Saturday, February 3, 2018
இனி.என்ன வேண்டும்
என்ன வேண்டும்.. இனி..
..
இன்றைய நிலையில் எங்கும் பரவி கிடக்கும் கசடுகள் ..ஆம் அரசியலில் அழுக்கை கொட்டுவிட்டு அதை சந்தனமென சொல்லிதிரியும் நிலை இது இந்தியாவிற்கு ஏற்பட்ட கருப்பு பக்கங்கள்..
இல்லாத ஒன்றை சொல்லி மரியாதைக்குரிய மன்மோகன் சிங் அரசை வீட்டுக்கு அனுப்பியதன் விளைவு .. எங்கும் அழுச்சாட்டியம்.. விவரகேடுகள் கையில் நாடு சந்திசிரிக்கிறது .. நான்காண்டு முடிந்தும் இன்னும் தெளிவான பாதை தெரியவில்லை ..
மதத்தை கையிலெடுத்தால் நாடு எப்படி சீரழியுமென அண்டை நாடுகளை கண்டும் படிப்பினையில்லாமல் மதத்தை கொண்டாட அது மதம்பிடித்தலைய .. நாடு கேவலமான பாதையில் செல்கிறது ..
..
பொய்களாலேயே ஒரு அரசாங்கம் தன் பதவிகாலத்தை கழிக்கமுடியுமென நமக்கு புரிய வைத்திருக்கிறார்கள் தலைசிறந்த பொருளாதாக நிபுணரை வீட்டுக்கு அனுப்பியதன் விளைவை நாடு அறிந்து கொள்ள நான்காண்டு ஆகியிருக்கிறது..
2ஜி என சொல்லி மக்களை முட்டாளைக்கிய ஊடகங்கள்.. இன்னமும் தெளிந்தபாடில்லை தாங்கள் செய்த தவறின் பலனை மக்கள் அனுபவிக்க தொடங்கிய போது.. அவன் விடுகிற ஓலம் .. இவர்கள் காதுகளுக்கு கேட்கவில்லை..
ஒரு நாட்டை கட்டமைப்பதில் நன்முறைபடுத்துவதில்லை மிக முக்கிய பங்கை வகிக்க வேண்டிய ஊடகம் .. காசொன்றோ குறிக்கோளாய் செயல்பட்டதன் விளைவு நாடு கெட்டு குட்டிசுவராய் கிடக்கிறது.. விசயமில்லாதவர்கள் வாய்ஜாலம் செய்கிற வித்தைகாரர்கள் பேசுவதை நம்பிய மக்கள் தெளிவடைய தொடங்கியதன் எதிரொலிதான் இடைத்தேர்தல் முடிவுகள்.. ஆளும் மாநிலத்திலேயே தோல்வியை குறித்திருக்கிறார்கள் மக்கள்..
..
தமிழகம்..
நல்லதொரு ஆட்சியை இதே 2ஜியை சொல்லி வீட்டுக்கனுப்ப வரிந்துகட்டி வேலைசெய்தவர் யாரென்று கவனித்திருந்தால் இன்றைய அவலங்களை மாநிலம் சந்திருக்கிருக்காது.. குறிப்பாக பார்பனர்களின் குரு சோ பெரும் முயற்சி செய்து ஆடிய ஆட்டத்தை புரிந்துக்கொள்ளாமல்.. எந்நிலையிலும் பாப்பானை நம்பாதே என்ற பாவேந்தர் சொல்லை எண்ணிபார்க்காமல் திமுகவை வேண்டாமென வைத்ததின் விளைவு .. சொரணையற்றவர்கள் கையில் தமிழகம்..
உண்மையை விளங்கி கொள்ளமுடியாத அவசரகோலம் ..சற்றென்று உணர்ச்சிவயப்பட்டு முடிவெடுக்கிற காலமெல்லாம் தமிழகம் துன்பத்திலேயே வீழ்ந்திருக்கிறது.. திமுக எப்போதெல்லாம் ஆட்சியில் இல்லையோ அப்போதெல்லாம் மறைமுகமாகவோ நேரடியாகவோ பாசிசம் தலைதூக்கும்.. இந்த மண்ணின் பெருமைகள் ஆழத்தோண்டி #கீழடியில் புதைக்கப்படும் .. நிறைய நிறைய பார்த்தாயிற்று தமிழர் நலன் மீது சிறுதும் அக்கறை இல்லாதது மட்டுமல்லாமல் அவனை இழிவுபடுத்துகிற அவனை தலைகுனிய வைக்கிற கேடுகெட்ட ஆட்சியை விரட்டுவதொன்றே வரும் காலங்களில் தமிழ் தமிழர்நலன் தமிழர் பண்பாடிற்கு பாதுகாப்பு..
..
மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிமாற்றத்திற்கு நாள் குறிக்க தொடங்கியிருக்கிறார்கள் மெல்ல தெளிந்து வைகறை வெளிச்சம் படர தொடங்கும் சமிஞ்சை தெரிகிறது.. மேகம் சூழ்ந்த வானமில்லை.. தெளிவாய் தெரிகிறது .. இடையிடையே சில கருப்பாடுகள் திசைமாற்ற முயற்சிக்கும் .. அவைகளை கண்டறிந்து கசாப் கொடுக்கவேண்டும் அந்த பணியைதான் தளபதி செய்துக்கொண்டிருக்கிறார்..
"உங்கள் புகார் உண்மையாக இருந்து நடவடிக்கை இல்லை என்றால் இந்த இயக்கத்தை நடத்துவதற்கு எனக்கு தகுதி இல்லை.. என்ற சொல் சிலரை தவறான பாதையிலிருந்து நேராக்கி சரியாக பயணிக்க செய்யும்.. செப்பனிடும் பணி சிறக்கும்.. ஒளி பிறக்கும் வழி கிடைக்கும்..
நன்று செய் அதே இன்றே செய்..
..
#தளபதி
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment