Thursday, January 31, 2019
தளபதி நிமிர் நடை ..
தமிழகத்தில் ஊடகங்களும் நடுநிலையாளர்கள் என சொல்லிக்கொள்வோரும் வலுகட்டாயகமாக ஒன்றை திணிக்க நினைக்கிறார்கள் .. திமுக இந்த தேர்தலில் வெற்றிப்பெற்றுவிட கூடாதென்ற எண்ணம் அவர்களுக்கு .. அதிமுக அமுமுக பலமாக இருப்பதைப்போல ஒருவித மாய தோற்றத்தை உருவாக்குகிறார்கள் .. தினகரனுக்கு வாக்குசாவடி முகவருக்கே பலதொகுதிகளில் ஆள்கிடைக்காத சூழல் இருப்பதை அறிந்திருக்கவில்லை .. இதுவரை தினகரனால் அதிமுகவிலிருந்தோ திமுகவிலிருந்தோ ஏன் பிற கட்சிகளிலிருந்தோ ஒருவரை கூட கவர முடியவில்லை யாரேனும் வந்து கட்சியில் சேர்கிறார்களா என்றால் இல்லை மாறாக விட்டால் போதுமென ஓட தொடங்குகிறார்கள் என்பதே நிதர்சனம் அவரிடம் இருக்கும் பணம் சிலரை அவரோடு சேர்ந்து நிற்க சொல்கிறது பணம் செலவு செய்ய சொன்னால் ஓடுகிறார்கள் ..தலைக்கு₹500 என கூட்டம் கூட்டினாலும் இவர் மீது மக்கள் வைத்திருக்கும் பிம்பம் இவரை கேலிசெய்கிறதென்பதே உண்மை
சாதிய பாசம் சில தொகுதிகளில் இவருக்கு சிறியளவில் கைக்கொடுக்கும் அதில் கூட பன்னீர் வகையறாக்கள் பங்குபோட வருவார்கள் .. அதிமுகவை சொல்லவே வேண்டாம் எந்த இடத்திலும் தன் செல்வாக்கை இழந்ததோடு மக்களின் அதிருப்தியும், கோபமும், இந்த அரசின் கையாளாகாத செயலைகண்டு வேதனையும் வெறுப்பும் அடைந்திருக்கிறார்கள் .. பாஜகவின் சொல்லை கேட்டு ஆடும் பொம்மையாய் இந்த அரசு இருப்பதை மக்கள் தெளிவாக விளங்கிவைத்திருக்கிறார்கள் .. அதிமுகவிலோ அமுமுகவிலோ பிடித்த முகம் என்ற ஒரு கவரும் மனிதர் இல்லை பொதுவான எல்லோராலும் விரும்பபடுகிற நேசிக்கிறவர் இல்லை குறுகிய வட்டத்திற்குள் கோலோச்சுகிறவர்கள் இருக்கிறார்களே தவிர தமிழகம் முழுவதும் விரும்புகிற நேசிக்கிற பொதுவான முகம் இல்லை ..
அமுமுக, அதிமுக இணைந்தால் வெற்றிபெறலாம் என்பது வடிகட்டிய பொய்.. அதைவிட திமுகவிற்கு நிர்பந்தத்தை தர முயற்சிக்கும் சூது .. மக்களை திசை திருப்ப செய்கிற சூழ்ச்சி .. அது பலனிக்காதென்பதே உண்மை ..
..
திமுக ..
#தளபதி என்ற மக்கள் விரும்புகிற நேசிக்கிற முகம் .. எளிமையும் நேர்மையும் உறுதியும் கொண்ட தலைமை .. எதையும் ஜனநாயகத்தோடு அணுகுகிற உயர்பண்பு, மக்களின் நேசத்திற்குரியவர் என்ற பொதுவான உருவம், மிகப்பெரிய இயக்கத்தின் தலைவர் தொடர்ந்து ஏறத்குறைய ஐம்பதாண்டுகளாக மக்கள் பணி ..வெற்றி தோல்வி இரண்டுலும் மக்களோடு பயணிக்கிற மக்களிடமே செல்கிற துணிவும் .. மக்கள் பணியாற்றவேண்டுமென்பதில் உறுதியும்
கொண்ட தலைவராக விளங்குகிறார்
இவருக்கு இணையானவராகவோ சரியான தகுதியுடைவரோ எதிரணியில் யாருமில்லை என்றே சொல்லவேண்டும் .. தளபதி மீதான ஈர்ப்பும் அடிமைகளின் ஆட்சி மீதான கோபமும் திமுகவிற்கு மிகப்பெரிய வெற்றி தரபோகிறதென்பதே களநிலவரம் .. அதை மறைக்க திமுகவின் மிகப்பெரிய வெற்றி பாசிசத்திற்கு பெரும் சவாலாக இருக்குமென்பதால் இது போன்ற பொய் பிரச்சாரத்தை ஊடகத்தின் துணையோடு செய்கிறார்கள் .. வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் ..தொடர்ந்து வர இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் திமுகவிற்கு மிகப்பெரிய வெற்றியை தமிழக மக்கள் தருவார்கள் .. தமிழகத்தின் ஒரே நம்பிக்கையாக தளபதி உருவாகியிருக்கிறார்.. நேர்மையான திறமையான வெளிப்படையான ஆட்சியை திமுகவால் மட்டுமே தரமுடியும் கட்டுகோப்பாக கட்சியினர் செயல்பட்டு மிகப்பெரிய வெற்றியை தளபதியின் கையில் தரவேண்டும் ..
தளபதி அறியணை ஏறும் நாளே தமிழகம் தலைநிமிரும் நாள் ..
..
#தளபதியார்_தமிழகத்தின்_நம்பிக்கை …
ஆலஞ்சியார்
Wednesday, January 30, 2019
காந்தி தேசம்
தேசம் எங்கே போகிறது..
தேசதந்தையை கொன்றவர்கள் தங்கள் கொண்டாட்ட திமிரில் காந்தியை கொல்வது போன்று நடந்து மகிழ்கிறார்கள் .. ஆர்எஸ்எஸ் இந்த நாட்டிற்கு கேடு என்பதும் அதன் நேரடி ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்கு நிறைய நிகழ்வுகளை நாம் கண்டும் நேரடியாய் பாதிப்பிற்குள்ளான போதும் மௌனமாய் நகர்ந்ததன் விளைவு தேசதந்தை என விளித்து மகிழ்ந்த நாட்டில் "மகாத்மா கோட்சே" என புகழ்ந்து காந்தியை மீண்டுமொருமுறை கொல்கிறார்கள் ..
..
1948 ல் ஜனவரி 25 நாக்பூரில் நடைபெற்ற ராஷ்ட்ரீய சேவசங்க (ஆர்எஸ்எஸ்) மாநாட்டில் காந்தியை கொல்வதென முடிவெடுக்கபட்டு யார் கொல்வதென சீட்டெழுதி குலுக்கி போட்டு.. நாதுராம் கோட்சே பெயர் வருகிறது .. முன்கூட்டியே திட்டம் தீட்டி சாதூர்யமாக ஆர்எஸ்எஸிலிருந்து விலகியிருக்க பணித்து கோட்சேவின் கையில் "இஸ்மாயில்" என பச்சை குத்தி அனுப்படுகிறார் .. கோட்சே அடித்து கொல்லபடுவார் அல்லது தற்கொலை செய்துகொள்ளவேண்டும் அப்போது தோழர் காந்தியை கொன்றது இஸ்லாமியர் என மிகப்பெரிய கலவரத்தை நடத்தி அதன் மூலம் இந்துராஷ்டீரியம் அமைக்கலாமென்ற ஆர்எஸ்எஸின் திட்டம் பலிக்காமல் போனது .. காந்தி அவனை ஒன்றும் செய்யாதீர்களென சொல்லிவிட்டு மறைந்தார் .. அதையும் மீறி கலவரத்தை நடத்த திட்டமிட்ட போது பெரியார் வானொலியில் காந்தியை கொன்றது பாப்பான் என பகிரங்கமாகவே சொல்லி பதட்டத்தை தணித்தார் .. தமிழகத்தில் மதகலவரம் தடுக்கபட்டது
காந்தியை கொல்ல என்ன அவசரம் வந்ததென்ற நம்மிடையே கேள்வி எழும்
“நான் ஒரு சர்வாதிகாரியாக இருப்பேனானால் மதத்தையும் அரசையும் வேறு வேறாகப் பிரித்துவைப்பேன். என் மதத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். அதற்காக என் உயிரையும் கொடுப்பேன். ஆனால் அது என் சொந்த விவகாரம். ஆனால் அதில் அரசுக்கு எந்த வேலையும் இல்லை. மதச்சார்பின்றி உங்களின் நல்வாழ்வு, ஆரோக்கியம், தொடர்புகள், வெளியுறவுகள், பணம் முதலானவற்றை அரசு கவனித்துக்கொள்ள வேண்டுமே தவிர மதத்தை அல்ல. மதமென்பது
அவரவர் தனிப்பட்ட அக்கறை.” என்று காந்தியார் உறுதிமொழி தந்த 58 வது நாள் கொல்லபடுகிறார் .. இனியும் காந்தியை வைத்திருந்தால் எதுவும் செய்யவிடமாட்டாரென முடிவெடுக்கபட்டு கொல்லபட்டார். அப்போது படேல் கூட ஆர்எஸ்எஸை தீவிரவாத இயக்கமென்ற கூறியது முக்கியத்துவம் வாய்ந்தது எனினும் அவர் மகாராஷ்டாவில் பார்பனர்கள் அதிகம் தாக்கபடுகிறார்களென கவலை கொண்டதும் விவாதமாகியது ..
..
இந்த தேசம் காங்கிரஸ் ஆட்சியில் நிறைய கருத்துவேறுபாடுகள் குறைகள் ஊழல்கள் மாநில நலன்களின் புறக்கணிப்பு என நிறைய ஏற்றுக்கொள்ளமுடியாதவை இருந்தபோதும்.. ஜனநாயக மீறல்கள், எதிர்ப்புகள் இருந்தபோதும் மதவெறியாட்டமோ அதைவைத்து கலவரபடுத்தி மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் மோதவிட்டு குளிர்காயும் செயலோ இல்லை .. ஏன் மக்கள் தொடர்ந்து காங்கிரஸை விரும்பினார்கள் என்ற கேள்விக்கு பதில் இந்த நான்கரை ஆண்டில் பாசிச பாஜக நமக்கு உணர்த்திவிட்டது.. பாசிசத்தை ஆட்சியில் அமர்த்தினால் நாடு சுடுகாடாகுமென நம் முன்னோர்கள் தெளிவாக இருந்தார்கள் மதநம்பிக்கை நாட்டின் இறையாண்மையை கொன்றுவிட கூடாதென்ற தெளிவு அவர்களிடம் இருந்தது.. யாரை தேர்வு செய்யகூடாதென்றும் தெரிந்திருந்தது ..பொய்யை போட்டோஷாப்பை நம்பி குஜராத்தில் கோரதாண்டவமாடிய செயலை மறந்ததன் விளைவு மதவெறியை மதபற்றென நம்பியதன் முடிவு இன்று காந்தியை மற்றொரு முறை கொல்ல நேர்ந்தது
..
சாமியார்கள் கையில் நாடு போனால் குழந்தைகள் கூட கொல்லபடுவார்களென புரிந்தது .. யாருக்கும் அடங்காத வெறிசெயலை எந்தவித பயமுமின்றி செய்ய காவிகளால் முடிகிறது .. கோட்சே இங்கே புனிதனாக மாற்ற முயற்சிக்கும் பணியை பாஜகவும் ஆர்எஸ்எஸும் செவ்வெனே செய்கிறது .. காந்தியின் நடவடிக்கைகள் மீது கருத்துவேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் ..வன்மவெறியோடு ஒரு கூட்டத்தை மூளைச்சலவை செய்து ஆர்எஸ்எஸ் உலவ விட்டிருக்கிறது பாருங்கள் இதிலிருந்தே அது எத்தகைய தீவிரவாத இயக்கமென அறிந்துக்கொள்ளமுடியும் ..
..
காந்திகள் ஜாக்கிரதை
கோட்சேகள் உலவுகிறார்கள்..
காந்தி தேசம்
கோட்சே கைகளில்
அல்லல்படுகிறது ..
..
ஆலஞ்சியார்
Monday, January 28, 2019
அறமிலா பி.ஜே
மீண்டும் பி.ஜே தொலைகாட்சிகளில் வரபோகிறாராம் .. பத்திரிக்கையாளர் sa sufiyan தகவல் தந்திருக்கிறார்..
ஆடிய கால்கள் சும்மா இருக்குமா ..
ஒரு சமுதாயத்தின் இளைஞர்களை மூளைச்சலவை செய்ய நிச்சயமாக திறமை இருக்கவேண்டும் எதை எப்படி செய்தால் அது எந்தளவு பலனை தருமென அறிந்து செயல்பட்டிருக்கவேண்டும் ஆனால் பாருங்கள் ஒழுக்கமின்மையும் அறமும் இல்லாது போனால் அந்த நபர் வலுவிழந்து அசிங்கபட்டு நாறிபோய்விடுவார் என்பதற்கு பி.ஜெய்லுலாபுதீன் சாட்சியாக நிற்கிறார் ..
நிறைய பேர் அவர் அனைத்தும் அறிந்திருந்ததாக நம்பினார்கள் எந்த கேள்விக்கும் விடையளிக்கும் ஆற்றல் உண்டென நம்பினார்கள் .. ஆனால் சில ஆய்ந்தறியும் திறனுடையோர் இவர் ஏமாற்றுகாரரென செப்பிக்கொண்டே இருந்தார்கள் .. எல்லாவற்றிக்கும் பதிலளிக்கும் வல்லவரென நம்பவைத்ததே ஒரு ஏமாற்று .. எல்லாம் அறிந்தவரென யாருமில்லை எல்லாம் எனக்கு தெரியுமென்பவன் மிக பெரிய அயோக்கியன் .. எந்த விடயத்திற்கும் நேரடியாக பதிலளிக்காமல் சுற்றிவளைத்து பேசுகிறவர் .. ஒன்று அவர் நம்மை மூளைச்சலவை செய்கிறார் அல்லது மழுப்புகிறார் அவர் சொல்லும் பதிலை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக நம்மை தயாராக்குகிறார் அவ்வளவுதான் .. உன் அறிவுகொண்டு சிந்தி என்கிறவன் உன்னை நேர்வழிபடுத்த முனைகிறவன்
மட்டும் சிறந்தவனாக முடியும்
ஆனால் தான் விரும்புகிறவற்றை திணிக்கிறவன் நிச்சயமாக மோசக்காரனாக தான் இருப்பான்..
..
ஒரு சமுதாயத்தின் போதகர்கள் (மதபோதகர்) அறிவின் நிழலில் கதைப்பவர்களாக என்றும் இருந்ததில்லை தான் சார்ந்த மதம் அல்லது கொள்கையை வலியுறுத்துபவர்களாகவே இருப்பார்கள் ஆனாலும் ஒழுக்கநெறி மனிதமாண்பில் அக்கறை கொண்டவர்களாக காணமுடியும் ஆனால் இப்போதெல்லாம் இவ்விரண்டும் (ஒழுக்கநெறி மனிதமாண்பு) சிறிதுமில்லாத புகழ் பணம் மீதான நாட்டம் கொண்டவர்களாக தன்னை பின்பற்றுகிற நம்புகிறவர்களை வழிகெடுக்கிற செயலை கொஞ்சமும் குற்றஉணர்ச்சியின்றி செய்கிறார்கள்
அறநெறியற்றவர்களாக வழிகேடர்களாகவே இருக்கிறார்கள் .. பி.ஜே எனும் தனிமனிதனின் செயல்பாடுகளோடு நமக்கு அக்கறையில்லை அவர் மீதான குற்றசாட்டென்பது அவருக்கும் அவரோடு சம்பந்தபட்டவருக்குமான தனிநபர் விடயம் அதனால் மட்டுமே அவரது செயல்பாடுகளை கண்டிக்கவில்லை மாறாக சமுதாய இளைஞர்களிடம் தன்னை தூய்மையானவன் நாலும் அறிந்தவன் நற்செய்தியை பரப்புகிறவன் என்பதைதான் எதிர்க்க வேண்டியிருக்கிறது .. எல்லோரையும் எதிர்கூட்டில் நிறுத்துகிற செயல் ஏற்புடையதல்ல இவர் சொல்லும் வழிமுறைகள் தான் இஸ்லாத்தின் உள்ளதென்பதும் இவர் மட்டுமே தூய இஸ்லாத்தின் வடிவத்தை அறியாமையில் இருந்த சமூதாயமக்களிடம் கொண்டு சேர்த்தவர் என்பதும் நகைப்பிற்குரியது .. நிறைய மார்க்கநெறியாளர்கள் அறிஞர்கள் அவர்களின் சொல் செயல் எல்லாம் தூய்மையாகவும் வெளிப்படையானதாகவும் அறம் சார்ந்ததாகவும் பிற சமூகமக்களின் நன் மதிப்பை பெற்றதாகவும் இருந்திருக்கிறது அவையெல்லாம் இவர் கூற்றுப்படி தவறானதாக சித்தரிக்கும் இழிசெயலும் தான் எல்லாம் அறிந்தவன் என்ற திமிரும் புதிய வழிதடத்தை உருவாக்கியவன் என்ற இறுமாப்பும் இவரை கேலிபொருளாக்கி நிறுத்தியது .. இஸ்லாமிய சட்டவிதிகளின் படியே இவர் தண்டிக்கபடவேண்டியவராக இருக்கிறார் ..
இவரின் செயலும் சொல்லும் இனி யாராலும் ஏற்கமுடியாததாக..அதைவிட சந்தேகம் கொள்ளகூடியதாக நகைப்பிற்குரியதாகவே இருக்கும் ..ஒழுக்கமின்மையும் அதை மறைக்க கூடுதல் பொய்யை திரும்ப திரும்ப சொல்வதிலும் இவர் காட்டிய முனைப்பு இன்று இவரை தொடர்ந்து தாக்குகிறது ..
..
அறமிலா செயல் துரத்தும் வீழித்தும்
..
ஆலஞ்சியார்
Sunday, January 27, 2019
சுரமில்லா இசை
தமிழிசை கேட்க இனிக்கும் .. இங்கே அக்கா தமிழிசையின் கூச்சல் வெறுப்பை தந்தது .. காவி இரத்தம் ஓடுகிறது லட்சோபலட்ச தாமரையை கண்டு சூரியன் ஓடியொளிகிறது .. ஏதோ எதுகைமோனையில் பேசவேண்டுமென்பதற்காக உளறிகொட்டி காட்டுகத்தல் கத்தினார் .. தலைவா மோடி என்றெல்லாம் புகழ்ந்து .. பாவம் "மோடிஜி" என்று கேட்டுபழகியவர் நிச்சயமாய் எதையோ எதிர்பார்த்து மோடியை புகழ்வதை அறிந்துகொள்வார் .. தன் தந்தை இலக்கிய செல்வரிடமாவது ஏதாவது எழுதி வாங்கி போய் பேசியிருக்கலாம் .. பத்து நாடாளுமன்ற தொகுதிகளை சொல்லி வெற்றி பெறுவோமென்ற போது யாரும் கைதூக்க காணோம் .. ஊழல்வாதிகள் விடமாட்டேன் என மோடியும் தன் பங்கிற்கு சொல்லிவிட்டு போகிறார் .. ஊழலுக்காக தன் தலைவியையே ஜெயிலுக்கு அனுப்பியவர்களை வைத்துக்கொண்டு .. எதிலும் கமிஷனோடு செயல்படுகிற எடப்பாடி &பன்னீர் கோஷ்டியை வைத்துக்கொண்டு .. இவர்கள் கேட்கும் கையூட்டை கமிஷனை கொடுக்கமுடியாமல்தான் ஆந்திராவிற்கு தன் தொழிற்சாலையை மாற்றியதாக KIA நிறுவனம் வெளிப்படையாகவே சொல்லியதெல்லாம் மோடிக்கு தெரியாதா .. தெரிந்தால் அவரும் தன் பங்கிற்கு இவர்களிடம் கேட்டு பெற்றிருக்கலாம் ..
..
வளைத்து வளைத்து கருப்புகொடிகாட்டியும் நேற்றியிலிருந்து தொடர்ந்து தமிழகம் #GoBackModi என்று முதலிடத்திலேயே வைத்திருந்து.. எதிர்ப்பை பலமாக பதிவு செய்திருக்கிறது எங்குபோனாலும் நெஞ்சை விடைத்து பேசி தீர்க்கிறவர் எழே நிமிடத்தில் தன் உரையை சுருக்கிகொண்டு மலையாளகரையோரம் போனால் அங்கே #PoMoneModi என்று கலக்குகிறார்கள் தென்னகத்தில் பாசிச பாஜகவை விராடுவிரட்டுகிறார்கள் .. தமிழகத்தில் விடாது கருப்பு என்றால் அங்கே சிவப்பு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல்நாட்டுவிழா .. ஒரு நல்ல திட்டம் நாட்டுமக்களுக்கு பயனிப்பது வரகூடாதா ஏன் எதிரிக்கிறீர்களென கேட்போருக்கு இதுவரை மோடி நட்ட கல் அப்படியே இருக்கிறது ஜம்முவில் நான்காண்டுகளுக்கு முன்பு நட்டது அசையாமல்.. இன்னமும் நிதி கிடைக்காமல் இருக்கிறது தகவல்உரிமை சட்டத்தின் கீழ்பெறப்பட்ட தகவல் இதுவரை நிதி ஒதுக்கவில்லையென மோடியை பார்த்து சிரிக்கிறது .. இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் ஏற்கனவே மன்மோகன்சிங் ஆட்சிகாலத்தில் அன்புமணி சுகாதாரதுறை அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் .. பிறகு வந்த ஜெயலலிதா அரசு கண்டுகொள்ளவில்லையென்று சொல்கிறார் ..
..
இந்தியாவின் தலைசிறந்த ஊழல்கட்சியை .. கொள்ளையடிப்பதில் பேர்போனவர்களை ..அதிலும் கறாராக கமிஷனை வெளிப்படையாக வாங்குகிறவர்களை உலகம் முழுவதும் அறிந்த லட்ச ஆட்சியை நடத்துகிற அதிமுகவினரை அருகில் வைத்துக்கொண்டு மோடி ஊழல்வாதிகளை விடமாட்டேன் என்றது தான் மிகப்பெரிய காமெடி ..நோட்டாவை தாண்ட முடியாத உண்மையை உணராமல் அக்கா தமிழிசை 10 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்றது பாவம் ஏதோ முற்றிப்போய் உளறிக்கொண்டே இருக்கும் மனபிறழ் மனிதரைப்போல தாமரை மலர்ந்தே தீரும் என்பதை காணும் போது மனது கஷ்டமாக இருக்கிறது அதுவும் உரக்க ஒலியெழுப்பி கத்திக்கொண்டே இருப்பதை பார்க்க பாவமாகதான் இருக்கிறது ..
..
#சுரமில்லா_இசை…
..
ஆலஞ்சியார்
Saturday, January 26, 2019
திரும்பி போ
திமுக ..
தனியொருவரின் நலனுக்காக உயர்வுக்காக ஒரு சமூக மேம்பாட்டிற்காக தொடங்கபட்டதல்ல இந்த பொது சமூகத்தின் மீது நடத்தபடும் தாக்குதலை விளிம்பிநிலை மக்களை தொடர்ந்து கரையேற இயலாமல் தாழ்த்திவைக்கும் அவலநிலையை பிற்படுத்தபட்ட ஒடுக்கபட்ட மக்களின் கல்வி வேலைவாய்ப்பு உரிமைகளை ஒரு சிலரே சுரண்டும் கயமைக்கெதிராக பாசிச சிந்தாந்தத்திற்கெதிராக தொடங்கபட்டது .. அதிலிருந்து சற்றும் விலகாமல் பேராசான் பெரியார் பேரறிஞர் அண்ணா பேரருளாளன் கலைஞர் வகுத்த தந்த பாதையில் திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையை வழிநடத்தும் பேராற்றல் மிக்க பெருமிகு தளபதி அவர்களின் படை மிக விரைந்து செயல்படவேண்டிய தருணம் இது ..
..
இந்த மண்ணை ஆதிக்கசக்திகள் தங்கள் சுயநலத்திற்காக பெருபான்மை இல்லாத அரசை காத்து தங்கள் இன மக்களின் வாழ்வு சிறக்க அறமிழந்து செயல்படுகிறது ஜனநாயகத்தின் அத்தனை வாயில்களும் மூடபட்டு ஒருவித சர்வாதிகார தொனியில் மத்திய அரசு செயல்படுகிறது தமிழகம் கண்ட மிக மோசமான ஆட்சியாக யார் ஆள்கிறார்களென தெரியாமல் பொம்மலாட்ட கயிற்றை கையில் வைத்துகொண்டு
பாசிச பாஜக செயல்படுகிறது தலையாட்டிகளாய்.. சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையாய்
இன்றைய அதிமுக அரசு செயல்படுகிறது ..
தமிழக நலன்களை புறக்கணிப்பதோடு தமிழர்களின் வாழ்வாதாரங்களை நசுக்கிற பாசிச அரசாக மத்திய அரசு செயல்படுகிறது .. தமிழக மாணவர்களின் உயர்கல்வியில் மருத்துவத்தில் மண்ணை அள்ளிபோட்டு ..பிற மாநில மாணவர்களுக்கு தமிழகத்தில் கல்வி பயில வழிவகை செய்து நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் மருத்துவம் பயில முடியாமல் தற்கொலை செய்துக்கொள்கிற நிலைக்கு காரணம் இந்த பாசிச அரசுதானே தமிழர்களின் வாழ்வாதாரமாக விளங்குகிற காவிரியை வறண்டதாக்கி.. மீத்தேன் எடுக்க கைபாவை மாநில அரசை கேட்கிற இடத்தில் எல்லாம் கையெழுத்திடுகிற நிலையில் செய்கிறது காவிரி போனால் தமிழனின் தமிழகத்தின் வளம் வறண்டுபோகும்,.. தமிழகத்தின் கனிமவளங்களை சுரண்ட கார்பரேட்களுக்கு வழிவகை செய்து..
சிறுதொழிலில் கொடிகட்டி பறந்த திருப்பூர் போன்ற நகரங்களில் இன்று முதலாளியாய் வலம் வந்தவர்கள் கூலிதொழிலாளியாய் ஆக்கியதும்.. மொத்தத்தில் தமிழகத்தை கல்வி தொழில் வேலைவாய்ப்பு என அனைத்தையும் அழிக்க மறைமுக போர் தொடுக்கும் இந்த பாசிச பாஜக அரசின் மோடியை திரும்பி போ என தன்னெழுச்சியாய் மக்கள் பொங்கியெழுகிறார்கள் ..
..
இந்த பாசிசத்தை வேரறுக்க ..அதற்கு துணைபோகும் போலி திராவிடகட்சிகளை ஆட்சியிலிருந்து விரட்டிட இன்றைக்கு இருக்கும் ஒரே தீர்வு .. திமுக தான் தளபதிதான் என்பதை உணர்ந்து.. தீய மாபியா கும்பல்களின் பணத்தாசைக்கு இரையாகாமல் தமிழகம் ஒளிர .. தன்மானத்தோடு நம் வருங்கால சந்ததியினர் வாழவகைசெய்ய ஒருங்கிணைந்த இந்தியாவை பிடித்தாட்டும் மதவெறி கும்பல் தமிழகத்தில் எக்காலத்திலும் நுழையாவண்ணம் சிந்தித்துணர்ந்து தளபதி தலைமையில் நல்லாட்சி மலரும் காலம் தமிழகத்தின் விடியல் என்பதை உரக்க சொல்வோம் ..
..
பாசிசத்தை தமிழகத்தில் நுழைய அனுமதியோம் என்பதை உணர்த்த மோடியே திரும்பிபோ என முழங்குவோம் ..
..
ஆலஞ்சியார்
Wednesday, January 23, 2019
#PriyankaGandhi
Welcome
#priyankaGandhi ..
..
நீண்டநாள் எதிர்பார்ப்பு திருமதி.பிரியங்கா காங்கிரஸ் கட்சியின் அகிலஇந்திய பொதுசெயலாளராக நியமிக்கபட்டு
உ.பி.மாநில பொறுப்பு வழங்கபட்டிருக்கிறது ..
நீண்டநாள் மௌனம் ..நல்ல சந்தர்ப்பத்திற்காக காத்திருந்ததைப்போல
சரியான காலகட்டத்தில் அரசியலுக்கு வருகிறார் உ.பி.போன்ற மாநிலங்களில் காங்கிரஸை தூக்கி நிறுத்த இளம் தலைவர்கள் கையில் தந்திருக்கிறார்கள் அகிலேஷ் மாயாவதியின் நகர்வு இந்த முடிவை எடுக்கவைத்திருக்கிறது
சரியான தேர்வை தந்திருக்கிறது காங்கிரஸ் ..
..
வாரிசு அரசியல் குடும்ப அரசியல் என பழைய பல்லவியை பாடுகின்றனர் பாசிச பாஜகவினர் .. ஆம் தவறில்லை அரசியல் பிழைகளிடம் ..மதவெறியர்களிடம் .. ஆங்கிலேயன் சூ வை நக்கிய மன்னிப்பு கடிதம் தந்தவர்களிடம் ஆங்கிலேயனிடம் கு.க.மானியம் பெற்று சுகபோக வாழ்வு வாழ்பவரிடம் பாசிச சிந்தாந்தத்தை தூக்கி சுமந்து பூர்வீக குடிகளை நசுக்குகிறவர்களிடம் நாடும் மக்களும் படும்பாட்டை கண்டு நேரு குடும்பத்தாரிடமே நாடு செல்வதில் தவறேதுமில்லை .. அவர்கள் நாட்டிற்காக உழைத்தவர்கள் குடும்ப அரசியலை தாண்டி எளிமையாக அரசியல் செய்கிற இந்த நாட்டை மக்களை நேசிக்கிற ..பிரிவினை தூண்டி குளிர்காயாமல் தேசம் பல இனங்களால் ஆனது பல்வேறு கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்டதென்ற தெளிவும் மாட்டிற்காக மனிதனை கொல்லாமல் மதவெறியை தூண்டி மக்களை கொன்று குவிக்காமல்.. தேசத்தை கார்ப்பரேட்டுகளிடம் அடகுவைக்காமல் ஜனநாயக நெறிமுறைகளை குழிதோண்டி புதைக்காமல்
நேரிய வழியில் வெற்றி தோல்வி இரண்டையும் சமமாய் கருதும் காங்கிரஸ் நல்லதொரு தலைமையை எளிமையான உறுதியான நேர்மையான இளைஞர்கள் கையில் தந்திருக்கிறது
ராகுல் மிக எளிமையான தூய தெளிவான பார்வை கொண்டவராக தெரிகிறார் .. அவருக்கு உறுதுணையாக பிரியங்கா காங்கிரஸில் பொது செயலாளராக ஆனதில்
தவறில்லை சங்கிகள் கதறுகிறார்கள் ..கதறட்டும்
..
ஒருமுறை மோடி வழக்கான தன் பேச்சில் கிண்டல் செய்த போது ..நான்" ராஜீவ்காந்தியின் மகள்" என்று வாயடைக்க செய்தவர் .. இந்திராவின் சாயலும் அவரது திறமையும் இவருக்கு இருப்பதாக அப்போதிலிருந்தே ஊடகங்கள் ஒரு பிம்பத்தை மக்களிடையே கொண்டு சேர்த்திருக்கிறது ராகுல் அரசியலுக்கு வந்தவுடன் இவர் ஒதுங்கியிருந்தார் .. மோடியின் அவல ஆட்சிக்கு முடிவுகட்டும் நேரம் நெருங்கியவுடன் உ.பி.யில் களமிறக்கபட்டிருக்கிறார் சரியான நேரத்தில் மிக சிறந்த முடிவிது எதிரிகள் கூடாரம் பெருங்கூச்சல் இடுவதிலிருந்தே அவர்கள் பதறுவது தெரிகிறது ..நாடு பாசிசவாதிகளின் மதவெறி கும்பலிடத்தில் போலி தேசியவாதிகளின் கையில் சிக்கி சீரழிகிற நேரத்தில் காங்கிரஸ் ஒன்றே இந்த தேசத்தின் பாதுகாப்பு என்பதை உணர வேண்டிய காலம் .. இனத்தால் மொழியால் மதத்தால் தேசத்தை துண்டிக்க நினைக்கிற நாலாந்தர அரசியல்வாதிகளிடமிருந்தும் நாட்டை காவி நிறமாக்க நினைக்கும் கபோதிகளிடமிருந்தும் இந்தநாடு இந்துத்துவா பிடியிலிருந்து மீட்கவும் சமதர்ம சமூகநீதி செயல்பாட்டிற்கு ..எல்லோருக்கும் கல்வி வேலைவாய்ப்பில் சமநீதி கிடைக்க வழிவகுக்க காங்கிரஸ் ஒன்றே தீர்வென்று மக்கள் முடிவெடுக்க துணிந்த நேரத்தில் .. ராகுலின் கரத்தை பலபடுத்த இந்திராவின் பேத்தியை காங்கிரஸ் களமிறக்குகிறது ..
வரவேற்போம் ..
..
நாடு நலம்பெற நல்லாட்சி மலர்ந்திட
தீய மதவெறி சக்திகளிடமிருந்து .. பார்பனீய பாசிச சித்தாந்திகளிடமிருந்து நாட்டை காக்க
இந்திராவின் பேத்தியை வரவேற்போம்
..
Welcome #priyankaGandhi
..
ஆலஞ்சியார்
Tuesday, January 22, 2019
தன்நிலையறிதல் வேண்டும்
இனி எக்காலத்திலும் திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை .. அன்புமணியை முதல்வராக ஏற்கிறவர்களோடு மட்டுமே தேர்தல் கூட்டு .. இதெல்லாம் கேட்ட மாதிரி இருக்கா.. மருத்துவர் ராமதாஸ் அன்புமணி சொன்னவை தான் .. இவர்கள் தங்களின் வளர்ச்சிக்காக தங்கள் சமுதாயத்தை பலி கொடுப்பவர்கள் .. நானோ என் குடும்பத்தாரோ நாடாளுமன்றத்திற்கோ சட்டமன்றத்திற்கோ நிற்கமாட்டோம் என்று சொல்லிதான் வன்னிய சமூக மக்களிடத்திலே உறுதி தந்தார் காலபோக்கில் வளர வளர பதவி மீதான இயல்பான ஆசை மகனை அமைச்சராக்க கலைஞரின் தயவும் அதற்காக மாநிலங்களவை சீட்டும் கேட்டு பெற்றார்.. ஜெயலலிதாவோடு கூட்டணி வைப்பது .. என பேசகூடாததை பேசினார்
அதே ஜெயலலிதாவோடு மீண்டும் சேர்ந்தார் .. திரும்பவும் திமுக அதிமுக என மாறி மாறி முதுகிலேறி சவாரி செய்தவர் தானே குதிரையை ஓட்டலாமென்ற ஆசையில் ஏறி .. குதிரையின் வேகத்திற்கு தாக்குபிடிக்க முடியாமல் தூக்கியெறிபட்டார் .. இருப்பதும் போய் கூட இருந்த ஜெ.குருவும் இல்லையென்றவுடன் ஜெ.குருவோடு இருந்தவர்கள் .. ஏதேதோ காரணம் சொல்லி தனித்து நின்று அதிலும் எதிர்த்து நிற்கிறபோது பலத்த அடி எழவேமுடியாதவாறு விழும் என கருதி திராவிட கட்சிகளின் கருணை பார்வைக்கு காத்திருக்கிறார் ..
..
கட்சியை தன் சொந்த நலனுக்கு பயன்படுத்தி .. சமுதாய இளைஞர்களை சாதியெனும் குறுகிய வட்டத்திற்குள்ளேயே நிறுத்தி அதிலிருந்த மீளவிடாமல் மூளைச்சலவை செய்து பிற சமூகமக்களின் மீதான வன்மத்தை வளர்த்து விஷ விதைகளை மட்டுமே நட்டதால் இன்று தனித்துவிடபட்டு நிற்கிறார் .. யாருமே சீண்டகாணோம் ..சமூகநீதிகாவலரென்று சொல்லிக்கொண்டே காதல் திருமணத்தை சாதிமறுப்பு திருமணத்தை எதிர்த்து கொடூரமான செயல்பாடுகளை ஊக்குவித்து தன்னுடைய பாதை இதுதான் என தெளிவாக சொல்லி வந்ததன் விளைவு சொந்த சமூகமே இன்று புறந்தள்ள பார்க்கிறது .. விதைத்தே விளையும் ..
..
நாடாளுமன்ற தேர்தலில் யாரோடு கூட்டு என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை சிங்கத்தின் தலைமையில் ஆட்டுமந்தையாக செல்வதையே விரும்புவதாக சூசகமாக சேதி சொல்கிறார் யார் தலைமையேற்பாரென்று தெரியாத கூட்டணி வேண்டாமென முடிவெடுத்திருக்கிறார் .. தன் மருமகளுக்கு ஒரு எம்.பி சீட் கேட்பது அவரது தாளாரமனபான்மையை காட்டுகிறது .. அதிமுக அணியில் கூட இவர் கேட்பது கிடைக்காது எத்தனை என்பதை இனி இவர் தீர்மானிக்க முடியாது அந்த சூழல் இப்போதில்லை முன்புபோல் முரண்டுபிடிக்கமுடியாது கொடுப்பதை வாங்கிகொள்ள நேரிடும் .. இதேபோல் நிறைய உதிரி கட்சிகள் தங்கள் நிலையை அறியாமலேயே தங்கள் விருப்பபடி விரல்விட்டு எண்ணுகிறார்கள் ..ஆனால் கிடைக்காதென்று தெரிந்து அதற்கான வாய்ப்பில்லை என்று அறிந்தும்
ஏதோ தங்களுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதைப்போல பேசுகிறார்கள் ... தமிழகத்தில் மூன்றாம் நிலை வரை வந்த கட்சி தங்கள் செயல்பாட்டால் பேராசையால் பிரதான கட்சிகளின் கடைகண்பார்வைக்காக காத்திருக்க நிலை .. ஏறக்குறைய கெஞ்சுகிற நிலைக்கு வந்திருக்கிறார்கள் ..இப்படிதான் வைகோ ஒருசில இடங்களை தர மறுத்ததற்காக வேண்டாமென்று சென்றவர் கடைசியில் ஒற்றை இலக்கம் தான் தருவேன் என்று ஜெயலலிதாவால் அவமானபடுத்தபட்டார்.. அதீத ஆசையால் தேமுதிக எதிர்க்கட்சியாக வந்தது கடைசியில் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறது .. தேர்தலில் வெற்றி தோல்வியல்ல நான் சொல்வது கட்சியின் நிலை துடைத்தெறியபட்டாலும் வீழாமல் நிற்கவேண்டும் அதற்கு அடித்தளம் மிக சரியாக கட்டமைக்கபட்டிருக்கவேண்டும் ..
..
மாற்றம் முன்னேற்றம் என்ற சொன்னவர் திராவிடத்திற்கு மாற்று என பேசி திரிந்தவர் திராவிட கட்சிகளின் பார்வைக்காக காத்திருக்கிறார்..
#தன்நிலைஅறிதல்வேண்டும்
..
ஆலஞ்சியார்
Monday, January 21, 2019
கடவுள் மறுப்பு ..எங்கள் கொள்கையா
கடவுள் மறுப்பு எங்கள் கொள்கையா..
திமுக மீது தொடர்ந்து சுமத்தப்படும் குற்றசாட்டு அது இந்துக்களுக்கு எதிரான கட்சி .. பிற மத வழிபாடுகளை கேள்வி கேட்காமல் இந்துமதத்தை மட்டுமே விமர்சனம் செய்கின்றன .. உன்மையில் திராவிட இயக்கங்கள் எந்த மதத்தையும் கேலி கிண்டல் செய்வதில்லை ஆனால் அந்த மதத்தை சொல்லி பிரிவினை செய்வதையோ அல்லது ஒரு சமூகத்தை தாழ்த்தி அவர்களை அடிமைபடுத்துவதையோதான் எதிர்க்கிறது அவர்களின் உரிமைகளை அபகரிப்பதைதான் ஏன் என கேள்வி எழுப்பி ..அவனை சிந்திக்கவைக்கிறது
..
திமுகவை தொடங்கும் போதே ராமரை கும்பிடவும் மாட்டேன் அதற்காக தேங்காய் உடைக்கவும் மாட்டேன் என்றார் அண்ணா .. ஏன் பெரியாரே இந்த சமூகத்தில் நடக்கிற ஏற்றதாழ்வுகளை சமன் செய்யவேண்டுமென்பதற்காக தான் கடவுள் மறுப்பை செய்யவேண்டியிருந்தது .. சாதி சம்பரதாயங்களை ஒழிக்க வேண்டுமென்றேன் அது வேதத்தில் இருக்கிறதென்றார் வேதத்தை மறுப்போம் என்றேன் அது கடவுள் அருளியதென்றார் அப்படியெனில் அந்த கடவுளையே எதிர்ப்போமென செய்கிறேன் என்றார் .. மற்ற மதங்களில் ஏற்றதாழ்வில்லையா சாதியம் இல்லையா என கேட்போருக்கு ராசா தந்த பதிலே போதும்.. கிருஸ்துவர்களில் ஏற்றதாழ்வு உண்டு தனியாக அமர்த்தியிருக்கிறார்கள் தலித் கிருஸ்துவர் நாடார் கிருஸ்து என பேதம் உண்டு ..முஸ்லீம்களில் கூட பிரிவினை உண்டு சின்னி சியா சாதிய அடுக்கு உண்டு ஆனால் அங்கே யாரும் இது கடவுள் சொன்னதென்றோ அருளியதென்றோ,சொல்லவில்லை அவர்களின் வேதத்தில் இல்லை ஆனால் இங்குதான் கடவுள் அருளிய வேதத்திலே இருக்கிறதென்று சொல்கிறார்கள் என்றார் ..
ஏதாவது இந்துத்துவா சக்திகளின் செயல்களை கண்டித்தால் உடனேயே அதுகுறித்து பேசாமல் திராவிட இயக்கங்கள் ஏன் இஸ்லாமிய கிருஸ்துவத்தை விமர்சிப்பதில்லை என்கிறார்கள் அந்த மதங்களின் தாக்கம் அத்துமீறல் இந்த சமூகத்தை பாதிக்குமெனில் அப்போது எதிர்ப்போம்
மதத்தை சொல்லி பிழைப்பு நடத்தும் எல்லா மத சாமியார்களையும் கண்டிப்போம் மத பிரச்சாரம் செய்ய முனைவோரை ..அதை வைத்து கலவரம் செய்ய நினைக்கும் பயங்கரவாதிகளை ..நாட்டிற்கும் சமூகத்திற்கும் கேடுவிளைவிக்க நினைப்போரை எதிர்ப்போம் .. மதத்தை வியாபாரமாக்கி அரசியலாக்கி லாபம் செய்ய நினைப்போரையும் மதங்களை சொல்லி மக்களை பிரித்தாள செய்கிற கேடுகெட்டோரை அடையாளம் காட்டுவோம்
..
இன்றைய தினம் கூட லயோலா கல்லூரி "ஓவியம்"
ஒருவித பரபரப்பை நிகழ்த்தியிருக்கிறது மத சின்னங்கள் குறியீடுகளை எப்படி பயன்படுத்தலாம் என்று சிலர் கோபம் கொள்கிறார்கள் இந்த ஓவியங்கள் சில ஆயிரம் பேர் பார்த்து கடந்து போயிருப்பார்கள் ஆனால் அதை எதிர்த்து லட்சகணக்கானோர் பார்க்க வைத்த பெருமை இந்துத்துவா கோஷ்டிகளை சாரும் ... உண்மையில் இந்த ஓவியங்கள் ஏற்கனவே வெளிவந்தது சமூக வலைதளங்களில் வலம்வந்தது தான் அப்போதெல்லாம் இந்த "பார்பனர்கள்" (எச்.ராசா நாராயணன், கௌதமி ) பொங்கவில்லை பிறகேன் இப்போது இந்து மதத்தை கொச்சைபடுத்திவிட்டதாக பொங்கவேண்டும் .. காரணம் ஒரேயொரு படம் .. நூலால் 10% வரைந்தது .. பார்பன இடஒதுக்கீட்டை குறிக்கிறதென்பதால் லயோலாவிற்கெதிராக மதம்மாற்றம் செய்கிற தீய சக்தியென ஒப்பாரி வைக்கிறார்கள் ..அது உண்மையெனில் .. "சோ" ராமசாமி ..அய்யராகவே தான் இருந்தார் அதுவும் ஆர்எஸ்எஸின் ராஜகுருவாக.. அவர்களை தொட்டால் உடனே இந்துமதத்தை துணைக்கழைத்து கதறுவார்கள் .. நந்தினி கூட்டுபலாத்காரம் செய்யபட்டபோது அவளது யோனில் சொருகபட்டிருந்த போதெல்லாம் தெரியவில்லை அதற்காகவெல்லாம் இன்றைய யாரும் பொங்கவில்லை அவள் இந்துவல்ல..? நாட்டில் நடக்கும் இந்த பாசிச ஆட்சியின் செயலை தன் தூரிகையால் கலைஞன் வரைந்திருக்கிறான் .. இதே கேலிசித்திரம் என்ற பெயரில் பிற மதத்தை கேலிசெய்யும் போது அவர்கள் கடந்து போவதைப்போல கண்டுக்கொள்ளாமல் விட்டிருந்தால் இன்று உலகமே இந்த ஓவியங்களை கண்டிருக்காது ..
..
நோக்கம் இங்கே ஒரு அசம்பாவிதம் நடைபெறவேண்டும் .. மத மோதல் சாதிகலவரம் ஏதேனும் நடந்து அதன் மூலம் கட்சியை வளர்க்கவேண்டுமென்ற ஆசையோடு வருபவர்களுக்கு அதற்கான இடம் இதுவல்ல.. தினம் தினம் கொடூரமான வார்த்தை பிரயோகம் எதிர்போரை இந்துவிரோதி தேசதுரோகி என சொல்லிதிரியும் போதும் இங்கே அமைதியாய் இருக்கிறது பாருங்கள் அதற்கு காரணம் .. அறிவுடை சமூகமாய் எதையும் சிந்திக்கிற நாகரீகமாக செயல்படுகிற பகுத்தறிவுள்ள பக்குவமுள்ளவர்களாக, கருத்து சுதந்திரத்தை விரும்புகிற ஏற்கிறவர்களாக மக்களை மாற்றியதில் பெரும்பங்கு திராவிடத்தையே சாரும் .. என்னதான் மதவெறியை சாதிவெறியை தூண்ட நினைத்தாலும் அவர்களின் அரைகுறை செயலை கண்டுகொள்ளாமல் அவர்களை காமெடியர்களாய் எண்ணி கடந்து போகிறதே தமிழ் சமூகம் அங்குதான் திராவிடத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது ..
..
ஆலஞ்சியார்
Sunday, January 20, 2019
பாண்டேக்கள் பதறுகிறார்கள்
பொய் சொல்வதைவிட மௌனமாய் இருப்பது மேல் என்றார் புத்தர் ..
..
காமராஜர் கக்கன் போல மோடி எளிமையானவர் ரங்கராஜ் பாண்டே..
தந்தியிலிருந்து வெளியேறியவுடன் கல்லூரி மாணவர்களிடத்தில் உரையாற்ற தொடங்கியிருக்கிறார் தன்னை நடுநிலையானவன் என சொல்லி வந்தவர் வெளிப்படையாக மோடியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார் அது அவரது விருப்பம்.. ஆனால் பொய்களை இளைஞர்கள் மத்தியில் விதைக்கிறார் ..
..
காமராஜர் எளிமையாக இருந்தார் என்கிறார் மறுப்பதற்கில்லை ஆனால் அவரைச் சுற்றி இருந்தவர்கள் எல்லோருமே நிலக்கிழார்கள் (மிராசுகள்) பெரும்பணக்காரர்கள் ஜமீன்கள் அப்போதைய காங்கிரஸில் பெருந்தனக்காரர்களின் ஆதிக்கம்தான் இருந்தது அவர்கள் சொல் மட்டும் அரங்கேறும் அவர்கள் நலனுக்காக மட்டுமே செயல்பட்டது அப்போதைய அரசு .. ஏழைக்காக உழைத்திருந்தால் காங்கிரஸ் தமிழகத்தில் உயிரோட்டத்தோடு இருந்திருக்கும்.. ஆனால் திராவிட அரசு வந்த பிறகுதான் நில உச்சவரம்பே கொண்டுவரபட்டது.. சாமானியன் மீதான அக்கறை திமுக ஆட்சிக்கு பிறகே கிடைத்தது .. திரு.கக்கன் எளிமையானவர் யாரும் மறுக்கவில்லை அவரது சகோதரர் விஸ்வநாதன் ஆர்எஸ்எஸ் ஊழியர் என்பது தெரியுமா.. கக்கன் ஆணையிட்டுதான் மாணவர்கள் சுட்டுகொல்லபட்டார்கள் ..பழசை கிளறினால் முகம் கருத்து போகும்,..
அதுசரி ..
அவர்களோடு மோதியை ஏன் ஒப்பிடுகிறீர்.. ஏழைமகன் பொய்யிலேயே பிறந்தவர் அவரது பிறந்தநாள் தவறு .. அவரது கல்வி பற்றி தவறான தகவல் திரு.ராகுல் கூட ஒருமுறை பிரதமரோடு படித்தவர்களை தேடிக்கொண்டிருக்கிறேன் இதுவரை யாருமே கிடைக்கவில்லையென கிண்டல் செய்தார் .. ஏழைத்தாயின் மகன் ₹10 லட்சத்திற்கு கோட் அணிகிறார் காமராஜர் கடைசிவரை கதரே அணிந்தார் .. மோடியின் சிகை மற்றும் அலங்கார செலவு சிலகோடிகள் தான் .. just ₹1.5 லட்சம் mont blanc பேனா தான் உபயோகபடுத்துவார் ..இவர் எளியவராம் ..
..
பாஜக ஆட்சியை நிலைநிறுத்த பார்பனர்கள் பாடாதபாடுபடுகிறார்கள் .. வேலையை ராஜினாமா செய்துவிட்டு கல்லூரிகல்லூரியாக செல்கிறார் ..பாண்டே
குருமூர்த்தி பதறுகிறார் கதறுகிறார் அதிமுக எங்கே கை கழுவிவிடுமோ என்று..
அதிமுகவும் பாஜகவும் அடித்துக்கொள்ளாதீர்களென கொள்ளைபுறமாக அமைச்சரான நிர்மலா கெஞ்சுகிறார் இருக்கிற கொஞ்சநஞ்ச வாக்கையும் தமிழிசை வாய் கெடுத்துவிடுமென அஞ்சுகிறார்கள்
பழைய கூட்டாளிகளெல்லாம் கெஞ்சாத குறையாக அழைத்தும் யாரும் செவிசாய்க்க மறுக்கிறார்கள் .. அந்த பாவத்தை நாங்க ஏன் சுமக்கனும் என்று வெளிப்படையாகவே காறி உமிழ்ந்துவிட்டார் தம்பிதுரை .. அடிமைகள் கூட சிலிர்த்தெழுகிறார்கள் பாஜகவோடு கூட்டுவைத்தால் இங்கே இருப்பும் போய்விடுமென தமிழக கட்சிகள் அஞ்சுகின்றன ..ஆம் அது உண்மை தான் நோட்டாவை தாண்ட முடியாதவர்களை ஏன் சுமக்கவேண்டும் என்பதில் நியாயமிருக்கிறது ..
..
வெற்றி தோல்வியை நாம் பார்த்திருப்போம் இனி எந்த தொகுதிகளிலும் தோற்ககூடாது எல்லா தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும்.. கனிமொழி
கொஞ்சம் முயற்சித்தால் போதும் நாற்பதும் நமதே
..
ஆலஞ்சியார்
Saturday, January 19, 2019
பாசிச பாஜக
வேலை வாய்ப்பின்மையும் பண வீக்கமும் மிகவும் கடுமையாக அதிகரித்து விட்டது.
நாங்கள் கடுமையான துன்பத்தில் உள்ளோம்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வேதனை..?
..
கடைசியில் உண்மையை ஒத்துக்கொள்ள தொடங்கியிருக்கிறார்கள்.. ஆனால் அக்கா தமிழிசை மல்லுகட்டுகிறது .. ₹89 லட்சம் கோடி கடன் இந்த ஐந்தாண்டில் மட்டும் 49% விழுக்காடு அதிகரித்து எப்போதுமில்லாதளவு தடுமாற்றத்தை தந்திருக்கிறது பணமதிப்பிழப்பு மிகப்பெரிய தாக்கத்தை தந்து இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதலை தொடர்ந்து செய்கிறது .. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து 47% விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.. சிறுதொழில்கள் முடங்கிப்போய் முதலாளியாய் திரிந்தவன் கூலித்தொழிலாளியாய் ஆக்கிய பெருமை திரு.மோடிஜியை தான் சேரும்.. நான் என்ன பொருளாதார மேதையா என எதிர்கேள்வி கேட்கும் மோதிஜி.. பொருளாதார மேதைகள் வல்லுநர்களை கலந்தாலோசிக்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என ஒரே இரவில் இந்திய பணத்தை மதிப்பிழக்க செய்து கள்ள வியாபாரிகள் தங்கள் முதலீட்டை நல்ல பணமாக்க செய்ததுதான் கடைசியில் நடந்தது .. அப்போதே நாடாளுமன்றத்திற்க்கு வந்து திரு.மன்மோகன்சிங் எச்சரித்தார் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்துமென்றார் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாதென்றார் .. மோடி கேட்கவில்லை ..
..
சிறந்த பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளை எல்லாம் ஏற்க மறுத்து தான் தோன்றித்தனமாக செயல்பட்டதன் விளைவை மக்கள் உணர்கிறார்கள் இந்தியா முழுதும் இந்த ஆட்சிகிகெதிராக மக்கள் வெகுண்டெழுகிறார்கள் அதனால் தான் பொய்க்கு மேல் பொய் சொல்லி நாங்கள் நான்கரையாண்டை கழித்தவர் .. தளபதி கொல்கத்தாவில் முழங்கியது போல நூறு கூட்டம் என்றால் ஆயிரம் பொய் சொல்வார் ..கடைசியில் ஊழல் இல்லாத ஆட்சியாம் ..ரஃபேல் ஊழல் நாடுகடந்து சிரிப்பது தெரியாமல் .. 4ஜி ஒதுக்கீட்டை அரசின் பொது நிறுவனத்திற்கு தராமல் தனியாருக்கு தாரை வார்த்ததில் எவ்வளவு இழப்பு ..
A to Z ஊழல் வலைத்தளங்களில் இன்றைக்கு இருக்கிறது ..
..
தளபதி சொன்னதைப்போல நாடு மீண்டுமொரு விடுதலைக்கு தயாராக வேண்டும் இந்த பாஜக அரசு பார்பனர்களின் நலனை தவிர வேறெதையும் கவனத்தில் கொள்ளவில்லை .. உயர்பதவிகள் .. உயர்கல்வி என தொடங்கி எல்லா துறையிலும்
நாட்டின் பூர்வீக குடிகளின் மண்ணின் மைந்தர்களின் கல்வி வேலைவாய்ப்பை பறித்ததுதான் மிச்சம் .. இனியும் பூசிமெழுக முடியாதென்பதால் மோடியை பலிகொடுத்தாவது சித்தாந்தத்தை காக்க.. ஆர்எஸ்எஸ் தலைவர் பகவத்
"வேலை வாய்ப்பின்மையும் பண வீக்கமும் மிகவும் கடுமையாக அதிகரித்து விட்டது.
நாங்கள் கடுமையான துன்பத்தில் உள்ளோம். என்று நீலிகண்ணீர் வடிக்கிறார்
..
பாஜக ஆட்சியின் நாட்கள் எண்ணபடுகின்றன என்பதை நாட்டின் நடப்புகள் உணர்த்துகின்றன இனியும் பொய்களை நம்புவதில்லை..வாய்சொல்வீரரின் சொல் அலங்காரம் பித்தலாட்டம் நிறைந்தது இந்தியா கண்ட பிரதமரில் எங்கு படித்தார் என்ன படித்திருத்திரார் என்று தெரியாத அல்லது மறைக்கபட்ட வரலாற்றை இப்போதுதான் காண்கிறோம் .. ஒவ்வொரு அசைவும் பொய்யால் ஆனது .. இனியும் விட்டால் நாடு பின்னோக்கியே செல்லும். மதவெறிபிடித்த பாசிச கொடூரமனபான்மையோடு செயல்படுவோர் .. மாட்டின் நலன் மனித நலனைவிட பெரிதென்போர்..
பள்ளிகூடங்களை மாட்டு தொழுவமாக்கி மாணவர்களை தெருவில் நிறுத்துவோர்..
மாட்டிற்கு ஆக்ஸிஜனை தந்து பச்சிளங்குழநிதைகளை கொல்லும் மதவெறிபிடித்த மகாபாவிகள் ..கையில் நாடுபோனால்
குரங்கின் கையில் பூமாலையைப்போல ஆகிவிடும் ..
..
விரட்டுவோம் பாசிசபாஜகவை ..
..
ஆலஞ்சியார்
Friday, January 18, 2019
பார்பன இடஒதுக்கீடு
இன்னும் ஒரிரு மாதங்களில் தேர்தல் அதைப்பற்றியெல்லாம் கவலைபடவில்லை .. வாக்குவங்கி என்னாகும் .. பார்பனலாபி என்னவெல்லாம் இடையூறு செய்யும் ஊடகங்கள் எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்து வீழ்த்த நினைக்குமென்றெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பிற்படுத்தபட்டவர்களின் இடஒதுக்கீட்டை 50 ஆக்கு என கேட்கிறது பாருங்கள் அங்குதான் திமுக தன்நிலைபாட்டு உறுதியை காட்டுகிறது ..
..
உயர்ஜாதியினரில் பொருளாதார அளவுகோலில் 10% இடஒதுக்கீட்டை எதிரித்து திமுக வழக்கு..
உயர்ஜாதி ஏழைகளுக்கு .. மாதம் ₹66,000 (அறுபத்தாறாராயிம்) ரூபாய் வாங்கிற பரம ஏழைக்கு 10% விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கி முதல்நாள் (காபினெட்) மத்திய அமைச்சரவை ஒப்புதல் மறுநாள் நாடாளுமன்ற மக்களவை அதற்கடுத்த நாள் மாநிலங்களவை என விரைவாக நிறைவேற்றி .. உடனடியாக குடியரசுதலைவர் ஒப்புதலை பெற்று .. நடைமுறை படுத்த வேண்டுமென அதிலும் தனியார் நிறுவனங்களும் கல்வி வேலைவாய்ப்பில் பின்பற்ற வேண்டுமென அரசாணை பிறப்பிக்க முடிகிறதெனில் எத்தனை வேகமாய் பார்பனலாபி வேலை செய்கிறது ..
எந்தவொரு மசோதாவும் நாடாளுமன்ற விவாதித்திற்கு வரும்போது நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு விடுவதும் அதன் கருத்தை கேட்பதும் .. அரசியல்சாசன சட்டத்தை திருத்துகிற போது மாநிலங்களின் கருத்தை கேட்பதும் நடைமுறையில் உள்ள மரபுகள் ஜனநாயக நாட்டில் மாநிலங்களின் உரிமைகள் மீதான தாக்குதலாய் இதை கருதவேண்டும் ஏறக்குறைய எல்லாகட்சிகளும் வரும் தேர்தலை கருத்தில் கொண்டு மௌனம் சாதிக்கும்போதும்... வாக்குரசியலைவிட கொள்கை முக்கியம் நாட்டு மக்களின் நலன் மற்றும் உரிமைகளை பறிக்கும் செயலை ஆர்எஸ்எஸ் பின்புலத்தோடு இயங்கும் அரசு செய்ய துணிந்திருக்கிறது இது சமூகநீதிக்கு எதிரானதென்பதுமெ சட்டபடியாக ஏற்கதக்கதல்ல என்பதால் நீதிமன்றத்தை நாடுகிறது ..
..
யார் ஏழைகள் வருடம் ₹8 லட்சம் பெறுபவர் ஏழையாம் ஆனால் அரசு தனிநபர் வருமானமாக ₹29 பெறுகிறவனை வறுமைகோட்டிற்குகீழ் என வரையறை செய்திருக்கிறது .. வருமானவரியை கூட ₹ 2.5 லட்சத்திற்கு (இரண்டரை லட்சம்) மேல் சம்பாதிப்பவர்கள் சேர்க்கபட்டிருக்கிறார்கள் வருடம் ₹2.5 லட்சம் பெறுகிறவர்கள் பணம் உள்ளவர்கள் அதற்குமேல் வரி செலுத்தவேண்டுமென்கிறது .. ஆனால் உயர்ஜாதியினர் எட்டு லட்சம் சம்பாதிக்கிறவர் ஏழை அவருக்கு இடஒதுக்கீடு வழங்கு என்பதை எப்படி ஏற்கமுடியும் அரசியல்சாசனப்படி உயர்ஜாதிக்கு ஒரு இலக்கு மற்றவர்களுக்கு ஒரு இலக்கா வரையறயா..
..
பொருளாதார அளவுகோல் சட்டவிரோதமானதென்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிற நிலையில் ஏற்றதாழ்வுகளோடு உடைய பணமதிப்பு (எட்டுலட்சம்) எப்படி அளவாகமுடியும் இன்றைக்கு ஏழையாக இருப்பவன் .. இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல .. அது தொடர்ந்து நசுக்கப்பட்ட ஒடுக்கபட்ட மறுக்கப்பட்டவர்களின் உரிமையை அவர்களையும் இந்த சமூகத்தில் உயர்த்திவிட வேண்டுமென்ற நோக்கில் காலகாலமாய் உயர் வகுப்பினரால் அடிமைபடுத்தபட்ட சமூகத்தின் அவர்களுக்கான இடங்களை பகிரிந்து அவர்களையும் கல்வி வேலைவாய்ப்பு தரவேண்டுமென்பதற்காக உருவாக்கபட்டது .. முன்பெல்லாம் உயர்படிப்பு என்பதே ஏன் கல்லூரி கல்வி கூட மறுக்கபட்ட நிலையை மாற்றியது இந்த இடஒதுக்கீடு ஆனால் அப்போதுகூட மிகவும் ஏழைகளாக இருந்த பார்பனர்கள் உயர்கல்வியையோ உயர்பதவிகளையோ அடைய எந்தவித இடைஞ்சலும் அவர்களுக்கில்லை .. இப்போது கூட பிற்படுத்தவர்களுக்கான 27% விழுக்காடு உயர்கல்வி நிறுவனங்களில் மத்திய அரசால் நிரப்பபடாமலேயே இருக்கிறது .. ஆனால் இடஒதுக்கீடே இல்லாமல் பொதுபிரிவில் மற்ற இடஒதுக்கீடு வரம்பிற்குள் வராத ஜாதியினரை விட பார்பனர்களே அதிகம் பலன் பெறுகிறார்கள்
இப்போது கொண்டுவந்திருக்கிற 10% விழுக்காட்டில் கூட மற்ற பிரிவினரைவிட பார்பனர்களே அத்துமீறி இடம்பெறுவார்கள் .. பிற்படுத்தவர்களின் இடஒதுக்கீட்டை தனியார் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற தேவையில்லை ஆனால் உயர்ஜாதி பார்பனர் இடஒதுக்கீட்டை நடைமுறைபடுத்த வேண்டுமாம்.. இதிலிருந்தே இவர்களின் திட்டம் புரியும் எல்லாம் பார்பனமயமாக்க வேண்டும் ..
ஐந்தாண்டு பாஜக மோடி ஆட்சியில் பார்பனர்கள் ஏறக்குறைய எல்லா உயர்பதவிகளையும் ஆக்கரமித்திருக்கிறார்கள்.. இன்னும் போதாதாம் ..
..
திமுக சரியான முடிவை எடுத்து .. எதற்காக திமுகழகம் தொடங்கபட்டதோ அதன் நோக்கம் சிதையாமல் தேர்தல் வாக்கரசியல் எல்லாம் கணக்கில் கொள்ளாமல் உயர்ஜாதியினருக்கான பொருளாதார அளவுகோலை எதிர்ப்பது தன்நிலைபாட்டை மாற்றிக்கொள்ளாது என்பதை உணர்த்துகிறது.. தந்தை பெரியார்
தலைவர் கலைஞர் இருந்திருந்தால் தளபதியின் செயல் கண்டு ஆனந்தம் அடைந்து உச்சிமுகர்ந்திருப்பார்கள் ..
வாழ்த்துகள் தளபதி.. திராவிடனாய் தமிழனாய்
இந்த பேரியக்கத்தில் பயணிப்பதில் பெருமிதம் கொள்கிறேன் ..
..
#வெல்வோம்_சமூகநீதிகாப்போம்
#Social_justice
..
ஆலஞ்சியார்
Thursday, January 17, 2019
எம்ஜிஆர்
எம்ஜிஆர் பிறந்த தினம்..
ஜனவரி17..
..
நண்பர் கேட்டார் உங்கள் தலைவரின் நண்பரைப் பற்றி ஏன் எழுதவில்லை ..
எம்ஜிஆரை நல்ல கலைஞனாகவோ அல்லது சிறந்த அரசியல் ஆளுமையாகவோ என்னால் கருத முடியவில்லை சினிமா எனும் நிழற்கூடம் கற்பித்திருந்த மதிமயக்கும் மாயவலை என்போன்ற இளைஞர்களை வெகுவாக வழிகெடுத்ததென்பது உண்மை கவர்ச்சியும் அழகும் நிஜமென்று நம்பியதன் விளைவு அரசியலில் மிக பெரிய கேட்டை தமிழகம் கண்டது அதன் தொடர்ச்சியை இப்போதும் அனுபவிக்கிறோம்,..
..
இன்றைய தினம் அவரை புகழ்ந்து போலித்தனமாக எழுத இயலவில்லை.. இன்றைய தமிழர்களின் சங்கடங்களுக்கு காரணியாக இருந்தவர் எந்த தொலைநோக்குமில்லாது ..மனிதர்களை ஏழைகளாக வைத்திருக்கவேண்டுமென்று நினைத்தவர்.. சுயசிந்தனையற்றவர்களாக சினிமாத்தனத்திலேயே தமிழ்மக்களை மாயவலையிலேயே வைத்திருந்தவர்..
திராவிடர்களை தமிழர்களை ஆரியர்களின் கைகளுக்குள் மீண்டும் கொண்டுசேர்த்தவர்.. இவர்களின் கைபாவையாகவே கடைசிவரை இருந்தார்.. பாசிசத்தின் பரிவும் கனிவும் இவரைப்பற்றிய பிம்பத்தை ஊதிபெரிதாக்கின
திராவிடத்தை வீழ்த்த பயன்படுவாரென்று கணக்கிட்டே இவரை உயர்த்திபிடித்தார்கள்
இன்றைக்கு பொருளாதார அளவுகோலில் இடஒதுக்கீடு மத்திய அரசால் கொண்டுவரபட்டிருக்கிறதே .. அதை முதன்முதலில் இவரை கொண்டு சமூகநீதி பேசும் மாநிலத்தில் எந்த கொள்கைக்காக திராவிட இயக்கம் தோன்றியதோ அந்த இயக்க பின்னணியில் இருந்த வந்த எம்ஜிஆரை கொண்டே நடைமுறைப்படுத்த ஆர்எஸ்எஸ் துணிந்தது அதற்கு எம்ஜிஆர் துணைபோனார்
இந்தியாவிலேயே முதன்முதலில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீட்டை கொண்டுவந்தார்.. அதன் விளைவு
அப்போது நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு இடங்கள் தான் அவரால் வெல்லமுடிந்தது
..
நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தவுடன் கடைசிவரை காங்கிரஸை கைவிடாமலேயே அவர்களின் பாட்டுக்கு ஆடினார்...இந்திராவின் சாவும் அவரது நோவும் கடைசிவரை கைகொடுத்தது.. மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர.. அப்போது கூட சிறந்த திட்டங்களை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்கள் செயல்படுத்தவில்லை..
தமிழகத்தின் ஒரளவு நாகரீக அரசியல் செய்திருந்தாலும் காழ்புணர்வு அரசியல் வர காரணமாக இருந்தவர்.. கலைஞரோடு யாராவது சந்தித்தாலே கட்டம் கட்டி விலக்கிவைப்பார் இதற்காகவே கலைஞரை சந்திப்பதையே தவிர்த்தார்கள் .. சீமானின் மாமியார் மதுரையில் கலைஞருக்கு கட்அவுட் வைத்து வரவேற்றதும் ..உடனே காளிமுத்துவை விலக்கி வைத்தார் .. அவரை புகழ்ந்தவர்களுக்கு இதயக்கனியாக இருந்தார் என்பதை மறுக்க முடியாது.
..
யார் இந்த எம்ஜிஆர்..
அவரின் மறுபக்கத்தை மிக சுவாரஸ்மாக ரசிக்கலாம்.. வெளிப்புற தோற்றம் அழகால் ஆனது ஆனால் உட்புறமோ..
வேறெங்கும் விடைதேட தேவையில்லை..
திரு.ஜேப்பியார் சொன்ன விடயம் ஒன்றே போதும் எம்ஜிஆர் என்னிடம் திரு.சோபன்பாபு கஸ்டடியில் இருக்கிறார் அவரை அழைத்துவரவேண்டுமென பணித்தார் நான் தான் அவரை மிரட்டி அழைத்து ஒரு இரவு என்னோடு வைத்திருந்துவிட்டு பிறகு பொன்மன செம்மலிடம் ..? ஒப்படைத்தேன் என வெளிப்படையாகவே சொன்னார்
ஜெயலலிதாவை குடும்ப வாழ்விற்குள் செல்லவிடாமல் அழுத்தம் தந்து கடைசிவரை ஜெயித்தவர் மகோரா..
..
அரசியலில் அவரது பயணம் விமர்சனத்திற்கு உரியதென்றாலும் சினிமா நடிகனாக மிகப்பெரிய வெற்றியை தன்னிடம் மட்டுமே வைத்திருந்தவர் தமிழ்சினிமா ரசிகனின் மனநிலையை அறிந்து செயல்பட்டவர் எம்ஜிஆர் பார்முலா இன்றுவரை வெற்றிபெறுகிறதே அதிலிருந்தே மறைக்கமுடியாத சினிமாகலைஞராக நூற்றாண்டு பின்னிட்டும் திகழ்கிறார்.. நல்ல நடிகனா சிறந்த நடிகனா என்பதைவிட #வெற்றி_நடிகர் என்று அழைக்கலாம்
தமிழ்சினிமா வரலாற்றை யாரை மறுத்து மறந்து எழுதினாலும் மகோரா எனும் எம்ஜிஆரை மறுத்தோ/மறந்தோ எழுதிவிடமுடியாது..
..
#தமிழ்சினிமாரசிகனின்_இதயக்கனி...
..
ஆலஞ்சியார்
Wednesday, January 16, 2019
பாவம் கடவுளர்கள்
2018 ம் ஆண்டில் சுவிஷேச பெரு விழாவில் பேசும் போது 2019 ம் ஆண்டில் மோடியே பிரதமர் ஆவார் என்று இயேசு கிறிஸ்து தம்மிடம் கூறியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்..திரு.பால் தினகரன்..
இந்த ஆண்டு 2019 புத்தாண்டு அன்று இந்திய தேசத்தை இளம் தலைவர் ஆள்வாரென ஏசுநாதர் சொன்னதாக சொல்கிறார். இந்த இளம் தலைவருக்கு தென்னிந்திய மாநிலங்களில் இருந்து பெரும் ஆதரவு கிடைக்குமென்றும் தென் இந்திய பிரதிநிதிகள் பெரும் பொறுப்பை வகிப்பார்கள் என்கிறார்..
அதாவது 9 மாதத்தில் இயேசுநாதரே குழம்பிப்போய் இரண்டு விதமான கருத்துக்களை திரு. பால் தினகரன் இடம் கூறியிருக்கிறார் .. பாவம் ஏசு..
..
ஏமாற்றுகிறவர்கள் தங்கள் நாவால் தான் பலியாவார்கள் .. பால் தினகரனென்றில்லை
கடவுள் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துகிறவர்கள் .. நானே கடவுள் என்பவன் .. நானே நேர்வழியை சொல்கிறவன் என்பவன் .. நான் சொல்வதே சத்தியமார்க்கம் நாங்கள் மட்டுமே நேர்வழியில் சத்தியத்தில் இருக்கிறோம் என்கிறவன் இவர்களெல்லாம்
"மகா அயோக்கியர்கள்" .. தங்களின் நிறுவனங்கள் ..சொத்துகளை காத்துக்கொள்ள யாருக்கெல்லாம் மக்கள் ஆதரவிருக்கிறதோ அவர்கள் வெல்வார்களென சொல்லி அதற்கு .. அவர்கள் கடவுளரை காரணம்காட்டி தன்னை நம்புகிற நேசிக்கிற பின்பற்றுகிற மக்களை முட்டாளாக்கிறார்கள் .. யார் வெல்வாரென யேசுநாதருக்கு தெரிந்திருக்கிறது எனில் ஒன்பது மாதத்திற்கு முன்பே கணிக்கமுடியவில்லை அல்லது பிழையாக கணக்கிட்டுயிருக்கிறார் ஏசுநாதர் நம்ம
#குமாரசாமியை போல..
எல்லாம் தெரிந்த கடவுள்.. ஒன்பதுமாதத்திற்கு பிறகு வரும் மாற்றம் தெரியவில்லை.
..
பொங்கல் இஸ்லாமியருக்கில்லை என புதியதொரு ஜமாத் தலைவர் அல்ஃதாபி அருளியிருக்கிறார் அது பெரும்பாவமென்று வேறு பத்வா கொடுக்கிறார்.. இவர்களின் யோக்கியதை ஊர் சிரித்தது அதையெல்லாம் நாம் பேச தேவையில்லை இவர்கள் வகுத்த இஸ்லாமிய கலாச்சாரமென்பது அரேபிய கலாச்சாரம் .. இஸ்லாம் பொது மார்க்கமென சொல்லும் போது உலகாளவிய மக்களின் பண்பாட்டோடு அவர்களின் வாழ்வியலோடு தாக்கத்தை தரும் மாறுபடுமென்றால் அது காலத்தால் அடிபட்டுபோய்விடும் .. அந்தந்த மண் சார்ந்த விடயங்களில் பண்பாட்டு நிகழ்வுகளில் மதம் தலையிட முடியாது பொங்கல் வைப்பதோ நன்றிபாராட்டுவது வழிபாட்டில் வராதென இவர்களுக்கு யார் புரியவைப்பது .. இங்கே யாரும் சம்பூரண மார்க்கத்தை கொண்டுவருவேன் என சொல்லி திரிந்தால் கடைசியில் அந்த சமுதாயத்தாலேயே மானங்கெட்டு போகநேரிடும் .. வணக்கத்திற்கும் வழிபாட்டிற்கும் வேற்றுமையை உணரவேண்டும் .. எந்தவொரு மதமும் தனிமனிதனை கட்டாயபடுத்துமெனில் அது அவனை விட்டு சற்று விலகியே போகும் ..
இங்கே கட்டாயமில்லை யாரையும் கட்டுபடுத்தவில்லை நன்மையை போதிக்கிறோம் ..என் வழி எனக்கு உன் வழி உனக்கென்றால் மட்டுமே நிலைக்கும் மக்களை கவரும் பரவும் .. சிந்திக்க சொன்ன "மார்க்கத்தில்" இப்படி சில சில்லரைகளால் சீரழிவு வருகிறது..
..
கடவுள் பெயரில் கல்லாகட்டுதல் "சிறந்த" தொழிலாகிவிட்டது .. மூளைச்சலவை செய்து எல்லாவற்றிக்கும் தலையாட்டுகிற கூட்டத்தை .. அவர் சொல்வதே வேதவாக்கு என நம்பவைத்திருப்பதில் தான் அவர்களின் வெற்றி அடங்கியிருக்கிறது .. ஏன் எதற்கு எப்படி அது சரியாகுமென கேட்காதவரை "தெய்வத்தின் குரலாய்" .."தெய்வத்தின் வாக்காய்".. "சத்திய மார்க்க போதகராய்" பிழைக்க தெரிந்தவர்கள் வந்துகொண்டே இருப்பார்கள் .. அவரவர் சமுதாயத்தை வழிகெடுத்துக்கொண்டே இருப்பர்..
..
ஞானம் பெரிது ..
உன் அறிவு விசாலமானது
உன் நீ நம்பு ..
எதையும் ஆய்ந்து அறி
Wisdom is great ..
Your knowledge is spacious
Trust your belief
Explore anything..
..
ஆலஞ்சியார்
Tuesday, January 15, 2019
பாஜகவும் பொய்யும்
தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் புத்திபேதலித்ததைப்போல பேசவைக்கிறது
தான் வகிக்கிற பதவியின் கௌரவம் தெரியாமல் மூன்றாம்தர அரசியல் செய்கிறார் மாண்பிமை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
காங்கிரஸ் தலைவர்கள் மோடி அரசினை நீக்குவதற்கு பாகிஸ்தானிடம் உதவி கேட்டு கீழ்த்தரமான அரசியல் செய்கிறார்கள் என்கிறார் ..
இவ்வளவு பெரிய பொய்யை நிர்மலா சீதாராமன் எந்த அடிப்படையில் இவ்வளவு பெரிய பதவியில் இருந்து கொண்டு நாவு கூசாமல் எந்த விதத்திலும் எந்த வித ஆதாரமும் இல்லாமல் கூற முடிகிறது என்பதை எம்மால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை பொய் சொல்வது அரசியல்வாதிகளுக்கு பழகியதுதான் ஆனால் பொய் மட்டுமே மூலதனமாக செயல்படுகிற கட்சி பாஜகதான் ..
அதற்காக கொஞ்சம் கூட வெட்கபடுவதில்லை
ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில்
இதே விதமான ஒரு குற்றச்சாட்டுகளை பிரதமர் வேட்பாளராக இருந்த
மோடி தேர்தலில் பிரச்சாரத்தில் சொன்னார் அதுவும் மன்மோகன் சிங் மீதே குற்றம் சாட்டினார் கடைசியில் பொய் சொன்னதாக நிரூபணமானது இவ்வளவு கீழ்த்தரமான கேவலமான அரசியலை பாஜக செய்து கொண்டு ...ஆனால் காங்கிரஸ் கட்சி மீதே குற்றச்சாட்டுகளை கூறுவது நகைப்பிற்குரிய மட்டுமல்ல இழிசெயலும் கூட..
..
துபாயில் ராகுல் மூன்று இடங்களில் பேசினார் ..
பாஜக IT Link .. ராகுல் ஒரு சிறுமி கேள்வி கேட்டதாகவும் பதில் சொல்லமுடியாமல் தவித்ததாகவும் உடனே நேரலை நிறுத்திவிட்டதாகவும் கதை சொன்னது .. அதை தினமலர் தினகரன் போன்ற பத்திரிக்கைகள் செய்தியாக்கின உண்மை என்னவென்று ஆராயாமல் கடைசியில் அசிங்கப்பட்டன.. ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டுமா என காங்கிரஸ் மௌனம் காத்தது பைத்தியங்களின் உளறலும் பதில் சொல்ல தேவையில்லையென அமைதிகாத்தது .. கடந்த முறை பொய்களை மட்டுமே மூலதனமாக்கி வென்றவர்கள் இப்போது எதை சொன்னாலும் மக்கள் நொடிக்குள் திருப்பிதாக்குகிறார்கள் .. குஜராத்போல இந்தியாவை ஆக்குவேன் என்றபோது ஆஹா என புகழ்ந்தவர்கள் கடைசியில் குஜராத்தே சந்திசிரித்ததை அறிந்தோம்..
..
நாடிடில் ஊழலை ஒழித்துவிட்டதால் எதிர்கட்சிகள் என் மீது கோபத்தில் உள்ளனர் என்கிறார் பிரதமர் மோடி .. நல்ல நகைச்சுவை
ரஃபேல் விமான ஊழல் அது வேறங்க.. நாசுக்கா திருட்டுத்தனம் பண்ணுன்னா தப்பே இல்லைங்க.. ? அப்படிதானே..
பொய் நின்று கொல்லும் என்பதை அறியாது
மேலும் மேலும் பொய்யாலேயே அரசை நடத்தலாமென எண்ணுகிறார் .. மக்கள் இந்த அரசின் மீது கடுங்கோபத்தில் இருப்பது அறியாமல் .. இந்த முறை போட்டாஷாப் .. பொய்பிரச்சாரம் ஊடகங்களின் ஜால்ரா கைகொடுக்காது .. காரணம் எல்லாருடைய கைகளிலும் இணைய இணைப்பு இருக்கிறது நிமிடத்திற்குள் சொல்வது பொய்யா மெய்யா என அறுந்துக்கொள்ளும் வசதி வந்துவிட்டது அதோடு விழிப்புணர்வும் ..
..
மோடியின் பாஜகவின் ஆர்எஸ்ஸின் முகமூடி கிழிய தொடங்கியிருக்கிறது .. இந்த அரசு
மக்களுக்கான அரசல்ல கார்ப்பரேட்களுக்கான..பெரும்பணக்காரர்களுக்கான பார்பனர்களுக்கான அரசென்பதை மக்கள் உணர்ந்து தெளிந்திருக்கிறார்கள் .. பாஜகவை வீழ்ந்த தயாராகிவிட்டார்கள்..
பாசிசம் வீழும்..
..
ஆலஞ்சியார்
Monday, January 14, 2019
சித்திரை தமிழ்ப்புத்தாண்டா
சித்திரை புத்தாண்டான வரலாற்று ..
..
காம வேதனை வாட்டி வதைக்க நாரதர் கிருஷ்ணனிடம் நீர் கொஞ்சி குலவும் அறுபதாயிரம் மங்கையரில் யாரையாவது தாரும் என வேண்டுகிறார்.. உடனே கிருஷ்ணரும் எந்த மங்கையர் மனதில் நானில்லையோ அவளை எடுத்துக்கொள் என்கிறார்.
ஆண்டவனின்..? அருள்வாக்குப்பெற்ற நாரதரும் வீடுவீடாக அலைந்தும் எல்லா பெண்களும் கிருட்ணனின் மயக்கத்திலேயே இருப்பது கண்டு .. மீண்டும் கிருஷ்ண பரம்மாத்மாவிடமே வந்து
'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். என்னை இவ்வாறு சோதிக்கலாமா? காம வேட்கை எனை வாட்டுகிறது. என்னைப் பெண்ணாக மாற்றி நீரே என்னை அனுபவித்து என் வேட்கையைப் போக்க வேண்டும்"' என வேண்டினாராம்..
பரிதாபப் பட்ட பகவானும்..? அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார்.
அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது.
இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத்தில்..? நாட்டமுள்ள தமிழர்கள் ஆறஅமர அலசிப் பார்க்க வேண்டும்.
பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக மூன்றாவது ஆண்டின் பெயரான ""சுக்கில"" ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.
இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வரலாற்றக் கொண்டுவந்து தமிழனின் தலையில் கட்டிவைத்தது ஆரிய சூழ்ச்சியல்லாமல் வேறென்ன.. இதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பறைசாற்றுவதில் உண்மையும் நேர்மையும் இருப்பதாகத் தோன்றவில்லை. வரலாற்றில் மாபெரும் சருக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகிறது...
மறைமலை அடிகள் தலைமையில் தமிழறிஞர்கள் கூடி .. தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாட வேண்டும் அதுவே பழந்தமிழர்கள் கொண்டாடியதென சொல்லி .. திருவள்ளுவராண்டை கணக்கீடாக கொள்வதென தீர்மானித்தனர் .. அதன் படி திருவள்ளுவராண்டு 2050 தை முதல் பிறக்கிறது..
..
அதனால் தான் எங்கள்
பெருங்கவிஞன் பாவேந்தர்
நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரையல்ல உனக்கு புத்தாண்டு
அண்டி பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவிக்கொவ்வா அறுபதாண்டுகள்..
தரணி ஆண்ட தமிழனுக்கு
தைமுதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு
என்றார்..
..
#தைமுதல்நாள்_தமிழ்ப்புத்தாண்டு
..
அனைவருக்கும் #தமிழ்ப்புத்தாண்டுவாழ்த்துகள்..
..
ஆலஞ்சியார்
அண்ணா தமிழ்நாடு தந்தார்
மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என மாற்றிவிட்டேன் .. இனி யாராண்டால் என்ன இந்த அண்ணாதுரை ஆள்வதாகதான் அர்த்தம்
பேரறிஞர் அண்ணா..
14 ஜனவரி 1969 மிக முக்கிய வாய்ந்த நாள் தமிழ்நாடென பெயரிட்டு தமிழ் மண்ணின் மணம் மாறாமல் செய்தார் ..
வழக்கம்போல் ராஜா கோபாலாச்சாரி நாடென்று பெயர் வைக்கிறாரா பிரிவினைக்கு வழிவகுக்குமென டெல்லியில் அழுத்தம் தந்தார் .. அப்போது அண்ணா சொன்னார் .. மன்னிக்கவும் இந்தியா என்பது ஒரு நாடல்ல பல்வேறு இன கலாச்சார மக்களின் ஒருங்கிணைந்த தேசம் என்றார் ..
இந்த மண் எங்களுடையது .. ஆம் ஒருமுறை அம்பேத்கர் ..
இந்த மண்ணை யாரும் உரிமை கொண்டாட முடியாது அப்படி கொண்டாடுவதாக இருந்தால் இந்த மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் தான் உரிமை கொண்டாடமுடியும்
என்றார் ..
..
வரலாற்று சிறப்புமிக்க பெயர் மாற்றம் தமிழர்களின் தனி சிறப்பை உணர்த்தியது தமிழ் நாடென்று பெருமை சேர்த்தார்.. அண்ணா சுயமரியாதை திருமணத்தை சட்டபூர்வமாக்கியதும் .. தமிழ்நாடு பெயர் மாற்றமும் வரலாற்றில் பெருமைதக்க ஒன்றாகவே அமைந்தது .. சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கியதில் வரலாறு பின்னணி உண்டு.. திராவிட கழகத்திலிருந்து பிரிந்து முன்னேற்ற கழகம் காண பிரதான காரணிகளில் ஒன்று சுயமரியாதை திருமணம் .. உச்சநீதிமன்றம் சுயமரியாதை திருமணத்தை ஏற்காததோடு அது தகாத உறவென்று தீர்ப்பு சொன்னது .. சட்டபடியாக அங்கீகரிக்க மறுத்தது .. அப்போதுதான் சட்டமியற்றுகிற இடத்தில் நாமிருக்கவேண்டும் அதற்கு தேர்தல் அரசியல் அவசியம் ..என்றார் அண்ணா
மூன்று முக்கிய சட்டதிருத்தம் சுயமரியாதை திருமண சட்டம் தாய் தமிழ்நாடு பெயர் மாற்றம் .. இருமொழிக் கொள்கை இந்தியை தவிர்த்து தமிழ் ஆங்கிலம் .. அப்போது பேசிய அண்ணா .. சிலருக்கு எரிச்சல் வருகிறது கோபம் கூட வரும் இந்த ஆட்சியை தூக்கியெறி வேண்டுமென நினைக்கலாம் அது உங்களால் முடியும் .. வேறு யாராவது ஆட்சிக்கும் வரலாம் வந்து நான் கொண்டு வந்ததை மாற்றவேண்டுமென நினைத்தால் மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சம் வரும் அந்த அச்சம் இருக்கிறவரை இந்த அண்ணாதுரை ஆள்வதாக தான் பொருள் .. என்றார் ஆம் இப்போதும் கூட அண்ணா தான் ஆண்டுக்கொண்டிருக்கிறார்.. திமுக அல்லது அண்ணாவின் பெயர் தாங்கிய கட்சிதான் ஆளும் .. அண்ணாவை மறந்த தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது
..
திராவிடம் என்ன செய்தது ..?
தமிழ்நாடென்று பெயர் சூட்டியது சுயமரியாதையோடு வாழும் வாழ்க்கையை தந்தது அறிவைக் கொண்டு எதையும் சாதிக்கலாம் என்றது .. தாய்மொழியை பிறமொழி ஆதிக்கத்திலிருந்து காத்தது .. இருமொழி கொள்கையை அண்ணா சட்டமாக்காவிடில் .. குஜராத்தியரைப் போல மராட்டியரைப் போல தங்கள் மொழியின் வளத்தை இழந்து இந்தி ஆதிக்கத்தின் கீழ் வளமிழந்த மொழியின் பிள்ளையாய் ஆகியிருப்போம்..
தாய்க்கு தலைமகன் பெயர் சூட்டிய நாள் .. இன்று அந்த தலைமகனை தவமகனை போற்றுவோம்
தமிழ் நாடு பெயர் மாற்றி பொன்விழா ஆண்டு இந்த நன்நாளில் அண்ணாவின் புகழ்பாடுவோம் ..
வாழ்க! அண்ணா..
..
ஆலஞ்சியார்
Sunday, January 13, 2019
கலைஞர் ஜெயலலிதா
கலைஞர்.. ஜெயலலிதா
..
கலைஞர் மறைந்தார் தமிழகமே எழுந்துநின்று கைகூப்பியது .. இன்றுவரை அவரின் புகழ்பாடபடுகிறது .. ஒவ்வொருதுறையினரும் தாங்கள் அடைந்த பயன் .. அந்த துறையால் சமூகம் கண்ட பலன் என பெருமையோடு நினைவுகூர்கிறார்கள் பல்வேறு துறையின் ஆளுமைகள் இவரை போற்றுகிறார்கள் வாழ்ந்த காலத்தில் வசைமொழியால் இம்சித்தவர்கள் கூட இயல்பான தலைவன் .. இதுவரை இப்படியொரு தலைவனை நாடு கண்டதில்லை என்கிறார்கள் .. மருத்துவர்கள் ஆசிரியர்கள் அறிவியலாளர்கள் கல்வியாளர்கள் என இந்த சமூகத்தின்பால் அக்கறையுள்ளவர்கள் .. இவரின் வாழ்வு வருங்காலத்தினருக்கு பாடமாய் அமைய வேண்டுமென்கிறார்கள் .. எத்தனை வலிகள் விமர்சனங்கள் குற்றசாட்டுகள் ஊடகங்களின் தொடர் தாக்குதல்கள் என அத்தனையும் ஏற்று புன்முறுவலோடு "அறம்வெல்லும்" என நம்பிக்கையோடு வாழ்ந்த மேதை .. அவரின் திட்டங்களை கண்டு பயன்பெற்றவரும் கேலிபேசிவரும் இப்போது எவ்வளவு சரியாக யோசித்திருக்கிறாரென மகிழ்கிறார்கள் .. இப்படியொரு தலைவனை தாம் தவறான செய்திகளால் வேண்டாமென வைத்தோம் என வெட்கபடுகிறார்கள் .. எல்லாம் வெளிப்படையாக வாழ்ந்த மனிதர் ... அரசு அதிகாரத்தில் இருந்த போதும் எவரும் சந்திக்கலாமென்ற இயல்பை கொண்டவர் எதற்கும் அஞ்சாத நேர்நடை கொண்ட பெருமகன் ..
..
ஜெயலலிதா
வாழ்ந்த போதும் மறைந்த பிறகும் வசவுகளால் வேட்டையாடபடுகிறார் .. ஒரு நல்ல தலைவராக அவரால் ஜொலிக்கமுடியவில்லை குற்றசாட்டுக்கள் நிரூபணமாகி முதல்வராக இருந்த போதே தண்டனை பெற்ற முதல்நபர் ஆட்சி அதிகாரத்தை தன் சுயநல தன்னை சார்ந்தோரின் நலனுக்காக மாற்றியமைத்தவர்
எதிர்போரை வழக்கு விசாரணை என்று மிரட்டியவர் கருத்து சுதந்திரத்தை தர மறுத்து ஒருவித கோழையைப்போல நடுங்கியவர் .. வழக்கை கண்டு அஞ்சி 18 ஆண்டுகாலம் இழுத்தடித்து கடைசியில் தோற்றுப்போனார் .. தன் கட்சியினரை கூட அறிவார்ந்தவர்களாக நடத்த தெரியவில்லை அமைச்சர்கள் ஒவ்வொருவரின் பேச்சை கேட்கிற போது என்னமாதிரி தொண்டர்களை ஒருவாக்கியிருக்கிறார் என்று வியப்பாக இருக்கிறது முட்டாள்களை மட்டுமே,தேர்வு செய்து தன்னோடு வைத்திருந்திருக்கிறார் .. கொலை கொள்ளை என அமைச்சர்கள் தனி ராஜ்யமே நடத்தியிருக்கிறார்கள்.. கொள்ளையடிப்பதையே குறிக்கோளாய் கொண்டவர்கள் இன்று கொலைப்பழி சுமந்து நிற்கிறார்கள் .. விதைத்ததெல்லாம் வீண் என்பதைப்போல மொத்தமும் நாசமாய் போகிறது .. ஒரு கட்சி ஏறக்குறைய 30 வருடங்கள் அதிகாரத்தில் இருந்த கட்சியை தமிழகத்தில் முகவரியே இல்லாத கட்சி பயமுறுத்துகிறது .. அடிமைகளைப் போல தலையாட்டுகிறார்கள் ..
..
தமிழகம் மிக கொடுமையான ஆட்சியாளர்களின் கையில் சிக்கி சீரழிகிறது ..
நல்ல தலைவர்களை தந்த தமிழகம் இன்று நெறிகெட்டவர்கள் கையில் .. எதையும் வாங்கிவிடலாம் என்ற நிலை... எதற்கும் ஒரு விலை என்கிற மனபான்மை .. விற்க தயாராகிய மக்களின் மனநிலை பேரழிவை சந்தித்திருக்கிறது .. நாடு போற்றிய நன்னெறியாளர்களை தந்த தமிழகம் .. இன்று கழிசடைகளின் கையில் .. இதற்கெல்லாம் காரணம் ஜெயலலிதா அம்மையார் ..
இன்னும் அசிங்கபடவேண்டியிருக்கும்.. இவர்களை அரசியலில் இருந்து அப்புறபடுத்துகிறவரை..
..
ஆலஞ்சியார்
Saturday, January 12, 2019
கொடநாடு ஜெயலலிதா
மர்மங்கள் நிறைந்த வாழ்க்கை ஜெயலலிதாவுடையது ..
சந்தியாவின் மகளாக திரை உலகில் நுழைந்தபோதே நிறைய சமரசங்களுக்கு உடன்பட்டார் ..சந்தியா திரையில் தான் அடையமுடியாத உயரத்தை அடையவேண்டுமென்பதற்காக நிறைய நிர்பந்தித்தார் .. தாயோடும் மகளோடும் கேடுகெட்ட மகோராவின் லீலைகள் அவரின் வாழ்வை மிக ரணமாக்கியது .. ஜெயலலிதா மிகவும் கொடுரமனபான்மைக்கு யாரையும் அடிபணிய வைக்கவேண்டுமென்று யாருக்கும் அடங்காத அதேவேளை யாரையும் சட்டை செய்யாது செயல்படும் நிலைக்கு ஆளானார் ..
திரைத்துறை புகழை நிலைநிறுத்த வேண்டி மகோராவோடு நடித்தபோதும் ஒரு குறிப்பிட்டகாலத்திற்கு பிறகு நடிகர்களோடான உறவு .. அது எம்ஜிஆரின் கோபத்திற்கு ஆளாகி நிறைய இழந்து பாதிப்புக்குள்ளாகி ரணமாய் போனார் .. தாயின் பேராசையும் தன்னை உயர்த்திவிட்டவர்களின் கோரபிடியும் ஜெயா வாழ்வை சீரழித்தது .. தான்தோன்றியாய், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று .. யாரையும் மதிக்காத தானென்ற ஆணவத்தை தன்னோடு வளர்த்துக்கொண்டார் ... அவரே குமுதத்திற்கு தந்த நேர்காணலில் தூய அன்பை நட்பை நான் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை உணர்ந்ததே இல்லை என்றார் தாய் உட்பட தன் உறவுகள் என் காசின் (பொருள்)மீதே குறியாக இருந்தனர் என்றார் .. ஒரு மனுஷியாய் மிக மோசமான தாக்குதல்களும் அவரை பயன்படுத்தியவர்களின் நோக்கமும் தான் எதிர்பார்த்த விரும்பிய வாழ்க்கை கிடைக்கவில்லையென்ற வெறுமை அவரை தனிமைப்படுத்தியது அவருக்குள்ளேயே சுவர் எழுப்பி தன்னை தனிமைபடுத்திக்கொண்டார் ..
..
ஒருகட்டத்தில் எம்ஜிஆரோடு (மகோரா) மீண்டும் இணங்க அந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசியலுக்கு வந்தவர்.. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள தெரியாமல்தான் இருந்தார் .. ஆனால் அவரின் உதவியாளராய் பணியாளாய் வந்த சசிகலா அவரை வழிநடத்தும் சூட்சமம் அறிந்திருந்தார் .. அப்போது முதல் எடுப்பார் கைப்பிள்ளையானார்
சசிகலா கும்பல் நிறைய தவறுகள் செய்த போதும் வேறு வழியின்றி பொறுத்துக்கொண்டவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கட்டுபடுத்த முடியாமல் போனார் என்பதுதான் சசிகலாவின் கை ஓங்க காரணமானது இன்றைக்கு எதிர்க்கிற ஆதரிக்கிற கும்பல்கள் சசிகலாவின் குரலுக்கு அடிபணிந்தவர்கள் தான் .. சசியின் விரலசைவிற்கு காத்துகிடந்தவர்கள் ..
..
கொடநாடு மர்மங்கள் மெல்ல வெளிவர தொடங்கியிருக்கிறது கொலைகள் கொள்ளைகள் என தொடர்ந்து உண்மையின் வெளிச்சம் வருகிறது .. முதல்வர் மீது சந்தேகத்தின் விரல் நிள்கிறது .. கொடநாட்டிலிருந்து கோடிக்கணிக்கில் பணம் கொள்ளையடிக்கபட்டிருப்பதாக தெகல்ஹா மாத்யூ வெளிப்படையாகவே புலனாய்வு செய்த அறிக்கையை தருகிறார் வழக்கு தொடர்ந்தால் எடப்பாடி மீதான குற்றத்தை நிரூபிப்பேன் என்கிறார் ..ஜெயலலிதா மரணத்தையும் சந்தேக வளையத்தில் கொண்டுவருகிறார் ..
மாநிலத்தின் மீதான குற்றசாட்டு அதுவும் கொலை கொள்ளை என்று கிரிமினல் வழக்குபதிவு செய்யதக்கவகையில் இருப்பதை மத்தியில் ஆளும் பாஜக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் கூட்டணி பேரம் சொல்வதை கேட்கவைக்க முயற்சிக்குமெனபடுகிறது.. முதல்வர் எடப்பாடி செய்தியாளர்களை சந்தித்து பதில் சொன்னாலும் சந்தேக நிழல் தொடர்ந்தே வரும் .. ஜெயலலிதா எனும் சர்வாதிகாரத்தில் அடிமையாய் வலம்வந்தவர்கள் வாய்ப்பை தந்தபோதெல்லாம் கொள்ளையடித்தார்கள் .. ஜெயலலிதாவின் உடல்நலிவுற்றிருந்தபோதும் மரணத்திற்கு பிறகு கூட சந்தேகங்களும் மர்மங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன.. மறைவை அடுத்து பதவி ஆசை வந்து பன்னீரை விடுவித்தவுடன் ..சசிகலா பாசிசத்தின் பற்களில் சிக்கியதும் .. தேடிவந்த வாய்ப்பை எடப்பாடி சரியாக பயன்படுத்தி மோடியின் விசுவாசியாய் நின்றார் .. எங்கே கூட இருப்பவர்களால் ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சி .. அவர் நடத்தியவைகள் இன்று எதிராய் நிற்கிறது .. மோடி காப்பாரென்ற நம்பிக்கையில்
எடப்பாடி தெம்பாக இருக்கலாம் கேட்பதை கொடுத்து தற்காலிக தீர்வை எட்டலாம் ..
தளபதி. ஸ்டாலின் சொன்னதைப்போல திமுக ஆட்சிக்கு வந்தவுடன் .. ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்களின் முடிச்சு அவிழ்க்கபடும் .. கொடநாடும் கொலைகளும் அப்போது வெளிச்சத்திற்கு வரும் ...அதுவரை மர்மங்கள் நிறைந்த கதையாய் தொடரும்..
..
மாநில முதல்வர் மீதான குற்றத்தை விசாரிக்கும் அமைப்பு முதல்வரின் இலாக்காவாக இருப்பது நம்பகதன்மையை இழக்குமென்கிற ஆ.ராசாவின் வாதம் ஏற்புடையது .. திமுக தலைவர் சொல்வதைப்போல சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் அதுவரை முதல்வர் பதவி விலகுவதே நேர்மையான விசாரணை நடக்கிறதென்ற நம்பிக்கையை விதைக்கும் .. cctv கேமராக்கள் ஜெயலலிதா வீட்ிலும் அப்பலோவிலும் .. கொடநாட்டிலும் வேலைசெய்யவில்லை என்பதலிருந்தே ஏதோ நடந்திருக்கிறது என்பது புலனாகிறது காத்திருப்போம் உண்மை வெளிவந்தே தீரும்
..
ஆலஞ்சியார்
Friday, January 11, 2019
காதல்
என்னதான் ரப்பர் கொண்டு அழிக்க நினைத்தாலும் முடியாத சில வடுக்கள் உண்டு .. நெஞ்சை கீறி நட்டதைப்போல ஆழமாய் அடிமனதில் இன்னமும் மெல்ல தரும் வலியாய் .. மறந்து தொலைக்க நினைக்கும் போதெல்லாம் வறண்ட மண்ணில் சின்னதொரு தூறலைப்போல் நீர் விழுந்தவுடன் வெடித்து கிளம்பும் மொட்டாய் இருந்துகொண்டுதான் இருக்கிறது ..
..
அரும்புவிடும் மீசையோடு சேர்ந்து ஆசையும் துளிர்விட்ட நேரம் .. கையில் ஏதோவொரு புத்தகத்தோடு அக்ரஹார கோவில் நிலத்தில் அமர்ந்து கவிதை நெஞ்சோடு காத்திருந்த பொழுதெல்லாம் வரம் வாங்கி வந்தது .. மெல்ல அவள் நடந்துவரும் அழகு.. உள்ளம் சிலிர்த்து ஏதேனும் பொய் பேச சொல்லும் .. அருகில் அமர்ந்து ஏதேதோ கதைத்தபோது .. செவிடனைப்போல் வேறொரு லோகத்தில் சஞ்சரித்ததெல்லாம்.. மழைக்காலப்பொழுதில் .. நனைந்து ... ஒதுங்கிநின்று மழைநின்று இலைசிந்தும் துளியை உன் முகத்தில் கை விரலால் துடைத்து அருகணைத்து தந்ததெல்லாம்.. ஆற்றங்கரையில் விரல்பிடித்து அழகுநடை நடந்து .. அக்கரை தோப்பில் அமர்ந்து காதல் பேசிய கருவிழிகள்.. பௌர்ணமி இரவில் ஆற்றுமணலில் முகம் மூடி படுத்திருந்த போது .. அருகில் வந்தமர்ந்து விரல் கோதியதெல்லாம் .. யாம் பெற்ற வரம் .. இதெல்லாம் மறந்து தொலைய எப்படி முடியும் கண்மணி.. கடுங்குளிரில் இளஞ்சூடாய் நீ.. அணைத்து தந்த முத்தம் சத்தியமாய் காமத்தில் வந்ததில்லை கண்ணே .. பொய்யாய் கவிதை தந்து உன்னை கேலி செய்தபோது கூட என்னை புருவம் உயர்த்தி ரசித்ததெல்லாம்.. பெரியாரை பேச தொடங்கியதும் விழிபிதுங்கி ஙே .. என விழி உருட்டும் பேரழுகு .. மறக்கவா முடியும்
..
காலசுழற்சியில் காணாமல் போய்.. நீண்ட நாள் கழித்து ஒரு நண்பகல் பொழுதில் தஞ்சை பேருந்து நிலையத்தில் கண்டு நல்லாயிருக்கியா என கேட்டபோது .. மறந்த சில நொடிகள் நெஞ்சில் அறைந்ததை போலிருந்ததே.. எவ்வளவு நேரம் பேசி நின்றோம் .. குடும்பம் குழந்தை வாழ்க்கையென வேறொரு தேசத்தில் வாழ்ந்த போதும் உன் விழியோரம் உருளும் கண்ணீர் காதல் சொன்னதடி.. ஏன் விட்டுவிட்டாய் ..இன்னும் கொஞ்சம் போராடியிருந்தால் விடாமல் துரத்தியிருந்தால் கோட்டை கட்டியிருக்கலாமே என்றது உன் விழிகளில் திரண்ட கண்ணீர்.. அப்போது நீ மட்டுமே அதிகம் பேசினாய்.. நான் மௌனியாய்.. நான் பேசியபோதெல்லாம் மௌனம் காத்தவள் .. காதலை தொலைத்தவள்.. இப்போது பேசுகிறாள் பேசட்டும் என்றிருந்தேன் .. தேன்சொட்டும் சொல்லெடுத்து காதல்மொழி பேசியவள் .. யதார்த்தமாய் கதைத்த போதும் காதலின் உயிரோட்டத்தை உணர்ந்து நின்றேன்.. அருகில் நின்ற மகளை காட்டி மகிழ்ந்திருந்தாய் .. கடைசியாய் வரட்டுமா என்றாய்..
Still love you என்ற போது இன்னும் நீ திறந்தவே இல்லை என்ற தலையில் கொட்டியபோது கூட .. நீ பேரின்ப பேரழகாய் தெரிந்தாய்..
..
இப்போது சொல்லுங்கள் .. மறக்கமுடியுமா என்ன? .. நெஞ்சை கிழித்து நட்டதை..
..
#காதல்
..
ஆலஞ்சியார்
Thursday, January 10, 2019
Creamy layer
CREAMY LAYER..
ஏன் எதிரிக்கவேண்டும்..
உயர்வகுப்பினரில் ஏழைகள் பயனடைவதை ஏன் தடுக்கவேண்டும் என்ற கேள்வி எழும்.. இதுவரை இடஒதுக்கீட்டிற்குள் வராதவர்கள் தானே அவர்களுக்குரிய பங்கை ஏன் தர கூடாதென்ற கேள்விகள் மனதில் எழும்..
யார் ஏழை என்பதில் அவர்களுக்கான அளவீடு எது என்பதில் தொடங்கி நிறைய தெளிவுபெற வேண்டியது அவசியம் ..
பொருளாதார அளவுகோல் என்பது அடிக்கடி மாற கூடியது இன்றைய எனது வருமானம் அடுத்தாண்டோ அதற்கடுத்த ஆண்டோ மாறலாம் வருமானம் நிலையில்லாதது அதை அளவுகோலாய் கொள்வதே பெரும் பிழை..
உதாரணமாக மத்திய அரசு அறிவித்த அளவீட்டில் சொத்துள்ள ஒருவர் தன் சொத்தை தன் இருமகன்களில் ஒருவருக்கு எழுதிவைத்துவிட்டால் அவர் வறுமைகோட்டிற்கு கீழே வந்துவிடுவார் அவரது இரண்டாவது மகனுக்கு இடஒதுக்கீட்டின் பலன் கிடைக்கும் ..
சாதிய கணக்கெடுப்பை அறிவித்து அந்தந்த பிரிவினருக்குரிய ஒதுக்கீட்டை தர மறுப்பதேன் .
நேரு காலத்திலேயே ஏழைகளுக்கு இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டுமென நாடாளுமன்றத்தில் குரல் எழுந்தபோது .. அம்பேத்கர் எல்லா சமூகத்திலும் 80% விழுக்காடு ஏழைகள் இருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் தர இயலாது அதோடு இடஒதுக்கீட்டின் நோக்கத்தை அது சிதைத்துவிடும் என்றார்..
..
பிற்படுத்தபட்டவர் இடஒதுக்கீட்டில் ஒவ்வொரு முறையும் நிரப்பபடாத இடங்களை யார் அனுபவிக்கிறார்கள் .. உயர்பதவிகளில் ஏன் இதுவரை இந்த இடஒதுக்கீடு கொண்டுவரபடவில்லை .. பட்டியலின ஒதுக்கீட்டில் நிரப்படாத இடங்களை உயர்ஜாதி ஏழைகளுக்கு தந்தால் மாயவதி ஏற்பாரா.. இந்த மசோதா நிறைவேறியிருக்குமா..
எல்லா கட்சிகளுமே திராவிட கட்சிகளை தவிர்த்து ஆதரிப்பதின் பின்னணி என்ன..?
ஏழைகளுக்கு உதவவேண்டுமென்ற எண்ணம் வரவேற்கதக்கது ஆனால் அது பொருளாதார அடிப்படையில் என்பதுதான் கேள்விக்குறியாகிறது..
..
சட்ட திருத்த மசோதா ஆரம்பநிலையிலேயே தள்ளுபடி செய்யவேண்டும்,மாநிலங்களின் கருத்தை கேட்க தேவையில்லை என்கிறார் சட்சமறிந்த அருண்ஜெட்லி.. என்னவொரு சர்வாதிகாரபோக்கு .. நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பி கருத்து கேட்கவேண்டுமென்ற மரபு அப்பட்டமாக மீறபடுகிறது.. 7ந்தேதி அமைச்சரவை ஒப்புதல் ..8ந்தேதி நாடாளுமன்ற மக்களவை ஒப்புதல் .. 9ந்தேதி மாநிலங்களவை ஒப்புதல் இவ்வளவு விரைவாக இதரவரை எந்த மசோதாவது நிறைவேற்றபட்டிருக்கிறதா.. யாரேனும் எங்களுக்கு இடஒதுக்கீடுவேண்டுமென கொடிபிடித்தார்களா ..
யாரெல்லாம் உயர்ஜாதியினரென 1985 ல் அரசுவெளியிட்ட அறிக்கையில் 78 பிரிவினர் வருகிறார்கள் .. இதில் முஸ்லிம்களும் உண்டு (அன்சார், தெக்காணி, துதிகுலா, லெப்பை,ராவுத்தர், மரைக்காயர், மாப்ளா, ஷேக்,சையத் அல்லாத) பிற முஸ்லீம்கள் என்கிறது வேறேதாவது மிஞ்சிகிறார்களா என தெரியவில்லை.. மொத்தத்தில் பார்பனர் நலனுக்காக மட்டுமே செயல்படுவது தெரிகிறது..உச்சநீதிமன்றம் பொருளாதார அளவுகோல் சட்டவிரோதமென ஏற்கனவே தீர்ப்பு வழங்கியிருக்கிறது ஒன்பது பேர் அமர்வில் எட்டுபேர் செல்லாதென தீர்ப்பு வழங்கியும் அவசர கோலத்தில் நடப்பிலாக்குவது தேர்தலை
கணக்கில் கொண்டே தவிர வேறில்லை அனைத்துக்கட்சிகளும் (ஒரு சில கட்சிகள் தவிர)
ஆதரிப்பதும் பின்துணைப்பதும் தேர்தலுக்காகவே..
பிற்படுத்தபட்டவரும் தாழ்த்தபட்டவர்களும் அதிகாரத்திற்கு வராமல் உயர்பதவிகளுக்கி வராமல்.. பார்பனர்கள் உயர்பதவிகளை அலங்கரிக்கவரை ..சமநீதி என்பது எட்டாகனியாகவே இருக்கும்
..
ஆலஞ்சியார்
Wednesday, January 9, 2019
மக்களுக்கான தலைவர்
ஊராட்சி சபை..
சரியான ஜனநாயகம் ஊராட்சிகளில் இருக்கிறது மக்கள் உணர்வுகளை புரிந்து தேவைகளை அறிந்து அதை நடைமுறைபடுத்த அவர்களுக்குள்ளேயே தேர்வு செய்து அவர்களே தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள அரசின் கவனத்திற்கு கொண்டுவந்து திட்டங்களை செயல்படுத்த அரசியல் கட்சிகளை அவர்சார்ந்த கொள்கை திட்டங்களை கடந்து அவர்களின் தேவையை சார்பற்ற நிலையில் செயல்படும் அமைப்பு .. ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயலை எம்ஜிஆர் காலத்திலேயே செய்தார் உள்ளாட்சி தேர்தலையே வெகுகாலம் நடத்தாமல் தவிர்த்தார் .. பிறகு வேறுவழியின்றி உள்ளாட்சி தேர்தலை நடத்த 98 நகராட்சிகளை திமுக பிடித்தது மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தாமல் நகராட்சி மற்றும் ஊராட்சிக்கு நடத்தினார் .. அப்போது கலைஞர் எழுதிய கடிதம் உண்மையான ஜனநாயகம் வென்றதென்றார் .. ஊராட்சிகள் ஜனநாயகத்தின் இதயம் ..
..
திமுக மக்களிடத்தில் அவர்கள் குறைகள், தேவைகள் அவர்கள் துன்பங்கள் பெற்ற நன்மைகள், அனைத்தையும் அவர்களோடு அளவளாவி அவர்கள் கருத்தையொட்டி செயல்படுவதென்ற திட்டத்தை கையிலெடுத்து
மக்களிடம் செல்வோம் மக்களிடம் சொல்வோம் மக்கள் மனதை வெல்வோம் ..என ஊர்தோறும் கலந்துரையாடலை செய்ய தொடங்கியிருக்கிறது வரவேற்று பாராட்ட வேண்டியது நமது கடமை .. திமுக ஜனங்களின்,இயக்கம் சாமானியனின் நிலை உயர அவர்களின் வாழ்வு மேம்பட உழைக்க வாய்ப்பை தாருங்கள் என்பதற்காக தொடங்கபட்டது .. சமூகநீதியெனும் அடித்தளத்தில் செயல்பட்டாலும்,ஜனநாயகத்தை கடைபிடித்து செயல்படுத்த வேண்டுமென்பதில் துளியும் சர்வாதிகார போக்கு இல்லாமல் பரந்த மனபான்மையோடு செயல்பட்டவர் கலைஞர் .. கலைஞரின் அரசியல் பயணத்தில் மக்களோடான நிகழ்வுகளை ஆய்ந்தால் அதில் அதீத ஜனநாயக போக்கும் கருத்து சுதந்திரமும்
மாற்று கருத்தை உள்வாங்குகிற நேர்மையும் அனைவரையும் அரவணைக்க வேண்டுமென்ற தெளிவும் தான் கொண்ட கொள்கை பிறழாமல் அதே நேரம் மாற்று சிந்தனையையும் மதித்து அவர்களுக்குரிய அங்கீகாரத்தை தருவதே சிறந்த ஜனநாயகமென கடைபிடித்தவர் ..
இன்றைக்கு சிறிய கட்சிகளில் கூட ஏன் அமைப்புகள் சங்கங்கள் என எதிலுமே தான்தோன்றித்தனமும் தன்னால்தான் ஆனதென்ற அகந்தையும் தனக்கு எல்லாம் தெரியுமென்கிற ஆணவமும் .. தனக்கு கீழ்தான் எல்லாம் தன் சொல்படிதான் இங்கே எதுவும் நடக்கும் தான் வைத்தது தான் சட்டம் .. என்ற இறுமாப்போடு செயல்படுகிறார்கள் .. மக்களின், தொண்டனின் இரண்டாம்நிலை தலைவர்களின் கருத்தை கூட கேட்காமல் சுயம் தம்பட்டம் அடித்தால் அது வீழ்ச்சியில்தான் முடியும் .. மக்களோடு இணைந்து செயல்படுதலே சிறந்த அரசியல் பண்பு ..
நல்லதொரு தலைவரைதான் இனங்கண்டு திராவிட இயக்கம் தந்திருக்கிறது .. தளபதி மிக சிறந்த ஜனநாயகவாதியாக திகழ்கிறார் ..
..
திமுக மக்களுக்கான இயக்கம் .. மக்களிடமே கருத்தை கேட்கும் மக்களுக்காகவே இயங்கும்
அரசியலில் நேர்மையும் துவளாமல் களப்பணியாற்றும் செயலும் ..ஓயாத உழைப்பும் வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக எண்ணி தொண்டாற்றும் தலைவராய் தளபதி திகழ்கிறார்..
மக்களுக்கான தலைவராய்
காலம் செதுக்கிய
மகத்தான தலைவராய் தளபதி திகழ்கிறார்..
..
ஆலஞ்சியார்
Tuesday, January 8, 2019
இடஒதுக்கீடு..தமிழிசை
பாலகிருஷ்ணா மக்களுக்காக போராடினார்
அவருக்கு தண்டனை கிடைத்திருப்பது வேதனை அளிக்கிறது .. தமிழிசை சௌந்தரராஜன்
..
காவல் ஆய்வாளர் உட்பட 5 போலீஸ்காரர்களை இரும்புக்கம்பியால் தாக்கி, போலீஸ் ஜீப், பைக், மூன்று ட்ரக்குகளுக்கு தீவைத்து, பேருந்துகள் மீது கல்லெறிந்த வழக்கு அதில் தான் நிரூபிக்கபட்டு தண்டனை பெற்றிருக்கிறார்..
கட்டப்பஞ்சாயத்து சொத்து அபகரிப்பு வழக்குகள் இன்னமும் இருக்கிறது பெங்களூரில் மஸாஜ் பார்லர் நடத்தி போலீஸ் ரெய்டுகளை சந்தித்து சந்திசிரித்தது வேறு..
இப்படியாக மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியதில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனை கிடைத்ததில் தமிழிசைக்கு வருத்தம் ஏற்பட்டிருக்கிறது .. கலவரம் செய்வதும் வன்முறை வெறியாட்டம் செய்வதும் பாஜகவிற்கு மக்கள் பணி போலும்.. வெடிகுண்டு வீசினால் பாஜக ஆர்எஸ்எஸ் தொண்டர் .. அதையே யாராவது செய்தால் தீவிரவாதி.. அதானே தமிழிசை மேடம்..?
..
பஸ் மீது கல்லெறிந்தது காவல் ஆய்வாளர் தாக்கபட்ட போது அவர் பாஜகவில் இருந்தார்.. ஆர்எஸ்எஸ் இவரையும் மாஃபா பாண்டியராஜனையும் அதிமுகவிற்குள்ளும் ஊடுறுவியது .. ஜெயலலிதாவின் பாசிச பாசம் மௌனமாய் அங்கீகரித்து அதன் பலனை இப்போது அறுவடை செய்கிறது . தேமுதிமுவிலிருந்து வந்த எவருக்கும் வாய்ப்பளிக்காமல் மாஃபா விற்கு வந்தவுடன் எம்எல்ஏ அமைச்சரென ஆக்கியதின் பின்னில் ஆர்எஸ்எஸ் இருந்தது அதைபோல பாஜகவிலிருந்து வந்தவுடனேயே அமைச்சராக்கினார் ஜெயலலிதா .. காலமெல்லாம் கட்சியில் இருந்தவனுக்கு கொடுக்கவில்லை என்ற குற்றசாட்டை திமுக மீது மட்டும் சுமத்தும் ஊடகங்கள் நடுநிலைகள் வாய்மூடிதான் இருந்தனர்..
..
ஜெயலலிதா மட்டுமல்ல அதிமுகவின் அமைச்சர்கள் மீது குற்றம் நிரூபிக்கபட்டும் .. அதிமுகவின் அமைச்சர்கள் ஏன் முதல்வரே சிறை சென்ற பிறகும் ஊழலுக்கெதிரானவர்களை போல சித்தரிப்பதும்,.. இதுவரை எந்த வழக்கிலும் தண்டிக்கபடாத திமுகவை.. தொடர்ந்து ஊழல்கட்சி என்பதை போல பேசிதிரியும் கயமையை என்னவென்று அழைப்பது .. திமுக மீது இத்தனை வன்மம் வர காரணமென்ன .. அது திராவிட சித்தாந்தத்தை தூக்கிபிடிப்பதாலா இல்லை .. பாசிச ஆர்எஸ்எஸ் பார்பனீய சித்தாந்தத்தை தமிழகத்தில் வேரறுத்ததோடு மட்டுமல்லாமல் ..
தாழ கிடந்த மக்களின் உயர்வுக்காக போராடுவதும் மநுநீதிக்கெதிராக போர்குணத்தோடு பாய்வதும் .. மதவெறியர்களை நுழைய விடாமல் விரட்டுவதும் சம நீதி வேண்டும் என சொல்வதும் .. ஒடுக்கபட்ட பிற்படுத்தபட்ட மக்களின் வாழ்வின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து உழைப்பதும் ..பாசிச சக்திகளுக்கு பொறுக்கவில்லை எப்படியேனும் திமுகவை அழித்தால் அல்லது வரவிடாமல் தடுத்தால் இவர்கள் விரும்பம் போல் உயர்ஜாதியினரை எல்லா இடங்களிலும் நிரப்பிவிடலாம் என்ற ஒற்றை நோக்கை தவிர .. தேசநலன் மக்கள் நலன் தேசபக்தி என்பதெல்லாம் வெற்று கோசங்கள் தான் ..
..
60% விழுக்காடு உள்ள பிற்படுத்தபட்டவருக்கு 27% வழங்கியபோது தீக்குளித்து தடுக்க முயன்றவர்கள்..
3% விழுக்காடு பார்பனர்களுக்கு 10% விழுக்காடு ஒதுக்கீடாம்..
அதை காங்கிரஸ் உள்ளிட்ட வடமாநில கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன .. ஏற்கனவே பார்பனர்கள் உயர்பதவிகளை எத்தனை விழுக்காடு அபகரித்திருக்கிறார்களென்ற விபரங்கள் ..
இவர்கள் .. ஏற்கனவே உயர்பதவிகளில் .. பார்பனர்கள்
62% IAS 70% IPS.. 40% உயர்நீதிமன்ற நீதிபதி
56%உச்சநீதிமன்ற நீதிபதி 50% கவர்னர்கள்
70% துணைவேந்தர்கள் 54% தலைமைசெயலர்
48% மக்களவை 36% மாநிலங்களவை ..
அதுமட்டுமல்ல பிற உயர்பதவிகளிலும் பார்பனர்களின் ஆதிக்கமே நிறைந்திருக்கிறது 90% ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள் .. அமைச்சர்களின் உதவியாளர்களாக 86% விழுக்காடு அவர்கள் இந்திய அரசை உண்மையில் இயக்குகிறவர்கள் அவாள்கள்தாம்..
..
இடஒதுக்கீட்டில் பொருளாதார ஒதுக்கீடு சட்டபடி செல்லாதென்று உச்சநீதிமன்ற தீர்ப்பு இருக்கிறது பொருளாதாரம் அளவுகோலாக ஏற்கமுடியாதென தெரிந்தும் கொண்டுவர முற்படுவது இப்போதைய இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்யவேண்டுமென்பதற்காகதானே தவிர வேறொன்றுமில்லை .. இதெல்லாம் தமிழிசை போன்ற மிகவும் பிற்படுத்தபட்ட ஒருகாலத்தில் பார்த்தாலே தீட்டென ஒதுக்கிவைத்த சமூகத்தை சார்ந்த பொன்னருக்கு தெரியாதா ஏன் எதிர்க்கவில்லை.. இவர்கள் பாசிசத்தின் கையாட்கள் அவ்வளவுதான் போராடவும் பேசி உளறவும் கலவரம் செய்ய மட்டுமே பயன்படுத்தபடுவார்கள் ..
அதனால் தான் இவர்களுக்கு தவறுகள் கூட நியாயமாக படுகிறது ..
..
ஆலஞ்சியார்
Monday, January 7, 2019
தேர்தல் ஆணையம்
இடைத்தேர்தலும் ஆணையமும்
..
இடைத்தேர்தல் ரத்து எதிர்பார்த்தது தான் காரணம் ஆளும்கட்சி யார் வேட்பாளரென்று அறிவிக்காமல் கிடைக்கவில்லையென்பது வேறுவிடயம் பாஜகவின் தமிழக தலைவர் நடக்காது என சொன்னபோதே தேர்தலை ரத்து செய்வார்களென அறிவோம்,..
பின் ஏன் அறிவிக்கவேண்டும்
பத்தொன்பது தொகுதியை விடுத்து ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தலை அறிவித்தால் திமுக வழக்காடுமன்றத்திற்கு போகும் அதைவைத்து தேர்தல் நடத்தாமல் இருந்துவிடலாமென்ற எண்ணியது வீண் போனது .. திமுக தேர்தலை சந்திக்க தயாரானதும் அதிலும் பூண்டி.கலைவாணன் வேட்பாளராக அறிவிக்கபட்ட அடுத்த நொடியே தலைமைசெயலர் மாவட்ட ஆட்சியரிடம் தேர்தல் நடத்த உகந்த சூழல் நிலவுகிறதா என கருத்து கேட்கிறார் .. ஆளும் கட்சி வேட்பாளர் தேர்வை தள்ளிவைக்கிறது .. 10 தேதி அறிவித்துக்கொள்ள அவகாசம் இருப்பதாக சமாளிக்கிறது .. பாஜகவோடான கூட்டணி பேரம் படியாததும் .. தொடர்ந்து பாஜக தேர்தலில் நிற்காமல் தவிர்ப்பதும் யதேச்சையாக நடந்ததாக கொள்வோம்..
..
ஏற்கனவே தலைமை செயலர் ஏப்ரல்வரை தேர்தலை நடத்த சாத்தியமில்லையென்ற பிறகு யார் நிர்பந்தத்தில் தேர்தலை அறிவித்தது சுயேட்சையாக செயல்படவேண்டிய அமைப்பில் மத்திய அரசின் ஆதிக்கம் செலுத்துவது அதன் நேர்மையையே கேள்விகுறியாக்கியிருக்கிறது .. இருபது தொகுதிகள் காலியாக இருக்கும்போது ஏன் அனைத்து தொகுதிக்கும் தேர்தல் வைக்க அஞ்சவேண்டும்..
..
//பேருந்தை கல்வீசி தாக்கிய வழக்கிலிஅமைச்சர் பாலகிருஷ்ணன் நீதிமன்றத்தால் தண்டிக்கபட்டார் .. அதிர்ச்சி எல்லாம் வரவில்லை முதல்வராக இருந்த போது ஜெயலலிதாவை சிறைக்கு சென்றபோது "தியாகதலைவி" என்று கொண்டாடிய சமூகம் இப்போது என்ன அலறவா போகிறது .. நாளை தியாக செம்மலே என விளித்து புகழ்பாடலாம்.. கொள்ளையடித்ததாய் நிரூபணமாகி சிறையில் இருக்கும் சசிகலாவை "தியாக தலைவி" சின்னம்மா என்றழைப்பதை ஜீரணித்து கொண்ட நாம் இதையும் செரிப்போம்.. அதேபோல் வாணியம்பாடி நிலோபர் ஜெயலலிதா தண்டனைப் பெற்றபோது கடைகளை சூறையாடியதையும்.. அதற்கு பலனாய் அமைச்சர் பதவி தந்து மகிழ்ந்ததையும் கூட மறந்துபோவோம்..
..
21 சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பது ஜனநாயகத்தை கொலை செய்வதற்கு சமம் .. ஊராட்சிகள் இல்லை சட்டமன்ற பிரதிநிதிகள் இல்லை யார் ஆட்சி செய்கிறார்களென தெரியவில்லை ..ஆனால் இந்திய ஜனநாயகம்
உலகின் தலைசிறந்த ஜனநாயகம் நம்புங்கள்
..
வெட்கக்கேடு
Sunday, January 6, 2019
பொய்யர்கள்
ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள்... அல்லது பதவி விலகுங்கள்.. நிர்மலா சீதாராமனுக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்
HAL நிறுவனத்திற்கு மத்திய அரசு 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஆர்டர் கொடுத்தாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் கூறுகிறார். ஒரு ரூபாய் அளவிற்கு கூட ஆர்டர் கொடுக்காமல் நிர்மலா சீதாராமன் பொய் கூறுகிறார். இப்படி பொய் கூறிய நிர்மலா சீதாராமன் உடனே பதவி விலக வேண்டும்..
என்கிறார் ராகுல்
..
// HAL has clarified that not even a single rupee contract was awarded till now. Defence Minister Nrmala seethraman should apologize giving wrong information in parliament. //
ஒரு ரூபாய் ஒப்பந்தம் கூட இதுவரை வழங்கப்படவில்லை என்று HAL தெளிவுபடுத்தியுள்ளது. பாராளுமன்றத்தில் தவறான தகவலை வழங்கியிருக்கிறார்
..
இருந்தா கொடுக்கமாட்டாங்களா.. இரண்டுமணி நேரம் பேசியபோதே ஆவணங்களில் மேசையில் வைத்திருப்பாரே.. ஏழை மகன் ..நடுத்தர குடும்ப மகளென்றெல்லாம் வசனம் பேசியிருப்பாரா என்ன.. நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் என்றால் நாடாளுமன்ற நேரத்தை நான்கு மணி நேரம் வீணடித்தாலும் அவர்களால் சொல்லமுடியாது .. தன் மீது தவறில்லையென்பதை உணர்ந்து விசாரணையை துரித படுத்துங்கள் என சொன்னவர் அத்வானி விரைந்து வழக்கை முடியுங்களென அதுவரை போட்டியிட போவதில்லை என்று நீதிமன்றத்தில் சொன்னார்.. அந்த துணிவு இப்போது ஏன் மோடிக்கு இல்லை .. நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு ஏன் உத்தரவிட மறுக்கிறீர்..
தவறிழைத்ததால் மாட்டிக்கொள்வோமோ என்ற பயம் காரணமா.. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட தெரியகூடாதென்பது எந்தவகை ஜனநாயகம் .. நாட்டை நேசிக்கிறவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லையா மக்களால் தேர்வு செய்யபட்ட மக்களின் பிரதிநிதிக்கு அதிகாரம் இல்லையா ..
ஏன் நாடாளுமன்றத்தை கண்டு அஞ்சவேண்டும்
..
நிர்மலா சீதாராமன் நீண்ட நேரம் பேசினார் ஆனால் ஏதோ நிர்பந்தம் அவரது பேச்சில் இருந்தது மோடியை திருடன் என்றழைக்கலாமா என்கிறார் .. வேறெப்படி அழைப்பதென அவர் சொல்லவேண்டும் .. கேள்விக்கான பதிலை கடைசிவரை தராத அவரது சமாளிப்பை பாராட்டியே தீரவேண்டும் ..
ஊடகங்கள் இதை விவாதமாக்கவே அஞ்சுகிறது
2ஜி யை தினம் தினம் விவாதமாக்கி பூதாகாரமாய் ஆக்கியவர்கள் .. இப்போது வாய்மூடி பல்லிடுக்கில் மெல்ல பேசுகிறார்கள்
ஜெயலலிதா வழக்கை சொத்துவழக்கு என்று சப்பை கட்டியவர்கள் தண்டிக்கபட்ட குற்றவாளி என்றான பிறகும் மென்மையான போக்கை கொண்டிருந்தார்கள்.. ஊடக அறமற்று வியாபார நோக்கை எல்லாம் கடந்து பாசிச மனபான்மையோடு கதைத்தவர்கள் .. தண்டிக்கப்பட்ட குற்றவாளி இறந்தபிறகு அவரை இன்னும் புகழ்ந்தும் பாராட்டியும் மக்கள் பணத்தை செலவழித்து அரசு விழாக்கள் கொண்டாடுவதும் அரசு செலவில் மணிமண்டபம் கட்டுவதும் நடக்கிற நாட்டில் இதையெல்லாம் தட்டிகேட்காத நீதி நடப்பிலாக்கிற தேசத்தில் .. ஊழல் பெரிதான விடயமாக தெரியவில்லை போலும் ..பொய்யை மட்டுமே மூலாதாரணமாய் கொண்ட ஆட்சியில் 56 இஞ்ச் மார்ப்பை விரித்து வீரவசனம் பேசினால் எல்லாம் சரியாக இருக்குமென நம்புகிற நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகம் கேலிகூத்தாகதான் இருக்கும் ..
..
இவர்கள் கடைசிவரை உண்மை பேசபோவதில்லை ஆட்சி மாற்றம் வந்து நேர்மையான விசாரணை செய்தால் மட்டுமே உண்மை வெளிவரும் .. இந்த பாசிச பொய்யர்களின் ஆட்சிக்கு முடிவுகட்டுவோம்
..
ஆலஞ்சியார்
Saturday, January 5, 2019
அஞ்சாமை திராவிடர் உடைமை
திமுக அஞ்சுகிறதா என தொலைகாட்சிகள் விவாதம் செய்கின்றன .. திமுக ஜனநாயக முறைபடி களம்காண தயாராகி.. யாரை நிறுத்தினால் தேர்தலில் வெல்லமுடியுமென கணக்கிட்டு சாதூர்யமாக நகர்வை செய்திருக்கிறது .. சிலர் ..சில ஊடகங்கள் ஆரம்பம் முதலே தளபதி நிற்கபோகிறார் என்றும்,இல்லை குடும்ப உறுப்பினரை நிறுத்தபோகிறது திமுக.. கடைசியில் உதயநிதிவரை இறங்கி வந்து கதறிபார்த்தும் திமுக மாவட்ட செயலாளர் நிறுத்தபட்டிருக்கிறார் .. தலைவர் ஸ்டாலினே அழைத்து விரும்பமனு தாக்கல் செய்யுங்களென கேட்டுகொண்டதை தொடர்ந்து பூண்டி.கலைவாணன் விரும்பமனு தாக்கல் செய்தபோதே ஊடகங்களின் ஆருடமும் சிலரின் நப்பாசையும் பொய்த்துபோனது இதோ குடும்ப உறுப்பினரை நிறுத்துவிட்டதென ஓலமிடலாமென்றிருந்தர்கள் கடைசியில் வாயடைத்து நிற்பது கண்டு.. திமுக அஞ்சுகிறதா என கேள்வியை கேட்கிறது ..
..
ஒருமுறை கலைஞர் உயர்மட்ட குழுவில் பேசும்போது இடைத்தேர்தலில் ஆளும்கட்சியின் தாண்டவம் எல்லை மீறும் .. நிற்கவேண்டுமா என கேள்வி எழுப்பி திமுக ஜனநாயக கடமையை ஆற்றுமென்றார் .. இப்போதுள்ள சூழலில் வெற்றி வசப்படுமென்ற நிலையில் திமுக ஏன் அஞ்சவேண்டும் ..
திருடிகொண்டு ஓடுகிறவன் திருடன் திருடன் என சத்தம் போட்டானாம் அதைப்போல தினகரன் தோல்வி பயத்தில் திமுக அஞ்சுகிறதென்கிறார் .. ஆர்.கே.நகரைப்போல ஜனநாயகமாக ..? தேர்தல் நடக்குமா என்கிறார் என்ன கேலிகூத்து.. உண்மையில் பதறுவதும் அஞ்சுவதும் உளறுவதும் எதிரிகள் தான் .. வேட்பாளர் அறிவித்தவுடனேயே மக்களை சந்திக்க தொடங்கி.. தேர்தல்பணியை செய்கிறது திமுக ..அதிமுகவோ இதுவரை அறிவிக்க காணோம் அமுமுகவோ காமராஜ் வேண்டாமென சொல்லியும் நிறுத்தியதில் வேலையை தொடங்கவே காணோம் .. தமிழிசை தேர்தல் நடப்பது சந்தேகம் என சொல்கிறார்
..
ஏன் திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்கல் மற்ற தொகுதிக்கு சேர்த்து ஏன் வைக்கவில்லை எப்போது வைப்பதாக உத்தேசம் .. ஜனநாயக நாட்டில் வழக்கை காரணம் காட்டி தேர்தலை நிறுத்திவைப்பது சிறந்த ஜனநாயகமல்ல என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் ராசா உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார் .. அதே வேளை திமுக ஆதரித்து அறிக்கை தந்தாயிற்று .. ஜனநாயகமே நேர்மையாக தேர்தலை நடத்துவதில் இருக்கிறதென்ற உண்மையை உணர்ந்து யாருக்கும் அஞ்சாமல் அடிபணியாமல் தேர்தல் ஆணையம் நேர்மையோடு செயல்படவேண்டும்..
தேர்தலை கண்டு அஞ்சுவது திமுக வரலாற்றிலேயே இல்லை என்பதை இன்றைய "அவசர" அரசியல்வாதிகள் அறிந்துகொள்ளவேண்டும் பரபரப்பாக வலைதளங்களிலும் மீடியாக்களிலும் பிரபலமடைய வேண்டுமென்பதற்கு தரங்கெட்ட விவாதத்தை நடத்துவதில் எதையும் சாதிக்க போவதில்லை .. களம் என வந்துவிட்டபிறகு எதற்கும் அஞ்சுவதோ .. நடுங்குவதோ எமது இயக்க வரலாற்றில் இல்லை ..
வெற்றி ஒன்றே குறிக்கோளாய் செயல்படுவோம் ..
#அஞ்சாமை_திராவிடர்உடைமை
..
ஆலஞ்சியார்
Thursday, January 3, 2019
கலைஞர்...
எத்தனை முறை நினைத்தாலும் நெஞ்சம் இனிக்கிறதே.. தலைவனின் பெயரைச் உச்சரித்தால் புதியதாய் சேதி ஒன்று நிழலாடுகிறதே..
இப்படியொரு தலைவனை இனி எப்போது காண்போம்
..
வாழ்ந்த காலம் முழுதும் போராளியாய் ..
இந்த மண்ணில் இருந்த கசடு அகற்ற பெரும்பணியை தன்னுள் சுமந்து ஏற்றத்திலும் இறக்கத்திலும் சுமையை இறக்காமல் ..வாய்ப்பை தந்தபோதெல்லாம் இந்த மண்ணின் பெருமையை நிலைநாட்டி.. கலை காலாச்சார பண்பாட்டை சிதைக்காமல்
கொண்ட கொள்கையில் கிஞ்சித்தும் விலகாமல் தன் ஆசானின் அடிச்சுவட்டை ஒட்டி பகுத்தாய்ந்து ...தொலைநோக்கோடு திட்டங்களை மக்கள் பயன்பெற .. உழைத்த பெருமகனின் நினைவை போற்றுகிறார்கள் ..
ஆம்..
எதிரியென்று சொன்னவர்கள் .. விரோதியாய் கங்கணம் கட்டியவர்கள் ...வீழ்த்திவிடுகிறேன் பாரென்றவர்கள் .. கூட இருந்த குழிபறித்தவர்கள் .. பகையென முரசு கொட்டி நேர்நின்றவர்கள் .. புகழ்வதை கேட்கும் போது உண்மையில் மனம் மகிழ்ச்சி அடைகிறது ..
..
அப்படி என்ன செய்துவிட்டார் என சொல்லி திரிகிறவன் கலைஞர் தந்த அரியாசனத்தில் அமர்ந்து தான் கேட்கிறான்.. கேட்பாரற்று கிடந்தவனின் கைகளை பற்றி உயரத்தில் எத்திவைக்க எத்தனை விதமான சட்டதிருந்தங்கள் .. பிற்படுத்தபட்டோர் இடஒதுக்கீடு .. அதிலும் மிக கரிசனையோடு சிறுபான்மையினருக்கும் உள்ஒதுக்கீடு .. எழவே முடியாமல் அடித்துமர்த்திய அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீட்டால் முதல் மருத்துவர் அந்த சமுதாயம் கண்டதே.. முதல் பட்டதாரிக்கு இனி இல்லை கட்டணமென்று உயர்த்திவிட்டாரே.. பெண்களை படிக்கவைக்க வேண்டுமென்பதற்தாக எட்டாவது படித்திருந்தால் திருமண உதவி ..விவசாயம் நலிந்து உழவன் வாடிவிட கூடாதென்பதற்காக அத்தனை கட்டுபாட்டையும் தடையையும் விமர்சனங்களை தாண்டி இலவச மின்சாரம் .. நுழைவு தேர்வை ரத்து செய்து சாமானியர் வீட்டிலும் மருத்துவரை கண்டாரே.. சாதிமதத்தை அதன் பௌதீக கட்டமைப்பை உடைத்து அனைவரும் ஒரே நிழலில் வசிக்கும் சமத்துவபுரம் கண்டாரே.. ஊனமுற்றோரை கிண்டல் செய்யும் சமூகசூழலை மாற்றி மாற்றுதிறனாளி என அழைத்து.. இருபாலினமும் அல்லாதவரை திருநங்கை என விளித்து சமூக நிலையை உயர்த்தினாரே..
உயிர்கொல்லும் கொடியநோய்கள் .. வசதிபடைத்தவர்கள் மட்டுமே சிகிச்சை பெற முடியும் .. சாமானிய ஏழைகளால் உயர்தர சிகிச்சையை பெற முடியாமல் தவித்த போது பேரருளாளனாய் கலைஞர் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்து ..எண்ணற்றவர்களின் குடும்பத்தில் ஒளியேற்றினாரே.. அவர்கள் வாழ்வில் புதிய ஜீவனை தந்தாரே அந்த பெருமகனை காலமெல்லாம் நினைவுகூறதானே முடியும்..
..
இன்னும் நிறைய பட்டியலிட்டால் ஆயிரம் பக்கம் கொண்ட புத்தகமாய் வரும் .. பன்முக ஆளுமைகொண்ட பெருந்தலைவர் .. ஒவ்வொரு ஆளுமையும் பேராளுமையாய் திகழ்ந்த ஒப்பற்ற தன்னிகரற்ற தலைமை..
தமிழகம் கண்ட பெருவுடையான்.. தமிழர்கள் நெடுநாள் தவத்தில் வந்த பேரோளி .. தமிழர்களின் பேரருளாளன் கலைஞர்
அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்
வாழ்க! கலைஞர்
..
ஆலஞ்சியார்
Wednesday, January 2, 2019
திருவாரூர்... எங்க ஏரியா ..
திருவாரூரில் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை அவர்கள் தான் முடிவு செய்து வாக்களிப்பார்கள் ட்விட்டரில் அக்கா தமிழிசை
அதற்கு பிறகு சத்தத்தையே காணோம் பாஜக தனித்து களம் காணலாமே அப்போதுதான் அவர்களுக்கு எந்தளவு ஆதரவு இருக்கிறதென்பதை அறியலாம். தாமரை மலர்ந்தே தீருமென சொல்லி திரியும் மீண்டும் ஒரு முயற்சி எடுத்து நோட்டாவை கடக்கலாமே நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை மிரட்டி 20 தொகுதியாவது வாங்கலாம் முயற்சி செய்யட்டும் .. மைக் கிடச்சா போதும் எதையாவது உளறுவதும் வீரவசனம் பேசுவதும் எதோ தமிழகத்தை பாஜகவை எல்லோரும்,கொண்டாடுகிறார்கள் என பேசிதிரிவதும் அப்பப்பா இம்சை தாங்கமுடியவில்லை ..
..
இவரென்றில்லை நிறைய பேர் .. கட்சியென்று ஒன்று வைத்துக்கொண்டு 1000 வாக்குகள் கூட கடக்க முடியாதவர்கள் செய்கிற அலப்பறை தாங்கமுடியவில்லை நெஞ்சை விடைத்து கத்தினால் மக்கள் ஆதரவளிப்பார்களென கணக்கிடுவதும் ஏதோ தம்மால் தான் தமிழகமக்கள் உணர்வு பெற்றிருப்பதை போலவும் இங்கே கதையளந்து கொண்டிருக்கிறார்கள்.. தமிழக மக்களை காப்பாற்ற தங்களால் தான் முடியுமென்பதை போல நடு ஒடிந்தவர்கள் பேசிதிரிகிறார்கள் ..
நாங்கள் தான் காங்கிரஸை தோற்கடித்தோம் திமுகவை தோற்கடித்தோமென சில அங்கரீக்கபடாத, முகவரி இல்லாதவர்கள் சொல்லி புலம்புகிறார்கள்
..
பாஜக தனித்து நிற்க அஞ்சும் காரணம் நோட்டாவை தாண்டமுடியாது மிக மோசமான தோல்வியை பெற்றால் கூட்டணி கட்சிகள் பாஜகவை சுமக்க தயாராக இருக்காது
இன்னும் நான்கு மாதங்களே
நாடாளுமன்றத் தேர்தலுக்கு உள்ள நிலையில்
பா ஜ க தமிழகத்தில் யாருக்கு வேண்டாததாக போய்விடுமென்ற அச்சம் பாஜகவை மௌனமாக்கியிருக்கிறது .. திருவாரூர் இடைத்தேர்தல் ஆளும் கட்சிக்கு மிகப்பெரிய சங்கடத்தை தந்திருக்கிறது அதனால் தான் தம்பிதுரை பொங்கலை காரணம்காட்டி நிறுத்த வேண்டுமென சொல்கிறார் .. திருவாரூரை பொறுத்தவரை திமுகவின் வெற்றி என்பது உறுதியான நிலைதான் களம் நமக்கு தெரியுமென்பதாலும் இடதுசாரிகள் கொஞ்சம் மெச்சபட்டவகையில் இருப்பதும் இஸ்லாமிய வாக்கும் முடிவை தீர்மானிக்கும் என்பதால் வாக்கு வித்தியாசம் எவ்வளவு என்பதில் தான் தெரியவேண்டும் .. தினகரன் இங்கே எந்த படியை இறக்கினாலும் செல்லாமல் போகும் .. மிக முக்கியமாக தளிக்கோட்டை ராசுதேவர் பாலு (டி.ஆர்.பாலு) பொறுப்பாளராக இருப்பார் அவரின் செல்வாக்கு எடைபோட இது உதவுமென்பதால் அதீதகவனம் செலுத்துவார்கள் .. யார் வேட்பாளர் என்பது ஒரளவு தெரிய தொடங்கியிருக்கிறது ..
இதுவரை 30 மனுக்கள் பூண்டி.கலைவாணனை களமிறக்க வேண்டுமென வந்திருக்கிறது.. எல்லா ஊர்களிலும் கிளை கழகங்கள் முழுவீச்சில் வேலை செய்கிறார்களென தகவல் வருகிறது .. தளபதியின் தனிகவனம் திருவாரூர் மீது என்பது கூடுதல் பலம் ..
..
ஆளும் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும்.. வாய்சவடால் தினகரனுக்கும் எச்சரிக்கை
ஆழம்தெரியாமல் காலைவிடாதே..
..
ஆலஞ்சியார்
Tuesday, January 1, 2019
திருவாரூர்
திருவாரூர்
கலைஞரின் தொகுதி என்ற அடையாளத்தோடு நம் கண் முன்னே நினைவலைகள் வந்து போகிறது .. தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார்கள் தன் மண்ணின் மைந்தனை கொண்டாடினார்கள் .. கலைஞரின் மறைவையொட்டி இடைத்தேர்தல் ..
20 தொகுதிகள் காலியாக இருக்கும் போது இதற்கு மட்டும் தேர்தலை அறிவித்து இன்னமும் ஜனநாயகத்தை நேர்மையை கடைப்பிடிப்பதாக காட்டிக்கொள்ள நினைக்கிறது இந்திய ஒன்றியத்தின் தேர்தல் ஆணையம் ..தேர்தல் நியாயமாக நடக்குமென நம்புவோம்
..
ஆர்.கே.நகரில் வெற்றிபெற்றுவிட்டோமென்ற இருமாப்போடு தினகரன் பேச தொடங்கியிருக்கிறார் .. இங்கே களம் வேறுமாதிரியானதென்று அவருக்கு புரியவில்லை ஆமை முயல் கதையாய் ஆர்.கே நகர் தேர்தல் திமுகவின் மீது களங்கத்தை சேர்த்தது .. இந்த முறை மிக கவனமாக செயல்படுவதை தளபதியின் சூசகமான பேச்சு உணர்த்துகிறது ..ஜனநாயக இயக்கத்தில் தேர்தல் நடைமுறைகென்று வழிகாட்டுதல்கள்/நடைமுறைகள் உண்டு விரும்பமனு நேர்காணல்.. தலைமை யாரை அறிவிக்கிறதோ அவரே வேடிபாளர் .. வெற்றி வேட்பாளர்.. சில சமிஞ்சைகள் தெரிய தொடங்கியருக்கிறது மிக சிறந்த களபணியாளரை நிறுத்தபடலாம் நல்ல தேர்வாகவும் இருக்கும் தொகுதி முழுக்க அறிந்த அவர்களால் விரும்படுகிற நபர் .. யாரை நிறுத்தினாலும் ஏற்பார்கள் என்றாலும் சிலர் அதிகமாக நேசிக்கபடுகிறவர்களாக இருப்பார்
திருவாரூர் தொகுதியில் குறிப்பிடதக்க அளவில் இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள் .. தொகுதியின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லீம் சமூகம் விளங்குகிறது
எப்போதும் திமுகவிற்கு வாக்களித்தவர்கள் இந்த முறையும் தொடருமென நினைக்கிறேன் .. அதிமுகவின் பாஜகவின் கரிசனமும் அமுமுகவின் பாஜகவின் பயமும் திருவாரூரில் எதிர்வினையாற்றும்
..
திமுக வேட்பாளர் யாரென்பதில் ஊடகங்களும் சமுகவலைதளங்களும் அதிக ஆர்வம் காட்டுகின்றன .. பூண்டியார்.. என சிலரும் கலைஞரின் மகள் செல்வி என சிலரும் சிலர் உதயநிதி நிற்கலாமென ஆருடம் சொல்கிறார்கள் அத்தனை எதிர்பார்ப்பு .. எனக்கு அங்கே தலைவர் தளபதி.ஸ்டாலின் அவர்களே நிற்கலாமென்று கூட தோன்றியது காரணம் திமுக தலைமையின் தொகுதி .. அதில் தற்போதைய தலைவர் நிற்கலாம் .. ஆனாலும் தலைமை முடிவெடுக்கிற வேட்பாளர் வெற்றி பெற செய்யவேண்டும்.. தளபதி இல்லையென்கிறபட்சத்தில் பூண்டி கலைவாணன் மிக சிறந்த தேர்வாகலாம்..
..
திருவாரூருக்கென்று சில மரியாதையுண்டு மானமுள்ள மறவர்கூட்டம் ..கலை இலக்கியம் நாடகத்தில் அதிகம் நாட்டம் கொண்டவர்கள் விவசாயம்சார்ந்த தொழில்களும் ..தமிழ் கலாச்சார பண்பாட்டு செயலோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் .. அவர்களை விலைக்கு வாங்கலாமென்ற சிலரின் எண்ணம் ஈடேறாது .. அவர்களுக்கென்ற சில மரியாதை உண்டு அதை கெடுத்துக்கொள்ளமாட்டார்கள் .. நிலகிழார்களாக உழவை பிரதானமாக கொண்ட மானமுள்ள கூட்டம் .. சிலர் போடும் தப்புகணக்குகளை தவிடுபொடியாக்கி வெற்றிவாகை சூடும் திமுக என்பதில் ஐயமில்லை .. ஆனாலும் எச்சரிக்கையோடு செயல்படவேண்டும் அரசு இயந்திரமும் .. வாக்கு இயந்திரத்தையும் சரியாக கவனிக்கவேண்டும் தொகுதி முழுக்க கண்காணிப்பு அவசியம் .. இதோ தொடங்கிவிட்டது.. புதிய விடியலுக்கான
துவக்கம்,..
..
கீழ்வானம் சிவக்கும் ..
பனிமூட்டம் விலகும் ..
உதயசூரியனின் மெல்லென சிரிப்பான்
ஒளி பரவும்.... விடியும்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Posts (Atom)