Wednesday, February 7, 2018

Pakkoda maker

மக்களவையில் பிரதமர் உரைக்கு எதிராக, எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் முழக்கம். மிகவும் உரத்த குரலில் பேசினார் மோடி. அவர் முகத்தில் கடும் கோபம் தெரிகிறது.. பாஜக ரத்தத்தில் ஜனநாயகம் ஊறியுள்ளது என்றார் பிரதமர் அது ஜனநாயகம் இல்லை #சனாதானம் என அவருக்கு யாராவது சொல்லியிருக்கலாம்.. படேல் பிரதமராகியிருந்தால் முழு காஷ்மீரும் கிடைத்திருக்குமென்றார்.. மிக சிறந்த ஜனநாயகவாதி நேரு என்ற நாத்திகர் இல்லாமல் போயிருந்தால் நாடு எப்போதே சிதைந்திருக்கும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற மந்திரம் சமயங்களை கடந்த மனிதநேயமும் தான் இந்தியாவை வலுவாக்கி நிறுத்தியிருக்கிறதென்று பிரதமருக்கு தெரிந்திருக்கவில்லை மோடி இந்நாட்டின் பிரதமர். அவர் உரை முழுக்க காங்கிரஸ் கட்சியைப் பற்றி மட்டுமே இருந்தது அவர் பேசட்டும் ஆனால் அதற்கு பாராளுமன்றம் இடமல்ல. வேலை வாய்ப்பை பற்றி பேச மறுக்கிறார், மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேச மறுக்கிறார். அவர் பிரதமராக நாட்டின் பிரதமராக பேசவில்லை. ஒரு அரசியல் தலைவராக மட்டுமே பேசியுள்ளார் என்றார் ராகுல் காந்தி ஆம்.. மோடி தான் பிரதமரென்பதையே மறந்துவிட்டார் .. வாய்சொல்வீரர்.. .. பின் எவ்வளவுகாலம் பொய்யை நம்பிக்கொண்டிருப்பது.. வாய்சவடாலும் வார்த்தை ஜாலமும் கரை சேர்க்கவில்லை தேர்தல் பிரச்சாரத்தில் 56 இன்ச் மார்புள்ளவன் என பேசிய போதே அவரின் தகுதி நமக்கு புரிந்தது.. எப்போதுமில்லாத வகையில் ஊடகங்கள் தொடர்ந்து தூக்கிபிடித்து நிற்க தான் யார் தன் தகுதியென்ன என தெரியாமலேயே மிகப்பெரிய பொறுப்பை ஏற்று .. மேலே சென்றுக்கொண்டிருந்த இந்தியாவின் வளர்ச்சியை ...கீழே இறக்கிய பெருமை இவருக்கு உண்டு.. இதுவரை பிரதமராக இருந்தவர்களில் .. தான் என்ன படித்தேன் என்பதை கூட ஒளித்துவைக்கிற ஒருவர் .. யாருக்கும் தெரியாத இவரின் கல்வி தகுதி .. தகவல் உரிமை சட்டத்தில் கூட கேட்டு பெற முடியவில்லை அந்தளவிற்கு வெளிப்படை..? இதுதான் மோடி என்ற மனிதரின் நிலை.. .. இதோ புதிய புத்தன் பிறந்துவிட்டார் .. இந்தியாவை காக்க பிறந்த அவதாரமென்றெல்லாம் கதைகட்டி கடைசியில் எதற்கு உதவாத அரைகுறையென கண்டறிய நான்கு ஆண்டுகள் தேவைபட்டிருக்கிறது.. இதோ சாமானியன் பிரதமராக வந்துவிட்டார்.. டீ கடை வைத்திருந்தவர் பிரதமராக முடிகிற ஜனநாயகம் வேறெங்கும் உண்டா என்றெல்லாம் கேட்டபோது.. சிலர் ஆமாம் இதுதானே சிறந்த ஜனநாயகம் என்றார்கள்.. ஆனால் மிக உயர்ந்த பதவிக்கு வரும் தகுதிகள் எவையென்பதை அளக்க மறந்துபோனார்கள்.. தமிழகத்தில் கூட இதோ பார் கடைக்கோடி தொண்டன் வெல்லமண்டி வைத்திருந்தவர் முதல்வராக வரமுடிந்ததே என்றார்கள்.. தகுதியை வளர்த்துக்கொள்ளாது போனால் அதன் தாக்கம் ஏற்படுத்தும் இன்னல்களும் பேரடியும் அனுபவத்தில் உணரும் போதுதான் தெரியும்.. எளியவர்கள் அரசியலுக்கு வரவேண்டுமென்பது தவறானவர்கள் லாயக்கற்றவர்கள் பொறம்போக்குகள் அல்ல.. தகுதி திறமையும் சேவை மனப்பான்மையும் உடையோர் வரவேண்டுமே தவிர .. அரைகுறைகளும் அறிவிலிகளும்.. மதம்பிடித்தாட்டும் பேய்களும் அல்ல.. .. தலைக்கு ₹15 லட்சமென்றதை அரசியல் கவர்ந்திழுக்கும் பிரச்சாரமாக கருதலாம் ஆனால் demonetisation - பண மதிப்பிழப்பை ஒரு இரவில் கொண்டுவந்து இதோ ஊழலை கருப்பு பணத்தை ஒழிக்கவந்தவன்.. இதோ ஒழிந்தது கருப்புபணமென பெரும் கூச்சலிட்டு இதோ எங்கள் இரட்சகன் .. இரட்சித்தானென பின்ணணி பாடி.. ஒரே கோரஸாக கேட்டோம்.. அப்போதே அறிவுடைசமூகம்.. அமைதியாய் இது ஒன்றுக்கும் உதவாத அடிமாடு என சொன்னார்கள்.. அதன் தாக்கத்தை உணர ஒராண்டு பிடித்தது.. தொலைநோக்கு சிந்தனையில்லாத திட்டங்களை தீட்டி தங்கள் கையிருப்பு இதுதானென காட்டி .. கடைசியில் திராவிட பெருவுடையானின் காலில் விழுந்த கதையாய் திராவிட கட்சியின் செயல்திட்டங்கள் தொலைநோக்கு பார்வையை கடன்வாங்கி விருந்துவைக்கிறார்கள்.. உலகிற்கு அறம் சொன்ன வள்ளுவன் வகையறா நாங்கள்.. இனி... இந்தியா விழித்தெழ வேண்டுமெனில் இந்த கூமுட்டைகள் ..மதம்பேசும் அறிவிலிக்கூட்டத்தை அவர்களுக்கு செம்படிக்கும் மூளைச்சலவை செய்த கழுதை கூட்டத்தை வீட்டுக்கு அனுப்புவோம்.. மத்தியிலும் மாநிலத்திலும் உண்மையான நல்லாட்சியை நல்க திமுகவிற்கு துணைநிற்போம் .. கடந்த தவறுகளால் நாடும்.. நம் மாநிலமும் படும் அவதிகள் போதும் .. தமிழகத்திற்கு தீராத களங்கத்தை தலைகுனிவை ஏற்படுத்தி வாய்மூடி அதிகார பசியில் இடுப்பு வேட்டி அவிழ்ந்து விழுந்தது கூட தெரியாமல் இந்திய அரங்கில் அம்மணமாய் திரிகிற .. அடிமைகள் கூட்டத்தையும் விரைந்து வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.. நல்லதை விதைப்போம்.. நல்லதையே அறுவடை செய்வோம்.. சாதி மதம் எனும் வெறிபிடித்த இழிநிலையை விட்டொழித்து சமநீதியை நிலை நாட்ட உறுதியேற்போம்.. .. இனி .. 56ம் வேண்டாம் ..அடிமாடுகளும் வேண்டாம் .. .. PM (pokkda maker..) .. Aalanci Spm

No comments:

Post a Comment