Tuesday, February 20, 2018
மரபணு மாற்று
அரசியல் களத்தில் புதிய காகித பூக்கள் மலரலாம். ஆனால் ஒருபோதும் மணக்காது.... திருமிகு.மு.க.ஸ்டாலின் ..
ஆம் .. காதிகப்பூக்கள் மலர்வதைப்போல காட்சிதரும் ஆனால் மலராது மணக்காது கவர்ச்சி அரசியல் பலன் தராது .. விதையென்று நினைத்தால் அது மரபணு மாற்று என்று அறிக..
..
இங்கே யார் வேண்டுமானாலும் வரலாம் சிஸ்டம் கெட்டுகிடப்பதாய் சொன்னவர் உச்சநீதிமன்றம் சிஸ்டம் சரியில்லையே என கேள்வி எழுப்புகிறது வாங்கியதையே திருப்ப தராமல் இழுத்தடிப்பவர்கள் நேர்மை பற்றி பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது.. தமிழக அரசியலில் மட்டும் தான் காலவதிகளெல்லாம் நம்மை கரைசேர்ப்பதாக சொல்லி திரிகிறது
தமிழக மக்கள் காப்பாற்ற பிறந்த உத்தமர் வேடம் .. பாவம் சரியாக பொருந்தவில்லை இருவருக்கும்.. அதிகம் பேசாதவரும் அதிகம் குழப்புகிறவரும் அரைகுறைகளென ஆரம்பமே சொல்கிறது..
..
சிலர் திடீரென கமலை முன்னிலைபடுத்த காரணம் அவர் தமிழராம் .. அதனால் மற்றவரை விட இவர் சரியாம் .. உங்களுக்கு தெரியுமா #சிவாஜி எனும் மாபெரும் தமிழ் நடிகரை தமிழகம் தூக்கியெறிந்தது.. சினிமா மோகம் அரசியலில் பல்லிளிக்க தொடங்கி வெகுநாட்களாகிவிட்டது ..
முன்பு காதிகப்பூவை ..வாசம் வீசும் மலரென நம்பியதெல்லாம் மலையேறிவிட்டது.. இப்போது யார் எதற்காக வருகிறார்.. இதுவரை இவர் ஆற்றிய பணியென்ன கேள்வி எழுகிறது
இதுவரை எதையும் செய்யாமல் நேரடியாக முதல்வர் பதவிக்காக மட்டுமே வருவேனென இரு பழம்பெரும் நடிகர்கள் ஒரே நேரத்தில் வருகிறார்கள் ஒருவரை ஒருவர் காலை வார.. தன் வாழ்நாள் முழுவதும் சினிமாவில் போட்டிபோட்டு முந்த முடியாமல் போனதை அரசியலில் பழிதீர்க்க வருகிறார்கள்.. இருவருக்குமே இது எழவே முடியாத நிலையில் கொண்டுபோய் நிறுத்தும் ..திரு.சிரஞ்சீவி இவர்களை விட ஆந்திராவில் புகழ்பெற்ற முன்னணி நடிகராக இருந்தார் கடைசியில் கரைந்து காணாமல் போனார் தமிழக நிலையோ பரிதாபம்
சினிமாகாரர்களை நம்ப மறுத்தார்கள் கடைசியில் கூட்டணி சேர்ந்து விலாசமில்லாதவரைப் போல ஆனார்.. தேமுதிக திரு.விஜயகாந்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்..
..
கூட்டம் கூட்டுவதாலோ அல்லது ஊடக ஆதரவாலோ நிலைத்து நிற்க முடியாது களப்பணி அது ஒரு கலை நீண்ட நெடிய அனுபவம் வேண்டும் மக்களோடு இரண்டற கலந்து செயலாற்றவேண்டும் தம்மோடு வருகிறவர்கள் நிலைநிறுத்த தேர்ந்த அனுபவம் வேண்டும் மக்களுக்கு பிடித்திருக்கவேண்டும்
நேரடியாக ஆட்சியில்தான் அமர்வேன்.. மக்கள் பிரச்சனைகளுக்கெல்லாம் போராட நிறையபேர் இருக்கிறார்கள் என்பது பதவியின் மீதான மோகமே தவிர மக்கள் பணியென்பதெல்லாம் அதில் இல்லை..
..
பூக்கள் மட்டு உதிர்வதில்லை.. சிலவிதைகள் கூட பலன்தராது .. சில விதைகள் மண்ணை கெடுத்துவிடும்.. சில விதைகள் வீரியமில்லாமல் வீணாய் போகும் .. சில மரமாய் வளர்ந்தும் பலன்தராது பயனளிக்காது .. சில விசமாய் போகும்
மரபுபணு மாற்று விதைகள் இந்த சமூகத்தை மலடாக்கும்.. இப்போது பேசிதிரியும் இவர்கள் மண்ணை மலடாக்க வந்த #மரபணுமாற்று_விதைகள்.. ஆம்
இந்த மண்ணை கலப்படமாக்க .. வீரியமிழக்க செய்ய.. இந்த இனத்தின் மீதான மற்றொருமொரு நவீன தாக்குதலை நடத்த நம் இன பகைவர் தயாரித்து வழங்கும் .. இந்த மரபணுமாற்று விதைகளை புறக்கணிப்போம்..
..
#எச்சரிக்கை_ஒருஇனமே_சீரழிந்துபோகும் ..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment