Tuesday, May 28, 2019

சாதீ..

எந்த ஊரு.. எந்த ஜாதி விளங்கமுடியாமல் போய் துணைக்கு ஜாதியை அழைத்து பரிதாபமாய் நிற்கிறார் .. தன் உயர்ஜாதியென நம்பும் கிருஷ்ணசாமி.. சாதியே இழுக்கென்று அறியாமல் சாதியை இன்னமும் நம்பி தன் சமூகம் கைகழுவியது கூட அறியாமல் பரிதாபகரமாய் நிற்கிறார் .. யாரிந்த கிருஷ்ணசாமி ஏன் இந்தளவு முக்கியத்துவம் தரவேண்டும் .. ஒட்டபிராடத்தில் தனித்துவமாய் மிளிர்ந்த கிருஷ்ணசாமி தன் சமூகத்தின்பால் அளவற்ற அன்பு கொண்டிருப்பதாக காட்டி .. சமூக நீதியே தன் இலக்கென்று பயணித்தவர் மதவெறியர்களின் பிடியில் சிக்கி தன்னை உயர்ந்த பிறப்பாக காட்ட நினைத்து கடாசியில் மிக கேவலமாக தமிழ் சமூகத்தால் பார்க்கிற நிலை ..தன் மகள் எவ்வளவு மதிப்பெண் பெற்றால் என்று கூட தெரியாது அவருக்கு மருத்துவம் கிடைப்பதற்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்டு பெற்றதை மறைத்து .. அதை வெளிகொணர்ந்த அன்று சபையில் இருந்த மார்க்சிஸ்ட் தோழர் பாலபாரதியை யாரென்று தெரியாதென சொல்லி ஒரு தவறை மறைக்க மேலும் மேலும் பொய்களால் அவமானபட்டு நிற்கிறார் .. சாதியை மட்டுமே நம்பி நின்றால் மதத்தை மட்டுமே நம்பினால் தமிழகத்தில் கதை ஆகாதென என்பதை பாமகவின் தோல்வி உணர்த்தியிருக்கிறது .. ஆறுமுறை தொடர்ந்து தோல்வியை அந்த தொகுதி மக்கள் தந்திருக்கிறார்கள் .. ஒருகாலத்தில் கொண்டாடிய மக்கள் இன்று இவரை முகம்பார்க்க தயாரில்லை .. .. இந்த மண் சாதியத்தை நம்பி அரசியல் செய்ய முடியாது பாமக கூட தன்னை சமூக நல்லிணக்கவாதியாக காட்டி கொண்டதால் ராமதாஸை அங்கீகரித்தார்கள் ஒரே மேடையில் திருமாவோடு அமர்ந்து சமூக நல்லிணக்கம் எனது பாதையென நம்பவைத்தார் தாழ்த்தபட்டவரின் பிணம் எடுத்த செல்ல மறுத்தால் எனக்கு போன் செய்யுங்கள் நான் வருகிறேன் என்றெல்லாம் பேசி வளர்ந்தார் வன்னிய சமூக மக்கள் மட்டுமல்ல பிற சமூக மக்களிடமும் ஒரு நம்பிக்கை வளர்த்தவர் தான் பிறகுதான் சுயரூபம் வெளிபட்டு இன்று பரிதாபகரமான நிலையில் பாமக .. அதைவிட மிக மோசமான நிலையில் கிருஷ்ணசாமி இருப்பதை அவர் உணர்ந்ததாக தெரியவில்லை பத்திரிக்கையாளர் சந்திப்பில் தரகுறைவாக நீ வா போ என ப்சுவதும் அவன் இவன் என அழைப்பதும் கடைசியில் எந்த ஊரூ என்ன சாதி என்றழைத்து தரம்தாழ்ந்து நிற்கிறார் .. அவரை யாரும் கண்டுக்கொள்ளாதீர்கள் விரக்தியின் உச்சத்தில் பாவம் செய்வதறியாது பேதலித்து நிற்கிறார் .. நான் உயர்ந்த சாதியென என தனக்குள் பேசி பேசி கடைசியில் பார்கிறவரையெல்லாம் என்ன சாதியென கேட்கிற நிலை பாவம் விட்டுவிடுங்கள் .. கிருஷ்ணசாமி நல்ல மனநல மருத்துவரை காண்பது நலம் .. .. சாதி மனிதனை மிருகமாக்கும்.. பைத்தியகாரனாகவும் மாற்றும் .. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment