Wednesday, May 1, 2019

தெளிவு

புரியாமல் இல்லை புரிந்தும் ..சிலநேரம் புரியவில்லை .. புரியாததென்று ஏதுமில்லை தெளிவில்லாத.. புரிதலால் பயன் இல்லை.. புரிதல்.. சரியாக புரிதல்.. தெளிந்தறிதல்.. மிகப்பெரிய கடினமில்லை.. தெளிந்தறிய.. முயற்சிகள் தேவை.. யாரிடமிருந்து வந்தது எந்த நேரத்தில் வந்தது.. சொன்னவரின் தகுதியென்ன. சொல்லும் முன் அவர் சரியானவரா.. என யோசிப்பதை விடுத்து .. சொல்லப்பட்ட விடயமென்ன.. சரியாகத்தான் .. சொல்லியிருக்கிறாரா.. என ஆய்தல் நன்று.. .. சொல்லின் பொருள் பிடிப்படவில்லையெனில்.. சொல்லை குறைச்சொல்லாதே.. மீண்டும் மீண்டும்..படி அறிந்து படி.. அறிந்ததை .. உன் அறிவும்.. இந்த சூழலும் .. ஏற்கிறதா..என பார்.. .. சிலர் நாற்றம் பிடித்த நயவஞ்சக கருத்தை.. நா..நயமாய் செப்பிடுவர்.. முதல் முறை.. மனம் ரசிக்கும் சொற்களை கையாள்வர்.. மடமையை .. நாற்றமெடுத்த.. சங்கதியை.. நடுநடுவே தருவர்.. சொல்லில் சொக்கி சுயமிழக்க வைப்பர்.. புராணம், மதம், சடங்கு சம்பிரதாயம் .. அப்பன் வழி.. ஆண்டவன் சொன்னது... இலக்கியம் சொல்லுது.. அடியார்கள் செப்பியதென்பர்.. எல்லாம் சரி.. முதலில் அறிவில் சேர் சமநிலை தட்டாமல் தெளிவானதென அறிவேற்கிறதா என பார் .. பலமுறை சொன்னாலும்.. சுற்றிவளைத்து .. திரும்ப..திரும்ப சொன்னாலும்.. பொய்.. நிஜமாகாது.. .. எல்லாம் அறி.. அது அறிவு.. ஆய்ந்து அறி.. அது தெளிவு.. தெளிவின்றி ஏதும் புரியாது.. புரிந்துவிடின்.. ஏதுவும் தோற்காது.. நிஜம்... நிஜமட்டுமே.. நின்று வெல்லும்.. .. உன்னுள் உறங்கும் உண்மையெனும் ஒளிகொண்டு உலகைப் பார் தெளிவாக தெரியும் இடையில் வந்த மதமும் சாதியும் தீயென்று புரியும் பொய்யர்கள் பொழுதுபோகாமல் கட்டி சமைத்ததெல்லாம் வீண் என்று விளங்கும் வேதம் ஆண்டவனின் சொல் ஆன்றோர் சொல் என பிதற்றி திரிவது புரியும் இயற்கை தந்ததெல்லாம் இவர்கள் தந்ததைப்போல இட்டுகட்டியது புரியும் .. ஆம்.. அறி .. ஆழ்ந்து அறி.. தெளிவு பிறக்கும் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment