Sunday, February 18, 2018

அரசியல் பழகு

சேர்த்துவைத்தாரென்பதற்காக மோடியின் பெயரை இழுக்கலாமா என்கிறார் பொன்னர் (சேர்த்துவச்சவனை தானே கேட்கமுடியும்..) புத்திசுவாதீனம் இல்லையென்கிறார் எச்.ராசா சர்மா.. மோடி தமிழை சமஸ்கிருதத்திற்கு முன்பே இருந்த மூத்த மொழியென்பதை ஏற்கமுடியாமல் சங்கர நாராயணனென்ற விஜயேந்திரரை அவமதித்துவிட்டதாக எஸ்.வி.சேகர் .. .. ஒன்று புரிகிறது இவ்வளவு அரைகுறைகளுக்கு நடுவிலும் நாம் அரசியல் செய்யவேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் எதிர்கருத்துக்களை கூட நயத்தோடும் நாகரீகமாவும் எடுத்துவைத்தார்கள் அறிவுகொண்ட விவாதங்கள் .. ஏற்க கூடிய அளவில் இருக்கும்.. கொள்கைகளை தாண்டி நம் முன் வார்த்தைகளால் நர்த்தனம் புரிவார்கள்.. கொஞ்சம் அசந்தால் அவர் சொல்வது சரியென கேட்கவேண்டியிருக்கும்.. எதிர்ப்பவரும் திறமையாளனாக இருந்தது ஒரு அறிவுடை சமூகமாக .. அறிவுசார் கூட்டமாக தமிழகம் இருந்தது .. எப்படி இப்படியானது. .. நண்பர் ஒருவர் கருத்திடுகையில் அறிவுடை சமூகமென்கிறீர் எப்படி அதனை ஆரியம் வீழ்த்தியிருக்குமென கேட்கிறார்.. வேறெங்கும் தேவையில்லை சமகால விஞ்ஞான வளர்ச்சி பெற்ற காலத்தில்.. அதிக அறிவுபூர்லமான கண்டுபிடிப்புகளை தந்த இனம் யூத இனம் ஆனால் அவர்கள் நாடிழந்து நாடோடிகளாய் திரிந்த காலமும் வரலாற்றில் உண்டு.. தமிழக அரசியலில் மிக மோசமான காலம் இது என்ன செய்கிறோமென தெரியாத அறிவிலி கூட்டத்திடம் சிக்கி மக்கள் அள்ளல்படுகிறார்கள்.. தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன பைத்தியங்கள் எண்ணிக்கை கூடி இருக்கிறது.. .. சமீபகால பாஜகவினர் போடுகிற கூச்சல் முட்டாள்தனங்களின் மொத்தவடிவமாக இருக்கிறது.. பாஜக வகையறாவில் எவருமே சரியாக பேசுவதில்லை அதைவிட அறிவுபூர்வமாக பதில் சொல்வதில்லை ஞானசூன்யங்கள்.. கத்தி கூச்சலிடுவதாலேயே அவர்கள் பேசுவது சரியென்று ஆகிவிடாது.. பா.ஜ.க கரு நாகராஜன் பார்த்தீர்களா, எங்களது கடுமையான நடவடிக்கைகளால் சமாளிக்க முடியாமல் நிரவ் மோடி இந்த நாட்டை இனி ஏமாற்ற முடியாது இருக்க தகுதியில்லை என்று நாட்டைவிட்டே ஓடிவிட்டான்.. என்கிறார் இது ஒரு சாம்பிள்தான் இவர்கள் யாருமே நேர்மையான முறையில் விவாதிக்க மாட்டார்கள் காரணம் இவர்களிடத்தில் சரக்கில்லை .. சட்டமன்றத்தில் கூட அதிமுகவினரின் விவாதம் அதிமுட்டாள்கள் நாங்களென பறைசாற்றுவதாக இருக்கிறது.. காரணம் கொள்கை ரீதியாக இணைந்தவர்களில்லை மாறாக கவர்ச்சி நம்மை காக்குமென நம்பி இணைந்தவர்கள் திமுகவை வீழ்த்த ஆரியர்களின் ஆதரவு நமக்கிருக்குமென நம்பி வந்தவர்கள்.. அவர்களிடம் திறமையை எதிர்பார்க்க முடியாது.. .. புத்திசுவாதீனம் இல்லாதவரென்று யார் சொல்கிறார்.. புத்தி தெளிவில்லாதவர் எதையாவது பேசி கலவரத்தை உண்டுபண்ணலாமா என காத்துகிடக்கிற கழிசடை .. தமிழை உயர்த்தி பேசியதை பொறுக்காத தமிழ்நாட்டில் தமிழில் நாடகங்கள் நடத்தி பிழைக்கும் பீ திங்கிற புத்தியுள்ளசேகர்.. இதுதான் இவர்களின் லட்சணம் .. கருத்திடை வேறபாடுயிருந்தாலும் சுவைகுன்றா சொல்லெடுத்து பேசிய தமிழ்நாட்டில்.. ராஜாஜி பக்தவச்சலம் காமராஜர்.. போன்றவர்களோடு கொள்கை ரீதியான யுத்தமே நடத்திய போதும் அறிவுடையோரோடு மோதிய அனுபவமே கிட்டியது இப்போதெல்லாம் அறிவிலகளோடு அவர்களின் காமெடிகளையும் காதுகேட்க முடியாத சொல்லும் செயலும் காலகொடுமை.. ஜனநாயக மரபுகள் காற்றில் பறக்கின்றன மாற்றான் தோட்டத்தில் மல்லிகை இல்லை .. கள்ளிச் செடிகள்.. புதர் மண்டி கிடக்கிறது .. இன்னும் எத்தனைகாலம் இந்த அரைவேக்காடுகளோடு.. .. Aalanci Spm

No comments:

Post a Comment