Friday, February 16, 2018
தமிழின் பெருமை
ஏன் எதுவுமே எழுதவில்லை மோடியே தமிழின் தொன்மைப் பற்றி பேசியிருக்கிறாரே என்றார் நண்பர்.. எத்தனை காலம்தான் மறைத்துவைக்கமுடியும் .. சிவனின் உடுக்கையில் கூட பிறந்ததென (தமிழும் சமஸ்கிருதம்)
சங்கர நாராயணன் (விஜயேந்திரன்) சொன்னபோதும்
இதோ மோடியின் பதிலையே அவருக்கு பதிலாக தரலாம் .. தமிழின் தொன்மையை சிதைப்பதில் காலம்காலமாய் பிராமணர்கள் அளித்த பங்கு கொஞ்சம் நஞ்சமல்ல.. சமீபத்தில் ஹார்வர்ட் பல்கலைகழக தமிழ் இருக்கை அமைப்பது வரை எதிர்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்.. தமிழுக்கு தொண்டாற்றுவதாக சொல்லி நிறைய ஓலைச்சுவடிகளை கைப்பற்றி அழித்ததெல்லாம் வெளியில் வராத செய்திகள்.. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியின் நிறைய பக்கங்கள் (ஓலைச்சுவடிகள்) காணாமல் போனது மிச்சமிருந்ததைதான் நமக்கு கிட்டியது.. இதோ கீழடியில் நம் கண் முன்னே நம் முன்னோர் வாழ்ந்த சுவடுகள் மண்கொண்டு மூடியபோதும் தமிழனின் வரலாற்றை மறைத்துவிட முடியாதென்றும்.. ஆதி மொழி தமிழ்தான் என்பதை உலகம் ஏற்கும் காலம் வந்தே தீரும்
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரீகமாய் வாழ்ந்தவன் மனிதன் குகையில் வாழ்ந்த காலத்தில் நகரம் அமைத்து வாழ்ந்தவன்.. அவன் அறிவு கலாச்சாரம் பண்பாடு எல்லாம் உலகிற்கு வழிகாட்ட கூடியது..
..
பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி கடலில் போட்டால் அது தனுஷ்கோடிக்கு வந்து சேருமென கடல் நீரோட்டத்தை அறிந்திருந்தவன் தமிழன்.. கடல் ஆமைகள் கடல் நீரோட்டத்தை கண்டு 500 மைல் கல் வரை நீந்தாமலேயே மிதத்துவரும் .. அதை கண்டு கப்பல் போக்குவரத்தை கண்டுபிடித்தவன் கப்பல் பாறையில் மோதினால் அந்த பகுதிமட்டும் தனியாக கழன்று போகும் தொழிற்நுட்பம் அறிந்து வடிவமைத்தவன் .. தமிழக சமண கோவில்களில் ஆமைகள் படமிருக்கும் நீரோட்டத்தை மிக துள்ளியமாக கண்டுபிடிக்கவல்லது நீண்டநாள் வாழும் ஆற்றல் கொண்டது ஆமைகள்.. ஆமைகளிடம் மட்டும் பிரத்கேய குணம் உண்டு .. ஆமைகள் கருத்தரித்தால் தாய்வீட்டிற்கு தான் செல்லுமாம் அந்த பழக்கம் ஆதியில் தமிழர்களிடத்தில் மட்டுமே உண்டென்பர்..
..
தமிழன் மீதான வன்மம் குறிப்பாக ஆரியர்களுக்கு காலம்காலமாய் இருந்துவருவது கைப்புண்ணைப்போல .. எந்தவொரு கலாச்சார பின்னணியோ வரலாற்றோ இல்லாத வந்தேறிகள் செமையாக வாழ்ந்து வந்த தமிழர்களை கண்டு அவர்களை வலுவிழக்க செய்ய அவர்களை வீழ்த்த அவர்கள் இனத்தின் மீதான தாக்குதலை மிக துள்ளியமாக செய்தார்கள்.. எந்தவொரு இனத்தையும் அழிக்கவேண்டுமெனில் அதன் கலாச்சாரத்தின் மீதான போராக இருக்கவேண்டும் .. அதைதான் செய்தார்கள் என்கிறார் இலங்கை மொழியியல் ஆய்வாளரும் யாழ் பல்கலைக்கழக பேராசிரியருமான சிவ.பாலகிருஷ்ணன் ..ஆம் தமிழனின் கலாச்சாரத்தில் மீது கடவுள் சாதி பயம் பக்தி என்ற இடைசொருகலை செய்து அவனின் பழக்கவழக்கங்களை மாற்றினார்கள் ..அதுவரை அவனுக்கு தெரியாத சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம் அவனுக்கு பழக்கமில்லாததும் அதை காலபோக்கில் ஏற்றுக்கொள்ள வைத்ததோடு அதையே அவன் கலாச்சாரமாக மாற்றியதில் பெரும்பங்கு ஆரியருக்கு உண்டென்றார் பேரா.சிவ. பால கிருஷ்ணன்..
..
பிரதமர் தமிழ் சமஸ்கிருதத்திற்கு முன்பே இருந்ததென்பதை தன் சகாக்களுக்கு சொல்லலாம்.. சமஸ்கிருதத்திலிருநிது தமிழ் பிறந்ததென பீற்றி திரியும் அறிவிலிகள் அதற்கான ஆதாரத்தை தருவதே இல்லை.. உலக வழக்கில் இன்றும் இலக்கணத்தோடு இருக்கிற தொன்மையான மொழி தமிழ் மட்டுமே..
எத்தனை காலம் மறைத்தாலும் உண்மை வெளிவந்தே தீரும் .. அது கீழடியாக இருந்தாலும் .கிழக்கு வெளுக்கும் என்பது எவ்வளவு உண்மையோ அதைப்போல தமிழே மனிதன் ஆதியில் பேசிய மொழி என்பதும் வெளிச்சமாகும். உலகிற்கு அறிவை கலைச்சாரத்தை நாகரீகத்தை கற்று தந்தவன் தமிழன்..
..
தமிழன் என்பதில் பெருமைகொள்வோம்..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment