Friday, February 16, 2018
காவிரியும் ஞானும்
காவிரியும்..குடமுருட்டியும் பின்னே ஞானும்..
..
அப்போதெல்லாம் கரைபுரண்டோடும் ..
படகில் அக்கரைக்கு சென்று பயிச்சல் பார்த்த நினைவெல்லாம் வந்து தொலைக்கிறது..
அக்கரையை நீந்தி செல்வதென்பது எவ்வளவு மூச்சிழைக்கும்.. புரண்டோடும் நீரின் அழகும்.. கரையோர நாணல்களும்.. தென்னந்தோப்பு குயில்களின் இசையும் ..பச்சைபசேலென பூமி குளிர்ந்து கிடைந்ததும், , வயல்வெளியில் நெற்கதிர்கள் தலைசாய்ந்து உழவன் தலைநிமிர்ந்து நின்றதெல்லாம் கனாகாலமாய் போனது..
..
காவிரி வறண்டு காட்டான் குடியேறிய கதை ..
காவிரிக்கரையில் வாழ்கிற எம் போன்றோரின் ஜீவதார உரிமைகள் மீதான வழக்கு முடித்துவைக்கபட்டிருக்கிறது நீண்டநெடிய சட்டபோராட்டங்கள்.. திமுக அதிமுக அரசியலை கடந்து சற்று திரும்பிபார்க்கவேண்டும்.. அதற்கு முன் காலம் பொய்த்தாலும் காவிரி பொய்க்காதென்ற பழஞ்சொல் இப்போது கேட்டால் எரிச்சல்தான் வருகிறது..
..
நாம் நடுவர்மன்றத்திற்கு பிறகான அரசியலை பார்ப்போம் காரணம் அதுவரை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த காவிரி விவகாரம் ஒரு நிலையை அடைந்தது அப்போதுதான் .. திரு.வி.பி.சிங் ஆட்சியிலிருந்த போது கலைஞரே மிக சிரத்தையோடு காவிரி நடுவர்மன்றம் அமைத்தார் அப்போது அதை கடுமையாக எதிர்த்தது ஜெயலலிதாவும் கர்நாடகவும் தான் இதனால் ஒரு பயனுமில்லையென ஜெயலலிதாவும் மன்றத்தையே ஏற்கமுடியாதென கர்நாடகமும் வரிந்துகட்டின... கடைசியில் அதை ஏற்றுக்கொண்டார்கள்.. இடைகால தீர்ப்பாய் 205 டிஎம்சி தரவேண்டுமென்றபோது ஜெயலலிதாவே எதிரத்்தது தான் விசேசம்.. இறுதி தீர்ப்பில் 192 என நடுவர் மன்ற தீர்ப்பை கலைஞர் பெற்றுதந்த போது போதாது என்றார்கள் .. இப்போது மேல்முறையீட்டு செய்து உச்சநீதிமன்றம்
177.25 ஆக குறைத்து வழக்கை முடித்துவைத்திருக்கிறது ..
..
இதுவாவது கிடைக்கமா என்கிற பரிதாபத்திற்கு கேள்வியை நாங்கள் கேட்கிறோம்.. காவிரி பிரச்சனைக்கு மாறி மாறி குற்றம் சுமத்தி இருகட்சிகளும் பேசிவருவதே மறைமுகமாக அது கர்நாடகாவிற்கு பலன் சேர்க்குமென்பதை உணர மறுத்தார்கள்.. காவிரித்தாயென்றெல்லாம் பட்டம் தந்து மனம் குளிர்ந்தபோதும் தொடர்ந்து திமுகவை குற்றம் சாட்டி காவிரி அரசியலை அதிகம் முன்னெடுத்து பயன்பெற நினைத்தார் .. ஆனால் தஞ்சை ,கீழ்தஞ்சை மாவட்டங்கள் ஜெயலலிதாவை நம்பவில்லை.. திமுகவும் ஜெயலலிதாவை குறைசொல்வதை விடவில்லை காவிரி விடயத்தில் திமுகவின் பங்கு அளப்பரியதென்றாலும் அது போதுமானதாக இல்லையென்பது நிஜம்..
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து காவிரி நீர் பங்கீட்டை செய்கிற வரை ..காவிரி நீர் என்பது நமக்கு கிட்டாமல் போகும்.. சிறிய அளவில் தண்ணீர் தந்தால் கூட ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைத்து போராடுகின்றன தமிழகத்தில் திமுக அதிமுகவும் மாறி மாறி அரசியல் செய்வதோடு பணி முடிந்ததாக நினைப்பது மிக கொடுமை
..
எவ்வளவு நீர் தேவை என்ற அளவை சரியாக கணிக்கபடவே இல்லை.. கீழ்தஞ்சையில் மட்டும் 2.5 லட்சம் ஹெக்டர் தண்ணீர் குறைவால் விளைநிலங்கள் வீடுகளாகவும் தொழிற்பட்டறைகளாகவும் மீன்வளர்ப்பு என சிகைந்து போனது .. நீர் வழித்தடங்கள் மறைக்கபட்டு அல்லது காணாமல் போய் இருக்கிற நிலங்களுக்கும் நீர் வரமுடியாத சூழல்
அதுவும் காலபோக்கில் தரிசான கொடுமை இவையெல்லாம் அரசின் அலட்சியங்கள் மட்டுமல்ல அங்கே வாழும் மக்களின் பொறுப்பற்ற செயலும் காரணம் ..
நீர் சேமிப்பின் அக்கறையின்மை குளங்கள் ஏரிகள் குட்டைகளென எல்லாம் காணாமல் போகிறது ..நீர்வழித்தடங்களின் மீதான போர் இவைகளின் அழிவிற்கு காரணமென்பதை நாம் அறிந்திருக்கவில்லை.. இனி வரும் காலங்களில் குளங்கள் ஏரிகளை ஆக்ரமிப்போரை நாமே தடுக்கவேண்டும் ஏற்கனவே உயர்நீதிமன்றம்.. நீர்நிலைகளின் மீது கட்டபட்டிருக்கிற கட்டிடங்களை அகற்றலாமென தீர்ப்பு தந்திருக்கிறது.. அது வழிபாட்டுதலங்களாக (கோவில் மசூதி சர்ச்) இருந்தாலும் கல்வி நிலையங்கள் குடியிருப்புகள் எதுவாக இருந்தாலும் இடிக்கலாமென கூறியிருக்கிறது.. இனியாவது ஆக்ரமிப்புகளை அகற்றி .. தூர்வாறி...
வழிதடங்களை சரிசெய்து.. நீரை சரியான பங்கீட்டுமுறை அமல்படுத்தி உழவனின் வாழ்வியலை உயர்த்துங்கள்..நம்மிலும் உண்டு உழவரென்ற எண்ணம் வேண்டும்..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment