Tuesday, February 27, 2018
அடிமாடுகள்
அதிமுக அமைச்சர்கள் கீழ்ப்பாக்கம் செல்லும் அளவுக்கு முற்றிய நிலையை அடைந்துள்ளார்கள் - டிடிவி தினகரன்..
..
என்ன பேசுவதென்றே அமைச்சர்களுக்கு தெரியவில்லை.. எதை பேசவேண்டும் எதை பேசகூடாதென்ற சராசரி அறிவுகூட இல்லை..
ஜெயலலிதா கை காட்டியவரை மதிப்போம் மற்றவரை மிதிப்போம் என்கிறார் ஒரு அமைச்சர்.. கட்டம் சரியில்லை அதனால் ஸ்டாலின் முதல்வராக முடியாதென்கிறார் மற்றொருவர்.. ஜெயலலிதா சிலையை மாற்றி சொன்னால் அழுகிப்போகி விடுவீர்களென்றெல்லாம் பேசுகிறார்கள் ..
தினகரன் ஆட்கள் அதிமுக வேட்டி கட்டியிருந்தால் அவிழ்த்துவிடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் .. அமைச்சர் மணிகண்டன்..
தினகரன் பைத்தியம் அது பத்தும் சொல்லும் ஜெயகுமார்.. தினகரன் ப்ராய்லர் கோழி ..வைகை செல்வன்.. அவர் பெட்டைக்கோழி தினகரன்
அனைத்தையும் கேட்டுபாருங்கள்..
பைத்தியங்களிடம் மாட்டிக்கொண்டோமோ என எண்ண தோன்றும்
..
முன்பெல்லாம் அறிவில் சிறந்த பல்வேறுத்துறையின் ஆளுமைகளை அமைச்சராக்கினார்கள் ..அமைச்சர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர்களின் செயல்பாடுகள் கட்சி செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு சிறந்ததாக இருக்கும் அவரவர் வகிக்கும் துறைப்பற்றிய அறிவை பெற்றிருப்பார்கள் .. திரு.எம்ஜிஆர் வரவிற்கு பிறகுதான் அமைச்சர்கள் தன் ரசிகர்மன்றத்திலே தேடினார்.. அப்போது கூட திருநாவுகரசர் போன்றவர்கள் இதுபோன்று பேதைகளாக இல்லை ஒரளவு கற்றுக்கொள்ள முயற்சித்தார்கள்.. எம்ஜிஆர் திடீரென்று தன் ரசிகர் மன்ற மாநாட்டை கூட்டி ஜேப்பியாரிடமிருந்து பதவியை புடுங்கி திருநாவுகரசை மன்ற தலைவராக நியமித்தபோது.. தன் தொண்டர்களை கத்தி வைத்துக்கொள்ள சொன்னார்..
வழக்கம்போல் சோ .. திருநாவுகரசை சந்தித்து மூன்று விதமான அளவுகளை கொண்ட கத்தியை காட்டி எதை வைத்துக்கொள்ள சொன்னார் முதல்வரென கேட்டார்.. திருநாவுகரசிற்கு தர்மசங்கடமாக போனது.. உடனே ரசிகர்களை வைத்துக்கொள்ள சொன்னாரென சொன்னார்..சோ நக்கலாக தொண்டர் வேறு ரசிகர் வேறில்லை .. எந்த கத்தி என்று கேட்டது சிரிப்பை உண்டாக்கியது..
..
ஆனால் ஜெயலலிதா வரவிற்கு பிறது தாயகட்டை உருட்டி எந்த எண் வருகிறதோ அவர் அமைச்சரென்றவுடன் அவர்களுக்கு எதற்கு நம்மை அமைச்சராக்குகிறார்களென தெரியாமல் அமைச்சராகிவிட்டார்கள்.. ஏன் நாங்களெல்லாம் பூஜ்யம் என்று வெளிப்படையாகவே மூத்த அமைச்சர் சொன்னதெல்லாம் உண்டு.. அமைச்சரென்ற சொல்லின் பொருள் தெரியாமலேயே அமைச்சராகி இருக்கிறார்கள்.. அமைச்சரவை கூட்டமெல்லாம் இப்போது கூட்டபடுவதே இல்லை .. முன்பெல்லாம் கலைஞர் அமைச்சரவை கூட்டி கருத்துகேட்பார் மூத்த அமைச்சர் பேராசிரியரோடு கலந்து முடிவெடுப்பார் அதெல்லாம் ஜெயலலிதாவிடம் கிடையாது .. அழைத்து கையெழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பி விடுவார்கள் எதற்காக கூட்டமென்று .. செய்திகளில் தெரிந்துக் கொள்ளும் அவலமெல்லாம் நிகழ்ந்தது ..
ஏன் .. நம் பிரதமர் மோடி கூட பண மதிப்பிழப்பை அறிவிக்கும் போது அது நிதியமைச்சருக்கே தெரியாதென்றும் அமைச்சரவை கூட்டி ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டு மோடி ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் பேசினார் தான் தோன்றித்தனம்
சிறந்த ஜனநாயகமில்லை..
..
அமைச்சரென்பவன் ஆலோசனைகளை சொல்பவனாக.. ஆக்கபூர்வமாக செயல்படுபவனாக .. சமயோசித புத்தியுடையவனாக .. அறிவில் சிறந்தவனாக .. மக்களின் குறைகளை ஆய்ந்து களையும் ஆற்றலுடையோனாய் இருத்தல் வேண்டும்.. பூஜ்யங்களும்.. அடிமைகளும்.. அறிவிலிகளும் அமைச்சர்களாக்கி .. பேசாமடைந்தையாய்
எதற்கும் தலையாட்டும் ஆட்டுமந்தையாய் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாய்.. எப்போது பதவி போகுமென்றறியாது எப்போதும் பதைபதைப்போடு ஒருவித நடுக்கத்தோடே இருந்து பழக்கப்பட்டவர்கள்.. பாவம்.. அடிமாடுகள் உழவிற்கு உதவாது..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment