Saturday, February 24, 2018
சிலை..
சிலை..
யாருக்கு வைக்கவேண்டும்.. தன் வாழ்நாளில் இந்த மண்ணில் நல்லதை விதைத்த சான்றோர்கள்... வாழும் காலமெல்லாம் மனிதநேயத்தை வளர்த்த ஞானிகள்..
மாபெரும் புரட்சிக்கு வித்திட்ட பெருந்தகைகள்..
பேரறிவாளர்கள்.. மக்களை நேசித்த மாமணிகள்.. மொழியை இனத்தை உயிரினும் மேலாய் சுவாசித்த அறிஞர்கள்.. தலைவர்கள் நாட்டுமக்களுக்காக உழைத்த உன்னதர்கள்..
இவர்களை வரும்காலம் நினைவுகூறவேண்டுமென்பதற்காக வாழும்போது நல்லதை செய்தவர்களை நானிலம் அறிய வேண்டுமென்பதற்காக
சிலை Statue வைக்கவேண்டும்..
..
இங்கே ஜெயலலிதாவிற்கு சிலை வைத்திருக்கிறார்கள்... வாழும் காலத்தில் ஏதேனும் செய்திருக்கிறாரா என பார்க்கிறேன் பெருமை மிகு விடயங்களை காணோம்.. கோபமும் ஆத்திரமும் பேராசையும் அலட்சியமும்..தீண்டாமையும்.. தானென்ற அகந்தையும் கொண்டவர் .. செய்த தப்பை (தவறை அல்ல)நியாயபடுத்த தன் அதிகாரத்தை, தன் பிறப்பை பயன்படுத்தியவர் எவரையும் மதிக்காத ஆணவத்தின் உச்சமாய் இருந்தவர்.. ஆட்சியில் இருக்கும் போதே ஊழலுக்காக பதவி பறிக்கப்பட்டவர் .. நீதியை வளைத்தொடித்து காரியம் சாதித்தாலும் இறுதியில் குற்றவாளியென முத்திரை குத்தபட்டவர்..
அவருக்கு சிலை..
..
ஆம் அவசியம் வேண்டும் இதோ இந்த சிலை யாருடையது தெரியுமா.. மக்கள் தந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்து தானும் தன்னை சார்ந்தோரும் கொள்ளையடித்து.. கொள்ளையடித்ததை நியாயப்படுத்தி.. கடைசிவரை தவறை உணராமலேயே அகந்தையில் அழிந்தவரென வரும் சந்ததியினர் அறிந்துக்கொள்ளவேணும் வேண்டும்..
காந்தியை கொண்ட இந்து தீவிரவாதி ஆர்எஸ்எஸை சேர்ந்த கோட்சேவுக்கு சிலை வடிக்கும் நாட்டில்.. கொள்ளையடித்தவருக்கு வைத்தால் என்ன..?
..
சிலை வடித்தவரை பாராட்ட வேண்டும்.. யாரை மாடலாக வைத்து வடித்தாரென தெரியவில்லை.. நிறைய முகங்கள் வந்து போகிறதே தவிர ஜெயலலிதா முகம் தெரியவில்லை..
கலைஞர் ஆட்சியில் தலைசிறந்த சிலை வடிப்பாளர் ராஜராஜ பெருதச்சனின் வழிவந்தவரென அறியபட்ட சிற்பி கணபதி ஸ்தபதி அவர்களை கொண்டு சிலை வடிப்பார்.. கலைஞர் ஆட்சியில் நிறுவபட்ட எந்த சிலையும் இதுபோன்று பல்லிளித்ததில்லை.. ஏன் நடிகர் திலகம் (விழுப்புரம் சின்னசாமி கணேசன்) சிவாஜிக்கு சிலை வைத்தாரே எத்தனை அழகாய் இருந்தது.. சரியான நபரை தேர்வு செய்து பணிகளை ஒப்படைக்க வேண்டும் ஏனோதானோ என்று செய்தால் இப்படிதான் வரும் எல்லாவற்றிலும் கமிஷன் எதிர்பார்த்து குறையோடு செய்து முடிக்கும் பழக்கமுள்ளவர்கள் இதிலும் கமிஷன் பெற்றிருப்பார்களோ .. யாரறிவார்..
..
பாவம் இவர்கள் ஜெயலலிதா முகத்தை அறியாதவர்கள் தலைகுனிந்தே காலில் கிடந்தே பழக்கபட்டதால் ஜெயாவின் முகம் சரியாக அவர்கள் நினைவில் இல்லை.. அதனால் தான் யாரையோ நினைத்து ஒரு சிலையை ஜெயலலிதா என காட்டிருக்கிறார்கள் அடிமைகள்..சிலை ஜெயலலிதா போலில்லை என்றால் கோபபடுகிறார் ஜெயகுமார்.. பாவம் இரட்டை இலையை பறக்கும் குதிரையென்றவர்களுக்கு .. இது ஜெயலலிதா சிலைதான்.. இந்த அறிவிலிகளின் கூட்டம் இன்னும் எத்தனை கூத்தை நடத்தும்..
..
வேண்டாவெறுப்பாய் செய்த சிலை ..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment