Monday, February 12, 2018

இரு நிகழ்வு.. பேராபத்தும் பெரும் இழிவும்

இருநிகழ்வுகள் .. ”நாட்டுக்காக போரிட ஆர்எஸ்எஸ். மூன்றே நாட்களில் ராணுவத்தை உருவாக்கும்”: மோகன் பாகவத்.. ராணுவம் தயாராக ஒருமாதம் ஆகும் ஆனால் ஆர்எஸ்எஸ்க்கு மூன்றே நாள் போதும். இந்திய ராணுவத்தை அவமதித்த மோகன் பகவத்தை செருப்பால் அடித்தால் என்ன..? .. நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் .. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் உலகின் நான்காம் நிலை ராணுவத்தை குறைத்து மதிப்பிடுவதோடு ராணுவத்தை விட ஆர்எஸ்எஸ் அமைப்பு பலமாக உள்ளதாக சொல்கிறார்.. அன்று பகத்சிங் ஆர்எஸ்எஸ் நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையுமென்ற சொன்னது நியாபகம் வருகிறது.. .. சமீபகாலமாக பார்பனர்களின் பேச்சுதொனியும் செயல்களும் யாருக்கும் கட்டுபடாத நிலை.. அதிகாரத்தில் மோடி வைத்து இயக்குகிற நிலையில் இன்றைய தேதியில் அனைத்துத்துறைகளிலும் .. உயர்பதவிகளை ஆர்எஸ்எஸிடம் பயிற்சிப்பெற்றவர்கள்.. குறிப்பாக பார்பனர்கள் அபகரித்திருக்கிறார்கள் எல்லா செயல்திட்டங்களும் குறிப்பிட்டவர்களுக்காக அவர்களாலேயே இயக்கபடுகிறது இன்றைக்கு துணிச்சலாக பகிரங்கமாக செயல்படுவதன் நோக்கம் அவர்கள் செல்வாக்குள்ள மாநிலங்களில் வெற்றி வாய்ப்பு சரிய தொடங்கியதும் அதை நிலைநிறுத்த மிகப்பெரிய சதி திட்டத்தோடு களமிறங்க தயாராக இருப்பதன் சூட்சமம் வெட்டவெளிச்சமாக தெரிகிறது.. வரும் தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்திக்க நேர்ந்தால் அவர்கள் கையிலுள்ள அதிகாரம் போய்விடுமென்ற அச்சத்தில் இதுபோன்று பேசி பரபரப்பாக நாட்டை வைத்திருக்க நினைக்கிறது.. .. ஆர்எஸ்எஸ் தேசத்தின் அங்கரீக்கபட்ட திவீரவாத அமைப்பாக செயல்படுகிறது ஆங்காங்கே இளம் சிறுவர்களை கூட ஆயுதபயிற்சி அளித்து அவர்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்கிற செயலை செய்துவருகிறது உலகின் தலைசிறந்த ஜனநாயக அமைப்பை பல்வேறு மொழி பேசும் பல்இன மக்களின் வேற்றுமை சித்தாந்தத்திலும் .. ஒற்றுமையாய் வாழும் நாட்டின் கீர்த்தியின் மீது தொடர்ந்து தாக்கிவருவதும் .. மதத்தை சாதியை சொல்லி பிரிவினையை தூண்டுவதும் தொடர்ந்து அநாகரீகமற்ற பேச்சாலும் செயலாலும் வினையாற்றுவதும்.. பாஜக பரிவார்கள் செய்கிறார்கள் ஒவ்வொரு வினைக்கும் நாடு தழுவிய எதிர்வினை அவர்களுக்கு கிடைக்கிறது ஆனாலும் எதையாவது சொல்லி நாட்டை பதட்டத்தோடு வைத்திருந்தால் மட்டுமே வரும் தேர்தலில் வெல்ல முடியுமென கணக்கிட்டு உளற தொடங்கியிருக்கிறார்கள்.. இந்தமுறை பலத்தை காட்டி பயமுறுத்தும் செயலை கையிலெடுக்கிறார்கள்.. .. #இரண்டு.. . குற்றவாளி படத்திறப்பிற்கு பிறகு சிலர் பெரியார் காயிதெ மில்லத் படங்கள் இருகிகும் போது ஜெயலலிதா படம் இருக்ககூடாதா ..? என்கிறது பாஜக முதலில் இருவரும் குற்றவாளிகள் அல்ல சட்டத்தின் முன் தண்டிக்கபட்டவர்கள் அல்ல.. இந்த சமூக மேம்பாட்டிற்காக காலமெல்லாம் உழைத்தவர்கள் .. கண்ணியத்திற்குரியவர்கள் இந்த தேசத்தின் பூர்வகுடிகளுக்காக .. நாடோடிகளிடமிருந்து மரியாதையை மீட்டு தந்தவர் தந்தை பெரியார்... இறந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் பாப்பானை கதறவிடுகிறாரே.. அதிலிருந்தே தெரியவில்லையா பெரியாரின் பணி.. இன்றைக்கும் இந்த மண்ணில் பாசிசம் காலூன்ற முடியாமல் தடுத்து நிற்கும் பெருஞ்சுவராய் எம்தந்தை பெரியார் இருக்கிறாரே அவரோடு அரசியல் கழிசடையை ஒப்பிடுவது இழுக்கு.. தமிழனின் புகழை நாடாளுமன்றத்தில் நிலைநாட்டியவர் காயிதெ மில்லத்.. பண்டிதர் நேருவே.. நீங்கள் இஸ்லாமியர் நீங்கள் ஏன் தமிழுக்கு வக்காலத்து வாங்குகிறீர்களென்ற போது.. எனது மதம் இஸ்லாம் நான் பிறப்பால் தமிழன் எனது மொழி தமிழ்.. என் உணர்வோடு கலந்தது தமிழ் எங்கள் இனம் திராவிடம்.. எங்கள் வழிபாடுதான் இஸ்லாமே தவிர நான் உருது வழி வந்தவனோ அரபியனோ அல்ல.. என உரக்க சொன்னவர்.. சிறந்த நாடாளுமன்றவாதியாய் .. தொகுதிக்கு செல்லாமல் வெற்றிபெற்ற பெருந்தகையாளர் காயிதெமில்லத்.. அவரோடு ஜெயலலிதா ஒப்பிடுவதே அருவருப்பானது.. .. குற்றவாளி பாப்பாத்தி என்பதற்காக செம்படிக்கும் பாஜக .. இவர்கள் தான் ஊழலுக்கெதிரானவர்களாம் .. ஊழல் செய்து இந்தியாவிலேயே பதவியில் இருக்கும் போது சிறைச்சென்ற .. தாம் வகித்த பதவிக்கு தீராத களங்கத்தை தந்த ஜெயலலிதாவோடு பெருந்தகைகளை ஒப்பிடுவது எப்படி சரியாகும்.. எனக்கு role model முன்மாதிரியாக இருக்கிறார் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி.. எதில் என்பதை அவர் விளக்கவேண்டும் பொது சொத்தை எப்படி கொள்ளையடிப்பது என்பதிலா..? ஒரு குற்றவாளிக்கு பரிந்து பேசும் இவர்களை கண்டால் எரிச்சல் வருகிறது.. இந்தியா வரலாற்றில் குற்றவாளி படத்திறப்பு .. #கருப்புதினம்.. .. Aalanci Spm

No comments:

Post a Comment