Saturday, February 10, 2018

புதிய பாதை

தி.மு.க.வில் ஒரு கிளைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுத்தாலும், அவர் கோர்ட்டுக்கு போக முடியும். அப்படி கட்சியின் சட்ட விதிமுறைகள் ஜனநாயகப்படி உள்ளது. அந்த ஜனநாயகத்தைக் காக்க நான் சர்வாதிகாரியாக மாறப்போகிறேன் கட்சிக்கு உழைக்காமல் துரோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை கடுமையாக இருக்கும்.. தளபதி.. .. இது சரியான போக்கா என நாம் ஆய்வு செய்யவேண்டும் தளபதியின் கருத்தை மிக நுட்பமாக ஆய்ந்தால் அதில் இன்றைய காலகட்டத்தின் அவசியம் ஒரு இயக்க செயல்பாடின் வடிவம் எதைநோக்கியதாக இருக்கவேண்டுமென்பதும் புரியும்.. தலைவருக்குரிய அதிகாரம் என்பது கீழ்மட்டத்தில் இருந்து உயர்மட்டம் வரையிலான எல்லா பதவிகளிலும் ஆதிக்கம் செலுத்துவதல்ல மாறாக அந்தந்த நிலைகளில் .. குறிப்பாக மாவட்டத்தின் கீழ் ஒன்றிய மற்றும் கிளை கழகங்கள் செயல்பாட்டை கண்காணிக்க நெறிபடுத்த அதிகாரம் உண்டு நேரடியாக எல்லா அதிகாரத்தையும் ஒரே ஆள் சுமப்பதென்பது சர்வ அதிகாரமும் தமக்கென்ற அகந்தையை நோக்கி நகருமென்பதாலேயே .. திமுக சட்டவடிவங்கள் மிகவும் ஜனநாயகபடுத்தபட்டு அதிகார பரவல் என்பது குறுகிய வட்டத்திற்குள் இல்லாமல் விரிவுபடுத்தபட்டிருந்தது.. (இது இந்திய நாட்டில் வேறெந்த கட்சி விதிகளிலும் காணமுடியாது.. இடது கம்யூனிஸ்ட்டில் கூட பொலிட்பீரோ எனும் ஒன்பது பேர் கொண்ட அமைப்பின் முடிவை எதிர்க்கமுடியாது) ஆனால் அதன் தாக்கம் சிலரை குறுநில மன்னர்களைப்போல செயல்படவிட்டதும் அவர்களை மட்டுமே நம்புகிற சூழலை உருவாக்கியதும் பின்னாளில் அதுவே திமுகவின் சுணக்கத்திற்கு காரணமானது.. .. இங்கே மற்றொரு வேறுபாட்டை நாம் நோக்கவேண்டும்.. அதிமுக காங்கிரஸ் போன்று நியமனம் செய்தால் எப்போதுவேண்டுமானாலும் தூக்கியெறியலாம் பின் அழைத்துக்கொள்ளலாமே என எண்ணகூடும் அது தனிநபர் ஆராதனை அல்லது செல்வாக்கு என்கிற நிலையை தாண்டி வளராது அங்கே சர்வாதிகாரதொனி தெரியும் அது அதி புகழ்ச்சியில்..., கொண்ட கொள்கை சிதைவில் போய் முடியும்.. பணம் பதவிக்கான தேடலில் கட்சியை யாரும் கண்டுக்கொள்ள போவதில்லை எதற்காக இந்த கட்சியென்ற அடிப்படை கோட்பாட்டை விட்டு விலகி செல்லும் ..அதையும் நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்.. ஆனால் தளபதி சொல்லும் சர்வாதிகாரமென்பது தலைமைக்கான அதிகாரத்தை கூட்டுதல் என பொருள் கொள்ளல் வேண்டும்.. நேரடி கண்காணிப்பும்.. அதே வேளை அவரவர் பணிகளை அவரவர் செய்ய மாவட்ட ஒன்றிய அனுமதியை நாட வேண்டியதில்லை மாறாக சில கொள்கை ரீதியான போராட்டம் செயல்பாடுகளில் கட்டுபடுதல் உள்ளுர் மற்றும் வட்டார நிகழ்வுகளுக்கு தாமே வடிவைமைத்து செயல்படும் அதிகாரம்.. அவைகளை நேரடி தலைமையின் தொடர்போடு கூடியதாக்குவது.. மாவட்ட நிர்வாகம் நேரடி தொடர்பில் இருப்பதைப்போல வட்டாரத்தையும் கொண்டுவருதல்.. அதாவது தொடர் கண்காணிப்பு என்று எடுத்துக்கொள்ளலாம்.. செயல்பாடுகளில் தவறு அல்லது சரியில்லையெனில் அவர்களை தற்காலிகமாக மாற்ற தலைமைக்கு அதிகாரம் தருதல் முறைப்படி வேறொருவர் தேர்தெடுக்கும் வரை நியமனங்கள் செயல்பாடு சரியான உக்தியாக இருக்கும் .. ஏற்கனவே ஒருமுறை எழுதியிருந்தேன் அதீத ஜனநாயகம் தேர்தல் அரசியலில் சரிவராது சில நேரம் கவிழ்த்துவிடும்.. .. ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான மெல்லிய ரேகையை அழித்துவிடாமல் நிற்க வேண்டும்.. ஆணவமும் அகந்தையும் தலையில் ஏற்றாமல் செயல்படுதலே ஜனநாயகத்தின் இறுதிவரை நிலைக்க செய்யும்.. தொடக்கத்தில் தேனாய் இனிக்கும் சர்வ அதிகாரமும் கடைசியில் தோற்றுபோகுமென்பதை கவனத்தில் கொள்ளுதல் மிக அவசியம்.. எந்தவொரு இயக்கமாக இருந்தாலும்.. அதன் விதிகள் காலத்திற்கேற்ப மாற்றியமைக்கவேண்டியது அவசியம் அது நியாயமும் கூட எந்த சட்டவடிவமும் பழைய தொனியில் அதிகாரமற்று செயல்படுவதென்பது காலபோக்கில் பொருளற்றதாகிவிடும்.. புதியதொரு பாதையை வகுக்கும் அதேவேளை அடிப்படை சித்தாந்தத்திலிருந்து மாறாமல் கொள்கைகளை கொண்ட கோட்பாடுகளுக்காக இருப்பது அவசியம்.. எல்லாம் ஒருவரின் அதிகாரமென்பது ஆபத்தின் தொடக்கம் அதுவே வீழ்ச்சியின் தொடக்கமாகவும் அமையும் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் .. தி.மு.கழகத்தில் கடினமான உழைக்கும் இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் பொறுப்புகளும் .. வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் உறுதி செய்யப்படும் என்கிறார் தளபதி .. நல்லது சில களைகள் பயிரையே நாசம் செய்யும் போது களைந்தெறிதல் எப்படி தர்மமோ அதேபோல் புதிய விதைகளை .. விதைப்பதும் காலத்தின் கட்டாயம்.. இன்று திராவிடத்திற்கெதிராக தமிழ்மொழிக்கெதிராக ஆரியம் நடத்திட நினைக்கும் செயல்களை எப்படி நாம் எதிர்கொள்கிறோமோ அதைப்போல வரும் தலைமுறை தமிழுக்கும் இனத்திற்கும் அரணாக செயல்படும் ஒரு புதிய படையை இளைஞர்களை கொண்டு உருவாக்குவது மிக அவசியம் நல்ல முடிவு நலன் பயன் தரும் .. வருகிறவர்கள் இயக்த்தின் கொள்கைகளை அறிந்தவர்களாக/உணர்ந்தவர்களை .. எப்படியெல்லாம் நம் எதிரிகளிடமிருந்து காத்துநிற்கிறோம் என்ற படிப்பினையை அறிந்து செயல்படவேண்டும் .. தமிழர்களின் அறிவியல் அரசியல் வரலாறுகளை அறிந்து நம் இனம்காக்க .. சாதிமதமற்ற சமதர்ம கொள்கைகளை தாங்கிபிடித்து .. பெருங்கிழவன் பெரியாரின் தொலைநோக்கு சிந்தனையை உயர்த்திபிடித்து நின்றால் எக்காலத்திலும் நம்மை வீழ்த்த முடியாது.. ஒருமுறை அறிஞர் அண்ணா .. தமிழகமென பெயர்மாற்றவேண்டுமென்ற கோரிக்கை குறித்து பேசும் போது தேவையில்லை என வாதிட்டார்கள் சிலர்.. அப்போது அண்ணா சொன்னார் ..#நேரு அவர்களே ..எங்களை விட திராவிட ஆரியர் போர் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும்.. இதோ இங்கே இருக்கிற பஞ்சாப்பியரோ மாராட்டியரோ எதிர்க்கவில்லை.. தமிழன் தான் எதிர்க்கிறான் என்றார்.. ஆம் .. தமிழர்களின் வீழ்ச்சிக்கு வேறு யாரும் காரணமில்லை தமிழன் தான் காரணமென்பதை அறிந்து செயல்படுதல் நன்று.. "இளம் கதிர் கிழக்கே இன்னும் எழவில்லை இரவு போர்த்திய இருள் இன்னும் நீங்கவில்லை ஆயினும்.. கேள்வியால் அகலும் மடைமைப்போல்.. நல்லிரவு மெதுவாய் நகர்ந்தே சென்றது "என்றான் புரட்சிகவிஞன்.. அதே போல் .. இருள் விலக சூரியனின் ஒளி வீசுமென்ற நம்பிக்கை வருகிறது.. .. வாழ்த்துகள் தளபதி.. .. Aalanci Spm

No comments:

Post a Comment