Friday, February 2, 2018

பட்ஜெட் கமல்..

விவசாயிகள், கிராமங்கள் பக்கம் பார்வையை திருப்பியுள்ள பட்ஜெட்.. நாம் பல காலமாக புறக்கணிக்கப்பட்டுதான் இருக்கிறோம். இருப்பினும் இந்த பட்ஜெட்டில் உள்ள நன்மைகளைப் பார்க்கலாமே.. மத்திய பட்ஜெட் மூலம் மத்திய அரசு விவசாயிகள், கிராமங்களின் பக்கம் பார்வையை திருப்பியுள்ளது. அதிகமாக திருப்பியுள்ளது . திரைப்பட நடிகர் கமல் .. இவர்தான் பணமதிப்பிழப்பை கடைசிவரை முட்டுகொடுத்தவர் .. கடைசியில் பேரடி விழுந்தவுடன் தவறை உணர்வதாக சொன்னார்.. .. வெளிப்படையாக ரஜினியைப்போல ஆன்மீகம் பேசாமல் நாத்திகன் போர்வையில் நமக்கு மணியாட்ட வந்த அய்யங்கார்.. ஏறைக்குறைய எல்லா பொருளாதார நிபுணர்களும்.. கடைசிவரை மோடிக்கு வக்காலத்து வாங்கி வந்தவர்கள் கூட கையொழிய தொடங்கிய நிலையில் இவர் சப்பைகட்டுகிறார்.. விவசாயிகளுக்கான உரத்திற்கான மான்யம் குறைக்கபட்டிருக்கிறதா..? ஈடுபொருள்களின் GST குறைத்தபாடில்லை விவசாய கடன் தள்ளுபடி பற்றி வாயே திறக்கவில்லை ஆனால் மேம்போக்காக விவசாயிகளுக்கான பட்ஜெட் என்பது கண்தெரியாதவன் யானையைப்பற்றி கதை சொன்னதைப்போல இருக்கிறது.. இவர்கள்தான் டிராக்டரை வாகனங்கள் பட்டியலுக்கு கொண்டுபோனவர்கள் .. திமுகதான் அதை விளக்கி விவசாயம் சார்ந்த வாகனபட்டியலில் மீண்டும் சேர்த்தது இதுதான் பாஜகவின் விவசாய நலன் பற்றிய அறிவு.. .. அரசியல் அறிவென்பது படித்தறிதல் அல்ல பட்டறிதல் என்று யாராவது இந்த கோமாளிகளிடம் சொல்லுங்கள்... மக்களோடு மக்களாக கலந்து கதைத்து .. அவன் துக்கங்களில் மகிழ்ச்சிகளில் முன்னின்று.. அவனின் தேவைகளை அறிந்து செயல்பட்டு.. இவனை நம்பலாமென நம்பிக்கையை பெறுதல் .. பத்திரிக்கைகளில் எழுதி பேசி குளுகுளு அறைக்குள் அமர்ந்து திட்டம் வகுப்பதில்லை.. நாற்பதாண்டுகளுக்கு முன்பே கலைஞர் அறிவித்ததை சொன்னதை செய்துகாட்டியதை இப்போதுதான் செயல்படுத்த போவதாக சொல்கிறார்களே இதிலிருந்தே புரியவில்லை மக்களோடு இரண்டற கலக்காதவர்களுக்கு எது தேவையென பிடிகிட்டவே பல ஆண்டுகளாகும்.. அதே நிலைதான் கமல் போன்ற அரிதாரத்தை நம்புகிறவர்களின் நிலை .. .. ஊரக விவசாய சந்தையையும் இயற்கை விவசாயத்தில் பெண்களுக்கு நிதி உதவியையும் கமல் சொல்கிறாரென எண்ணுகிறேன் .. உழவர் சந்தையாகவும், மகளிர் சுயஉதவிக்குழுக்காகவும் தமிழகத்தில் ஏற்கனவே கலைஞர் கொண்டுவந்துவிட்டார். ஏற்கனவே வளரும் நாடுகளில் சரிவை நோக்கி செல்கிற இந்தியா எல்லாதுறைகளிலும் பின்னோக்கி செல்கிற நிலை.. எல்லோரும் சொல்லிவைத்தாற்போல இது கடைசி பட்ஜெட் என்கிறார்கள் .. ஆமாம்.. இனியும் இவர்கள் கையில் நாடிருந்தால் நாசமாகிபோகும்.. பக்கோடா போடுகிறவரை தொழிலதிபராக பார்க்கிற பார்வை தான் இவர்களின் பொருளாதாரம் பற்றிய அறிவு மிக சிறந்த நிதியமைச்சர்களில் ஒருவரான மன்மோகன் பட்ஜெட் குறித்து "2022க்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க முடியாது.. என்கிறார் .. ஆனால் கமல் போன்ற மேதைகள்..? விவசாயிகளுக்கான பட்ஜெட் என்பது அறியாமையின் வெளிபாடு அன்றி வேறில்லை.. இன்னும் நிறைய படிக்கணும்.. கமல் ஆம் கலைஞரை கண்டு படிக்கணும்.. முதலில் அரசியல் செய்யவருகிறவர்கள் கலைஞரை படியுங்கள்.. அவரை மீறிய ஒன்றும் இந்தியாவில் இல்லை.. அவரே அரசியல் .. #பக்கோடா_பட்ஜெட்.. .. Aalanci Spm

No comments:

Post a Comment