Thursday, February 22, 2018
உயர்மட்ட..
உயர்மட்ட குழு..
நிறைய பேருக்கு அதன் பொருள் தெரியுமா என்று கூட தெரியவில்லை அது எதற்காக அமைக்கபட்டது என்றும் தெளிவில்லை..
அரசியல் புரிதலே இல்லாதவர்களை உயர்மட்டத்தில் வைத்திருப்பது எந்த பலனையையும் அளிக்காது.. அது சரி அது என்ன உயர்மட்டம்..?
..
ஒரு கட்சி ஜனநாயக ரீதியாக செயல்படும் போது இப்போது இருக்கிற கட்சி (எங்கே ஜனநாயகத்தோடு செயல்படுகிறது என கேட்பது புரிகிறது) எல்லா காலகட்டங்களிலும் அடிமட்ட தொண்டர்களின் பங்களிப்பை பெற்று முடிவுகள் மேற்கொள்ள முடியாதென்பதால் கிளைக்கழகம் செயலர் பதவியையும் அதன் கருத்துருவை உள்வாங்கி நடைபோட ஒன்றியத்தையும்.. மாவட்ட நிர்வாகத்தை ஒருங்கிணைக்க ..மாவட்ட செயலர் பொறுப்பும் வழங்கபடுகிறது .. தலைமை கழகத்தின் நேரடி நியமனமாக/ மாவட்ட வட்டங்களின் பரிந்துரையில் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை உருவாக்கி ..அடிமட்டவரையிலான தொடர்ப்பை அதன் கருத்தை கேட்டு செயல்படுவதே ஜனநாயக மரபென்பதால் கிளைக்கழகம் தொடங்கி தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கபட்டு செயல்படுகிறார்கள்.. பிறகெதற்கு உயர்மட்டக்குழு என்ற கேள்வி எழும் ..சில நேரங்களில் அவசரமாக செயல்பட வேண்டி.. கருத்தை கேட்டுபெற கலந்தாலோசிக்க ஒரு உயர் குழுவை அமைப்பதும் அதன் ஆலோசனையும் பெறுவதற்காக நீண்ட நெடிய கட்சிப்பணிகளை செய்தவர்கள் ஆழ்ந்த அரசியல் அறிவுடையோரை வேண்டபட்டவர்களை..நியமிப்பார்கள்..
ஏன் வேண்டபட்டவரென கேள்வி எழும்..
சில நேரம் தலைமையின் கருத்தை கடுமையாக எதிர்த்து பேசும் சூழல் உருவாகும் போது அதன் சமன்நிலையை கொண்டுவர சிலரை கருவியாக பயன்படுத்தபடுவார்கள்..
உதாரணமாக திமுகவில் அதிக அதிகாரமிக்க பொதுக்குழுவில் கட்சியின் நடவடிக்கையை ..கடுமையாக எதிர்த்து விமர்சித்து பேசிக்கொண்டே இருப்பார்கள் .. அதன் போக்கை மாற்றவேண்டுமென்கிறபோது அது அவசியமென்கிற நிலையில் .. கடைசியில் அமர்ந்திருக்கும் கோ.சி.மணியை கண்களாலேயே தேடுவார் தலைவர் கலைஞர்..அதை அறிந்து மணி அவர்கள் சரியான அதை நேராக்கி விவாதத்தை முடித்துவைப்பார்..
சிலரை சிறப்பு விருந்தினராக அழைத்து கருத்து கேட்பதும் உண்டு சிலர் பார்வையாளர்களாக அதன் பயிற்சிபெற்று வருங்காலங்களில் செயல்படவேண்டி அழைப்பதுண்டு.. ஆனாலும் இந்த உயர்மட்ட முடிவை தற்காலிகமாக தான் ஏற்பார்களே தவிர அதை தொடர்ந்து செயல்படுத்த வேண்டுமெனில் செயற்குழுவும் ..அதை பொதுக்குழுவும் அங்கீகரிக்கவேண்டும் .. அதாவது அவசர முடிவெடுப்பதற்காகவும் தலைமைக்கு அதிகாரத்தை தருவதற்காகவுமே தவிர வேறில்லை..
..
இப்போதெல்லாம் உயர்மட்ட குழுவென்பது எதற்கென்றே அறிந்திடாத அதிகாரமிக்க பதவியென எண்ணி நியமனம் செய்கிறார்கள் அரசியலைப்பற்றி சராசரி புரிதலோ அடிப்படை அறிவோ கூட இல்லாதவர்கள் தொண்டு..? செய்ய நியமனம் செய்கிறார்கள்.. நியமிப்பவருக்கும் ஏன் எதற்கென தெரியாது நியமனமானவர்களுக்கும் அது புரியாது.. முதலில் வருவோருக்கு முன்னுரிமைப் போல..
ஆரம்பத்தில் வருகிறவர்களுக்கு பதவி கிடைக்கும்.
அது சரி.. தலைமையே நேரடியாக முதல்வர் பதவிதான் .. மக்களின் பிரச்சனைகளுக்கு போராடுவதல்லாம் எங்கள் வேலையில்லை மக்களுக்கு தொண்டாற்ற மக்களைப்பற்றி கவலை கொள்ளவெல்லாம் நேரமில்லை.. எங்களுக்கு பதவி தாருங்கள் நாங்கள் பணி செய்கிறோமென்கிறார்கள்..
இப்போது தொடங்கபடுகிற கட்சிகள்
ஜனநாயகதன்மையை கொண்டதாக இல்லை அதனால் அவர்களுக்கு வேண்டியவர்களை .. அதிக நம்பிக்கையுள்ளவர்களை கொண்டுவருகிறார்கள் .. அவ்வளவுதான் அவர்களுக்கு அரசியலைப்பற்றிய அறிவோ தெளிவோ தேவையில்லை.. இதுவரை கருப்புபணத்தோடு புழங்கியவர்கள் நேர்மையான ஜனநாயக முறையெல்லாம் அவர்களுக்கு வராது/தெரியாது..
..
உதவியாளர் பணிக்கே நேர்முக தேர்வென்ற பெயரில் அனுபவமிருக்கிறதா என கேட்கும் போது நேரடியாக முதல்வர் பதவிக்கு வர ஆசைபடுவோர் .. குறைந்தபட்ச தகுதியாவது இருக்கிறதா என்றால்.. சினிமா நல்லவனாக நடித்தால் நல்லவனென நம்புவார்களென்ற கடைந்தெடுத்த மடத்தனத்தை மூலத்தனமாக்கி வெற்றிபெற நினைக்கிறார்கள்.. ட்விட்டரிலும்.. சமூக வலைத்தளத்திலும் வசனமேறிய கவிதை சொன்னால் அரசியல் அறிநிதவரென நினைப்பு சிரிப்பை தான் தெரிகிறது.. இன்னும் சிலர் வரவேண்டியிருக்கிறது மார்கெட் போன பழைய அரிதாரங்கள்..
..
#வேசம்_கலையும்_அரிதாரபுருஷர்கள்..
..
படம்: ஊழல் செய்து தண்டிக்கப்பட்ட கிரிமினல் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக ..
உண்ணீவிரதமிருந்தவர் ..இவர்கள் ஊழலுக்கு எதிரானவர்களாம்
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment