Thursday, February 22, 2018
நீதியா.. அநீதியா
எவ்வளவு காலம் காத்திருப்பீர்கள்..
தாமதிக்கபடும் நீதி செத்த நீதியை போன்றது..
..
இந்த நீதிமன்றங்கள் காலதாமதமாக அளிக்கப்படும் தீர்ப்பால் இந்த நாடும் சமூகம் சீரழிகிறது அநீதி அளிக்கபட்டிருக்கிறது..
ஜெயலலிதா வழக்கில் 18 வருடம் காலந்தாழ்த்தியதை நடைமுறை சிக்கல் என்றாலும் தீர்ப்பிற்கு பிறகான நடைமுறைகளில் காட்டிய அவசரம்.. அதை இறுதி தீர்ப்பில் காட்டாத நேர்மையை நாம் வியக்கமால் இருக்கமுடியவில்லை..? இறுதி தீர்ப்பை வழங்க நீண்டநாட்கள் எடுத்துக்கொண்டதால் கிரிமினல் நாடாண்ட சூழலை ..கொள்ளையடித்த திருடியின் கையில் அரசை தந்ததில் மிகப்பெரிய பங்கு நீதிமன்றத்திற்கு உண்டு.. உயர்நீதிமன்றத்தில் குமாரசாமியை கொண்டு மூன்றே மீதத்தில் தீர்ப்பை தர முடிந்ததே.. ஏன் இறுதி தீர்ப்பை மட்டும் காலம் தாழ்ந்தினீர்களென கேட்க முடியாது.. எந்தவொரு மனிதரும் தனக்குண்டான நீதியை பெறுவதில் சமஉரிமையை தரவேண்டும்.. சரிசமமென நம்பவேண்டும் ஆனால் சிலருக்காக வளைந்துநெளிந்து சுருண்டு உறங்ககூடாது ..
அது நீதிகளின் மீதான மக்களின் நம்பிக்கையில்
தளர்வை தந்துவிடும்.. நம்பிக்கையற்றுபோகும்.
உண்மையில் நீதிமன்றங்கள் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் விசாரித்து தீர்ப்பை வழங்குவதே நீதியாகும்..
..
சட்டமன்றத்தில் கொறடா உத்தரவை மீறியவர்களின் வழக்கும்.. முதல்வருக்கெதிராக போர்க்கொடி உயர்த்தி தனித்து செயல்படுவோரின் வழக்கும் முடிந்து தீர்ப்பிற்காக காத்திருக்கிறார்கள்.. நிறைய உச்சநீதிமன்ற உயர்நீதி தீர்ப்புகள் வழிகாட்டுகின்றன இருப்பினும் காலம்தாழ்த்துவது ஒருவகை அநீதி... உச்சபட்ச அதிகாரமென எண்ணுவது கூட நியாமில்லை..
கொறடா உத்தரவை மீறியவர்களை பதவி நீக்கம் செய்யாத சபாநாயகர்.. கட்சியில் முதல்வரை மாற்றவேண்டுமென சொல்கிறவரை பதவி நீக்கம் செய்தது செல்லாது ஏற்கனவே எடியூரப்பா வழக்கில் கொறடா உத்தரவை மீறி முதல்வருக்கெதிராக வாக்களித்தவர்களை உச்சநீதிமன்றம் கட்சிக்கெதிராக செயலிபடவில்லை இந்த முதல்வருக்கெதிராக அதாவது வேறொருவர் அரசமைத்தால் எங்கள் ஆதரவை தருகிறேன் என்று சொன்னதை ஏற்று சபாநாயகரின் பதவி நீக்க உத்தரவை ரத்து செய்தது.. அதே நடைமுறையை தான் இங்கேயும் பின்பற்றியிருக்கிறார்கள்... திரு.பன்னீர் அணியினர் மட்டும் தான் எதிர் அணியாகவே செயல்பட்டவர்கள் .. தினகரன் அணியை சேர்ந்தவர்கள் எதிர்த்து வாக்களிக்கவுமில்லை மாறாக பழநிசாமிக்கு எதிராக நிற்கிறார்கள் .. இந்த வழக்கில் எந்த சட்டசிக்கலும் இருப்பதாக தெரியவில்லையென சட்டவல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.. ஆனால் தீர்ப்பை தர காலதாழ்த்துவது .. தொடர்ந்து இந்த பெருபான்மை இல்லாத அரசை செயல்பட அனுமதிப்பது சட்டவிரோதம் மட்டுமல்ல ஜனநாயக கேலிகூத்தும் கூட..
..
யாருக்காகவோ வளைந்தோ காத்திருந்தோ தீர்ப்பை வழங்குவதென்பதும்
வலுத்தவனுக்கு வளைந்து நிற்பதும் சரியான நேரத்தில் வழங்கப்படாததும்.. நீதி அல்ல..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment