தது அப்போது மனசாட்சியோடு நடந்துக்கொள்ளுங்கள் என சொல்லியதை மறந்தார்.. இந்திய வரலாற்றிலேயே .. முதல்வராக நீதிமன்றம் சென்றவர் தண்டிக்கபட்ட குற்றவாளியானது ஜெயலலிதா மட்டும்தான்.. கொடியை இறக்கி.. பாதுகாப்பை விலக்கி தனியறையில் வைத்திருந்து சிறைக்கு அனுப்பினார் குன்ஹா.. இதெல்லாம் வரலாற்றில் தீராத களங்கத்தை ஏற்படுத்தியது யாரும் மறுக்கமுடியாது.. ஜெயலலிதா உயிரோடிருந்திருந்தால் சசிகலாவோடு சேர்ந்து சிறையில் கம்பங்களி திங்கவேண்டிவந்திருக்குமே.. .. ஒரு பெண் பொதுவாழ்விற்கு வருவதென்பது அதிலும் உயர்பதவிகளை அலங்கரிப்பதென்பது இன்றைய சூழலில் கூட .. ஆணாதிக்க அரசியலில் இயலாதென்பதால்.. ஜெயாவின் தவறுகளை பெரிதுபடுத்தாமல் இருந்தோம் ஆனாலும் எதற்கும் எல்லை உண்டென்பதை அறியாமல் போனார் இந்த பேதை.. அவரின் பலமென்பது அவரது இனமே தவிர திறமையல்ல.. காரணம்.. அடாவடி ஆணவம்.. திமிர் அடக்கியாளுதல் இவையாவும் திறமையல்ல.. தன் இளமைகாலங்களில் தனக்கேற்பட்ட துயரங்கள் ஏமாற்றங்கள் பாதிப்பு இவரை வெகுவாக அவரின் நடவடிக்கைகளில் காணபட்டது.. ஜெயலலிதா அரசியலென்பது கிழிந்த காதிகம் .. அதில் பயனில்லை இன்றைக்கு அவரின் ஆதரவாளர்களென அறியபடுகிறவர்கள்.. வரும்காலங்களில் ஒரு தேர்தல் தோல்வி போதும் இவரை வசைபாடுவார்கள்..இப்போது கட்டமைக்கபட்டிருக்க பிம்பங்கள் தகர்ந்துவிடும்.. அடிமைகள் கூடாரத்தை .. கொள்கையில்லா கோமாளிகளை.. ஆம் கட்சியை கட்டுபாட்டில் வைத்திருந்ததை தவிர வேறெதும் பிரமாதமாய் இல்லை.. .. நல்ல அரசியல் தலைமையின் கீழ் பயிற்சி பெறாததால்.. அவரால் நல்ல தலைவர்களையோ தொண்டர்களையோ உருவாக்க முடியவில்லை..தன் வாழ்நாளில் அடிமையைபோல நடத்தபட்டவர்..பின்னாளில் அடிமைகளை உருவாக்கியிருக்கிறார் அவ்வளவுதான்.. .. காலம் அரசியல் தவறாகவே இவரை கணக்கில் கொள்ளும்.. ஆம் அரசியல்பிழை.. .. #தீதும்நன்றும்_பிறர்தரவாரா.. .. Aalanci Spm

Monday, December 4, 2017

குமரி அழுகிறது..

குமரி அழுகிறது.. ஆள்வோர் குமரிக்கோட்ட கதாநாயகனுக்கு விழா எடுப்பதில் முனைப்பு காட்டுகிறார்கள்.. மத்திய அமைச்சரோ.. ஆயிரம் பேரெல்லாம் காணமல் போகவில்லை என்கிறார்.. ஒரு உயிரானாலும் அது உயிர்தானே.. செத்தவன் யார் நேக்கு வேண்டுவனில்லை என்பதால் எதத்தாளமாக பேசுகிறார் அவர் உடல்மொழி ஆணவம் அறிந்ததுதான் இது போன்ற பேரிடர் இழப்பிலேனும் கொஞ்சம் சங்கடபடுவதைபோல வேணும் நடித்திருக்கலாம்.. புயல் மழையால் அதிகம் பாதிக்காத தன் இன மக்கள் வாழும் #சுசீந்திரம் பகுதிக்கு மட்டும் சென்றார் மத்திய அமைச்சர் நிர்மலா புயல் பாதித்த பகுதிகளுக்கு .. குறிப்பாக அதிகம் பாதித்த கடற்புரத்திற்கு செல்லவில்லை .. குமரி மேற்கு பகுதிகளுக்கும் செல்லவில்லை.. .. உலகின் நான்காவது பெரிய தரைப் படை, ஏழாவது பெரிய கடல் படையையும் கொண்ட நாடு இது.. பேரிடர் மேலாண்மை நிபுணர் படை ஒன்றும் நம்மிடம் இருக்கிறது.. இக்கட்டான நேரத்தில் துரிதமாக செயல்பட்டிருக்க வேண்டாமா.. முன்கூட்டியே வானிலை அவதான மையம் ஏன் அறிவிக்கவில்லை.. ஒரு வாரத்திற்கு முன்பே சொல்லியிருந்தால் மீனவர்கள் கடலுக்கு போயிருக்க மாட்டார்களே .. இத்தனை உயிர்பலி ஆகியிருக்காதே.. என்னானார்களென்றே தெரியவில்லையே.. செத்தவனை விடுங்கய்யா உயிரோடு தவிக்கிறவனை காப்பாத்துங்கய்யா என்கிறாளே .. அவளின் வார்த்தை வலிக்கிறதே.. இதைவிட வேறெப்படி கூறமுடியும்... அரசின் அலட்சியத்தை கையைலாகாததனத்தை.. .. ஊருக்குள் நுழைந்த அமைச்சர்களை விரட்டுகிறார்கள் மக்கள்.. இவர்களால் ஒரு பலனுமில்லை..இருக்கிறவரை சுருட்டுகிற கெடுமதியாளர்கள் இவர்களால் எந்த விடயத்திலும் பயனில்லை.. அதனால்தான் இந்த வாய்சவடால் விடும் பொய்யர்களை விரட்டுகிறார்கள்.. மத்திய அரசையோ மாநில அரசையோ நம்புவதில்லை என்ற நிலைக்கு தள்ளபட்டிருக்கிறார்கள்.. வீடு இழந்து .. அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் பள்ளிகூடங்களில் சமுதாய கூடங்களில் மக்கள்.. அவர்களின் இந்த நிலைக்கு செயல்படாத அரசும் மாற்றாந்தாய் மனபான்மையோடு செயல்படும் மத்திய அரசுமே காரணம். .. இந்த சூழலில் தளபதி பாதிக்கபட்டோரை சந்திக்கிறார்.. பெண்கள் அவரை கையை பற்றிக்கொண்டு அழுகிறார்கள்.. நம் கண்களில் நம்மையும் அறியாமல் நீர் விழுகிறது.. சொற்ப காசிற்கு ஆசைபட்டு சிலர் அதிமுகவைய அறியணை ஏற்றியதின் மிச்ச வேதனையையும் இப்போது அழுகையில் தெரிகிறது .. இந்த படம் நம்மை செவிட்டில் அறைவதை போல கேள்வி எழுப்புகிறது.. கண்ட கழிசடைகளை நம்பியதின் விளைவு மொத்த தமிழகமும் கண்ணீரில் .. கேவலமான அரசு.. கேட்பாரற்று மக்கள்.. எப்போது முடியும் இந்த நிலை.. மக்கள் இனியும் பொறுத்திருக்கவேண்டுமா.. இந்த பதவிவெறியில் அடிமைசாசனம் எழுதி தந்துவிட்டு வீழ்ந்து கிடக்கிறார்களே .. என்செய்ய..? .. குமரி மட்டுமா அழுகிறது.. .. Aalanci Spm