Wednesday, February 21, 2018

மநு நீதி மய்யம்

அறுபது வருடங்களாக நாக்பூர் செய்யாத செலவில்லை..செய்யாத வினையில்லை பாவம் காசு தான் கரைகிறதே தவிர.. திமுகவை கரைகடத்த முடியவில்லை.. எத்தனை விதமாய் .. யார்யாரையெல்லாம் களமிறக்கி கடைசியில் கண்டது 2000 கூட திகயவில்லை.. .. ஆரம்பத்தில் ஆடம்பரமாக வருவார்கள் இங்கே அடிபலமாக விழும் கடைசியில் கரைசேரமுடியாமல் போனவர்களும் கடைசி வரை முயன்று தோற்றவர்களுமே இங்கே காண்கிறோம்.. வீட்டை அடமானம் வைத்து படமெடுத்தேனென்றவர்களுக்கு நாக்பூர் தந்த பெருந்தொகை இன்று பல்லிளித்தது.. எதிர்பார்த்த எதிர்பார்ப்பில்லாமல் சின்னதாய் உள்ளுக்குள் சிரிக்கிறது.. ஆரம்பமே பொய்யில் ஆரம்பித்து நொடியில் பிண ஊர்வல போட்டோக்களை பதவேற்றம் செய்து மக்கள் நகைச்சுவைக்கிறார்கள் எந்த கட்சியும் அலட்டிக்கொள்ளவில்லை காரணம் விவரகேட்டில் முடியும் அதிபுத்திசாலித்தனமென்று அரசியல் அறிந்தவர்களால் புரிந்துக்கொள்ளமுடியும்..ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஏஜி மவுரியா .. இவர் காவல்துறையில் இவருக்கு கட்டிங் கிங் என்றே பெயர்.. இப்போது தூய்மை அரசியலில் இணைந்து செயல்பட போகிறாராம்.. .. யாரால் இயக்கபடுகிறாரென்பதும் யார் இவர்களென்பதும் மிக தெளிவாக தெரிகிறது மூச்சுபிடித்து முட்டுகொடுப்பதிலிருந்தே மூட்டு செத்தவர்கள் இவர்களென புரியும்.. ஜெயலலிதாவிற்கு பிறகு ஒரு பார்பன தலைமை வேண்டுமென்பதற்காக களமிறக்கபட்டிருக்கிறார் கமல் அதிமுக அரசை எதிர்த்து களமிறங்குவதாக சொல்லும் போது.. ஆட்சிக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசையோ பாஜகவையோ விமர்சனம் செய்வதில்லை இதிலிருந்தே இவரின் அரசியல் பயண ஒழுங்கு எங்கு தீட்டப்பட்டதென தெரியும் .. மக்கள் நீதி மய்யம் சனாதன கொள்கையை சமூகநீதியின் பெயரில் கொண்டாட மையம் கொண்டு இருக்கிறது.. கமல் கட்சியின் சின்னத்திலுள்ள இணைந்த கையில் பதிந்துள்ள நட்சத்திரம் ஆறு முனை கொண்ட நட்சத்திரம் யூதர்களின் சின்னம். இது இலுமோட்டிவ்கள் அடையாளம்.. சரியாக தன்னை அடையாளபடுத்தியிருக்கிறார்.. கட்சியின் சின்னமே அவரை காட்டிகொடுத்திருக்கிறது.. யூத வழிதோன்றல்களான ஆரியர்களுக்கான மறைமுக மய்யம் ..எங்கிருந்து வருகிறாரென அவரை தெளிவுபடுத்தியது வரை நன்றி.. திராவிடத்திற்கெதிரான மறைமுகமாக நாக்பூர் வரைந்த கோடுகள் மய்யம் கொண்டிருக்கிறது.. எச்சரிக்கை மநு நீதி மய்யம் .. கொஞ்சம் மாற்றி மக்கள் நீதி மய்யமென்கிறார்.. மய்யம் கொண்டதை செயலிழக்க செய்யும் ஆற்றல் நமக்குண்டு என்பதை நாம் உணர்த்தவேண்டும்.. .. இது நாட்டை நாசமாக்க மய்யம் கொண்டது அரிதாரம் புதிய அவதாரமெடுத்து மய்யம் கொண்டிருக்கிறது கவலைவேண்டாம் இது வலுவிழந்து போகுமென்பதற்கு வந்த கூட்டமே சாட்சி .. கட்சி மாவட்ட செயலர்கள் இதைவிட அதிகமான கூட்டத்தை கூட்டுவர் இங்கே இருப்பவர்கள் சினிமாவின் மோகத்தாலும்.. பழைய பாசத்தாலும் வந்திருக்கிறார்கள்.. opening show வே களைகட்டவில்லை.. காட்சி முடிந்ததும் கலையும் கூட்டம் பார்த்து ரசித்ததை சிலமணிநேரம் பேசி மகிழ்வர்.. அவ்வளவுதான்.. .. மையம் கொண்டது வலுவிழந்து போகும் .. Aalanci Spm

No comments:

Post a Comment