Tuesday, February 13, 2018
வழுத்தூர்
இரு அணியினரும்..
பொய் காலில் நின்று
கூத்து நடத்துகிறார்கள்..
ரசிக்கதான் முடியவில்லை..
சேற்றை வாரி இரைக்கும் போதெல்லாம்
சகதியில் நின்று எறிவதேனோ மறந்துபோகிறார்கள்..
..
மாறி மாறி பேசி திரிவதால்
மாண்பு போகும்..
மற்றவர் நகைக்க.. ஊரின்
மானம் போகும்..
சில்லரை விசயமென
சிரிப்பாய் சிரிக்கிறது
சீர்மிகு வழுவை..
சொறிந்து பிடித்த சிரங்கை
களிப்பிட்டு ஆற்றலாம்
காயம் போகும்..உள்ளில்
புரையோடி .. சீழ் வைக்கும்..
அறுத்து வெளியில் எடுத்து
மருத்திட்டு காயம் ஆற்று..
..
தன்னை நல்லவன் என்பவனும்
தான் மட்டுமே நல்லவனென்பவனும்..
பிழைகள் கண்ணுக்கு தெரியாத பேதைகள்..
நான் மட்டுமே தகுதியானவனென்பவர்..
அகந்தையில் மட்டுமல்ல
உள்ளில் அயோக்கியம் குடியேறுமென்பதை மறந்து போகிறார்..
..
எது ஜனநாயகம்..
பத்துபேர் கூடி தீர்மானிப்பதா..
பத்துபேர் கூடி தேர்தெடுப்பதா..
அனைவரின் அங்கீகாரமன்பது
தேர்வில் வேண்டும்.. அது
ஊர்மக்கள் கூடி இழுத்த தேராய் வேண்டும்
ரகசியம்..
ரகசியமாய் உங்களுக்குள் தேர்வென்பது
அத்துமீறும் அயோக்கியம்
நீண்ட நாள்..நிலைக்காது
எல்லோரும் பங்குபெறும்
தேர்தல் நடைமுறை..
வாக்களித்து அதை வெளிப்படுத்தும்
பெருமை மிகு ஜனநாயகம்
அதுதான் இப்போதைய தேவை..
..
இல்லையெனில்
ஊர் தேறாது..
பொய்கால்குதிரைமேல் நின்று
ஊர் போய் சேரமுடியாது..
..
ஊர்க்காரன்
ஆலஞ்சி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment