Monday, February 26, 2018

48 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி செய்யாததை பாஜக 48 மாதத்தில் செய்து முடித்துள்ளது. மோடி பெருமிதம்.. இந்தியா இந்த 48 மாதங்களில் பட்ட துயரை.. கடந்த 48 ஆண்டுகளில் கூட பெறவில்லை என்பது தானே நிஜம்.. மோடியை கொண்டுவருவதற்கு முன் குஜராத் போல இந்தியாவை ஆக்கி காட்டுவதாக சொன்னார்.. அப்போது யாருமே ஏன் குஜராத் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் முதலில் இல்லையென கேட்கவில்லை .. இந்தியாவை ரட்சிக்க வந்தவன் என ஊடகங்கள் கட்டமைத்த பொய் ..மெல்ல பல்லிளிக்க சரிந்தது மாய பிம்பம்.. திறமையானவரை போல காட்டியதெல்லாம் கையிருப்பில்லாததால் கேலிப்பொருளைப்போல ஆனது. .. எடுத்தேன் கவிழ்த்தேனென்று ஒரு இரவில் பணமதிப்பிழப்பு சொந்த நாட்டுமக்களை நடுத்தெருவில் நிறுத்தி அவர்கள் உழைத்து சேமித்ததை எடுக்க காலநிர்ணயமும் அளவீடும் செய்து இதோ ஒழிந்தது கருப்புபணம் என்று கூப்பாடு போட்டவர்கள் முகத்திரை கிழிந்து தொங்குகிறது.. யாருக்கு தெரியாமல் அறிவித்ததாக சொல்லி திரிந்தவர்கள் உண்மை முகம் வெளுச்சத்திற்கு வந்துவிட்டது .. மோடி அறிவிப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு பஞ்சாப் நேஷனல் பாங்கில் ₹90 கோடியை செலுத்தியிருக்கிறார் நிரவ் மோடி.. எப்படி அவருக்கு முன்பே தெரிந்தது.. கருப்புபணத்தை ஒரு சில தொழில் அதிபர்கள் வெள்ளையாக மாற்றவே பயன்பட்டதே தவிர அதனால் மக்களுக்கு என்ன பயன் சிரழிவை தவிர.. .. தூய்மை இந்தியா என்ற பெயரில் அடித்த கொள்ளை எவ்வளவு.. எங்காவது குப்பை கொண்டுவந்து கொட்டி பிறகு சுத்தம் செய்ததாக காங் ஆட்சியில் கண்டதுண்டா.. காங்கிரஸ் முதல் கல்வி அமைச்சர் செய்த ஒரு சாதனையை .. காவி அரசு செய்ததுண்டா.. இந்த 48 மாதங்களில் மாட்டுக்கறிக்கா மனிதனை கொன்றது .. அவன் என்ன தின்ன வேண்டுமென வேறொருவர் தீர்மானிப்பது இதெல்லாம் காங் 48 ஆண்டில் நடக்கவில்லை.. ஊழலை சொல்லலாம் அது 48 மாதத்தை கணக்கில் கொள்ளும் போது விகிதாச்சாரம் மிக குறைவு... விடுதலை இந்தியாவின் முதல் ஊழல் .. கிருஷ்ணமாச்சாரி (டிடிகே)என்கிற பார்பனர்தான் பதவி விலக நேரிட்டது ஹரிதாஸ் முந்த்ரா வின் பங்குகளை LIC க்கு விற்றதில் முறைகேடு செய்து பதவி விலகினார். முதல் ஊழல் அதுதான்.. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் குற்றசாட்டிற்கு ஆளானாலே பதவி விலகுவதும் சிறையில் அடைப்பதுமென சட்டநெறிகளுக்குள் நடந்தது ஆனால் பாஜகவின் 48 மாத ஆட்சியில் ஒன்று வெளிநாட்டிற்கு ஓடி போகிறான் அல்லது அரசு மரியாதையோடு வலம் வருகிறேன் இது தான் இரண்டிற்குமான வேறுபாடு.. .. வாயை திறந்தால் பொய்யை தவிர வேறெதும் தெரியாததால் வார்த்தை ஜாலம் கொண்டு ஏற்றி இறக்கி பேசும் தந்திரத்தால் நெடும் காலம் வண்டி ஓடாது.. அன்று இதோ வந்துவிட்டாரென இந்தியாவின் நவீன புதல்வன் என்றவர்களே.. கல்லெறிய காத்திருக்கிறார்கள்.. அறிவுடையோரை வேண்டாமென வைத்ததின் பலன் .. $110 ஐ தொட்ட போதும் ₹60 தாண்டாமல் வைத்திருந்த எரிப்பொருளின் விலையை.. $48 என இறங்குமுகமாக இருக்கும் போது ₹75 ல் வைத்திருபிபதிலேயே யாருக்கான அரசு இது என்று மக்கள் அறிந்துக்கொண்டார்கள்.. பெரும் முதலாளிகளுக்காக சாமானியனின் சட்டைப்பையில் உள்ளதை அவனை கேட்காமலே எடுத்து கொடுக்கிற ஈனப்புத்திகாரென அறிவர்.. இதோ உயர்ந்து வந்த இந்திய பொருளாதாரத்தை சரிவில் கொண்டுபோய் நிறுத்தியும்.. தன் கட்சியில் உள்ளவனே காரி துப்பியும் இன்னமும் மசல் பிடித்து நிற்பதை காணும் போது .. கோமாளியாகவே தெரிகிறது.. கர்நாடக சித்தராமையா சொன்னதைப்போல மோடி நாட்டைவிட்டு ஓடி போனாலும் வியப்பில்லை .. ஆம் ஆட்சி அவலம் அப்படிதானிருக்கிறது இப்போது தான் மக்கள் உணர தொடங்கியிருக்கிறார்கள் .. இந்த அரசு பெரும் முதலாளிகளுக்கு அவர்களுக்கு சேவகம் செய்யும் பார்பனர்களுக்குமானது.. வேலைவாய்ப்பு பக்கோடா விற்பதில் இருக்கிறதென்ற பெரும் மேதாவித்தனம் ஒன்றே இந்த கேடுகெட்ட ஆட்சியை தெரிந்துக்கொள்ள போதுமானது. .. 48 ஆண்டுகளில் கொள்ளை போகாத மக்கள் பணம் 48 மாத ஆட்சியில் கொள்ளைப்போனது அதுவும் அரசின் அனுமதியோடு.. கடைசியில் உங்கள் ஆட்சியின் லட்சணம் .. கலைஞர் முப்பது வருடங்களுக்கு முன்பே செயல்படுத்திய திட்டங்களை இந்தியாவிற்கே கொண்டு வந்ததில் தெரிந்தது.. மொத்தத்தில் சுயம் சிந்திக்க தெரியாத அறிவிலிக்கூட்டம் அவ்வளவுதான் .. இனியும் பொய்களை நம்ப இந்தியர்கள் தயாரில்லை.. .. Aalanci Spm

No comments:

Post a Comment