Thursday, February 15, 2018

இசை அரசியல்

இசைக்கு ஏது சாதி.. .. இப்படிதான் சிலர் சொல்கிறார்கள் சொல்பவர் யாரென்று பாருங்கள் அதிலுள்ள வர்ணம் நமக்கு புரியும் இன்று நேற்றல்ல என்றைக்கு திருவையாற்றில் தமிழில் கீர்த்தனைகள் பாடியதற்கு தீட்டு கழித்தார்களே அன்று தொட்டு சாதிய நிலை தொடர்ந்து தான் வருகிறது.. நேற்றைய தினம் திரு.புஷ்பவனம் குப்புசாமி தனக்கிழைக்கப்பட்ட அநீதி கண்டு பொங்கினார்..தனக்கு திறமையிருந்தும் துணைவேந்தர் பதவி கிடைக்கவில்லையென்றார்.. அதற்குமுன்பு சிறு கதையொன்று சொல்லவேண்டும்.. திருமதி அனிதா குப்புசாமி அவர்கள் அதிமுகவில் சேர்ந்ததே தன் கணவருக்கு துணைவேந்தர் பதவி கிடைக்குமென்பதால் தானாம் .. அதாவது அரசியலுக்கு வந்தால் பதவியை அனுபவிக்கலாமென்ற கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தை.. அதுவும் எந்த முகாந்திரமும் இல்லாமல் எதிர்க்கட்சியை வசைபாடினால் ஜெயலலிதா மனம்குளிர்ந்து பதவி தந்துவிடுவாரென்ற நினைப்பு இருக்கிறது பாருங்கள் அது அருவருக்கதக்கது கண்டிக்கதக்கது.. .. தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைகழகத்தின் துணைவேந்தரை தேர்வு நியமிக்கபட்ட கமிட்டி சுதா ரகுராமன் என்ற பார்ப்பனர் தலைமையில் .. அரசோ குருமூர்த்தியின் ஆலோசனையில் தலைமைசெயலர் கிரிஜா வைத்தியநாதன் ..பீ திங்ககூட தயாரென்ற எஸ்.வி.சேகரின் அண்ணியார்.. பிறகு கேட்கவா வேண்டும்.. தகுதி பார்த்து வழங்கபடுவதெல்லாம் இப்போது நடைமுறையில் இல்லையென குப்புசாமி அறியாமல் போனது அவரது அறியாமை .. முனைவர் பட்டம் பெற்றிருப்பதாக சொல்கிறவர்.. என்னைவிட தகுதியானவர் அந்த பட்டியிலே இல்லையென்கிற போது நீதிமன்றத்தை நாட வேண்டியதுதானே .. ஆனால் வேண்டாம் என்கிறார்.. வன்னியர் குலத்தில் பிறந்த தன்னை பார்ப்பன கூட்டம் பழிவாங்கி விட்டதென புலம்பினால் மட்டும் போதுமா சட்டரீதியான முறையீடு வேண்டும் அப்போதுதானே நியாயம் கிடைக்கும் வரும்காலங்களில் நியமன நடைமுறையில் தகுதி அடிப்படையை பின்பற்ற பரிந்துரையை பெறமுடியும்.. காலகெடுவை நீடிடித்தும் அந்த காலகெடுவிற்குள் விண்ணபிக்காத பிரமிளாவிற்கு வாய்ப்பு வழங்க சுதா ரகுராமன் பிடிவாதம் பிடித்ததாக சொல்வதிலிருந்தே அந்த நடந்த லாபி நாடறிய வேண்டும்.. .. பிரமிளாவை துணைவேந்தராக கொண்டு வர அரசின் தலைமைச் செயலகத்தில் தொல்லியல்துறை அமைச்சராக இருக்கும் மாஃபா பாண்டியராஜன் தரப்பு பிரமிளா குருமூர்த்தி தரப்பை தொடர்பு கொண்டு துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொண்டிருக்கிறது. அதன் பிறகே அவர் அவசர அவசரமாக விண்ணப்பித்திருக்கிறார் அவரை உடனே துணைவேந்தர் ஆக்கியிருக்கிறார்கள் அவருக்கு முன்பு விண்ணப்பித்த புஷ்பவனம் குப்புசாமிக்கு அந்த பதவியை வழங்காமல் விட்டிருக்கிறார்கள்.. அதாவது பிராமணர் அந்த பதவிக்கு தரவேண்டுமன்பதற்காக பெரியளவில் சதி நடந்திருக்கிறது .. பாவம் இடைசாதி கதறுகிறான்.. தற்போதைய ஆட்சியில் பிறப்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த பதவியும் வழங்கப்படுவதில்லை” என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருக்கிறார் புஷ்பவனத்தை சேர்ந்த குப்புசாமி.. இப்போது சொல்லுங்கள்.. நாங்கள் ஏன் பார்ப்பனீயத்தை எதிர்க்கிறோமென்று புரிந்திருக்கும்.. .. #இப்பெல்லாம்_யாருங்கசாதிபார்க்குறா.? .. Aalanci Spm

No comments:

Post a Comment