Monday, February 5, 2018

மத கிறுக்கர்கள்

இந்து கோவில்கள் இருக்குமிடத்தில் பிற மதத்தவருக்கு கடைகள் வழங்க அனுமதிக்ககூடாது.. தமிழிசை.. இதை தமிழிசை வைத்து சொல்ல வைத்ததில் தான் அவர்கள் சூட்சமம் அடங்கியிருக்கிறது.. வசவுகளும் கேலிகளும் எதிர்ப்புகளையும் தமிழிசை போன்றோருக்கு தருவது ஈராயிரம் ஆண்டாய் நடப்பதுதானே.. .. நிறைய இந்து கோவில்களுக்கு சொந்தமான இடத்தில் கல்வி நிலையங்களை பார்பனர்கள் மிக சிறிய தொகையை கொடுத்து கோடிக்கணக்கான சொத்தை கைவசம் வைத்திருக்கிறார்களே.. மயிலாப்பூர் கிளப் பாரதி வித்யாலயாவும் கோவில் நிலத்தில் வாடகை தராமல் ஏய்த்தது பலகோடிகள்.. இதெல்லாம் ஏன் "இந்து" என சொல்லிதிரியும் ராசாக்களுக்கு தெரிந்தும் ஏன் வாய்திறப்பதில்லை.. .. காலகாலமாய் இந்து கோவில் இடத்தில் பிற மதத்தவரும் முஸ்லிம் தர்கா பள்ளிகளுக்கு சொந்தமான கடைகளையும்.. நிலத்தை இந்துக்களும் மிக சிறிய தொகை தந்து ஒத்திக்கு வைத்திருக்கிறார்கள் அதேபோல கிருஸ்துவ ஆலயங்களில் இடத்தில் கடைகளும் நிலங்களை பிற மதத்தவரும் பயிச்சல் செய்கிறார்கள்.. அங்காங்கே வசிக்கும் மக்கள் நிலங்களை கடைகளை எடுத்து நடத்துவது காலகாலமாய் இந்தியாவில் எங்கும் நடப்பதுதான்.. தமிழகத்தில் எதாவது ஒரு பிரச்சனையை கையிலெடுத்து மதகலவரத்தை விதைக்கலாமென்று நினைக்கும் பாஜக சங்பரிவார்கள் தினம் தினம் ஒரு பிரச்சனையை கையிலெடுக்க இங்கே உடனேயே அதை கிண்டலாக்க படுகிறது .. .. எப்போது பாஜக நம்மவர்களை களம் இறக்குவார்கள் எப்படி மக்களின் எதிர்வினை Reaction இருக்கிறதென்று பார்ப்பார்கள். எந்தவிடயமாக இருந்தாலும் பலியாடுகளைப்போல பொன்னர் தமிழிசை வானதி போன்றவர்கள் முதலில் கருத்து சொல்வதும் எதிர்வினை கொடூரமாகவோ கேவலமாகவோ அல்லது நையாண்டியாகவோ இருக்கும் .. ஏதேனும் குழப்பம் விளைவிக்கலாமென எவ்வளவு முயற்சிகள் அதற்கு பலியாடுகளாய் தமிழிசைகள் .. ஏதேனும் அறிவுபூர்வமாக பேசுவார்கள் அவர்களோடு விவாதிக்கலாமென்றால்.. பக்கோடா விற்பது தான் அவர்களுக்கு தெரிந்திருக்கிறதே தவிர.. வேறொன்றும் இல்லை.. மதத்தால் கலவரம் சாதி சொல்லி பிரிக்கலாமென பார்க்கும் போதெல்லாம் அதி அறிவுடைத் தமிழ் சமூகம் பார்பனர் பார்பனர்அல்லாதோர் என்ற நிலைக்கு கொண்டு போவதும் அசிங்கபட்டு நிற்பதும் பாஜகவிற்கு புதிதல்ல.. .. தனியார்மயமாக்கும் கோவில்களில் என்ன நடக்கிறதென்று நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.. தீட்சதர்கள் கையிலிருந்த சிதம்பரம் கோவில் ₹30,000 என வரவு வைத்ததும் சிலகாலம் கலைஞர் ஆட்சியில் அறநிலையத்துறை எடுத்துக்கொண்ட போது ₹40 லட்சமாக உயர்ந்ததும் நாடறிந்த சிதம்பர ரகசியம் தான்.. எதற்காக கோவிலை கேட்கிறார்களென புரியாமல் இல்லை.. எதற்காக கோவில் கடைகளை பிற மதத்திற்கு தரகூடாதென சொல்வதிலும் இவர்களின் நோக்கம் நமக்கு புரியும்.. .. தமிழகம் இங்கே வேற்றுமைகளில் கலகம் செய்யமுடியாது .. கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சொல்லும் எச்.ராசா முதலில் சிதம்பரம் கோவிலில் தீட்சகர்களின் ஆக்கிரமிப்பை அகற்றி அதிலிருந்து தொடங்கலாம்.. முதலில் மதநல்லிணக்கத்திற்கு இடையூறு செய்யும் எச்.ராசா... தமிழிசை வகையறாக்களை இந்திய அரசியல் சட்டத்தின் இறையாண்மைக்கு எதிராக பேசுகிறார்களென பிணையில் வரமுடியாதவாறு தமிழக அரசு வழக்கு பதிவு செய்யவேண்டும்.. அதுவே நாட்டிற்கு நல்லது .. #மத_கிறுக்கர்கள்.. .. Aalanci Spm

No comments:

Post a Comment